-
1st August 2011, 07:02 AM
#771
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
pammalar
முப்பெரும் ஜோதி
"இல்லற ஜோதி", நமது நடிகர் திலகத்தின் 11வது திரைக்காவியமாக 9.4.1954 வெள்ளியன்று தமிழ்ப் புத்தாண்டையொட்டிய வெளியீடாக வெள்ளித்திரைக்கு வந்தது. நல்லதொரு வெற்றியை அடைந்த இக்காவியம் அதிகபட்சமாக மதுரையில் 'சிந்தாமணி' திரையரங்கில் 63 நாட்கள் ஓடியது. [முரளி சார் சட்டைக்காலர் தானாகவே உயர்கிறது பாருங்கள், கூடவே கோல்ட்ஸ்டாருக்கும் தான்!].
பக்தியுடன்,
பம்மலார்.
Pammalar sir, our Madurai people got special bond with our NT and he is only REAL "Vasool Chakravarthy" in Madurai. NT movie will be houseful in any given day and any where in Madurai.
Our NT has created lots of unique records in Madurai which no actor broken till now and I don't think any thing can do it.
cheers,
Sathish
-
1st August 2011 07:02 AM
# ADS
Circuit advertisement
-
1st August 2011, 09:11 AM
#772
Senior Member
Seasoned Hubber
டியர் பம்மலார்,
நம் எல்லோரையும் திலக ஜோதியில் ஐக்கியமாக்கி விட்டீர்கள். திருவிளையாடல் படங்களென்ன, இல்லற ஜோதி பகிர்வுகளென்ன, கௌரவம் ஹாட் நியூஸ் என்ன, ரவிகுமாரின் பெருமை என்ன என்று எல்லாவற்றையும் சூப்பராக அளித்து வி்ட்டீர்கள். நன்றியும் பாராட்டுக்களும்..
அன்புடன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
1st August 2011, 09:15 AM
#773
Senior Member
Seasoned Hubber
ஆகஸ்ட் அணிவகுப்பு ஆரம்பம்....
குங்குமம்
வெளியான நாள் 02.08.1963
பேசும் படம் ஆக்ஸட் 1963 இதழில் வெளி வந்த குங்குமம் பட விளம்பரம்
மன்னவன் வந்தானடி
வெளியான நாள் 02.08.1975
திரைவானம் சிறப்பு மலர் பக்கங்கள்
தொடரும்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
1st August 2011, 01:23 PM
#774
Senior Member
Seasoned Hubber
நடிகர்திலகம் சிவாஜி அவர்களுக்கு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரில் சிலை அமைக்க, கும்பகோணம் நகராட்சி ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றது. அதற்காக அந்த நகராட்சி தலைவர் மற்றும் கவுசிலர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வோம். தமிழ்நாட்டிலேயே 1980 - ஆம் ஆண்டுகளில் சிவாஜி மன்றம் சார்பில் நகராட்சி தலைவரை தேர்ந்தெடுத்த நகரம் கும்பகோணம் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். நகராட்சி தலைவரிடம் (திரு. தமிழழகன், தி.மு.க) தொலைபேசியில் பேசியபோது விரைவில் தமிழக அரசின் அனுமதி கிடைத்தவுடன் சிலை அமைப்பு வேலை துவங்கப்படும் என்று கூறினார்.
Last edited by KCSHEKAR; 1st August 2011 at 05:36 PM.
-
1st August 2011, 04:26 PM
#775
Senior Member
Veteran Hubber
முரளி சார்,
'ஒரு யாத்ரா மொழி' படத்தைப்பற்றிய பல அரிய தகவல்களைத்தந்துள்ளீர்கள். இவை இதுவரை நாங்கள் அறியாதது. மோகன்லால், தன் நண்பன் பாலாஜியின் சொந்த மாப்பிள்ளை என்பதால் நடிகர்திலகமும் அவரை 'மாப்பிள்ளை' என்றே அழைப்பார் என்பது மட்டும் தெரியும். திலகன் மட்டுமல்ல, மலையாளத் திரையுலகினர் அனைவருமே நடிகர்திலகத்திடம் மிகவும் அன்பு கொண்டவர்கள். தெலுங்கு, கன்னட, இந்தி திரையுலகினரும் அப்படியே. (சொந்த மானிலத்தில் மட்டும்தான் அவர் அதிகம் விமர்சனம் செய்யப்பட்டார். அவர்களும் அவரது மறைவுக்குப்பின் புகழ்கின்றனர்).
ராகவேந்தர் சார்,
ஆகஸ்ட் வரிசையை நெற்றியில் 'குங்குமம்' இட்டு துவக்கி விட்டீர்கள். தொடரட்டும் உங்களது அட்டகாசம்.
பம்மலார் சார்,
மயிலைக்கு வர இயலாதோரை உங்கள் எழுத்துக்களால் நிகழ்ச்சியைக் காணச்செய்து விட்டீர்கள். ஏற்கெனவே பார்த்திருந்த 'இல்லற ஜோதி'யை, தங்கள் விரிவுரையைப் படித்த பின் மீண்டும் பார்க்க மனம் விழைகிறது. தாங்கள் படித்த பள்ளியில் நுழைந்ததும் தங்கள் மன நெகிழ்வுடன் கூடிய மலரும் நினைவுகள் எங்களையும் எங்கள் பழைய நினைவுகளுக்கு இட்டுச்சென்றன. இல்லற ஜோதியின் கதைச்சுருக்கத்தையே (கிட்டத்தட்ட) தந்துவிட்டீர்கள். முன்னதாக தந்திருக்கும் 'திருவிளையாடல்' நிறைவுப்பகுதியும் வெகு ஜோர்.
மகாலட்சுமியில் பாரிஸ்டரின் வெற்றிநடைபற்றிய தகவலும் அருமை. ஞாயிறு கொண்டாட்டங்க்கள் பற்றிய விவரங்களுக்கு மிக்க நன்றி. மகாலட்சுமியில் இரு திலகங்களின் படங்கள் மாறி மாறி திரையிடப்படுவதால் ஒருவரை ஒருவர் மிஞ்ச வேண்டும் என்ற ஆவலில் ஞாயிறு கொண்டாட்டங்களால், வரவர 'மகாலட்சுமி' நட்சத்திர அந்தஸ்தைப்பெற்று வருகிறது. எதிரே இருந்த சரஸ்வதிதான் நம் நெஞ்சங்களில் மட்டும் நினைவிலிருக்கிறது.
பெரம்பூரில் பாரிஸ்ட்டர் கலக்குவதற்கு சற்றும் குறையாமல், நெல்லையில் மேயர் கலக்கி வரும் செய்தி மகிழ்ச்சியளிக்கிறது. நெல்லைக்கொண்டாட்டங்கள் பற்றிய விரிவான தகவலுக்கும் நன்றி.
சந்திரசேகர் சார்,
நடிகர்திலகத்தின் சிலை தொடர்பாக கும்பகோணம் நகராட்சி தீர்மானம் மனதில் தேனாக இனிக்கிறது. தீர்மானம் சீக்கிரம் செயல்வடிவம் பெற்று பூர்த்தியடைய வாழ்த்துக்கள். நடிகர்திலகத்தின் மன்றத்தைச்சேர்ந்தவர் நகராட்சித் தலைவராக இருக்கிறார் என்பது புதிய செய்தி மட்டுமல்ல மகிழ்வான செய்தியும் கூட. தகவல்களுக்கு மிக்க நன்றி.
-
1st August 2011, 05:10 PM
#776
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
mr_karthik
முரளி சார்,
சந்திரசேகர் சார்,
நடிகர்திலகத்தின் சிலை தொடர்பாக கும்பகோணம் நகராட்சி தீர்மானம் மனதில் தேனாக இனிக்கிறது. தீர்மானம் சீக்கிரம் செயல்வடிவம் பெற்று பூர்த்தியடைய வாழ்த்துக்கள். நடிகர்திலகத்தின் மன்றத்தைச்சேர்ந்தவர் நகராட்சித் தலைவராக இருக்கிறார் என்பது புதிய செய்தி மட்டுமல்ல மகிழ்வான செய்தியும் கூட. தகவல்களுக்கு மிக்க நன்றி.
Sorry Mr.Karthik,
நடிகர்திலகத்தின் மன்றத்தை சேர்ந்தவர் 1980 - ஆம் ஆண்டுகளில் நகர்மன்றத் தலைவராக (சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி) இருந்தார். தற்போது இருப்பவர் தி.மு.க வைச் சேர்ந்தவர்
-
1st August 2011, 05:34 PM
#777
Senior Member
Seasoned Hubber
முரளி சார் யாத்ரா மொழி திரைப்படத்தைப் பற்றிய தகவல்கள் அருமை. திருவிளையாடலை சிறப்பாக நிறைவுசெய்து, இல்லற ஜோதியை இனிதே ரசிக்கவைத்த பம்மலாருக்கு நன்றி. ஆகஸ்ட் அணிவகுப்பை குங்குமம், மன்னவன் வந்தானடி -யோடு அட்டகாசமாகத் துவக்கியிருக்கும் திரு. ராகவேந்திரன் அவர்களுக்கு ஒரு சபாஷ்.
Last edited by KCSHEKAR; 1st August 2011 at 06:29 PM.
-
1st August 2011, 05:42 PM
#778
கெளரவம் மகாலட்சுமி திரை அரங்கில் கண்ட காட்சியை எப்படி வர்ணிப்பது என்று தெரியவில்லை .
முதலில் திரு ராகவேந்திர சார் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் மகாலட்சுமி திரை அரங்கிற்கு செல்ல வழி சொல்லியது கூகுளே மாப பிச்சை வாங்க வேண்டும் என்னிடம் கேமரா இல்லாததால் அந்த கொண்டாட்டங்களை படம் பிடிக்க முடியவில்லை
சாந்தியில் நாம் கொண்டாடுவது நம்முடைய பிறந்த வீட்டு பண்டிகை என்றல் மற்ற திரை அரங்கில் கொண்டாடுவது புகுந்த வீட்டு பண்டிகை என்று சொன்னால் அது மிகை ஆகாது . சாந்தியில் கண்ட பல முகங்களை அங்கே கண்டேன் ஆனால் அறிமுகம் செய்து கொள்ள முடியவில்லை .அதற்குள் திரை அரங்கிற்கு உள்ளே சென்று விட்டேன் . மகாலட்சுமியில் இருந்து மாம்பலம் ஸ்ரீநிவசவிற்கு அடுத்த வாரம் barrister விஜயம் என்று கேள்வி பட்டேன் சாந்தியில் மிஸ் செய்த தவறை மகாலக்ஷ்மியில் பார்த்து கிளியர் செய்து விட்டேன்
மன்னவன் வந்தானடி சிறப்பு மலர் நமது கண்மணி பம்மலர்/ராகவேந்தர் அவர்களால் பதிவேட்டேறம் செய்தது எனுடைய ஒரு சந்தேகம் தெளிந்தது. jayar மொவீஸ் சங்கரன் ஆறுமுகம் அவர்கள் தன முதலில் மஞ்சுளா அவர்களை நடிகர் திலகம் அவர்களடிம் அறிமுகம் செய்தார்கள் என்று அறிந்து கொண்டேன் . செண்பக பாண்டியனின் சந்தேகத்தை தீர்த்த தருமி (தவறான பாட்டு அல்ல) போல் என்னுடைய சந்தேகத்தை பம்மலர்/ராகவேந்தர் சார் தீர்த்து வைத்தார்கள் மிக்க நன்றி
என்றும் அன்புடன்
கிருஷ்ணா
-
1st August 2011, 06:42 PM
#779
Senior Member
Veteran Hubber
கிருஷ்ணாஜி,
மஞ்சுளா நடிகர்திலகத்துடன் நடிக்க முதலில் ஒப்பந்தமானது 'மன்னவன் வந்தானடி' படத்துக்காகத்தான். ஞான ஒளி ஐம்பது நாட்களைக்கடந்தபோதே, மன்னவன் வந்தானடி துவங்கப்பட்டது. இப்படத்தின் தயாரிப்பில் ஏற்பட்ட சில தாமதங்களால், இதன்பின்னர் ஒப்பந்தமான எங்கள் தங்க ராஜா, என் மகன், அவன்தான் மனிதன் ஆகிய படங்கள் முதலில் ரிலீஸாகி விட்டன.
-
1st August 2011, 09:52 PM
#780
Senior Member
Veteran Hubber
டியர் ராகவேந்திரன் சார்,
பாராட்டுக்கு நன்றி !
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்களை மிகமிக மங்களகரமாக "குங்குமம்" காவியத்துடன் துவக்கியுள்ளீர்கள். "குங்குமம்", "மன்னவன் வந்தானடி" அணிவகுப்பு மிக அருமை.
டியர் சந்திரசேகரன் சார்,
பாராட்டுக்கு நன்றி !
குடந்தை நகரில் கலைக்குரிசிலின் சிலை நிறுவ சீரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது மகிழ்ச்சிக்குரிய செய்தி. தித்திக்கும் தகவலை வழங்கிய தங்களுக்கு இனிப்பான நன்றிகள் ! சிலை விரைவில் அமைய செழிப்பான வாழ்த்துக்கள் !
டியர் mr_karthik, தங்களின் பாராட்டுதல்களுக்கு பசுமையான நன்றிகள் !
Thanks, goldstar Satish.
டியர் கிருஷ்ணாஜி, மிக்க நன்றி !
அன்புடன்,
பம்மலார்.
Bookmarks