Page 5 of 7 FirstFirst ... 34567 LastLast
Results 41 to 50 of 68

Thread: படித்ததில் பிடித்தது..

  1. #41
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    என்றோ உள் அமிழ்ந்த
    நினைவு விதைகளை
    ஒவ்வொன்றாய்
    துளிர்க்க வைத்து
    நெஞ்சம் கீறி
    மேலெழுப்புகிறது
    நில்லாமல் பெய்யும் மழை..!

    -- சண்முக வடிவு

    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  2. Thanks Russellhaj thanked for this post
    Likes Russellhaj liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #42
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    “மரம் உனக்கு பறவைகளை அறிமுகப்படுத்தும்
    அப்பறவைகள் வானத்தையும் தீவுகளையும்
    வானமோ அனைத்தையும் அறிமுகப்படுத்திவிடும்”
    -தேவதேவன்,,


  5. Likes venkkiram liked this post
  6. #43
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Story of Rebel-loving Girl


    பலமதங்களும்=பிறவி வேணாம்னு "சுயநலத்தால்" கதற
    ஆண்டாள்
    அவன் இருந்தால் போதும்,ஏழேழ்பிறவி வேணும்னு கேட்பதே
    =மாறாஅன்பு;அதுவே மோட்சம்



    Last edited by poem; 22nd November 2014 at 09:10 PM.

  7. Likes gkrishna liked this post
  8. #44
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மொத்தம் 6 ஒளவை-கள், தமிழில்! இதோ..



  9. Likes venkkiram liked this post
  10. #45
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    துன்பம் நெருங்கிவந்த போதும் - நாம்
    சோர்ந்துவிட லாகாது பாப்பா,
    அன்பு மிகுந்ததெய்வ முண்டு - துன்பம்
    அத்தனையும் போக்கிவிடும் பாப்பா.

    பாரதி

  11. #46
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by poem View Post
    மொத்தம் 6 ஒளவை-கள், தமிழில்! இதோ..


    அன்பு நண்பர் poem

    சுந்தரர் 9வது நூற்றாண்டு என்று சொல்லியிருக்கிறீர்கள் . அப்பரும் சம்பந்தரும் 6வது நூற்றாண்டு என்று படித்து இருக்கிறேன் . ஏன் என்றால் அவர்கள் இருவரும் இணைந்து பாடிய பதிகத்தால் வேதாரண்யம் கோயில் கதவு திறக்கப்பட்டதாக பெரிய புராணம் சொல்கிறது. சுந்தரர் ஒரு முறை திருத்தலம் பெயர் தெரியவில்லை அங்கு செல்லும் போது அப்பர் அங்கு உழவார பணி அல்லது பதிகம் பாடி கொண்டு இருக்கும் போது சுந்தரர் பெருமான் அப்பர் செல்லும் வரை வெளியில் காத்து கொண்டு இருந்து விட்டு பின்னர் கோயிலுக்குள் சென்று சிவபெருமானை தரிசனம் செய்ததாக ஒரு செய்தி படித்து உள்ளேன் . மூவருமே ஒரே கால கட்டத்தை சேர்ந்தவர்களா ? அல்லது சுந்தரர் இவர்கள் இருவர் காலத்திற்கு பின் வந்தவரா ? ஐயபாடை நீக்கி கொள்ளவே இந்த கேள்வி வேறு எந்த நோக்கமும் இல்லை
    gkrishna

  12. #47
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like

    நன்றி தினமலர் நாள் இதழ் 22/11/14

    நமீதா தமிழும் அமலா பாலும்



    தமிழ் அரங்குகள், தமிழ் உரைகள், தமிழ்ச் சிந்தனைகள், தமிழ் இலக்கியப் படைப்புகள் குறித்த ஆர்வமும், தேடலும் இன்றைய தமிழ் இளைஞர்களுக்கு பெரும்பாலும், பெரிதும் குறைந்தே காணப்படுகிறது.

    கலை அறிவியல் கல்லுாரிகளில், தமிழ்மொழி அல்லாத பிற துறை மாணவர்களை தமிழ்க் கூட்டங்களுக்கு அழைத்தால், தலைதெறிக்க ஓட விரும்புகின்றனர். ஆனாலும், கல்லுாரி நேரத்தில் அப்படி ஓடிவிட முடியாமல், நெளிந்தும், வளைந்தும், சோம்பியும், சுருண்டும் அரங்குகளில் அமர்ந்து, கொட்டாவி விடுகின்றனர்.'தமிழ் ஏன் வேப்பங் காயாக இருக்கிறது உங்களுக்கு?' என்று, என் நேரடி கேள்விக்கான நேர்மையான பதில், 'தமிழ் எங்களுக்கு வேப்பங்காயாக, கசப்பாக, கரடு முரடாக, வெறுப்பாக இருக்கிறது...' என்கின்றனர்.'பத்து திருக்குறள் உங்களுக்குத் தெரியுமா?' என்று கேட்டால், 'திருவள்ளுவரை நாங்க 'சாய்ஸ்'ல விட்டுருவோம்...' என்று தெளிவாகச் சொல்கின்றனர், மன வருத்தமோ, குறுகுறுப்போ இல்லாமல், 'ஏதாவது ஓர் அதிகாரம் முழுக்கப் படித்தாலும், தேர்வில் ஏதேனும் இரண்டு குறட்பாக்களைத் தான் எழுத நேர்கிறது. மற்ற எட்டு குறள் படித்தது வீண் தானே? எழுதும், அந்த இரண்டு குறளுக்கும் கூட மதிப்பெண் இரண்டு தான்; அப்புறம் ஏன் நாங்கள் முழுமையான அதிகாரம் படிக்க வேண்டும்?' என்ற, அவர்களின் பதிலிலுள்ள நியாயம், தாய்மைக் கனிவோடு அவர்களை அணுவோருக்குப் புரியும்.

    திருவள்ளுவரின் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பாலை விட, அமலாபாலை இன்று இளைஞர்களுக்குப் பிடிக்கிறது. இந்த நிலைக்குத் தமிழைத் தள்ளி விட்டதற்கு, யார் பொறுப்பு? இயல் தமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் என்று தமிழறிஞர்கள் பலரும், பழம் பெருமையில் தேங்கி நிற்க, 'மச்சான்ஸ்...' என்று கூவுகின்ற நமீதா தமிழ், நான்காம் தமிழாக விஸ்வரூபம் எடுத்திருப்பற்கும், அதை இளைஞர்கள் கொண்டாடுவதற்கும் யார் பொறுப்பு?

    தொல்காப்பியனையும், சங்க காலக் கவிஞனையும் தாண்டி, தற்காலத் தமிழுக்கு வராத தமிழ்க் காவலர்கள் பலரும் கோபம் கொள்ளலாம்; உரக்கக் கருத்துரைக்கலாம். எல்லாம் சரி தான். நிதர்சனம் என்ன என்பதைப் புரிந்து கொள்ளாமல், இருட்டில் வாளைச் சுழற்றுகின்றனர், அவர்கள்.தமிழை, என் தமிழ் இளைஞன், தாயின் கனிவோடும், காதலியின் வசீகரத்தோடும், தோழியின் அரவணைப்போடும், சகோதரியின் சர்வ எளிமையோடும் பேசவும், எழுதவும், சிந்திக்கவும் விரும்புகிறான்.

    அவனுக்குக் கிடைப்பதோ, சனாதனத் தமிழ், ஆணவத் தமிழ், ராணுவச் சீருடை மாதிரி மொட மொடப்பான தமிழ். கம்பன், வள்ளுவன், சங்கம் என்று, 2000ம் ஆண்டுகளுக்கு முன்னால் சென்று கொக்கரிக்கும் தமிழ்.இவர்களை மொழியின் அடிவாரத்திலிருந்து, சிகர உச்சிக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அடிவாரத்தின் விஸ்தீரணத்தைச் சொன்னாலே போதும், அவனுக்குச் சிகரத்தின் பாதை பிடிபடும். அடிவாரம் - தற்கால இலக்கியம், சிகரம் - அக்கால இலக்கியம்.ஏனெனில், தற்கால இலக்கியம், அவனுக்குப் பழக்கமான சூழல், மனிதர்கள், வார்த்தைகள், உணர்வு எனப் பழக்கமான தமிழை அறிமுகப்படுத்தும்.மலை படுகடாம் என்றும், நம்பி அகப்பொருள் என்றும், நச்சினார்க்கினியர் என்றும்,'மகன் மார்பில் அழுந்துட, வெழுதுமிலைத்
    தொழிற் றொய்யில், என்றும், 'கிளரொளிமகரவேறு அளவில் சீரணங்கள் வெற்றிக் கொடி...'- இப்படியான கடமுட கடமுட மொழியை அக்கால இலக்கியம் அறிமுகப்படுத்தும். அந்தத் தமிழ் மொழி, தமிழ் வாழ்வியல், தமிழ் விழுமியம் ஏதுமே இல்லை இன்றைக்கு. இயல்பாக வர வேண்டும், மொழிக் காதல்.

    துப்பாக்கியைக் காட்டி மிரட்டிக் குயிலைக் கூவு என்பதும், மயிலை ஆடு என்பதும், தமிழ் இளைஞனைத் தமிழை நேசி, தமிழைப் பேசி, தமிழை யோசி என்பதும் குரூரம் அல்லவா? தமிழ்க் கூட்டங்களிலும், கருத்தரங்குகளிலும் இளைஞர்கள் எதிர்பார்ப்பது - அவர்களின் வாழ்வியலை அறிஞர்கள் பேச வேண்டும் என்பதையே. ஆனால், மேடைகளிலோ, அறிஞர்கள், தங்களின் தமிழப் புலமையை வெளிப்படுத்த, ஒரே தாவாகத் தாவிச் சங்கத்துக்குள் நுழையும்போது தான், தமிழ் இளைஞனுக்குப் பங்கம் வருகிறது. கூடவே தொடர் கொட்டாவிகளும் வருகின்றன.சந்தமென்றும், சீர் என்றும், தளை என்றும், கொச்சகக் கலிப்பா என்றும், லம்போதரக் கலிப்பா, ஒச்சக்கலிப்பா, தாழிப்பா என்றும் ஒரே தாளிப்பாகக் கலையரங்க மேடைகளில் மரபுக் கவிஞர்கள், தமிழைத் தாளிப்பது பிடிக்காமல், இளைஞன் கலையரங்கிலிருந்து காலாவதியாகி ஓடிவிட்டான்.

    போதும் என்று ஓடும் தமிழனைப் பிடித்து, நீ கம்பர் தமிழைக் கற்றால் தான் மதிப்பெண் என்று மிரட்டினால், அது அவனுக்கு வம்புத் தமிழாகத் தெரிகிறது; வேம்புத் தமிழாகத் கசக்கிறது. தமிழ் கூறும் நல்லுலகத்தின் உடனடித் தேவை, 'மாத்தி யோசி!' இன்னமும் பிடிவாதமாக, ஈராயிரம் ஆண்டுக்கு முன்னால் இப்படி இருந்த தமிழ் என்று பழம்பெருமை பேசினால், கேட்கத் தமிழ் இளைஞனின் காதுகள் கிடைக்காது. இன்றைய வாழ்வைப் பேசுதல், தற்கால இலக்கியம் தான் அவனுக்கான முதல் அறிமுகமாக இருக்க வேண்டும்.நம் அறிஞர்கள், தற்காலப் படைப்பிலக்கியத்தை விரும்புவதில்லை; நம் இளைஞர்கள், அக்காலப் படைப்பிலக்கியம் விரும்புவதில்லை. இரண்டு துருவங்கள், யார் இணைப்பது?

    மொழி பெயர்ப்பும், புதுப்புது வார்த்தைகளை உருவாக்குவதும் கூட, ஆங்கிலத்துக்கான வார்த்தைத் தேடல் என்பதாக இருக்கிறது. 'Whats app' என்றும் இளைஞர்களின் நவீன தொப்புள் கொடிக்கான தமிழ் வார்த்தை, 'வாட்ஸ் அப்' என, இருந்தால் என்ன? அதை விடுத்து, நேரடி மொழி மாற்றாக 'வாட்ஸ் அப்' என்றால் கட்செவி அஞ்சல் என்று தடபுடா செய்வது சரியா? இளைஞன் என்ன செய்கிறான்? காதில் ஈயம் பாயும் முன் தன்னைக் காப்பாற்றி, ஆங்கிலத் தேனுக்குள் குதித்து விடுகிறான்.ஒற்றை வேரிலிருந்து புதிய பதங்களை ஆங்கிலம் தருகிறது; தமிழோ தடுமாறுகிறது. எனவே தான் தமிழ் இளைஞன் சொல்கிறான்: 'எங்களுக்கு நமீதா தமிழும், அமலா பாலும் போதும். முத்தமிழும், முப்பாலும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்' என்று. இன்றைய தமிழ் இளைஞனின் தாகத்துக்குக் கானல் நீர் தரும் தமிழ் அறிஞர்களே... மாறுங்கள்; மாற்றம் ஒன்று தான் புது வெளிச்சம், புதுக்காற்று, புதுவேர் கொண்டு வரும். சொல் புதிது சுவை புதிது என்றான் பாரதி. கொஞ்சம் நிதானித்து, தாய்மைக் கனிவோடு, என் தமிழ் இளைஞனைப் பாரதி புரிந்து கொண்டான். நீங்களும் புரிந்து கொள்ளுங்கள்.

    இ-மெயில்: aandalpriyadarshini@yahoo.co.in

    ஆண்டாள் பிரியதர்ஷினி
    தமிழ் ஆர்வலர்
    gkrishna

  13. #48
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    டூரிங் தியேட்டரில்

    படம் பார்த்துநாளானதை விட

    டூரிங் தியேட்டரே பார்த்து

    வெகுநாளாகிப்போச்சு!

    -kavitha kumaar
    gkrishna

  14. #49
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Mr. Krishna, இப்பொழுதுதான் பார்த்தேன். மன்னிக்கவும்.

    அப்பர் -600-681- CE
    சம்பந்தர் = 644- 660 CE

    சுந்தரர் - 710-735 CE

    மாணிக்கவாசகர் -660-692 CE

    இதில் அப்பர் சம்பந்தர் ,மாணிக்கவாசகர் மூவரும் 6ம் நூறண்டிலும் சுந்தரர் ஏழாம் நூர்ரண்டிலும் இருந்தவர்கள் என்று ஒரு குறிப்பு சொல்லுது. நான் ரொம்ப புத்திசாலி எல்லாம் கிடையாதுங்க! எல்லாமே தெரிந்து கொண்டு எதுவுமே தெரியாதது போல இருக்கும் பல பேருக்கு நடுவில் அரை குறையான நான்!! I am not offending you, just telling the truth !


    சரித்திர கால சான்றுகள் எவ்வளவு தூரம் மிக சரியாக இருக்கும் என்பதில் எனக்கு எப்பவுமே ஒரு தயக்கம் உண்டு, கண் முன்னாலேயே பல சரித்திரங்கள் மாறுவதை பார்க்கிறோம். பல நூறு ஆண்டுகளுக்கு முன் நடந்ததை பற்றி சொல்லவும் வேண்டுமா ?

    கொஞ்சம் டைம் கொடுங்க , கட்டாயம் சரியான பதிலை சீக்கிரம் சொல்லகிறேன்.


    தேவாரத்தில் முதலாம் திருமுறை, இரண்டாம் திருமுறை, மூன்றாம் திருமுறை, மற்றும் ஏழாம் திருமுறை சுந்தர்ரரால் இயற்ற பட்டது.

    சம்பந்தரின் மூன்றாம் திருமறையில் "மதுரையை" பற்றி

    செய்யனே! திரு ஆலவாய் மேவிய
    ஐயனே! “அஞ்சல்!” என்று அருள்செய், எனை;
    பொய்யர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
    பையவே சென்று, பாண்டியற்கு ஆகவே!

    . சித்தனே! திரு ஆலவாய் மேவிய
    அத்தனே! “அஞ்சல்!” என்று அருள்செய், எனை;
    எத்தர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
    பத்தி மன், தென்னன், பாண்டியற்கு ஆகவே!

    தக்கன் வேள்வி தகர்த்து அருள் ஆலவாய்ச்
    சொக்கனே! “அஞ்சல்!” என்று அருள்செய், எனை;
    எக்கர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
    பக்கமே சென்று, பாண்டியற்கு ஆகவே!

    சிட்டனே! திரு ஆலவாய் மேவிய
    அட்டமூர்த்தியனே! “அஞ்சல்!” என்று அருள்
    துட்டர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
    பட்டி மன், தென்னன், பாண்டியற்கு ஆகவே!

    நண்ணலார் புரம் மூன்று எரி ஆலவாய்
    அண்ணலே! “அஞ்சல்!” என்று அருள்செய், எனை;
    எண் இலா அமணர் கொளுவும் சுடர்
    பண் இயல் தமிழ்ப் பாண்டியற்கு ஆகவே!


    “தஞ்சம்!” என்று உன் சரண் புகுந்தேனையும்,
    “அஞ்சல்!” என்று அருள், ஆலவாய் அண்ணலே!
    வஞ்சம் செய்து அமணர் கொளுவும் சுடர்
    பஞ்சவன், தென்னன், பாண்டியற்கு ஆகவே!


    செங்கண் வெள்விடையாய்! திரு ஆலவாய்
    அங்கணா! “அஞ்சல்!” என்று அருள் செய், எனை;
    கங்குலார் அமண்கையர் இடும் கனல்,
    பங்கம் இல் தென்னன் பாண்டியற்கு ஆகவே!

    தூர்த்தன் வீரம் தொலைத்து அருள் ஆலவாய்
    ஆத்தனே! “அஞ்சல்!” என்று அருள்செய், எனை;
    ஏத்து இலா அமணர் கொளுவும் சுடர்
    பார்த்திவன், தென்னன், பாண்டியற்கு ஆகவே!


    தாவினான், அயன்தான் அறியா வகை
    மேவினாய்! திரு ஆலவாயாய், அருள்
    தூ இலா அமணர் கொளுவும் சுடர்
    பாவினான், தென்னன், பாண்டியற்கு ஆகவே!

    எண்திசைக்கு எழில் ஆலவாய் மேவிய
    அண்டனே! “அஞ்சல்!” என்று அருள் செய், எனை;
    குண்டர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
    பண்டி மன், தென்னன், பாண்டியற்கு ஆகவே!

    அப்பன்-ஆலவாய் ஆதி அருளினால்,
    வெப்பம் தென்னவன் மேல் உற, மேதினிக்கு
    ஒப்ப, ஞானசம்பந்தன் உரைபத்தும்,
    செப்ப வல்லவர் தீது இலாச் செல்வரே.




    அடுத்த முறை மதுரை சென்று மீனாக்ஷி அம்மன் கோவில் செல்லும் சந்தர்பம் கிடைத்தால் சுவாமி சன்னதிதையும் ( எப்பவும் கூட்டமே இருக்காது ) பொற்றாமரை குளத்தின் வலது பக்கத்தில் அமர்ந்து இருக்கும் விபூதி பிள்ளையாரையும் ( திருவிளயாடல் படத்தில் நாகேஷ் ஸ்பெசலாக வணக்கம் வைத்து விட்டு போவார் ) தவறாமல் வணங்கவும்.
    Last edited by poem; 25th November 2014 at 08:27 AM.

  15. #50
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like
    krishna: You quoted Dinamalar article about Amala Paul and Namita Tamil. Here is an anecdote for you. I was in Madras in 1985. One of my friends doing his Ph.D in Tamil Literature under Sanjeevi, Head of the dept of Tamil, Madras university was giving a talk in Madras University. I wanted to meet him and went to his lecture. When he saw me at the door of the room where he was giving the lecture, he asked me to join him at the stage (mEdai). I took a seat next to Sanjeevi.
    At the end of my friend's speech Sanjeevi surprised me with a request to speak to the students attending the lecture. I started my speech with this caveat : " I have not given a speech in Tamil in more than 25 years. You have to put up with my mistakes". At the end of my speech Sanjeevi had another surprise for me. Guess what he said?

    " If my students could give a speech like you it would make me extremely happy". " ennudaiya maaNavargaL ungaLaippol pesinaal mikka magizhchi adaiven". That was the state of Tamil in 1985 ( in Tamilnadu). No wonder it has deteriorated further.
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

Page 5 of 7 FirstFirst ... 34567 LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •