Page 1 of 7 123 ... LastLast
Results 1 to 10 of 68

Thread: படித்ததில் பிடித்தது..

Hybrid View

  1. #1
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like

    படித்ததில் பிடித்தது..

    அன்பர்களே! படித்ததில் பிடித்த கவிதைகள், சொற்றொடர்கள், பதிவுகளை இங்கே பதிவு செய்யுங்களேன்!

    அட்மின்! இதற்கான பிரத்யேக திரி தமிழ்த் தொகுப்பில் இருக்கேமேயானால் இங்கேயுள்ள எனது பதிவுகளை அங்கே இடமாற்றம் செய்யவும்! நன்றி.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    சாணிப்பால் ஊற்றி
    சவுக்கால் அடித்தான்
    என் பூட்டனை உன் பூட்டன்

    காலில் செருப்பணிந்ததால்
    கட்டி வைத்து உதைத்தான்
    என் பாட்டனை உன் பாட்டன்

    பறைக்கு எதுக்குடா படிப்பு?
    என
    பகடி செய்து ஏசினான்
    என் அப்பனை உன் அப்பன்

    "உங்களுக்கென்னப்பா?
    சர்க்காரு வேலையெல்லாம்
    உங்க சாதிக்குத்தானே" என
    சாமர்த்தியம் பேசுகிறாய் நீ

    ஒன்று செய்!
    உன்னைறியாத ஊரில் போய்
    உன்னைப்பறையனென்று சொல்
    அப்போது புரியும் என் வலி


    - இராசை கண்மணி ராசா
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  4. #3
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    என்னைக்கருவுற்றிருந்த மசக்கையில்
    என் அம்மா தெள்ளித்தின்றதைத்தவிர
    பரந்த இந்நாட்டில் எங்கள் மண் எது?

    தடித்த உம் காவிய இதிகாசங்களில்
    எந்தப்பக்கதில் எங்கள் வாழ்க்கை?

    எங்களுக்கான வெப்பத்தையும் ஒளியையும் தராமலேயே
    சூரிய சந்திரச்சுழற்சிகள் இன்னும் எது வரை?

    எங்களுக்கான பங்கை ஒதுக்கச்சொல்லியல்ல
    எடுத்துக்கொள்வது எப்படியென
    நாங்களே எரியும் வெளிச்சத்தில் கற்றுக்
    கொண்டிருக்கிறோம்

    அதுவரை அனுபவியுங்கள்
    ஆசீர்வதிக்கிறோம்


    - ஆதவன் தீட்சண்யா
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  5. #4
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    மருதம்

    ஊருக்கெல்லாம் கோடியிலே
    முந்திரிக் கொல்லே

    உக்காந்தால் ஆள்மறையும்
    முந்திரிக் கொல்லே

    செங்கமலம் குளிச்சுப்புட்டு
    அங்கிருந்தாளாம்

    ஈரச்சேலை கொம்பில் கட்டி
    காத்திருந்தாளாம்

    நாட்டாண்மைக்காரன் மகன்
    அங்கே போனானாம்

    வெக்கப்பட்டு செங்கமலம்
    எந்திரிச்சாளாம்

    நாட்டாண்மைக்காரன் மகன்
    கிட்டே போனானாம்

    வெக்கப்பட்டு செங்கமலம்
    சிரிச்சிக்கிட்டாளாம்

    உக்காந்தால் ஆள்மறையும்
    முந்திரிக் கொல்லே

    ஊருக்கெல்லாம் கோடியிலே
    முந்திரிக் கொல்லே.


    ---- ஞானக்கூத்தன்
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  6. #5
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    அண்டை வீட்டின்
    மரம்
    உதிர்க்கும்
    சருகுகளைக் கண்டு
    தினமும்
    சபிக்கிறாள்
    உடனுறையும் நாயகி
    அவள்
    உதிர்த்துக் குவியும்
    சொற்குப்பைகளை
    தினமும் பெருக்குகிறது
    அம்மரம் அனுப்பும்
    காற்று.


    ---- அழகிய பெரியவன்
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  7. #6
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    கவிதை எழுதுவது
    என்பது
    ஒரு குண்டு பல்பை
    ஹோல்டரில் மாட்டுவது போல் இருக்கிறது
    முழுமையானதின்
    அமைதியை ஏந்தி
    பல்ப்
    ஒளிவீசத் தொடங்குகிறது
    ஒரு
    மெல்இழை
    நிசப்தத்தில்
    எவ்வளவு நீள
    நன்கணம்.


    ---- தேவதச்சன்
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  8. #7
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    உண்டியல் குலுக்குகையில்

    உன் இரத்தத்தில் ஒலிக்கவில்லையா
    ”தர்மம் போடுங்க சாமீ!” என்றபடி
    பிட்சா பாத்திரத்துடன் ஒரு பரதேசி
    வீடு வீடாய் ஏறி இறங்கும் காட்சி?

    அதைத்தானோ
    ”நீயே கடவுள்
    தர்மமே உன் கடமை!” என்று
    கம்பீரமாய்ப் பாடுகிறான் கவிஞன்?


    -- தேவதேவன்
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  9. #8
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    பருந்து

    உங்கள் சின்னஞ் சிறிய வயதிலாவது
    பார்த்து அனுபவித்திருக்கிறீர்களா,
    பருந்து ஒன்று
    கோழிக் குஞ்சொன்றை
    அடித்துச் சென்ற காட்சியை?

    அதன் கூர்மையான நகங்களால்
    உங்கள் முகம் குருதி காணப்
    பிராண்டப் பட்டதுபோல்
    உணர்ந்திருக்கிறீர்களா?

    பறவை இனத்திற் பிறந்தாலும்
    விண்ணிற் பறக்க இயலாது
    குப்பை கிண்டித் திரியும் அதனை
    துடிக்கத் துடிக்க ஓர் உயரத்திற்கு
    அழைத்துச் சென்ற அந்தக் காட்சி!

    அக் குஞ்சோடு குஞ்சாய் மரித்து
    அப் பருந்தோடு பருந்தாய்
    பறந்து திரிந்திருக்கிறீர்களா
    பாதையில்லா வானத்தில்?

    குப்பைகளை
    ஆங்கே நெளியும் புழுக்களை
    கோழிக் குஞ்சுகளை
    அவை தங்களுக்குள்ளே இடித்துக் கொள்வதை
    புலம்பல்களை
    போரை
    போர்க்களங்களில்
    பிணமாகி அழியும் மனிதர்களை
    பிணங்களின் அழுகிய வாழ்வை-
    நீங்களும்தான் பார்த்திருப்பீர்களில்லையா?

    அது தன் சிறகு மடித்து
    தனது பனித்த கண்களுடன்
    ஒரு குன்றின் மீதமர்ந்திருக்கையில்
    அய்யம் சிறிதுமின்றி
    ஒரு தேவதூதன் போன்றே காணப்படுகிறதில்லையா?

    -- தேவதேவன்
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  10. #9
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    எப்போது வருவாய்

    நீ எப்போது
    வருவாய்?
    அந்தப் பெண்
    கண்களில் நீர் தளும்ப
    யாரிடமோ
    தொலைபேசியில்
    இந்தக் கேள்வியைத்
    திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டிருக்கிறாள்
    நான் கவனிப்பதைப் பற்றி
    கவலைப்பட அவளுக்கு
    எந்த அவகாசமும் இல்லை
    எப்போது வருவாய்
    என்பதைக் கேட்பதைத் தவிர
    அவளுக்கு இந்த உலகத்திடமிருந்து
    தெரிந்துகொள்ள எதுவும் இல்லை
    அவள் பிடிவாதமாக இருந்தாள்
    மன்றாடுதலுடன் இருந்தாள்
    தனிமையாக இருந்தாள்
    எந்தக் கணமும் உடைந்து அழக்கூடியவளாக இருந்தாள்
    எத்தனை யுகங்களாய்
    இதே குரலில்
    இதே கண்ணீருடன்
    இதே கேள்வி கேட்கப்படும்
    என்று தெரியவில்லை
    வர வேண்டிய யாரோ ஒருவர்
    இன்னும் வராமலேயே
    இருந்துகொண்டிருக்கிறார்


    -- மனுஷ்ய புத்திரன்
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  11. #10
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    அங்கே மழை பெய்கிறது!

    எங்கோ
    ஒரு நிலத்தில்
    புதைக்கப்பட்ட பிணங்கள்
    புரண்டு படுக்கின்றன

    அப்பிணங்களைத் தீண்டுகிறது
    நிலத்தில் இறங்கிய மழையின்
    நீர்க்கால் ஒன்று

    புதையுடல்கள்
    துயில் கலைந்தனபோல்
    உடல் முறித்து எழ முயல்கின்றன

    அவற்றின் உதடுகளில்
    இன்னும் பதியப்படாத சொற்களும்
    உலக மனசாட்சியின் மீது
    வாள்செருகும் வினாக்களும்
    தொற்றியிருக்கின்றன

    தாம் சவமாகும் முன்பே
    புதைபட்டதைத்
    தம்மைக் கடந்திறங்கும் வேர்த்தளிர்களிடம்
    கூறியிருக்கின்றன

    அவை
    தாம் இறக்கவில்லை
    தலை பிளந்து கொல்லப்பட்டோம் என்பதை
    மண்புழுக்களிடம் தெரிவித்திருக்கின்றன

    மழைத்துளியிடம்
    எமது மைந்தர்கள் மீது
    இதே குளுமையுடனும்
    கருணையுடனும்
    பருவந்தவறாது பயின்றிடு என்று மன்றாடுகின்றன !


    -- மகுடேசுவரன்
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

Page 1 of 7 123 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •