Page 2 of 7 FirstFirst 1234 ... LastLast
Results 11 to 20 of 68

Thread: படித்ததில் பிடித்தது..

  1. #11
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    பருந்து

    உங்கள் சின்னஞ் சிறிய வயதிலாவது
    பார்த்து அனுபவித்திருக்கிறீர்களா,
    பருந்து ஒன்று
    கோழிக் குஞ்சொன்றை
    அடித்துச் சென்ற காட்சியை?

    அதன் கூர்மையான நகங்களால்
    உங்கள் முகம் குருதி காணப்
    பிராண்டப் பட்டதுபோல்
    உணர்ந்திருக்கிறீர்களா?

    பறவை இனத்திற் பிறந்தாலும்
    விண்ணிற் பறக்க இயலாது
    குப்பை கிண்டித் திரியும் அதனை
    துடிக்கத் துடிக்க ஓர் உயரத்திற்கு
    அழைத்துச் சென்ற அந்தக் காட்சி!

    அக் குஞ்சோடு குஞ்சாய் மரித்து
    அப் பருந்தோடு பருந்தாய்
    பறந்து திரிந்திருக்கிறீர்களா
    பாதையில்லா வானத்தில்?

    குப்பைகளை
    ஆங்கே நெளியும் புழுக்களை
    கோழிக் குஞ்சுகளை
    அவை தங்களுக்குள்ளே இடித்துக் கொள்வதை
    புலம்பல்களை
    போரை
    போர்க்களங்களில்
    பிணமாகி அழியும் மனிதர்களை
    பிணங்களின் அழுகிய வாழ்வை-
    நீங்களும்தான் பார்த்திருப்பீர்களில்லையா?

    அது தன் சிறகு மடித்து
    தனது பனித்த கண்களுடன்
    ஒரு குன்றின் மீதமர்ந்திருக்கையில்
    அய்யம் சிறிதுமின்றி
    ஒரு தேவதூதன் போன்றே காணப்படுகிறதில்லையா?

    -- தேவதேவன்
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #12
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    தனியாக இல்லை

    சாலையின் ஓரத்தில்
    தன்னந்தனியே வீழ்பவன்
    யாரோ ஒருவன்
    தன்னைத் தொட்டுத் தூக்கும்போது
    நினைக்கிறான்
    தான் தனியாக இல்லை
    என்று
    சாலையின் ஓரத்தில் வீழும்
    யாரோ ஒருவனைத்
    தொட்டுத் தூக்கும்
    யாரோ ஒருவன்
    நினைக்கிறான்
    தான் தனியாக இல்லை
    என்று


    -- மனுஷ்ய புத்திரன்
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  4. #13
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    எப்போது வருவாய்

    நீ எப்போது
    வருவாய்?
    அந்தப் பெண்
    கண்களில் நீர் தளும்ப
    யாரிடமோ
    தொலைபேசியில்
    இந்தக் கேள்வியைத்
    திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டிருக்கிறாள்
    நான் கவனிப்பதைப் பற்றி
    கவலைப்பட அவளுக்கு
    எந்த அவகாசமும் இல்லை
    எப்போது வருவாய்
    என்பதைக் கேட்பதைத் தவிர
    அவளுக்கு இந்த உலகத்திடமிருந்து
    தெரிந்துகொள்ள எதுவும் இல்லை
    அவள் பிடிவாதமாக இருந்தாள்
    மன்றாடுதலுடன் இருந்தாள்
    தனிமையாக இருந்தாள்
    எந்தக் கணமும் உடைந்து அழக்கூடியவளாக இருந்தாள்
    எத்தனை யுகங்களாய்
    இதே குரலில்
    இதே கண்ணீருடன்
    இதே கேள்வி கேட்கப்படும்
    என்று தெரியவில்லை
    வர வேண்டிய யாரோ ஒருவர்
    இன்னும் வராமலேயே
    இருந்துகொண்டிருக்கிறார்


    -- மனுஷ்ய புத்திரன்
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  5. #14
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    பாலை

    பார்த்த இடமெங்கும்
    கண்குளிரும்
    பொன் மணல்.

    என் பாதம் பதித்து
    நடக்கும்
    இடத்தில் மட்டும்
    நிழல் தேடி
    என்னோடு அலைந்து
    எரிகிறது
    ஒரு பிடி நிலம்.


    --- பிரமிள்
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  6. #15
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like

    என்னைப் பார்க்க வந்தவர்
    தன்னைப் பார்
    எனச் சொல்லிச் சென்றார்!


