Page 3 of 7 FirstFirst 12345 ... LastLast
Results 21 to 30 of 68

Thread: படித்ததில் பிடித்தது..

  1. #21
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    Quote Originally Posted by geno View Post

    -



    򧾡
    򧾡.
    Ǣ¢,
    ɢ
    ,
    𧼡.
    Š…
    Ţ
    Ǣ .


    и
    'Š…Ģ
    θ
    š ۼ'
    ȡ.

    ,
    ȢŢ
    ɢ .

    ' ѡĸ
    á¢'
    ɸ ʧ Ӹ Ţ.

    Š…, Ţ
    ɡ
    ,

    ¢.





    Ҿ
    .
    ȡ...

    -

    ("ý šš" - Ţ ̾¢Ģ)

    --------------

    தத்துவத்தின் தொடக்கம் - ஆதவன்
    =========================================


    நானும் நண்பனும் நடந்து களைத்தோம்
    கதைத்தோம்.
    நீண்ட கால இடை வெளியில்,
    இந்தத் தனிமைச் சந்திப்பில்
    படித்திருந்த, பதிந்திருந்த
    தத்துவங்களை மீட்டோம்.
    பேட்டன் ரஸ்ஸலும்
    விற்கின்சைனும்
    வெளியே வந்தார்கள்.


    முரண்பட்ட கருத்துக்கள்
    மோதுகின்ற உச்சத்தில்
    'ரஸ்ஸலின் புத்தகத்தில்
    *இதோ காட்டுகிறேன்
    வா என்னுடன்'
    என நண்பன் எழுந்து நின்றான்.


    பின்னர்,
    மூச்செறிந்துவிட்டு
    மெளனித் தமர்ந்தான்.


    'புத்தகம் நுலகத்தில்
    சாம்பராயிற்று'
    முனகிய படியே முகம்டி கவிழ்ந்தான்.


    பேட்டன் ரஸ்ஸலும், விற்கின்சைனும்
    உள்ளே போனார்கள்
    படித்திருந்த, பதிந்திருந்த
    தத்துவங்கள்
    செத்த பிணமாயிற்று.


    கண்ணும் கண்ணும் நோக்கக்
    கனத்தன நெஞ்சங்கள்


    *இதற்குப் பிறகு
    புதிய தத்துவம் வேண்டும்
    நண்பா.
    நாம் எழுந்து நின்றோம்...


    - ஆதவன்


    ("மரணத்துள் வாழ்வோம்" - என்கிற ஈழத்துக் கவிதைத் தொகுதியிலிருந்து)
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #22
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    பெயரையும்
    ஊரையும்
    சொன்ன பிறகும்
    நீ
    துரைசாமி கவுண்டர்க்கு
    என்ன வேண்டும்
    வேலு முதலியார்க்கு
    பக்கத்து வீடா
    தேரடிக்கு எதிர்த் தெருவா
    அல்லிக் குளத்திற்கு மேல் தெருவாயெனக்
    கேட்ட
    அனைத்துக் கேள்விகளுக்கும்
    இல்லையென்றதும்
    முகத்தைச் சுருக்கி
    நீ
    அப்போ...என நீளும்
    அவன் ஆய்விற்கு
    முற்றுப் புள்ளியாய்
    பறச்சேரியென்றேன்


    - அதியன் (’அப்பனின் கைகளால் அடிப்பவன்’ கவிதைத் தொகுப்பில்)

  4. #23
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    வீட்டுப் பட்டா வாங்கித் தருகிறேன் என்று
    அம்மா, அப்பாவை ஏமாற்றி 1500 ரூபாய்
    பணம் பறித்தார் தலைவர்.
    காலையில் அம்மா, அப்பா இருவரும்
    கிளம்பிச் சென்றுவிடுவார்கள்.
    கரும்பு வெட்டி, கத்த வெட்டி, லோடு ஏத்தினார்கள்.
    ஊரில் பலரும் எங்களை இருளன்னு சொல்லும்போது
    மனதை ஏதோ செய்யும்.
    இனி அப்படிக் கூப்பிடுவதை உடனே நிறுத்த
    வழியிருக்காதா என்று இருக்கும்.
    எங்கள் கால்களின் கொலுசு
    சத்தம் போடக்கூடாது என்றார்கள்.
    நல்ல உடை போடக்கூடாது என்றார்கள்.
    இருளர்களுக்கு எதுக்குப் படிப்பு என்றார்கள்.
    காலனிக்காரர்கள் கூட எங்களை
    கொடுமை படுத்தினார்கள்.
    அத்தனையையும் மீறித்தான்
    இன்றும் நாங்கள் உள்ளோம் இந்த உலகில்.


    -------- 6-ம் வகுப்பு படிக்கும் தெய்வானை என்ற இருளர் சிறுமி எழுதியிருக்கும் கவிதை...

    நெகிழச்செய்த வரிகள். "சாதிகள் இல்லையடிப் பாப்பா" என்ற வரிகளுக்கு இன்னும் நூறாண்டுகள் கழிந்தாலும் அர்த்தம் இருக்காது போல.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  5. Likes aanaa liked this post
  6. #24
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    வெண்மணியைப் பற்றி ஒரு கவிதை

    http://nirappirikai.blogspot.in/2012...g-post_20.html
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  7. #25
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    " விளக்குமாறு கொண்டு
    பெருக்கித் தள்ளிக்
    குப்பை தொட்டிக்குப் போகும்
    எல்லாச் சாதி மயிரும்
    ஒன்றுதான் போ! "

    - கவிஞர் புவியரசு
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  8. #26
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    பாலை

    பார்த்த இடமெங்கும்
    கண்குளிரும்
    பொன் மணல். என் பாதம் பதித்து
    நடக்கும்
    இடத்தில் மட்டும்
    நிழல் தேடி
    என்னோடு அலைந்து
    எரிகிறது
    ஒரு பிடி நிலம்.

    -- பிரமிள் என்கின்ற அரூப் தர்மு சிவராம்
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  9. #27
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    சவுக்கடி பட்ட இடத்தை
    நீவிடத் தெரியா குதிரை
    கண்மூடி வலியை வாங்கும்
    இதுவுமோர் சுகம் தானென்று
    கதறிட மறுக்கும் குதிரை
    ஜடமென எண்ண வேண்டா
    கதறிட மேலும் நகைக்கும்
    உலகத்தைக் குதிரை அறியும்..

    ..இரும்பு குதிரைகளில் பால குமாரன் (நினைவிலிருந்து எழுதுகிறேன்)

  10. #28
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    பேசத் தொடங்கிவிட்டோம்
    எங்கள் வார்த்தைகள்
    நாறத்தான் செய்யும்

    வாய் நாற்றமல்ல அது
    வலுக்கட்டாயமாய் எம்
    வாய்திறந்து ஊட்டிய
    உங்கள் ஆணவ மலத்தின்
    துர்நாற்றம்

    நாங்கள்
    உங்கள் நிலங்களை
    உழுதோம்

    நீங்கள்
    எங்கள் பசியை
    அறுவடை செய்தீர்கள்

    அந்த நிலமும்
    எங்களுடையதுதானென்பது
    அப்போது எங்களுக்குத் தெரியாது

    உங்கள் அடுப்புகள் எரிய
    விறகுகள் வெட்டினோம்

    நீங்கள்
    எங்கள் குடிசைகளை
    எரித்தீர்கள்

    கோடரிகளும் ஆயுதமென்பதை
    அப்போது நாங்கள்
    அறிந்திருக்கவில்லை

    உங்கள் பெண்களின்
    தீட்டுத் துணிகளையும்
    துவைத்துக்கொடுத்தோம்

    நீங்கள்
    எங்கள் பெண்களின்
    நிர்வாணத்தையும் கிழித்தீர்கள்

    அப்போது எங்களுக்குத் தெரியாது
    கருத்த தோலே எங்களின்
    கனத்த ஆடையென்று

    வாழ்வின்
    கூட்டல் கழித்தல் கணக்குப் போட
    எங்கள் முதுகு உங்களுக்குக்
    கரும்பலகையானது

    அப்போது எங்களுக்கு
    எழுதப் படிக்கத் தெரியாது

    இப்போது நாங்கள்
    படிக்கத் தொடங்கிவிட்டோம்
    எழுத்துக்களைக் கூட்டி மட்டுமல்ல
    எங்களையும் கூட்டி

    செத்துப்போன
    மாட்டின் தோலையும்
    அதிர...அதிர
    நியாயம் கேட்கவைக்கும்
    பறையின் குரல்
    எங்களுடையது

    நாங்கள்
    பேசத் தொடங்கிவிட்டோம்

    -பழநிபாரதி
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  11. #29
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Just now some one posted this !!. இதை படித்த பின்பும் பாரதியாரின் மீது இருந்த அன்பும் பற்றும் சிறிதும் குறையவில்லை !! ( The guy who posted this already written and released many books, and a well known one ). Really I don't know where to post this, that's why I am posting under this title.


    பாரதி' யார்? - வேடிக்கை மனிதனா நீ !!


    'நல்லதோர் வீணை செய்தே' என்ற வரிகளை கேட்டதும் எப்படி இருக்கும் என எழுத்தில் வைக்க முடிவதில்லை. ஆம், இந்த வரிகளுக்கு சொந்தகாரர் மகாகவி பாரதியார் தான். மகாகவியின் கவிதைகள் மட்டுமே தெரிந்த நமக்கு அவரின் வாழ்க்கை பற்றி தெரிவதில்லை, தெரிய வேண்டிய அவசியமும் இல்லை.

    பொது நலத்திற்காக தன்னை அர்பணித்து கொள்பவர்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என நினைப்பது என்னவோ உண்மை. மகாகவி பாரதியாரின் வாழ்க்கை குறித்து பலருக்குத் தெரிந்து இருக்காது.

    ''பாரதி கஞ்சா அடிப்பார்'' என்று சொன்ன நண்பனை நான் கோபத்துடன் பார்த்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன. பாரதியின் வரிகளில் நான் வாழ்ந்து வந்து இருக்கிறேன். ''சென்றதினி மீளாது மூடரே'' என்பது எனக்கு அத்தனை பிரியம். பாரதியின் கவிதை வரிகளை ரசித்து ரசித்து பழகிய நான் பாரதியை ஒருபோதும் தவறாக நினைத்தது இல்லை, நினைக்கப்போவதும் இல்லை.

    காதல் வரிகளில் கூட பாரதியை போல எந்த ஒரு கவிஞனும் எழுத முடிவதில்லை. ''காற்று வெளியிடை கண்ணம்மா'' என்பதை விட எனக்கு ''நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா'' கொள்ளைப்பிரியம். எத்தனை கவிதைகள். அதுவும் ''காக்கைச் சிறகினிலே நந்தலாலா'' பாடிக்கொண்டே இருக்கலாம்.

    இந்த பாரதி கஞ்சா அடிப்பார் என்று கேள்விப்பட்ட தினம் முதல் எனக்கு அதுகுறித்து அக்கறை இருந்தது இல்லை. ஆனால் பாரதி குறித்து தேடி தேடி படித்த விசயங்கள் பல உண்டு. பாரதியார் குறித்து படம் வந்தபோது பாரதியாரின் பெருமை சிதைந்து போகாமல் பார்த்துக் கொண்டார்கள்.

    எனக்கு பாரதியாரின் வாழ்க்கையை குறித்து எவரிடமும் பேசப் பிடிப்பது இல்லை. அவரது கவிதைகள் எனக்கு போதுமானதாக இருந்தது.

    ''அக்கினி குஞ்சொன்று'' பற்றி இங்கே எழுதி இருக்கிறேன். பாரதியாருடன் நண்பராக வாழ்ந்து இருக்கலாமோ என்ற ஆசை எனக்குள் எப்போதும் இருப்பது உண்டு. ''வேடிக்கை மனிதன் என'' எத்தனை பேர் இதனை பாடி இருப்பார்கள்.

    -------

    பாரதி குறித்து ஓ சோமசுந்தரம் இப்படி எழுதுகிறார். ''படைப்பாளிகள் சில பொருட்களை உபயோகிப்பார்கள், அதில் பாரதியை பற்றி இங்கே எடுத்துக்கொள்கிறேன்''. கவிஞர்கள் , படைப்பாளிகள் அவர்களது படைப்புகளால் இறவா தன்மை அடைகிறார்கள். அதில் பலர் ஆல்ஹகால் போன்ற போதைப் பொருள் எடுத்துக்கொள்ளும் பழக்கம் உடையவர்கள். அறிவார்ந்த தன்மைக்கும், இப்படி பொருட்கள் எடுத்துக் கொள்வதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

    போதைப் பொருள் பழக்கத்திற்கு அடிமையான சுப்பிரமணி பாரதியாரின் வாழ்க்கையை இங்கே பார்க்க இருக்கிறோம். பாரதியாரின் கவிதையில் என்னதான் இல்லை? பாரதியாரின் தந்தை சின்னசாமி ஐயர் எட்டயபுர அவையில் முக்கிய நபராக இருந்தார். பாரதி எனும் பட்டம் கவிதைகளால் தமிழ்ப்புலமையால் கிடைத்தது.

    பாரதியின் தந்தை இறந்த பின்னர் அரசவை ராஜாவுக்கு பாரதியின் மீது பற்று உண்டாகியது. இந்த ராஜா தான் பாரதிக்கு போதைப் பொருள் பழக்கத்தை உண்டுபண்ணியவர். அவர் கொடுத்த பூரநதி லேகியம் கஞ்சா போன்ற பொருட்களை கொண்டது. இதை நீ அருந்தினால் உனக்கு நல்ல பலம் வரும். ஆனால் இதை நம்பி பாரதி தொடர்ந்தாரா என தெரியாது. ஆனால் இதுதான் பாரதிக்கு முதன் முதலில் கொடுக்கப்பட்ட போதைப் பொருள்.

    அரசவை ராஜா பாரதியை வாரணாசிக்கு அனுப்பி சமஸ்கிருதம், ஆங்கிலம் என புலமை பெற உதவி செய்தார். அரசவையில் இருந்து விலகி மதுரையில் ஆசிரியராக பணியாற்றி சென்னை சென்று சுதேசமித்திரன் நாளிதழ் சேர்ந்து பின்னர் இந்தியா பத்திரிகை என ஆரம்பித்து அதில் தனது கவிதைகள் வெளியிட்டார். பாரதியின் வ உ சி உடன் பழக்கமும் வ உ சியின் சுதேசி இயக்கம் அதனால் வ உ சி அடைந்த துயரம் பாரதியை வெகுவாக பாதித்தது.

    பாலகங்காதர திலகருடன் இணைந்து பணியாற்றி அதன் மூலம் ஏற்பட்ட பிரச்சினைகளால் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் (1908-1918) பாரதியார் பாண்டிசேரியில் இருந்தார். பெரும்பாலான கவிதைகள் பாஞ்சாலி சபதம் முதற்கொண்டு பக்தி பாடல்கள் கிருஷ்ணர் முருகர் சக்தி பாடல்கள் எல்லாம் அங்கே இயற்றப்பட்டன.

    பாரதியாரின் பாண்டிசேரியில் உள்ள ஒரு சாமியாருடன் ஏற்பட்ட பழக்கம் மிகவும் சுவாரஸ்யமானது. பாரதியாரின் விடுதலை போராட்ட வேட்கையும் தமிழ் இலக்கியமும் மற்றும் இந்த சாமியார் பழக்கம் பாரதியாரை இந்த போதை உலகத்தில் மீண்டும் தள்ளி இருக்கலாம். அவரது இந்த சாமியாருடன் பழக்கமே பல பக்தி பாடல்கள் எழுத காரணமானது. அந்த சாமியாரும், பாரதியாரும் போதை பொருட்களை உபயோகப்படுத்தினர். சில வருடங்கள் போதை பொருட்கள் உபயோகத்தை நிறுத்தி இருந்த பாரதியார் 1911 ம் ஆண்டு போதை பொருட்களை மீண்டும் பாரதியார் உபயோகித்ததை பாண்டிசேரியில் கண்டு வ. ராமசாமி மிகவும் வருத்தம் கொண்டார். நடுஇரவு மருந்து, சாமக்கிரிகை, என பாரதியார் அங்கே உள்ள வேலையாளை வாங்கி வர சொல்வார். ஆனால் பாரதியார் மீதான மரியாதையில் எதுவும் சொல்லவில்லை. இந்த சாமியார் தெருவில் படுத்து கிடப்பது, நாய்களுடன் சண்டை போடுவது போதை பொருட்கள் உட்கொள்வது என்றே அவரது வாழ்வு இருந்து இருக்கிறது.

    கடைசி மூன்று வருடங்கள் 1918-1921 பாரதியார் சென்னையில் தனது வாழ்நாளை செலவழித்தார். மகாத்மாவின் அகிம்சை செய்கை மகாகவியை புண்படுத்தியது. வ உ சி மகாத்மாவின் வழி பின்பற்ற பாரதி விடுதலை போராட்டத்தை ஒரு கட்டத்தில் கைவிடும் நிலைக்குப் போனார். பாரதியார் நிறைய போதை பொருட்கள் உபயோகித்த கால கட்டம் இதுதான். குள்ளசாமி சாமியாருடன் பாரதியை சென்னையில் கண்ட வ உ சி தன்னால் நம்ப இயலவில்லை. இது பாரதி தானா என்றே சந்தேகம் எழுந்தது. பொலிவிழந்து பாரதியார் காணப்பட்டார்.

    வ உ சி , பாரதியாரும் அந்த குள்ளசாமி சாமியாரும் ஒரு பானத்தை அருந்திய பின்னர் அவர்களின் பேச்சு சத்தமாகவும் சுறுசுறுப்பாக உண்டுபண்ணியது கண்டார். வ உ சி என்ன என கேட்டார். அது என்னை சொர்க்கத்திற்கு கொண்டு செல்லும் மருந்து என்றே பாரதியார் பதில் அளித்தார். அடுத்த நாள் பாரதியார் அதை அருந்த, வ உ சி புரிந்து கொண்டார். மண்டயம் நண்பர் பாரதியாரின் நடவடிக்கையில் உள்ள மாற்றத்தை கண்டார். இந்த மூன்று வருடங்களில் பாரதியாரின் உடல்நிலை பெரிதும் மோசமாகியது.

    கடைசி காலத்தில் பண கஷ்டம் வந்தபோது எட்டயபுரம் ராஜாவிடம் கேட்க அவர் உதவ மறுத்துவிட்டார். ஜூலை 1921ல் யானை அவரை தூக்கி வீசியது. அங்கே இருந்த ஒருவர் அவரை காப்பாற்றினார். எந்த ஒரு மருத்துவம் எடுத்துக் கொள்ளாமல் செப்டெம்பர் மாதம் பாரதியார் மரணம் அடைந்தார்.

    ஓபியம், கஞ்சா பெருமளவில் அப்போது உபயோகிக்கப்பட்டது. பெதடின், ஹெராயின், மார்பின் கொடீன் போன்ற பொருட்கள் பின்னர் இவை இடங்களை பிடித்துக் கொண்டன. பாரதியாரின் மரணம் அவரது போதை பழக்கத்தால் ஏற்பட்டது என்பதை பலரால் ஏற்றுக்கொள்ள இயலாது. கண்ணதாசனுக்கு பெதடின் பழக்கம் இருந்தது என்பது பலருக்கு தெரியும். அவரது மரணம் கூட இந்த பெதடின் ஏற்படுத்தியதுதான். பல படைப்பாளிகள் குடிகார சிகாமணிகள்தான்.

    பாரதியின் ''மோகத்தை கொன்று விடு'' என்பது தன்னால் போதை பொருளை விட முடியாத நிலையில் கதறி அழுத கவிதையாக கூட இருக்கலாம். பாரதிக்கு நல்ல நண்பர்கள் வாய்க்காமல் போனார்கள். போதைப் பொருளுக்கு போதை மனதுக்கு அடிமையாகிவிட்டால் நல்ல நண்பர்கள் விலகிப் போவார்கள்.

    பாரதி நீ மகாகவி
    அப்படியே உன்னை
    இவ்வுலகம் போற்றி மகிழட்டும்.
    Last edited by poem; 24th October 2014 at 08:07 AM.

  12. Likes aanaa liked this post
  13. #30
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    http://t.co/TXCY4nAyx1

    அட்டக் கத்திக் கலைஞர்கள்! மொண்ணைக் கத்தி மக்கள்!



    முன்குறிப்பு : நான் இன்னும் கத்தி திரைப்படத்தைப் பார்க்கவில்லை , பார்க்கும் எண்ணமுமில்லை , 97இல் கல்லூரியில் படிக்கும்பொழுதே விஜய் அஜித் படங்கள் பார்த்துப் புண்பட்டு எங்கள் குலதெய்வம் மூக்குப்பேறிச் சாமிக்கு படையல் போட்டு கட்டிக் கொண்ட கங்கணம் அது , ஆனாலும் தமிழகத் தொலை , சிறு தூரப் பேருந்துகளின் புண்ணியத்தில் இவர்களின் ஆகாவளித் திரைப்படங்களைப் பார்க்கும் கட்டாயத்திற்கு உட்பட்டு, தூக்கமும் வராமல் தொல்லைபெட்டிகளை அணைக்கவும் முடியாமல் , கண்ணும் மனமும் ரணமாகியப் பயணங்கள் பல ...அவ்வழியில் கத்தி பற்றி ஊர் உலகம் பேசி எழுதி உசுப்பேற்றி , நண்பர் ஒருவர் வீட்டுக்கு தீபாவளி வாழ்த்துச் சொல்லப் போன இடத்தில் , "நல்ல ப்ரிண்டுங்க , டவுன்லோடியாச்சு ,பாத்திரலாம்" என வலுக்கட்டயாத்தின் பேரில் அரைமணி நேரக் காட்சிகளைக் கண்டு 'கழி'த்துக் கிழிந்து போய் , பாதியில் வயிறு சரியில்லை என்று பொய் சொல்லித் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி வந்து வெறியோடு இவை அல்லாமல் ட்ரெய்லர் , திரை விமர்சனம் , கீச்சுக் கூச்சல்கள் , முகநூல் பதிவுகள் , வலைப்பூப் பிளிறல்கள் எல்லாம் வாசித்து முடித்துவிட்டு இந்தப் பதிவைப் போடுகிறேன் .

    முக்கியக் குறிப்பு : இந்தப் பதிவின் நோக்கம் "கத்தி"க் காற்றுள்ள போதே "தூற்றிக்" கொள்வதே (தமிழகராதி :தூற்றுதல் =சிதறுதல்; தூசுபோகத்தானியங்களைத்தூவுதல்; புழுதிமுதலியவற்றைஇறைத்தல்; பரப்புதல்; அறிவித்தல்; பழிகூறுதல்; வீண்செலவுசெய்தல்.; ) மேற்கூறிய இவற்றில் பழி கூறுதல் என இவ்விடம் பொருள் கொள்க ! சுருக்கமாக துப்புதல் (அ) காறித் துப்புதல் எனப் பொருள் கொள்ளுதல் சாலத் தகும் . என் இனமானத் தமிழனை எவ்வளவு தூற்றினாலும் தகும் , என்பதே இப்பதிவின் அடிப்பொருள் /கருப்பொருள் எனக் கொள்க !

    இப்போது பதிவிற்கு ;

    எனக்கு தமிழ் சினிமாவின் மீதோ சினிமாக் கலைஞர்கள் மீதோ எந்தக் கோபமும் கிடையாது , ஏனெனில் அவர்கள் வியாபாரிகள் , அவர்கள் , மேம்போக்காய் சிலிர்க்க வைக்கவும் ,மேலோட்டமாய் அரிப்பெடுக்க வைக்கவும் , அரித்த இடத்தில் சொகுசாய் சொரிந்தும் கொடுத்து காசு கறக்கத் தெரிந்திருக்கும் வித்தகர்கள் , அவர்களிடம் சமூகப் பொறுப்பை எதிர்பார்ப்பதும் , ஆழ்ந்த சிந்தனையும் ,தெளிந்த படைப்புகளையும் எதிர்பார்ப்பது "சிட்டுக்குருவி லேகியம் விக்கிறவன் கிட்ட போய் ,கேன்சர் கட்டிக்கு கீமோதெரபி கேட்பது மாதிரி " அதனால் இந்தப் பதிவின் எள்ளல் ,துள்ளல் , நகை , நட்டு , துப்பல் , தூற்றல் எல்லாம் என் இனிய தமிழ் மக்களையே போய்ச் சேரும் .

    முதலாவதாக சமூகத்தைப் பீடித்திருக்கும் நோய்களைப் பற்றிய புரிதல் நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது ? ஒரு விஷயத்தை பொத்தாம்பொதுவாகப் புரிந்து கொள்கிறோமா , அல்லது ஆழமாய் ,அகலமாய் , புத்தகங்கள் , இணையம் வாயிலாக வாசித்தறிகிறோமா ? நம்மின் அறிவுக் குறைபாடுதானே நம் சார்ந்த சமூகத்துக்கும் , அந்த சமூகம் பெற்றேடுத்திருக்கும் கலைத் தெய்வங்களுக்கும் இருக்கும் , அப்படியிருக்க சினிமாக்காரனைச் சாடுவதென்ன முறை ? இப்படி சமூக விஷயங்களைப் பற்றி மேம்போக்கான ஆர்வமும் மேலோட்டமான புரிதலும் கொண்டதனால்தானடா ஒரு நாள் முதல்வர்களால் உங்கள் தமிழகத்தைத் திருத்த முடிகிறது , திருத்தி உங்கள் சில்லறைக் காசுகளைத் திருடி அவர்கள் கல்லா கட்ட முடிகிறது . ஒரே ஒரு ஹீரோ இல்லன்னா நாலு கோவக்கார இளைஞர்களால யாரையாவது உள்துறை மந்திரி அல்லது முதல் மந்திரியைக் கடத்தி அவர்களின் அறிவுக் கண்களை நாலு வசனத்தில் திறக்க முடிகிறது ! மொத்தத்தில் உங்கள் பிரச்சினைகளுக்கான காரணம் நீங்கள் அல்ல ,அதற்கான தீர்வும் உங்களிடம் இல்லை என்ற உங்கள் மொண்ணைப் புரிதலால் தானடா வீராணம் குழாய்க்குள்ளே உக்கார்ந்தா உங்க வீட்டுக் கிணத்துலயும் , வயக்காட்டுலயும் தண்ணி வந்திரும்னு நம்புறீங்க , கை தட்டித் , தட்டிக் , காசுக்கு வசனம் பேசுற எல்லாத்தையும் தலைவனா , வாழ்க்கைய உய்விக்க வந்த பெருமானா நினைச்சு , இவரு அரசியலுக்கு வந்தா நல்லாருக்குமா , அவரு வந்தா நம்மளக் காப்பாத்திருவாரான்னு கண்ல ஏக்கத்தோட திரியறீங்க !சமூகப் பொறுப்பும் நிஜ அக்கறையும், மாற்று அரசியல் பற்றிய அறிவும் , சமூக மாற்றம் கொணர வேண்டும் என்ற துடிப்பும் உள்ளவர்கள் சினிமாத்துறையிலிருந்தும் , மற்ற எந்தத் துறையிலிருந்தும் வரலாம் , வரவேண்டும் . ஆனால் முதல் படம் நடித்த உடனே முதல்வர் நாற்காலியில் குத்த வைக்க வேண்டும் என்று விரும்பும் விடலைத்தனங்கள் அல்ல,

    சரி முக்கியப் பிரச்சினைக்கு வருவோம் : தமிழகம் தண்ணீரின்றித் தவிக்கிறது , தமிழக விவசாயி தண்ணீர் இல்லாமல் , விளைநிலங்களை விற்றுக் கட்டிடக் கூலியாய் பெருநகரங்களின் பிளாட்பாரங்களில் படுத்துறங்கி அழுந்துகின்றான் . யார் காரணம் ? கார்ப்பரேட்களா , கொக்காகோலாவா ,பெப்சியா ? அல்லது எல்லையே இல்லாமல் , குடிக்க , கட்ட , விவசாயம் செய்ய ,தண்ணீர் என்னும் வளத்தை சூறையாடிக்கொண்டிருக்கும் ஆழ்துளைக் கிணறுகளா . நம் நதி ,நீர்நிலைகளை மாசுபடுத்த , ஏரிகளைத் தூரத்து பிளாட் போட, 1000 அடி ரெண்டாயிரம் அடி என ஆழ்துளைக் கிணறுகள் இட கிஞ்சித்தும் யோசிக்காமல் செயலில் இறங்கும் மொண்ணைப்புத்திப் பொதுசனமாகிய நாம் காரணமா அல்லது குளிர்பானக் கம்பெனிகளா ? நீரை உறிஞ்ச நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் , ஏதோ ஒரு "தன்னாலப் பொங்குற தன்னூத்து" எல்லார் வீட்டுக்கடியிலயும் , வயக்காட்டுக்கடியிலயும் ஓடுதுன்னு புத்திகெட்டு நம்பறதால தானடா ! ஓடி ஓடி உறிஞ்சத் தெரிந்த நாம, மீண்டும் பூமியில் நீர் நிரப்ப என்ன கிழித்தோம் என்ற சிந்தனை கொஞ்சம் கூட இல்லாமல் , அரைவேக்காட்டு சினிமா வசனங்களுக்கு கைதட்டிப் பொங்கிப் புளகாங்கிதம் அடைந்து விட்டு , 'டாஸ்மாக்'களில் உங்கள் மூளையையும் , மூலதனங்களையும் அடகுவைத்துக் குடித்துவிட்டு, தமிழன் வாழ்வாதாரப் பிரச்சினைகளை எல்லாம் தீர்க்கும் தலைவன் ஒருவன் பிறப்பான் என்று தெருவோரச் சாக்கடைகளில் விழுந்து கிடக்கவோ , இல்லை நடக்கும் எந்தப் பிரச்சினைகளுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் கின்லே தண்ணி வாங்கிக் குடிச்சிட்டு , பீட்சா சாப்டுட்டு , டிவி பாத்துட்டே வோட்டு கூடப் போடாம குடிப்பணியாற்றிட்டு , உலகத்தையே நொட்டை சொல்லிட்டே காலத்தை கடத்தவோ உன்னால் மட்டும்தான் தமிழா முடியும் .

    சரி விஷயத்துக்கு வருவோம் !தமிழகத்தின் நீர்த்தேவைகள் எங்கு , எப்படிப் பூர்த்தியாகிறது ?மழை எது ? நதி எது ? குளம் எது?அணை எது? கால்வாய் எது ? கண்மாய் எது ? ஊருணி எது ? தண்ணீர் பற்றிய தமிழனின் அறிவு என்ன ?


    தமிழ்நாட்டில் 3 வேறுபட்ட காலங்களில் மழை பொழிகிறது . தென்மேற்குப் பருவமழையின் போது (ஜூன் முதல் செப்டம்பர் வரை ) ஒரு சிறிய மழையும் ,வட கிழக்குப் பருவமழையின் போது (அக்டோபர் முதல் டிசம்பர் வரை) அதிகபட்ச மழையையும் ,(ஜனவரி முதல் மே வரை) வறண்ட பருவத்தில் ஒரு சிறிய மழையும் தமிழகத்துக்குக் கிட்டுகிறது .சாதாரண சூழ்நிலைகளில் 945 mm (37.2 in) மழை நமக்குக் கிடைக்கிறது .

    தமிழகம் பொதுவில் ஒரு வறண்ட பிரதேசமாக இருந்தாலும் , சிலபல வற்றாத ஜீவநதிகளையும் (பாலாறு , செய்யாறு , பொன்னியாறு ,காவேரி , மெய்யாறு , பவானி , அமராவதி , வைகை , சிற்றாறு , தாமிரபரணி ) பல பருவகால நதிகளையும்(வெள்ளாறு , நொய்யல் , சுருளி ,குண்டாறு இன்னபிற) கொண்டுள்ளது .
    முன்னொரு காலத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் , ஊருணிகள் அமைக்கப்பட்டன , வணிகர்கள் , அரசர்கள் எல்லாரும் திருப்பணிக்காக ஊருணிகளும் , அவற்றில் தண்ணீர் வந்து சேர கண்மாய்களும் அமைத்தனர் , இவை அல்லாமல் இவற்றைப் பராமரிக்க , "குடிமரம்மத்து" என்றொரு அருமையான பழக்கமும் இருந்தது . ஆறு குளம் கண்மாய்களைத் தூர்வாற , மக்கள் காசுகேட்காமல் (free labour )வேலை செய்தனர் , இன்று தேசிய ஊரக வேலைத் திட்டம் என்றொரு அருமையான திட்டம் இருந்தும் , நீர்நிலைகள் நீர்வரத்துகள் அனைத்தையும் கூலி வாங்கிக்கொண்டு பராமரிக்கும் வாய்ப்புக் கிடைத்தபின்பும் , நிழலில் நின்றுகொண்டு , வேலையே செய்யாமல் சிலநூறு 'ஓவா'க்களை வாங்கி டாஸ்மாக்கில் அதையும் கரைத்துக் குடிப்பவன் தானே நீ , தமிழா !

    ஒரு சிறுகதை நினைவுக்கு வருகிறது . ஒரு ராசாவுக்கு ஒருநாள் தன்னோட அரண்மனைக் குளத்துல , பால் நிரப்பிக் குளிக்கணும்னு ஆசை வந்திச்சாம், குளத்துத் தண்ணிய எல்லாம் வெளியேத்திட்டு , எல்லா குடிமக்களையும் கூப்பிட்டு , இன்னிக்கு ராத்திரிக்குள்ள ஒவ்வொரு குடும்பமும் ஒரு சொம்பு பால் கொண்டு வந்து குளத்துல ஊத்தணும்னு உத்தரவு போட்டானாம் , குடிமக்களும் , உத்தரவு ராசாவேன்னுட்டு வீட்டுக்குப் போனாங்களாம் . நாள் விடிஞ்சது , ராசா கண்ணுமுழிச்சுப் பாத்தாராம் , குளத்துல ஒருபொட்டுப் பாலில்ல , வெறும் தண்ணிதான் . எல்லாப் பயலும் , இருட்டுல தான் மட்டும் ஒரு சொம்புத் தண்ணி ஊத்துனாத் தெரியவா போகுதுன்னு , தண்ணி மட்டுந்தான் ஊத்தியிருக்கானுங்க , ஒரு பயலும் பால் ஊத்தல . இப்படித்தான தமிழா உன் கடமைய மறந்துட்டு , நமக்குப் பதிலா வேற எவனாவது வந்து நம்ம பிரச்சினைகளுக்கு தீர்வு குடுப்பான்னு எந்நேரமும் வெளியிலேயே பராக்குப் பார்த்துட்டு இருக்கற ! மழைநீர் சேமின்னு முக்குக்கு முக்கு அரசாங்கம் முழங்குனாலும் , நீ இன்னும் போர்வெல் ஆழத்தைக் கூட்டறதுலையே குறியாருக்குற தமிழா !

    வானம் பார்த்த பூமியாம் தமிழகத்தில் ,நீர் மேலாண்மை பற்றிய பழமையான அறிவு இருந்தது , அதனால் தான் , அணைக்கட்டுகள் சிறியதும் பெரியதும் கட்டி , கண்மாய்கள் வெட்டி அவற்றை ஊருணிகளோடு இணைத்து , கிடைத்த மழைநீரை எல்லாம் தேக்கி வைக்கத் தலைப்பட்டான் தமிழன் , இன்று இந்த நீர்நிலைகளை மாசுபடுத்தவும் , பிளாட் போடவும் , ஆக்கிரமிப்புச் செய்வதும் யார் தமிழா ? கொக்ககோலாவா ? இல்லை சக தமிழனா ? மிகக் குறைந்த நீர் வளம் கொண்ட இஸ்ரேல் நீர் மேலாண்மையைச் சரிவரச் செய்து , விவசாயத்தில் தன்னிறைவு அடைந்திருக்கிறதே ? எப்படி , விழும் ஒவ்வொரு மழைத் துளியையும் சேமிப்பதாலும் , விவசாயத்துக்கு உகந்த நுட்பங்களைக் கடைபிடிப்பதாலும் தானே , அட இஸ்ரேலை விடு தமிழா ! இங்கே பக்கத்திலிருக்கிற மகாராஷ்டிரா மாநிலத்தின் ஹிர்வே பஜாரின் கதை அறிந்திருக்கிறாயா ? 1989இல் குடிகாரக் கிராமமாக , வறட்சி தலை கால் உடம்பு விரித்து ஆடிய பிரதேசமாக இருந்த அந்த சின்னக் கிராமம் இன்று நீர் மேலாண்மை மற்றும் சரியான விவசாய உத்திகளைப் பயன்படுத்தி லட்சாதிபதிகளின் கிராமமாக மாறிய கதை தெரியுமா ?பொபட்ராவ் பவார் என்றொரு பஞ்சாயத்துத் தலைவனின் தலைமையில் , மொத்தக் கிராமமும் அங்கிருந்த 22 மதுக்கடைகளையும் இழுத்து மூடிவிட்டு , நீர்மேலாண்மைக்காக , 52 நீர்ச்சேமிப்புக் குளங்கள் , 2 பொசிவுக் குளங்கள் (percolation tanks ) , 32 கல் வரப்புகள் (stone bunds ) , 9 தடுப்பணைகள் எனக் கட்டி எழுப்பியது , கோடிகள் தேவைப்படவில்லை தமிழா ,வெறும் தன்னார்வத் தொண்டும் , சில அரசுத் திட்டங்களின் பணமுமே போதுமானதாக இருந்தது . யாரும் கத்திக் கத்தி வசனம் பேசவுமில்லை , எதிரியை வெளியில் தேடவுமில்லை .பிரச்சினைக்கான காரணம் , மோசமான நீர் மேலாண்மையே என்பதை உணர்ந்து செயலில் இறங்கினார்கள் , சாதித்தும் காட்டினார்கள் .
    1995 ல் வருடாந்திர மழை சுமார் 15 அங்குலம் மட்டுமே , தமிழகம் சாதாரணமாகப் பெறுவது 37 அங்குலம் என்பதை கவனத்தில் இருத்து தமிழா ! முதல் பருவமழைக்குப் பின், நீர்ச் சேமிப்பால் , பாசன பகுதி அதிகரித்தது. 2010 ல், கிராமத்தில் மழை 190 மிமீ மட்டுமே கிடைத்தது, ஆனால் நீர் மேலாண்மை நன்கு நிர்வகிக்கப்பட்டதால் , கிராமத்தில் தண்ணீர் பிரச்சினைகள் வரவே இல்லை .
    நீர் மேலாண்மை அவர்களைப் பல பயிர்கள் அறுவடை செய்ய உதவியது. 1995 க்கு முன், 90 திறந்தவெளிக் கிணறுகள் 80-125 அடியில் தண்ணீர் கொடுத்தன . இன்று, 15-40 அடியில் தண்ணீர் தரும் 294 திறந்தவெளிக் கிணறுகள் உள்ளன. பக்கத்து அகமத் நகர் மாவட்டத்தில் மற்ற கிராமங்கள் தண்ணீர் அடைய கிட்டத்தட்ட 200 அடி தோண்ட வேண்டி இருக்கிறது .
    1995 ஆம் ஆண்டில், பத்தில் ஒரு பாகம் நிலம் மட்டுமே சாகுபடிக்கு ஏற்றதாக இருந்தது, இன்று மொத்த நிலமும் பயிர் செய்யவோ , தீவனப் பயிர் வளர்க்கவோ பயன்படுகிறது . இன்றும் நீர் மேலாண்மை பற்றிய விழிப்புணர்வுக்கு இந்தியா முழுவதிலிருந்தும் பஞ்சாயத்துத் தலைவர்களும் , உறுப்பினர்களும் , இன்ன பிறரும் ஹிவரே பஜாருக்கு புனிதப் பயணம் போன வண்ணம் இருக்கிறார்கள் .
    (புள்ளிவிவரங்களுக்கு நன்றி : தெஹெல்கா )
    http://www.tehelka.com/one-village-6.../?singlepage=1

    மொத்த இந்தியாவில் ஒரு ஹிவரே பஜார் மட்டும் தானே , அதனால் தான் நம் அட்டைக்கத்தி கலைஞர்கள் கவனத்துக்கு விஷயங்கள் வராமல் வீராணம் குழாய்க்குள்ள போய் உக்கார வேண்டியதாப் போச்சு என இணையப் போராளிகள் கிசுகிசுப்பது கேட்கிறது , அடப் பதர்களா , கண் திறந்து பாருங்கள் , இணையமெங்கும் இதே போல் வெற்றிக் கதைகள் கொட்டிக் கிடக்கின்றன , பாலைவன ராஜஸ்தானில் , தண்ணீர் மனிதன் என அறியப்பட்ட , மெகசேசே விருது வாங்கிய ராஜேந்திர சிங் என்னும் போராளி , மறைந்த ஆர்வாரி நதியை உயிர்ப்பித்துக் காட்டியது நம் அட்டக்கத்திக் கலைஞர்களின் கவனத்தைக் கவரவில்லை , ஏன்னா அங்க கத்திக் கத்திக் வசனம் பேசி , கொக்கோ கோலா கம்பெனி ரவுடிகளை அடித்துத் துவைத்து , தமிழனுக்கு , அரிப்புக்கு சுகமா சபட் லோஷன் தடவிக் காசக் கறக்க முடியாது பாருங்க .
    http://sociovigil.in/rajendra-singh-...-of-rajasthan/

    அது எதுக்குப்பா தமிழா , அடுத்த காந்தி இவருதான்னு நீங்க எல்லாம் டீக்கடைல உக்கார்ந்து பேப்பரும் கையுமா விவாதிச்ச அன்னா ஹசாரேவோட ராலேகான் சித்தி , பாபா ஆம்டேவோட சோம்நாத் மற்றும் ஆனந்த்வன் அப்டின்னு நீ பாக்காத நிஜத் தலைவன்கள், நீர்மேலாண்மை பற்றிப் பக்கம் பக்கமா ,புத்தகம் புத்தகமா பேசியிருக்காங்க . இதெல்லாம் நம்ம பேய்த்தூக்கத்தக் கலைக்கல , ஒரு சினிமா வசனம்தான் நமக்கெல்லாம் மின்னதிர்ச்சி கொடுத்து நம்ம ஞானக் கண்ணத் திறந்து வைக்குது .

    Balisana,Bhaonta ,Kolyala, Darewadi,Devgaon,Gandhigram,Guriaya, Jhabua, Mahudi,Mandalikpur , Mangarol, Melaghar, Moti morasal,Onikeri, Pallithode, Raj Samadhyala, Ranapur,Rozam,Sayagata , Saurashtra, Sukhomajri இப்படி இன்னும் எடுத்துக்காட்டுகள் இணையம் , பத்திரிக்கைகள் பூரா கொட்டிக் கிடக்கு தமிழா ,
    (http://www.rainwaterharvesting.org)
    ஆனா பாவம் நம்ம அட்டக்கத்திக் கலைஞர்களுக்குத் தான் காசு மட்டுமே தெரியிற ஒரு "செலக்டிவ் கம்னாட்டீஷியா" இருக்கு , உன்னிலிருந்து பிறந்த கலைக்கடவுள்கள் உன்ன மாதிரித் தான இருப்பாங்க தமிழா , அதுக்கெதுக்கு ரத்தக் கொதிப்பும் பக்கவாதமும் ஒருசேர வந்த மாதிரிக் கோழை வழியக் , கொக்ககோலா விளம்பரத்துக்கு வந்த தம்பி இப்போ அதே கம்பெனிய எதுத்துப் பேசலாமான்னு , கேணத்தனமா ஒரு கேள்வியக் கேக்குற ? கேட்டு உனக்குப் புத்தி சுவாதீனமில்லன்னு நீயே வெளிக்காட்டிக்கிற !

    சரி தமிழா , தூற்றுனவரைக்கும் எனக்கு போரடிச்சிரிச்சு! போற போக்குல கொஞ்சம் கலைச் சொற்கள இங்க தூவிட்டு , நான் கிளம்பறேன் , நம்ம கரைவேட்டி அண்ணன் ஜோக்குல வருமே அந்தத் தம்பி ! ஆங் !!! கோகுல் தம்பி அதுகிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கோ தமிழா ,இதெல்லாம் என்னன்னு , அட அதாம்பா நம்ம கூகுள் தம்பி ...

    1. Rooftop rainwater harvesting
    (ஒரு ஆண்டில் ஒரு 100 sq.mts வீட்டில் இருந்து 66,000 லிட்டர் தண்ணீர் சேமிக்கலாம் .
    இந்த ரீசார்ஜ்டு நிலத்தடி நீர் , ஐந்து உறுப்பினர்கள் கொண்ட சாதாரண குடும்பத்தின் , நான்கு மாத காலத்தியத் தேவைகளுக்குப் போதுமானது )

    2. Storm water run-offs management using swales.

    3. Creating More Permeable surfaces .

    4. Ridge To Valley Approach .

    5.Farm ponds

    அப்புறம் தமிழா , இன்னும் கொஞ்சம் நிஜ ஹீரோக்களையும் அறிமுகப்படுத்த முயற்சிக்கிறேன் , நமக்குத் தேவை வசனமா , விவேகமான்னு இவங்களப் பாத்து கொஞ்சம் நல்ல மாட்டுக்கு ஒரு சூடு போடுவாங்களே , அந்த சூடப் போட்டுக்க தமிழா ..

    http://www.rainwaterharvesting.org/People/Ruraljy.htm

    இதெல்லாம் போக , எந்தப் பயிர், எந்த வகை , குறைவாகத் தண்ணீர் கேட்கும் எனப் புரிந்து பயிரிடுவதும் , ஸ்ரீ முறை (SRI -System Of Rice Intensification ,(இப்போது இம்முறை ஏனைய பயிர்களிலும் பயனில் இருக்கிறது ) DSR (Direct Seeding of Rice ) முறை , Micro Irrigation , Crop rotation , Crop Diversification , Organic Farming , Integrated farming இவை பற்றியெல்லாம் நம் விவசாயிகளுக்கு , கழுத்து நரம்பு புடைக்காம , பெப்சிகாரன குறை சொல்லாம பாடம் எடுத்து கொஞ்சம் புரிய வை தமிழா !

    முடிவாய் ஒன்றே ஒன்று தமிழா : நம் பிரச்சினைகளுக்குக் காரணங்களும் , காரணிகளும் நமக்கு வெளியில் இல்லை , நமக்குள்ளேயே தான் இருக்கின்றன என்பதை உணர் ! நம் தவறுகள் என்னென்ன , நம் நடவடிக்கைகளில் என்னென்ன மாற்றம் கொணர்ந்தால் என்னென்ன நன்மைகள் விளையும் என்பதை ஆய்ந்தறி ! வெறுமே வீர வசனங்களும் , பஞ்ச! டயலாக்குகளும் நம் வாழ்வைத் திருத்தி அமைக்கப் போவதில்லை , திறந்த மனதோடு பிரச்சினைகளை ஆய்ந்து , தீர்வுகள் அறிந்து , அதைச் செயல்படுத்தி , நமக்கு நாமே உதவினால் ஒழிய , நமக்கு உய்வில்லை என்பதை உணர் ! அட்டைக்கத்திகளை நம்பி நேரம் , பணம் விரயமிடாமல் , உன் மொண்ணைக் கத்தி மூளையைக் கொஞ்சம் கூர்தீட்டு தமிழா ! தமிழகமெங்கும் ஹிவ்ரேபஜார்களை உருவாக்கு , மக்கள் தலைவர்கள் ,ஒவ்வொரு பஞ்சாயத்திலும் , மக்களுக்குள்ளேயே மறைந்திருக்கிறார்கள் . அவற்றை பொம்மலாட்டத் திரையில் தேடாதே தமிழா !

    முன்குறிப்பை வலியுறுத்தும் ஒரு சிறு பின்குறிப்பு : இந்தப் பதிவை படித்துவிட்டு , "நீ நடிகர் விஜய்க்கு எதிரானவனா ? முருகதாசிக்கு எதிரானவனா ? சினிமாக் கலைஞர்களுக்கு எதிரியா என்று மொண்ணைக் கேள்விகள் கேட்போரின் , ட்ரோல் செய்ய முயற்சிக்கும் அறியாப்பதர்களின் , வால்கள் ஓட்ட நறுக்கப்படும் , உள்நாட்டு , பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலை எவ்விதத்திலும் ஆதரிப்பது இந்தப் பதிவின் நோக்கமல்ல , அவர்களைவிட பெரிய குற்றவாளி , அடிப்படைப் புரிதலற்ற , அறியாமையிலிருக்கும் நாமே என்பதை வலியுறுத்தவே இந்த ஆதங்கப் பதிவு . தமிழகத்தின் தண்ணீர் தேவையைத் தீர்க்க, விழும் ஒவ்வொரு மழைத் துளியையும் சேகரிக்க வேண்டியதும் , தண்ணீரைச் சரியாய்ப் பயன்படுத்தும் மேலாண்மை உத்திகளுமே ஒரே உறுதியான வழி . "தன்னூத்து"கள் தானே பொங்கி நிரம்புவதில்லை , நீயும் நானும் சேர்ந்து நிரப்பினால் தான் அது காலாகாலத்துக்கும் நிறைந்து நம் தேவை தீர்க்கும் . கொக்ககோலாவும் பெப்சியும் சிறு எதிரிகள் , நீர் மேலாண்மை பற்றிய உன் அடிப்படை அறிவின்மையே பெரும் எதிரி !




    Alex Paul Menon, IAS

  14. Likes aanaa liked this post
Page 3 of 7 FirstFirst 12345 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •