-
20th May 2012, 09:01 AM
#1
Senior Member
Diamond Hubber
படித்ததில் பிடித்தது..
அன்பர்களே! படித்ததில் பிடித்த கவிதைகள், சொற்றொடர்கள், பதிவுகளை இங்கே பதிவு செய்யுங்களேன்!
அட்மின்! இதற்கான பிரத்யேக திரி தமிழ்த் தொகுப்பில் இருக்கேமேயானால் இங்கேயுள்ள எனது பதிவுகளை அங்கே இடமாற்றம் செய்யவும்! நன்றி.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
20th May 2012 09:01 AM
# ADS
Circuit advertisement
-
20th May 2012, 09:02 AM
#2
Senior Member
Diamond Hubber
சாணிப்பால் ஊற்றி
சவுக்கால் அடித்தான்
என் பூட்டனை உன் பூட்டன்
காலில் செருப்பணிந்ததால்
கட்டி வைத்து உதைத்தான்
என் பாட்டனை உன் பாட்டன்
பறைக்கு எதுக்குடா படிப்பு?
என
பகடி செய்து ஏசினான்
என் அப்பனை உன் அப்பன்
"உங்களுக்கென்னப்பா?
சர்க்காரு வேலையெல்லாம்
உங்க சாதிக்குத்தானே" என
சாமர்த்தியம் பேசுகிறாய் நீ
ஒன்று செய்!
உன்னைறியாத ஊரில் போய்
உன்னைப்பறையனென்று சொல்
அப்போது புரியும் என் வலி
- இராசை கண்மணி ராசா
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
20th May 2012, 09:03 AM
#3
Senior Member
Diamond Hubber
என்னைக்கருவுற்றிருந்த மசக்கையில்
என் அம்மா தெள்ளித்தின்றதைத்தவிர
பரந்த இந்நாட்டில் எங்கள் மண் எது?
தடித்த உம் காவிய இதிகாசங்களில்
எந்தப்பக்கதில் எங்கள் வாழ்க்கை?
எங்களுக்கான வெப்பத்தையும் ஒளியையும் தராமலேயே
சூரிய சந்திரச்சுழற்சிகள் இன்னும் எது வரை?
எங்களுக்கான பங்கை ஒதுக்கச்சொல்லியல்ல
எடுத்துக்கொள்வது எப்படியென
நாங்களே எரியும் வெளிச்சத்தில் கற்றுக்
கொண்டிருக்கிறோம்
அதுவரை அனுபவியுங்கள்
ஆசீர்வதிக்கிறோம்
- ஆதவன் தீட்சண்யா
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
20th May 2012, 05:52 PM
#4
Senior Member
Diamond Hubber
மருதம்
ஊருக்கெல்லாம் கோடியிலே
முந்திரிக் கொல்லே
உக்காந்தால் ஆள்மறையும்
முந்திரிக் கொல்லே
செங்கமலம் குளிச்சுப்புட்டு
அங்கிருந்தாளாம்
ஈரச்சேலை கொம்பில் கட்டி
காத்திருந்தாளாம்
நாட்டாண்மைக்காரன் மகன்
அங்கே போனானாம்
வெக்கப்பட்டு செங்கமலம்
எந்திரிச்சாளாம்
நாட்டாண்மைக்காரன் மகன்
கிட்டே போனானாம்
வெக்கப்பட்டு செங்கமலம்
சிரிச்சிக்கிட்டாளாம்
உக்காந்தால் ஆள்மறையும்
முந்திரிக் கொல்லே
ஊருக்கெல்லாம் கோடியிலே
முந்திரிக் கொல்லே.
---- ஞானக்கூத்தன்
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
20th May 2012, 06:12 PM
#5
Senior Member
Diamond Hubber
அண்டை வீட்டின்
மரம்
உதிர்க்கும்
சருகுகளைக் கண்டு
தினமும்
சபிக்கிறாள்
உடனுறையும் நாயகி
அவள்
உதிர்த்துக் குவியும்
சொற்குப்பைகளை
தினமும் பெருக்குகிறது
அம்மரம் அனுப்பும்
காற்று.
---- அழகிய பெரியவன்
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
20th May 2012, 06:23 PM
#6
Senior Member
Diamond Hubber
கவிதை எழுதுவது
என்பது
ஒரு குண்டு பல்பை
ஹோல்டரில் மாட்டுவது போல் இருக்கிறது
முழுமையானதின்
அமைதியை ஏந்தி
பல்ப்
ஒளிவீசத் தொடங்குகிறது
ஒரு
மெல்இழை
நிசப்தத்தில்
எவ்வளவு நீள
நன்கணம்.
---- தேவதச்சன்
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
21st May 2012, 01:02 AM
#7
Senior Member
Diamond Hubber
உண்டியல் குலுக்குகையில்
உன் இரத்தத்தில் ஒலிக்கவில்லையா
”தர்மம் போடுங்க சாமீ!” என்றபடி
பிட்சா பாத்திரத்துடன் ஒரு பரதேசி
வீடு வீடாய் ஏறி இறங்கும் காட்சி?
அதைத்தானோ
”நீயே கடவுள்
தர்மமே உன் கடமை!” என்று
கம்பீரமாய்ப் பாடுகிறான் கவிஞன்?
-- தேவதேவன்
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
21st May 2012, 01:07 AM
#8
Senior Member
Diamond Hubber
பருந்து
உங்கள் சின்னஞ் சிறிய வயதிலாவது
பார்த்து அனுபவித்திருக்கிறீர்களா,
பருந்து ஒன்று
கோழிக் குஞ்சொன்றை
அடித்துச் சென்ற காட்சியை?
அதன் கூர்மையான நகங்களால்
உங்கள் முகம் குருதி காணப்
பிராண்டப் பட்டதுபோல்
உணர்ந்திருக்கிறீர்களா?
பறவை இனத்திற் பிறந்தாலும்
விண்ணிற் பறக்க இயலாது
குப்பை கிண்டித் திரியும் அதனை
துடிக்கத் துடிக்க ஓர் உயரத்திற்கு
அழைத்துச் சென்ற அந்தக் காட்சி!
அக் குஞ்சோடு குஞ்சாய் மரித்து
அப் பருந்தோடு பருந்தாய்
பறந்து திரிந்திருக்கிறீர்களா
பாதையில்லா வானத்தில்?
குப்பைகளை
ஆங்கே நெளியும் புழுக்களை
கோழிக் குஞ்சுகளை
அவை தங்களுக்குள்ளே இடித்துக் கொள்வதை
புலம்பல்களை
போரை
போர்க்களங்களில்
பிணமாகி அழியும் மனிதர்களை
பிணங்களின் அழுகிய வாழ்வை-
நீங்களும்தான் பார்த்திருப்பீர்களில்லையா?
அது தன் சிறகு மடித்து
தனது பனித்த கண்களுடன்
ஒரு குன்றின் மீதமர்ந்திருக்கையில்
அய்யம் சிறிதுமின்றி
ஒரு தேவதூதன் போன்றே காணப்படுகிறதில்லையா?
-- தேவதேவன்
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
21st May 2012, 08:20 AM
#9
Senior Member
Diamond Hubber
எப்போது வருவாய்
நீ எப்போது
வருவாய்?
அந்தப் பெண்
கண்களில் நீர் தளும்ப
யாரிடமோ
தொலைபேசியில்
இந்தக் கேள்வியைத்
திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டிருக்கிறாள்
நான் கவனிப்பதைப் பற்றி
கவலைப்பட அவளுக்கு
எந்த அவகாசமும் இல்லை
எப்போது வருவாய்
என்பதைக் கேட்பதைத் தவிர
அவளுக்கு இந்த உலகத்திடமிருந்து
தெரிந்துகொள்ள எதுவும் இல்லை
அவள் பிடிவாதமாக இருந்தாள்
மன்றாடுதலுடன் இருந்தாள்
தனிமையாக இருந்தாள்
எந்தக் கணமும் உடைந்து அழக்கூடியவளாக இருந்தாள்
எத்தனை யுகங்களாய்
இதே குரலில்
இதே கண்ணீருடன்
இதே கேள்வி கேட்கப்படும்
என்று தெரியவில்லை
வர வேண்டிய யாரோ ஒருவர்
இன்னும் வராமலேயே
இருந்துகொண்டிருக்கிறார்
-- மனுஷ்ய புத்திரன்
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
20th May 2012, 05:46 PM
#10
Senior Member
Diamond Hubber
அங்கே மழை பெய்கிறது!
எங்கோ
ஒரு நிலத்தில்
புதைக்கப்பட்ட பிணங்கள்
புரண்டு படுக்கின்றன
அப்பிணங்களைத் தீண்டுகிறது
நிலத்தில் இறங்கிய மழையின்
நீர்க்கால் ஒன்று
புதையுடல்கள்
துயில் கலைந்தனபோல்
உடல் முறித்து எழ முயல்கின்றன
அவற்றின் உதடுகளில்
இன்னும் பதியப்படாத சொற்களும்
உலக மனசாட்சியின் மீது
வாள்செருகும் வினாக்களும்
தொற்றியிருக்கின்றன
தாம் சவமாகும் முன்பே
புதைபட்டதைத்
தம்மைக் கடந்திறங்கும் வேர்த்தளிர்களிடம்
கூறியிருக்கின்றன
அவை
தாம் இறக்கவில்லை
தலை பிளந்து கொல்லப்பட்டோம் என்பதை
மண்புழுக்களிடம் தெரிவித்திருக்கின்றன
மழைத்துளியிடம்
எமது மைந்தர்கள் மீது
இதே குளுமையுடனும்
கருணையுடனும்
பருவந்தவறாது பயின்றிடு என்று மன்றாடுகின்றன !
-- மகுடேசுவரன்
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
Bookmarks