Page 1 of 11 123 ... LastLast
Results 1 to 10 of 108

Thread: Vadugapatti Vairamuthu

  1. #1
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like

    Vadugapatti Vairamuthu

    வைரமுத்து

    இத்திரியில் கவிஞர், திரையிசைப் பாடலாசிரியர் மற்றும் எழுத்தாளர் வைரமுத்துவின் கவிதைகள், பாடல்கள் மற்றும் நூல்களைப் பற்றிய உங்களது பார்வைகளை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  4. #3
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  5. #4
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  6. #5
    Senior Member Veteran Hubber hamid's Avatar
    Join Date
    Jul 2008
    Location
    Doha, Qatar
    Posts
    3,627
    Post Thanks / Like
    Tgood thread.
    thanniir desam..all time favourite.
    Kavirajan kathai is another one.
    Will discuss in detail tomorrow.
    Come back strong.. Come back soon..

  7. #6
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Quote Originally Posted by hamid
    Tgood thread.
    thanniir desam..all time favourite.
    எனக்கும் பிடிக்கும் ஹமித். ஆரம்பமே அழகா இருக்கும். கடலைப் பற்றிய விவரணையோடு நூலை இவ்வாறு தொடங்குகிறார்.

    கடல்.
    உலகின் முதல் அதிசயம்.
    சத்தமிடும் ரகசியம்.
    காலவெள்ளம்
    தேங்கிநிற்கும் நீலப் பள்ளம்.

    வாசிக்கக் கிடைக்காத
    வரலாறுகளைத் தின்றுசெரித்து
    நின்றுசிரிக்கும் நிஜம்.

    கடல்...
    ஒருவகையில் நம்பிக்கை.
    ஒருவகையில் எச்சரிக்கை.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  8. #7
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    தண்ணீர் தேசத்தில் பல உவமைகள் கவர்ந்தவை. அவற்றுள் சில..

    நிலவைப் பெற்றெடுப்பதற்கு பிரசவ
    வலியில் சிவந்து கொண்டிருக்கும் கிழக்கு.


    தண்ணீரில் எடையிழக்கும் பாரம்போல்
    துன்பம் எடையிழந்தது.


    வாடைக் காற்றுக்கு
    தூக்கத்தில் நடக்கிற வியாதி
    போலும். தட்டுத் தடுமாறி
    வீசிக்கொண்டிருந்தது.


    பொறுமையாயிருந்தால் தண்ணீரைக் கூடச்
    சல்லடையில் அள்ளலாம் - அது பனிக்
    கட்டியாகும்வரை பொறுத்திருந்தால்.


    உணவைப் போலவே
    உரையாடலும் மெள்ள மெள்ள
    சுருங்கிவிட்டது.


    நகைச்சுவையும் அங்கங்கே..

    ஒவ்வொரு வரியையும் வெவ்வேறு சுதியில்
    சமையலறையிலுருந்து சலிம் பாடினான்.

    மீன்களுக்கு மட்டும் காது கேட்குமானால்
    அவன் அறுப்பதற்கு முன்பே மரித்திருக்கும்.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  9. #8
    Senior Member Seasoned Hubber geno's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    601
    Post Thanks / Like

    vairamuthu's freudian slip!

    (குறிப்பு: ஏப்பிரல் - மே 2009 -வாக்கில் வைரமுத்துவால் எழுதப்பட்டது - தினத்தந்தியிலும் இக்கவிதை மே 2009 -இல் வெளிவந்தது)

    இனம் தின்னும் ராஜபட்சே
    ---------------------------------

    சொந்தநாய்களுக்குச்
    சொத்தெழுதிவைக்கும் தேசங்களே!
    ஓர் இனமே
    நிலமிழந்து நிற்கிறதே
    நெஞ்சிரங்க மாட்டீரா?

    பூனையொன்று காய்ச்சல் கண்டால்
    மெர்சிடீஸ் கார் ஏற்றி
    மருத்துவமனை ஏகும் முதல் உலக நாடுகளே!

    ஈழத்து உப்பங்கழியில்
    மரணத்தின் வட்டத்தில்
    மனித குலம் நிற்கிறதே!
    மனம் அருள மாட்டீரா?

    வற்றியகுளத்தில் செத்துக்கிடக்கும்
    வாளை மீனைப்போல்
    உமிழ்நீர் வற்றிய வாயில்
    ஒட்டிக்கிடக்கும் உள்நாக்கோடு
    ரொட்டி ரொட்டி ரொட்டியென்று
    கைநீட்டும் விரல்கள்
    கண்குத்தவில்லையோ அமெரிக்க அதிபரே!

    தமிழச்சிகளின் மானக்குழிகளில்
    துப்பாக்கி ஊன்றித் துளைக்கும்
    சிங்களவெறிக் கூத்துகளை
    அறிந்தும் அறியாயோ ஐ.நாவே?

    வாய்வழி புகட்டிய தாய்ப்பால்
    காதுவழி ரத்தமாய் வடிவது கண்டு
    கண்வழி உகுக்கக் கண்ணீரின்றிக்
    கதறும் தாய்மார் மறந்தொழிந்தாயோ
    அழத்தெரியாத ஐரோப்பாவே!

    அடுக்கிவைத்த உடல்களில்
    எந்த உடல் தகப்பன் உடல் என்று தேடி
    அடையாளம் தெரியாத ஒரு பிணத்துக்கு
    அழுது தொலைக்கும் பிள்ளைகளின்
    பெருங்குரல் கேட்டிலையோ பிரிட்டிஷ் அரசே!

    எனக்குள்ள கவலையெல்லாம்
    இனம் தின்னும்
    ராட்சசபக்ஷே மீதல்ல

    ஈழப்போர் முடிவதற்குள்
    தலைவர்கள் ஆகத்துடிக்கும்
    தலையில்லாப் பேர்வழிகள் மீதல்ல

    எம்மைக்
    குறையாண்மை செய்திருக்கும்
    இறையாண்மை மீதுதான்



    குரங்குகள் கூடிக்
    கட்டமுடிந்த பாலத்தை
    மனிதர்கள் கூடிக்
    கட்ட முடியவில்லையே


    ஆனாலும்
    போரின் முடிவென்பது
    இனத்தின் முடிவல்ல

    எந்த இரவுக்குள்ளும்
    பகல் புதைக்கப்படுவதில்லை
    எந்த தோல்விக்குள்ளும்
    இனம் புதைக்கப்படுவதில்லை

    அங்கே
    சிந்திய துளிகள்
    சிவப்பு விதைகள்
    ஒவ்வொரு விதையும் ஈழமாய் முளைக்கும்

    பீரங்கி ஓசையில்
    தொலைந்து போன தூக்கணாங்குருவிகள்
    ஈழப்பனைமரத்தில்
    என்றேனும் கூடுகட்டும்.

    ========================

    சற்றே கூர்ந்து கவனித்தால் தெரியும் - வைரமுத்து, அவருடைய "இனத் தலைவரை" - இதில் விளிக்கவேயில்லை!

    "அவரை" விளிப்பது பொருத்தமில்லை / பயனில்லை என்றுதான் - அய்ரோப்பாவே, அமெரிக்காவே - என்று நன்றாகவே கூவுகிறாரோ?.

    இந்தக் "கிராமத்துப் பறவையை" - சில பல கடல்கள் தாண்டி அழைத்துப் போன ஈழத்தவர்களுக்கு இதுவும் வேண்டும்; இன்னமும் வேண்டும்.

    இவர், முதலில் தனக்கு வழங்கப்பட்ட "பத்ம சிறீ" விருதைத் திருப்பித் தந்துவிடட்டும்; அல்லது இதுபோல மாய்மாலக் கவிதைகள் எழுதாமல் சும்மா கிடக்கட்டும்.

    இவருடைய தலைவருடன் அதிகாலைத் தொலைபேசிப் பொழுது போக்கட்டும்; தமிழர்களை மடையர்களென்று இவர் இன்னமும் நினைக்க வேண்டியதில்லை.

    " தனது லட்சியங்களுக்கு எதிரான திசையில் காலில் குருதி வடிய" (அவருடைய சொல்லாடல்தான்!) ஓடிக்கொண்டிருக்கும் வைரமுத்து - தனது பேனா முனையை ஒடித்து விடுவது நல்லது.
    M.K. Narayanan, Sivasankara Menon, A.K.Antony, Satish Nambiar, Vijay Nambiar, Nirupama Menon Rao....

    இந்திய தேசியம், இந்திய நீதி, இந்திய தருமம்:
    இலட்சம் தமிழன் செத்தாலும் பரவாயில்லை. ஒரே ஒரு <டிங்க்> மனசும் கூடப் புண்பட்டுவிடக்கூடாது!

    டகால்ட்டி திராவிடன் கருணாநிதியின் கையால் சாவதைக் காட்டிலும் ஒரிஜினல் <டிங்> ஜெ.வின் கையால் அழிவது மேல்!

    "The Recrudescence of Thamizh ethnicism is deadlier than Ebola Virus - declares Dr. Varna Ratna, announcing the path-breaking discovery.."

  10. #9
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    கவிராஜன் கதை.
    கள்ளிக்காட்டு இதிகாசம்
    சிகரங்கள் நோக்கி
    தண்ணீர் தேசம்.
    வில்லோடு வா நிலவே
    கருவாச்சி காவியம்
    இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல

    so many wonderful literary works கவிஞர் வைரமுத்து has given us
    கொஞ்சம் தேநீர் நிறைய வானம் is a wonderful collection of கவிதைகள்.
    EVER SINCE I READ முதன் முதலாய் அம்மாவுக்கு....கவிதை , WHENEVER I PREPARE கொத்தமல்லிச் சட்னி .. MY HEART AUTOMATICALLY WONDER 'இன்னிக்கு வைரமுத்து சார்'S அம்மா மாதிரி செய்யலாமா OR GRIND WITH TOMATOES OR VARIATION PREPARATION'.. SIMPLY I CAN 'T AVOID THAT THOUGHT ...பழகிப்போச்சு.

    பெய்யெனப் பெய்யும் மழை புத்தகத்தில் மழைக்குருவி என்ற கவிதை எனக்கு ரொம்ப பிடித்தமானது...
    HIS LOVE FOR NATURE .

    கொஞ்சம் தேநீர் நிறைய வானம் புத்தகத்தில் ஒரு காலத்தில் ஒரு குளம் இருந்தது.....makes me think always .

    மனுசப் பயகூடி
    மண்ண ஏமாத்த
    மழையெல்லாம் கூடி
    மனுசன ஏமாத்த ..

    so true .

    when I first moved to அமெரிக்கா, best thing I loved is running WATER .

    I grew up in a middle class family , my mom used wake me up to carry water or wait for our turn with the clock in a ஒண்டுக்குடுத்தனம் ஏரியா.
    கடிகாரம் வைச்சு ஒவ்வொரு குடித்தனமும் 5 mins பிடிப்பாங்க , குடம், வாளி வைச்சு or tube போட்டு .. you needed to be ready for your turn or you lost இட்..இல்லைன்னா பக்கத்து வீட்டுலே சொல்லணும், morning வேலை இருக்கு, நீங்க பிடிங்க நான் உங்க turn லே பிடிக்கறேன் என்று .

    She was working too . She needed her children and hubby co -operation to carry out the household chores . Every day a working class lady had this taxing chore. Poor lady, பாவம் எங்க அம்மா.

    Everyday after my walk or come inside from outside when i wash my legs in my yard water tap here , my heart automatically wishes "GOD BLESS AMERICA ".மனசு உண்மையா சொல்லிக்கும்.

    தேங்க்ஸ் TO மேடம்.ஜெயலலிதா for THE WONDERFUL PROGRAM -RAIN WATER HARVESTING SCHEME TO RELIEF WATER SHORTAGE .
    HOPE IT HELPS REGULAR FOLKS . Basic need - WATER .
    வினதா.

  11. #10
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like

    Re: vairamuthu's freudian slip!

    Quote Originally Posted by geno
    சற்றே கூர்ந்து கவனித்தால் தெரியும் - வைரமுத்து "அவருடைய இனத் தலைவரை" - இதில் விளிக்கவேயில்லை!

    "அவரை" விளித்து பயனில்லை என்றுதான் - அய்ரோப்பாவே, அமெரிக்காவே - என்று நன்றாகவே கூவுகிறாரோ?.

    இந்தக் "கிராமத்துப் பறவையை" - சில பல கடல்கள் தாண்டி அழைத்துப் போன ஈழத்தவர்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்.

    இவர், முதலில் தனக்கு வழங்கப்பட்ட "பத்ம சிறீ" விருதைத் திருப்பித் தந்துவிடட்டும்; அல்லது இதுபோல மாய்மாலக் கவிதைகள் எழுதாமல் சும்மா கிடக்கட்டும்.

    இவருடைய தலைவருடன் அதிகாலை தொலைபேசி பொழுது போக்கட்டும்; தமிழர்களை மடையர்களென்று இவர் இன்னமும் நினைக்க வேண்டியதில்லை.

    " தனது லட்சியங்களுக்கு எதிரான திசையில் காலில் குருதி வடிய" (அவருடைய சொல்லாடல்தான்!) ஓடிக்கொண்டிருக்கும் வைரமுத்து - தனது பேனா முனையை ஒடித்து விடுவது நல்லது.
    மனதில் கொஞ்சமாவது ஈரம் இருப்பதனாலேயே இப்படிப்பட்ட கவிதைகளை எழுதினார். ஒரு எழுத்தாளர் என்ற முறையில் தன் கோபத்தை எழுத்தில் வடித்திருக்கிறார். இந்த கவிதை மட்டுமல்ல, விடை கொடு எங்கள் நாடே! என்ற கன்னத்தில் முத்தமிட்டால் படப் பாடலும் உண்டு.

    உங்கள் தார்மீக கோபத்தினை ஈழத்திலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் வாழ்ந்த அப்துல் கலாமிடம் காட்டுங்கள். அரசியல் வாதிகளிடம் காட்டுங்கள். அதை விட்டு கலைஞர்களை, புலவர்களை "விருதுகளை திருப்பிக் கொடுங்கள்!" எனச் சொல்வதில் விவேகமே இல்லை. கமலிடம் இதுபோன்ற ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஒரு பதில் நச்சென்று சொல்லியிருந்தார். இப்போ ஞாபகம் வரமாட்டேஙுது.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

Page 1 of 11 123 ... LastLast

Similar Threads

  1. All About Kaviarasu Vairamuthu- The TAMIZH man
    By dinesh2002 in forum Current Topics
    Replies: 20
    Last Post: 13th July 2013, 11:46 PM
  2. IR - Vairamuthu combo
    By Waterloo in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 60
    Last Post: 17th December 2010, 10:34 AM
  3. Vairamuthu badhilkaL in kumudham...
    By app_engine in forum Current Topics
    Replies: 8
    Last Post: 12th February 2008, 04:06 PM
  4. vairamuthu kavithaigaL
    By Roshan in forum Poems / kavidhaigaL
    Replies: 34
    Last Post: 24th July 2005, 07:23 AM
  5. Vaanam chinnathuthaan - Vairamuthu
    By Oldposts in forum Poems / kavidhaigaL
    Replies: 7
    Last Post: 14th November 2004, 12:17 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •