Quote Originally Posted by v_s View Post
it is just that why i have to spend money and hurt myself as there are so many other things in our own life to get hurt, why in films?
v_s சார், தனிப்பட்ட விருப்பங்கள். ஒத்துப்போகிறேன். விபரம் தெரிய ஆரம்பித்த காலத்திலிருந்து நான் படங்களின் நிறங்களை அறிந்தே செல்கிறேன். பருத்தி வீரன் வன்முறை என்றாலும் காதல் என்ற மகத்துவத்தினால் பிடித்து போனது. ஆனால் சுப்ரமணியபுரம் முழுக்க முழுக்க வன்முறை. ஆனால் அதையும் எல்லோரும் காவியம் என எழுத ஆரம்பித்து விட்டதால் போய் பார்த்தேன். இன்னொரு முறை கண்டிப்பாக பார்க்க முடியாது. நான் கடவுள், மகாநதி போன்ற படங்களையும் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பார்க்க மனமில்லை. சோகம் தொண்டையை அடைக்கும். திரும்ப திரும்ப பார்க்கணும் என ஆசைப்படும் படங்கள் பெரும்பாலும் காதல், நகைச்சுவை, குடும்ப செண்டிமெண்ட் டிராமாக்கள் தான்.