    -- நகுலன்
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  7. #16
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Dec 2010
    Location
    Chennai, Tamil Nadu, India
    Posts
    544
    Post Thanks / Like
    only kavidhai???? appadina vidu jut than

  8. #17
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    San_K

    கவிதை மட்டுமே அல்ல! எதுவேணாலும் கொண்டுவாருங்கள்! படித்து இன்புறுகிறோம்!
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  9. #18
    Senior Member Seasoned Hubber geno's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    601
    Post Thanks / Like
    என் பெயர் - மருதாயி
    - இன்குலாப்




    ஆன்ற தமிழ்ச் சான்றோரே!
    தொல்காப்பியம்
    பத்துப்பாட்டு
    எட்டுத்தொகை
    சிலப்பதிகாரம்
    மணிமேகலை
    சீவக சிந்தாமணி
    வளையாபதி
    குண்டலகேசி
    கம்ப இராமாயணம்
    பொயபுராணம்
    மறந்து விட்டேன் -
    திருக்குறள்

    எல்லாவற்றிலும் சுட்டப்பட்டவள் நான்
    தாய்மொழி - தமிழ்
    பெயர் - மருதாயி
    தொழில் - பரத்தை

    என்னைக் கடைமகள் எனலாம்..
    மதுரையைக் கொளுத்திய
    கற்பரசியே -
    தலையாய கற்பினள் அல்லள்!

    உங்கள்
    மூத்த தமிழ் அளவுகோலில்..
    கற்புத் தோன்றிய அன்றைக்கே
    நானும் தோன்றிவிட்டேன் !

    அய்யா
    ஆன்ற தமிழ்ச் சான்றோரே!
    என்னிடம் முதலில் வந்தவன்
    உங்கள் கொள்ளுப் பாட்டன்..
    இப்பொழுது
    வந்து போனவன்
    கொள்ளுப் பேரன்!

    என்றாலும்
    பாட்டன் எதிர்பார்த்தான் பாட்டியிடம்
    "பெய்யெனப் பெய்ய"
    தன் சடலம் எயும் போது
    உடன்வேக..
    பாட்டி ஒருபோதும்
    பாட்டனிடம் கேட்கவில்லை
    "பெய்யெனச் சொல்லுக
    உடன் வேக"

    இருக்கையில் சில சமயங்களிலும்
    போகையில் சில சமயங்களிலும்
    பாட்டி
    தன் தங்கையைத் தாரமாக்குவாள்

    இல்லாவிடினும் இவன் மேய்வான்..
    பத்தினியைப் பறிகொடுத்த
    பாட்டனுக்கு
    மச்சினியைக் கைப்பிடித்த
    ஆறுதல்..

    இல்லத்தரசி இருக்க என்னிடம் வந்தவனுக்கும்
    மனைவி இருக்க மச்சினியைப் பிடித்தவனுக்கும்
    ஒரு கீறலும் இல்லை கற்பில்..

    தமிழ்க் குடும்பம் புனிதமானது!
    தமிழ்ச் சமூகம் காலகாலமாய்க்
    கற்புடையது.!

    விரும்பியவனைச் சேர்வது
    கற்பாகாது.
    கட்டியவனை ஒப்புவதுதான்
    கற்பாகும்..

    கட்டியவன் முகமன்றி
    வேறு முகம் கூடாது
    காண.
    கட்டியவன் நிழலன்றி
    வேறு நிழலில்லை
    பட.

    அய்யா! அன்றதமிழ்ச் சான்றோரே!
    கற்பரசி நினையாவிடினும்
    கண்டவன் அவளை நினைத்தால்
    அவள் கற்புக்கரசி ஆகமாட்டாள்..
    கற்புடைப் பெண்டிர் பிறர் நெஞ்சு புகார்..

    தமிழ்நாட்டுக் குரங்கும் மீனும்
    கற்புடையவைதாம்.

    கைம்மை உய்யாக் காமர் மந்தி
    ஓங்குமலை அடுக்கத்துப்
    பாய்ந்து
    உயிர் செகுக்கும்.

    தன்கணவன்மீன் அல்லாத
    வேறு ஆண்மீனைத் தொடநேர்ந்த
    மனைவிமீனை
    வெட்கம் பிடுங்கித் தின்னும்..
    தற்கொலை செய்ததோ
    என்னவோ
    தண்ணீல்..

    உடன் கட்டை ஏறிய
    பத்தினிப் பெண்ணைப்
    பாராட்டாத
    தமிழ் எழுத்தில்லை.
    பொயார் எழுத்தைத் தவிர.

    பாவாடையும் சேலையுந்தான்
    தமிழ்ப் பண்பாடு..
    சுதாரும் பேண்டும்
    கவர்ச்சிக் கண்றாவி!
    மொபட் ஓட்ட பேண்டுதான் வசதியா?
    மொபட் ஓட்டாதே..
    படைநடை பயிலாதே..
    தமிழ்ப் பெண் அடக்கமானவள்..
    ஆறடிக் கூந்தல் இன்னுமோர்
    அடையாளம்.

    கூந்தல்வார நேரமில்லையா?
    மூக்கடைப்பு நோய்த் தொலலையா?

    கூந்தலைக் குறைக்காதே
    தமிழ் குறைந்து போய்விடும்!

    ஒருவனுக்கு உண்மையாய்
    இருப்பதே தமிழ்க் கற்பு..
    அவன் கல்லானாலும் மண்ணானாலும்
    கட்டியவள் ஏற்கெனவே கன்னிதானா
    என்று எதிர்பார்ப்பதே
    தமிழ் மரபு நியாயம்..
    தமிழர் அனைவரும் உறுதி கொள்ளலாம்.

    இங்கிலாந்து நடத்திய
    கன்னிமைச் சோதனையை
    இல்லறம் தொடங்குவோன்..
    நடத்திப் பார்க்கலாம்
    தேறினால் மட்டுந்தான்
    பண்பாடு தேறும்..
    தமிழ்க் குடும்பம் புனிதமானது..

    அய்யா ஆன்றதமிழ்ச் சான்றோரே!
    உங்கள் பண்பாட்டை நீங்கள் பிடித்த
    காலகாலமாய் நானும் நடக்கிறேன்
    கற்புத் தோன்றிய அன்றைக்கே
    நானும் தோன்றிவிட்டேன் -
    தாய்மொழி - தமிழ்
    பெயர் - மருதாயி
    தொழில் - பரத்தை !
    M.K. Narayanan, Sivasankara Menon, A.K.Antony, Satish Nambiar, Vijay Nambiar, Nirupama Menon Rao....

    இந்திய தேசியம், இந்திய நீதி, இந்திய தருமம்:
    இலட்சம் தமிழன் செத்தாலும் பரவாயில்லை. ஒரே ஒரு <டிங்க்> மனசும் கூடப் புண்பட்டுவிடக்கூடாது!

    டகால்ட்டி திராவிடன் கருணாநிதியின் கையால் சாவதைக் காட்டிலும் ஒரிஜினல் <டிங்> ஜெ.வின் கையால் அழிவது மேல்!

    "The Recrudescence of Thamizh ethnicism is deadlier than Ebola Virus - declares Dr. Varna Ratna, announcing the path-breaking discovery.."

  10. #19
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    "ஒருவருக்கொருவர்
    விசாரிப்புகளால்
    விசால மடைகிறோம்
    சுமைகளை மறந்து
    சுகமடைகிறோம்

    கடனழுத்தியும்
    இடைவெளி வருத்தியும்
    களைக்கவிடாமல்
    காத்து வருவதே
    ஞாயிறுதான்"

    சுட்டதுதான் .. அசல் மறந்து விட்டது
    Last edited by aanaa; 31st May 2012 at 08:27 PM.
    "அன்பே சிவம்.

  11. #20
    Senior Member Seasoned Hubber geno's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    601
    Post Thanks / Like

    -



    򧾡
    򧾡.
    Ǣ¢,
    ɢ
    ,
    𧼡.
    Š…
    Ţ
    Ǣ .


    и
    'Š…Ģ
    θ
    š ۼ'
    ȡ.

    ,
    ȢŢ
    ɢ .

    ' ѡĸ
    á¢'
    ɸ ʧ Ӹ Ţ.

    Š…, Ţ
    ɡ
    ,

    ¢.





    Ҿ
    .
    ȡ...

    -

    ("ý šš" - Ţ ̾¢Ģ)

    Last edited by geno; 19th September 2012 at 06:45 PM.
    M.K. Narayanan, Sivasankara Menon, A.K.Antony, Satish Nambiar, Vijay Nambiar, Nirupama Menon Rao....

    இந்திய தேசியம், இந்திய நீதி, இந்திய தருமம்:
    இலட்சம் தமிழன் செத்தாலும் பரவாயில்லை. ஒரே ஒரு <டிங்க்> மனசும் கூடப் புண்பட்டுவிடக்கூடாது!

    டகால்ட்டி திராவிடன் கருணாநிதியின் கையால் சாவதைக் காட்டிலும் ஒரிஜினல் <டிங்> ஜெ.வின் கையால் அழிவது மேல்!

    "The Recrudescence of Thamizh ethnicism is deadlier than Ebola Virus - declares Dr. Varna Ratna, announcing the path-breaking discovery.."

Page 2 of 7 FirstFirst 1234 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •