-
30th July 2011, 06:21 PM
#751
Senior Member
Veteran Hubber
பம்மலார் சார் மற்றும் ராகவேந்தர் சார்,
ஆரம்பமாகிவிட்டது அடுத்த அட்டகாசம். சாதாரண படங்களுக்கே விளம்பர அணிவகுப்பைத்தந்து அசத்துவீர்கள். திருவிளையாடலோ சாதனைப்படம், வெள்ளிவிழாப்படம். கேட்கணுமா?. ஒரே அதகளம்தான் போங்க.
உண்மையில் நினைக்க நினைக்க ஆச்சரியமாக வே இருக்கிறது. நமக்கு நினைவுதெரிந்த நாள் முதல், இந்த விளம்பரங்களை தினத்தாள்களில் வெளியாகும்போது பார்த்ததோடு சரி. ஆனால் அவற்றையெல்லாம் அப்போது பத்திரப்படுத்தவில்லையே என்று பலமுறை வருந்தியதுண்டு. இப்படி ஒரு கனினி யுகம் வெருமென்றோ, அதிலும் கூட கிடைத்தற்கரிய இவ்விளம்பரங்களைப் பத்திரப்படுத்தி வைத்து நீங்களெல்லாம் அவற்றை மீண்டும் காண்ச்செய்வீர்கள் என்றோ கனவிலும் நினைத்ததில்லை.
இவற்றை இங்கே பதிவேற்றம் செய்வதில் எவ்வளவு சிரமங்கள், எத்தனை ஸ்டெப்கள் இருக்கின்றன என்பதை அறிய முடிகிறது. இருந்தபோதிலும், நடிகர்திலகத்தின் புகழ் பரப்பும் சேவைக்கு முன்னால் இந்த சிரமங்களெல்லாம் துச்சம் என்று எண்ணி செயல்படும் உங்களைப்பாராட்ட வார்த்தைகளே இல்லை. இது வெறும் சம்பிரதாயச்சொல் அல்ல.
அதிலும் 'துளி விஷம்' வெளிவந்த காலத்திலெல்லாம் இத்திரியில் ப்ங்கேற்கும் நாம் யாருமே பிறந்திருக்கவில்லை. அப்போது வெளியான பத்திரிகை விளம்பரங்களை இப்போது பார்க்கும் வாய்ப்புக் கிடைப்பது என்பது உண்மையிலேயே ஒரு த்ரில்லிங்கான அனுபவம்.
இதுவரை ஒரு சிலரிடத்தில் மட்டுமே பாதுகாக்கப்பட்டு வந்த இந்த ஆவணங்கள், இப்போது எண்ணற்ற நடிகர்திலகத்தின் ரசிகர்கள் கைகளில் தவழ்ந்துகொண்டிருக்கின்றன. அவரவர்களும் கணினி, சிடி, ப்ளாஷ் மெமோரி என பல வகையிலும் பத்திரப்படுத்தி வருகின்றனர். இந்தப்பெருமைகள் அனைத்தும் உங்களுக்கே சொந்தம்.
ஜூலை இறுதி வாரத்திலேயே நடிகர்திலகம் - ஏ.பி.நாகராஜன் கூட்டணியில் மூன்று முத்தான படங்கள் வெளிவந்திருப்பது அபாரம். தேதிவாரியாக நாம் கொண்டாடுவதால் வருட வாரியாக உல்டாவாகி விட்டது என்பது இன்னொரு சுவாரஸ்யம். முதலில் 1968, பின்னர் 1967, இப்போது 1965.
உங்கள் சேவையைப்பார்க்கும்போது, ஒவ்வொரு நாளும் நமதி திரிக்கு விஜயம் செய்யும் நேரம் 'இன்றைக்கு நடிகர்திலகத்தின் எந்தப்படத்தின் வெளியீட்டு நாள்?' என்ற ஆவலுடன் திறக்கின்றோம். நீங்களும் எங்களை ஏமாற்றாமல் அள்ளி அள்ளி வழங்குகிறீர்கள்.
இந்தச்சேவைக்காக உலகெங்கிலும் உள்ள நடிகர்திலகத்தின் ரசிகர்கள் உங்களை வாழ்த்தியவண்ணம் இருப்பார்கள்.
-
30th July 2011 06:21 PM
# ADS
Circuit advertisement
-
30th July 2011, 06:23 PM
#752
Senior Member
Seasoned Hubber
Dear Mohan,
Thank you for the complements.
While looking at the amazing pace in which our NT thread is moving on, i felt this.....
Majority of contribution for most of the threads in this hub comes from youngsters & tech savvy's whereas in our case, majority of contribution comes from seniors, which I'm sure is the pulse of this threads success. Now, that itself is an achievement in its own order, isn't it ??
Partly true. But I personally feel, it is because of youngsters like Saradha, Karthik, Murali Sriniivas, Parthasarathy, KrishnaG, Sathish, yourself, Balakrishnan, and ABOVE ALL THE ONE AND ONLY PAMMAL SWAMINATHAN, and many others, that this thread is going great heights. That is the strength of NT. Some of the names mentioned here might be old in their age but they find place in youngsters as they are young in their heart and passion for NT.
Dear Balakrishnan,
Kindly can you try to provide the translation for the telugu text?
Raghavendran.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
30th July 2011, 06:36 PM
#753
Senior Member
Seasoned Hubber
டியர் கார்த்திக
தங்களுடைய பாராட்டுக்கு உளமார்ந்த நன்றிகள்.
தங்களுடைய பதிவுக்கு சற்று நீண்ட துணைப் பதிவினைத் தர விழைகின்றேன்.
அதற்கு முன்னர் நாம் அனைவரும் ஒரு சேர ஓ போட வேண்டியது ஸ்வாமிக்குத் தான். அவருடைய இத்தனை இளம் வயதில் அவர் இந்த அளவிற்கு ஆவணங்களை சேமித்து வைத்திருக்கிறார் என்றால் முதலில் அவர் தான் நடிகர் திலகத்தின் தீவிரமான ரசிகர் என்று நான் எண்ணுகிறேன், அதே போல் அவரைப் போல் ரசிகரை அடைய நடிகர் திலகம் பெரும் பேறு பெற்றுள்ளார் என்றால் அது மிகையில்லை. குறிப்பாக நடிகர் திலகத்தின் ரசிகர்களைப் பொறுத்த வரையில் ஒவ்வொருவரும் தம் சொந்தப் பொருள் உடல் ஆவி அனைத்தையும் அவருக்கே அர்ப்பணித்து விட்டனர். அதற்கு முழு உதாரணம் ஸ்வாமி.
ஆவணங்களைப் பொறுத்த மட்டில் தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை. அதுவும் எங்களைப் போன்ற பிராயத்தினர் அந்தக் காலங்களில் மிகுந்த சிரமத்திற்கிடையில் தான் திரைப் படங்களைக் காணவே அனுமதி பெறுவோம். சினிமாவைப் பற்றிப் பேசினாலே ஏச்சும் பேச்சும் பலர் வீட்டில் கண்டிருப்பர். அப்படிப் பட்ட ஒரு கால கட்டத்தில் அதுவும் நாங்களெல்லாம் சராசரிக்கு உட்பட்ட பொருளாதார அடிப்படையில் அமைந்த வகுப்பினர். அதனால் திரைப்படம் பார்க்கவே பொருளாதாரத்தில் சிக்கல். கிடைக்கும் சில்லரைகளை சேர்த்து வைத்து அதை நடிகர் திலகம் படம் பார்க்க வைத்திருப்போம். நாம் சாப்பிடுகிறோமோ இல்லையோ, அவர் படம் பார்க்க வேண்டும் . சில சமயம் சில்லரை மிச்சமிருந்தால் பாட்டு புத்தகம் வாங்கி விடுவோ்ம். செய்தித் தாள் பருவ இதழ் சேமிப்பு என்பது மிகுந்த சிரமம். தேவைப் படும் தாளை மட்டும் தனியே வெட்டி எடுத்து வைக்க வேண்டும். அவ்வாறு கஷ்டப் பட்டு சேர்த்தது நிறைய. ஆனால் ஒரு கால கட்டத்தில் இடப் பற்றாக்குறை உள்ளிட்ட பல காரணங்களினால் கணிசமான ஆவணங்களை இழந்தேன். அப்படியும் விடாப்பிடியாக சேர்த்து வைத்தவை ஓரளவு. அவை இன்று நமக்கு உதவுகின்றன. இன்னோரு விஷயம், என் பிராயத்தினர் பெரும் பாலானோர், தாங்கள் அப்படி சேர்த்து வைத்த ஆவணங்களை, யாருக்கும் தர மாட்டார்கள், நான் உட்பட. அன்றைய கால கட்டத்தில் அது வருத்தத்திற்குரிய விஷயமாக இருந்தாலும் இன்று அவை வெளியுலகத்தினைப் பார்க்க உதவுகின்றன என்பதை எண்ணும் போது இன்றைக்கு பெருமையாக உள்ளது. ஒரு வேளை நடிகர் திலகம் மறைவுக்குப் பிறகு பல மடங்கு பெரியதாக விஸ்வரூபம் எடுப்பார் என்பதற்கான சான்றாக இவை திகழ்கின்றன என்பதும் ஓர் எண்ணம்.
இன்னும் நிறைய என்னிடம் இல்லையே என்பதே என் வருத்தம்.
மற்றபடி இருக்கும் ஆவணங்களை நம் அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியே.
நன்றியுடன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
30th July 2011, 07:27 PM
#754
Senior Member
Veteran Hubber
Originally Posted by
RAGHAVENDRA
சங்கறுப்பது எங்கள் குலம், சங்கரனார்க்கு ஏது குலம்,
சங்கை அறுந்துண்டு வாழ்வோம், உம்போல் இரந்துண்டு வாழ்வதில்லை--
இந்தப் பாத்திரத்திற்கு வேறு நடிகரை அழைத்திருந்தாராம் ஏ.பி.என். அவர்கள். அந்த நடிகர் நடிகர் திலகத்தின் நாடகக் குழு உறுப்பினர். ஆனால் நடிகர் திலகம் இப்பாத்திரத்தின் கனத்தை உணர்ந்து இயக்குநரிடம் விடுத்த ஆலோசனை - ஐயா இப்பாத்திரத்தை தாங்களே ஏற்று நடிக்க வேண்டும். இயக்குநருக்கோ தயக்கம். இருந்தாலும் தயக்கத்தை உதறிவிட்டு தானே ஏற்று நடிக்க முன் வந்தார்.
கந்தன் கருணை படத்தில் நக்கீரராக நடிக்க வெண்கலக்குரலோன் சீர்காழி கோவிந்தராஜனை ஏ.பி.என். அழைத்தபோது, சீர்காழியார் தயங்கினாராம்.
"ஐயா அது திருவிளையாடல் படத்தில் நீங்கள் ஏற்று நடித்த் சிறப்புச்செய்த பாத்திரமாயிற்றே, அதில் நான் போய் எப்படி நடிக்க முடியும்?" என்று சீர்காழி கேட்டதும், ஏ.பி.என். "திருவிளையாடலில் வந்தது பேசும் நக்கீரன். அதனால் நான் நடித்தேன். கந்தன் கருணையில் வரவிருப்பது பாடும் நக்கீரன். அதனால் நீங்கள் நடிப்பதுதான் பொருத்தமாக இருக்கும்" என்று சொல்லி சம்மதிக்க வைத்தாராம்.
தன் தந்தையைப்பற்றிப்பேசும்போது ஒரு முறை சீர்காழி சிவ சிதம்பரம் இத்தகவலைச் சொன்னார்.
-
30th July 2011, 07:55 PM
#755
Senior Member
Diamond Hubber
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்
-
31st July 2011, 12:29 AM
#756
Senior Member
Veteran Hubber
மிக்க நன்றி, சந்திரசேகரன் சார்.
புகழுரைக்கு பணிவான நன்றி, பாலா சார்.
Thanks, sankara1970.
டியர் ரங்கன் சார், பாராட்டுக்கு நன்றி, 'மயிலை ஜோதி'யில் கூடுவோம் !
அன்புடன்,
பம்மலார்.
-
31st July 2011, 04:43 AM
#757
Senior Member
Veteran Hubber
டியர் ராகவேந்திரன் சார்,
ரசிக முதல்வராகிய தாங்கள், தொடர்ந்து அளித்து வரும் உச்சமான பாராட்டுதல்களுக்கு, எனது இதயத்தின் அடித்தளத்திலிருந்து ஆத்மார்த்தமான நன்றிகளை மிகுந்த பணிவோடு தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
'கல்கி' வார இதழின் "திருவிளையாடல்" விமர்சனம் அருமை என்றால் தாங்கள் தொகுத்துள்ள ஆகஸ்ட் பட்டியல் அற்புதம்.
அதில் சில திருத்தங்கள்:
- "குங்குமம்" வெளியான தேதி : 2.8.1963.
- "மக்கள ராஜ்யா" கன்னடத் திரைக்காவியம்.
- சென்னை 'மிட்லண்ட்'டில் மட்டும் 9.8.1969 அன்று வெளியான "நிறைகுடம்", சென்னையின் மற்ற திரையரங்குகளிலும் மற்றும் தென்னகமெங்கும் ஒரு நாள் முன்னர் [8.8.1969] வெளியானது. 1.5.1969 அன்று சென்னை அண்ணா சாலையில் 'மிட்லண்ட்'டில் வெளியான மக்கள் திலகத்தின் "அடிமைப் பெண்" ணிற்கு 8.8.1969 அன்று 100வது தினம். எனவே, "நிறைகுடம்" 'மிட்லண்ட்'டில் மட்டும் 9.8.1969 அன்று வெளியானது.
- "அக்னி புத்ருடு" தெலுங்குத் திரைப்படம் வெளியான தேதி : 14.8.1987.
- "விஸ்வநாத நாயக்குடு" மே மாதம் வெளியான திரைப்படம்.
- "மூன்று தெய்வங்கள்" வெளியான தினம் : 14.8.1971
- "ஒரு யாத்ரா மொழி" வெளியானது ஆகஸ்ட் மாதமா? [முரளி சார், உறுதி செய்யவும்.]
"திருவிளையாடல்" திரைக்காவியத்தின் பாடல்கள், முக்கிய காட்சிகளின் வீடியோ அணிவகுப்பு அட்டகாசம் ! ஒவ்வொன்றுக்கும் தாங்கள் அளித்துள்ள முன்னுரை மிக அருமை ! பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
-
31st July 2011, 04:57 AM
#758
Senior Member
Veteran Hubber
டியர் mr_karthik,
பாராட்டுக்கு நன்றி !
'யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்' என்பதே நமது தாரக மந்திரம் !
"கந்தன் கருணை" நக்கீரர் 'இசை இமயம்' சீர்காழியார் பற்றிய தகவல் அறிய வேண்டிய அரிய ஒன்று !
அன்புடன்,
பம்மலார்.
-
31st July 2011, 05:01 AM
#759
Senior Member
Veteran Hubber
இன்று 30.7.2011 சனிக்கிழமை முதல் நெல்லை 'சென்ட்ரல்' திரையரங்கில், தினசரி 4 காட்சிகளாக, ஸ்டைல் சக்கரவர்த்தியின் "அவன் தான் மனிதன்".
இனிக்கும் இத்தகவலை வழங்கிய அன்புள்ளங்கள் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கும், திரு.சிவாஜி எஸ்.முத்துக்குமார் அவர்களுக்கும் ஸ்வீட் தேங்க்ஸ் !
அன்புடன்,
பம்மலார்.
-
31st July 2011, 06:37 AM
#760
Senior Member
Seasoned Hubber
டியர் பம்மலார்,
புள்ளி விவரங்களை அள்ளித் தருவது மட்டுமன்றி நெஞ்சங்களைக் கிள்ளியும் விட்டு எதிரிகளைத் தள்ளி நிற்க வைக்கும் தங்களின் பணி தலையாயதே என்பதே என் கருத்து. எனவே தாங்களே ரசிகர் திலகம் என்பது தான் உண்மை. தாங்கள் அளிக்கும் அனைத்து விவரங்களும் மிகவும் பயனுள்ளதாயுள்ளன. தாங்கள் சுட்டிக் காட்டிய தவறுகளை என்னுடைய பதிவில் சரி செய்து விட்டேன். மிக்க நன்றி. யாத்ரா மொழி திரைப்படம் பற்றி எனக்கும் ஐயம் உள்ளது. தற்போதைக்கு நாம் ஆகஸ்ட் என்றே வைத்துக் கொள்வோம். சரியான ஆதாரம் கிடைத்த உடன் சரி செய்து கொள்ளலாம். நிறைகுடம் தாங்கள் கூறியது சரியே. சென்னையில் நாங்கள் 9ம் தேதி முதல் நாள் காட்சிக்குப் போகும் போதே வெளியூர் ரசிகர்களிடமிருந்து தகவல் .. நடிகர் திலகம் செம்மை க்யூட் அண்ட் ஸ்டைல் என்று... குறிப்பாக தேவா பாடல் காட்சியில் அவர் அட்டகாசமாக தோன்றும் போது அரங்கில் ஆரவாரமும் வரவேற்பும் அளப்பரையும் விண்ணதிர வைத்தன. அப்படம் வெளியான போது மிக அதிக வரவேற்பைப் பெற்றது மதுரையில் தான். சாந்தியில் நாங்கள் கலந்துரையாடும் போது அனைத்து ஊர்களிலிருந்தும் எப்படியாவது யார் மூலமாவது தகவல்கள் கிடைத்து விடும். அப்படி வந்ததன் அடிப்படையில் மதுரையில் அப்படம் மிகச் சிறப்பான வரவேற்பைப் பெற்றது என்றும் புதிய ரசிகர்களை, குறிப்பாக நிறைய கல்லூரி மாணவிகளை, நிறைகுடம் படத்திலிருந்து தான் நடிகர் திலகம் பெற்றார் என்பதும் எங்களுக்குக் கிடைத்த தகவல். பின்னாளில் 1971-72 கால கட்டத்தில் நடிகர் திலகத்தின் புகழ் உச்சத்தில் ஏறக் காரணமாயிருந்தது நிறைகுடம் படம். இத்தனைக்கும் அப்படம் மிகப் பெரிய அம்சங்கள் ஏதும் கொள்ளவில்லை, தேவா பாடலைத் தவிர.
நன்றி
அன்புடன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks