Quote Originally Posted by poem View Post
Mr. Krishna, இப்பொழுதுதான் பார்த்தேன். மன்னிக்கவும்.

அப்பர் -600-681- CE
சம்பந்தர் = 644- 660 CE

சுந்தரர் - 710-735 CE

மாணிக்கவாசகர் -660-692 CE

இதில் அப்பர் சம்பந்தர் ,மாணிக்கவாசகர் மூவரும் 6ம் நூறண்டிலும் சுந்தரர் ஏழாம் நூர்ரண்டிலும் இருந்தவர்கள் என்று ஒரு குறிப்பு சொல்லுது. நான் ரொம்ப புத்திசாலி எல்லாம் கிடையாதுங்க! எல்லாமே தெரிந்து கொண்டு எதுவுமே தெரியாதது போல இருக்கும் பல பேருக்கு நடுவில் அரை குறையான நான்!! I am not offending you, just telling the truth !


சரித்திர கால சான்றுகள் எவ்வளவு தூரம் மிக சரியாக இருக்கும் என்பதில் எனக்கு எப்பவுமே ஒரு தயக்கம் உண்டு, கண் முன்னாலேயே பல சரித்திரங்கள் மாறுவதை பார்க்கிறோம். பல நூறு ஆண்டுகளுக்கு முன் நடந்ததை பற்றி சொல்லவும் வேண்டுமா ?

கொஞ்சம் டைம் கொடுங்க , கட்டாயம் சரியான பதிலை சீக்கிரம் சொல்லகிறேன்.


தேவாரத்தில் முதலாம் திருமுறை, இரண்டாம் திருமுறை, மூன்றாம் திருமுறை, மற்றும் ஏழாம் திருமுறை சுந்தர்ரரால் இயற்ற பட்டது.

சம்பந்தரின் மூன்றாம் திருமறையில் "மதுரையை" பற்றி

செய்யனே! திரு ஆலவாய் மேவிய
ஐயனே! அஞ்சல்! என்று அருள்செய், எனை;
பொய்யர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
பையவே சென்று, பாண்டியற்கு ஆகவே!

.

அடுத்த முறை மதுரை சென்று மீனாக்ஷி அம்மன் கோவில் செல்லும் சந்தர்பம் கிடைத்தால் சுவாமி சன்னதிதையும் ( எப்பவும் கூட்டமே இருக்காது ) பொற்றாமரை குளத்தின் வலது பக்கத்தில் அமர்ந்து இருக்கும் விபூதி பிள்ளையாரையும் ( திருவிளயாடல் படத்தில் நாகேஷ் ஸ்பெசலாக வணக்கம் வைத்து விட்டு போவார் ) தவறாமல் வணங்கவும்.
மிக்க நன்றி நண்பர் poem

அடுத்த முறை மதுரை செல்லும் போது நிச்சயம் விநாயகரை வணங்குகிறேன்.

பல நல் முன்னோர்கள் வாழ்ந்த நூற்றாண்டு சரியாக ஆவண படுத்தாததால் ஏற்படும் குழப்பம் இது. தேவார தலங்கள் 274 என்பது சமீபத்தில் மேலும் இரண்டு தலங்கள் கண்டுபிடிக்கப்பட்டு 276 ஆக உயர்ந்து உள்ளது. இது போல் பிற்காலங்களில் இன்னும் எத்தனை சேரும் என்பது நாம் அறியமுடியாத ஒன்று. தொல் பொருள் துறை இது குறித்து சற்று விழிப்புடன் வேலை செய்தால் நிறைய தகவல்கள் கொணரலாம்

நட்புடன்