Page 5 of 197 FirstFirst ... 345671555105 ... LastLast
Results 41 to 50 of 1967

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 8

  1. #41
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    The function held today jointly by Russian Consulate, Russian Cultural Centre and Sivaji Prabhu Charities trust to celebrate the Russian Independence and Indian Independence went off well. The Consul General Mr.Nikolai Listapadov, Mr.Ramkumar spoke touching upon the highlights of Indo- Russian Friendship and about the struggles faced by the respective nation. A short but sweet synopsis of the World War II was presented by a 2ng Year Student of Stella Maris, Ms.Archana. Mr.Thangappan of Russian cultural centre welcomed the gathering and he have us a pleasant surprise by announcing that the works of Nadigar Thilagam is going to be archived in the Russian cultural centre, the work for which would start by July on the occasion of 10th Anniversary of Nadigar Thilagam. He also expressed his desire that the function to celebrate the Golden jublies of Paava Mannippu, Paasa Malar, Paalum Pazhamum and Kappalottiya Thamizhan should be held in the Russian Cultural centre.

    Ragavender Sir then spoke briefly about the topic Indian Independence projected through the films of Nadigar Thilagam and the clippings were screened. முதலில் வந்தது கட்டபொம்மன் கிளைமாக்ஸ் காட்சி. நடிகர் திலகத்தின் சிம்ம கர்ஜனையை கேட்டு புல்லரித்து நிற்க கப்பலோட்டிய தமிழனில் வெள்ளி பனி மலை மீதுலாவுவோம் பாடலின் ஒரு சிறிய பகுதியும் கப்பலை வாங்கி கொண்டு அதில் பயணம் செய்து வரும் வ.ஊ.சி வரவேற்பை ஏற்றுக் கொண்டு பேசுவது இடம் பெற்றது. அடுத்தது பகத்சிங். ராஜபார்டில் இன்குலாப் பாடல் முழுமையாக வந்தது. தொடர்ந்தார் திருப்பூர் குமரன்[ பாடலிலும் அடுத்து திருப்பூர் குமரன் காட்சியிலும் பெருந்தலைவரை குறித்த வரிகளுக்கு பலத்த வரவேற்பு].

    அடுத்தது வாஞ்சிநாதன். சினிமா பைத்தியத்தில் இடம் பெற்ற அந்த காட்சிக்கு பிறகு வந்தார் நாம் பிறந்த மண் சந்தன தேவன், தூக்கில் போடப் போகும் காட்சியும் அப்போது வரும் இந்திய சுதந்திர அறிவிப்பும் சந்தன தேவன் விடுதலையாவதும் வந்தது. தொடர்ந்து வந்தது தாயே உனக்காக காட்சி. ராணுவ வீரனாக நடிகர் திலகம் போர் முனைக்கு புறப்படும் காட்சியும் [முதல் காட்சியில் சிக்கென்று வெகு இளமையாக காட்சியளிப்பார். அடுத்த காட்சியில் ராணுவ உடையில் படு கம்பீரமாக வருவார்] பிறகு போர் முனையில் காயமுற்று படுக்கையில் இருந்த படியே சிவகுமாரிடம் பேசும் காட்சி திரையிடப்பட்டது.

    பிறகு நடிகர் திலகம் படங்களின் பாடல் காட்சிகளில் தேசிய சிந்தனைகள் என்ற தலைப்பில் இரத்த திலகம் படத்தில் பனி படர்ந்த மலையின் மேலே, பிறகு பாரத விலாஸ் படத்தில் இந்திய நாடு என் வீடு பாடல், இறுதியாக கை கொடுத்த தெய்வம் படத்தில் சிந்து நதியின் மிசை நிலவிலே பாடலுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.

    காட்சிகளை அழகாகவும் சுவைபடவும் தொகுத்திருந்த ராகவேந்தர் சாருக்கு அனைத்து பாராட்டுகளும் உரித்தாகும்.

    அன்புடன்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #42
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    மே 27,1961 - இந்த நாள் தமிழ் சினிமா வரலாற்றில் மட்டுமின்றி தமிழ் நாட்டில் மட்டுமன்றி உலகெங்கும் வாழும் தமிழ் குடும்பங்களுக்கு எல்லாம் ஒரு இலக்கணம் வகுக்கப்பட்ட நாள். குடும்ப உறவுகளில் அண்ணன் தங்கை உறவு என்பது எப்படிப்பட்டது எப்பேர்ப்பட்ட அன்பையும் தியாகத்தையும் உள்ளடக்கியது என்பதை அனைவர்க்கும் உணர்த்திய நாள். அன்று முதல் இன்று வரை அண்ணன் தங்கை பாசத்திற்கு ஒரு Bench Mark ஏற்படுத்தப்பட்ட தினம். நேற்றல்ல, இன்றல்ல என்றென்றும் அது தொடரும். வாடாத பாச மலராக அது மலரும்.

    பொன் விழா காணும் ராஜசேகருக்கும் ராதாவிற்கும் வாழ்த்துகள். பொன் விழா நூற்றாண்டு விழாவாக வளரட்டும்.

    அன்புடன்.

  4. #43
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    Quote Originally Posted by Murali Srinivas View Post
    The function held today jointly by Russian Consulate, Russian Cultural Centre and Sivaji Prabhu Charities trust to celebrate the Russian Independence and Indian Independence went off well. The Consul General Mr.Nikolai Listapadov, Mr.Ramkumar spoke touching upon the highlights of Indo- Russian Friendship and about the struggles faced by the respective nation. A short but sweet synopsis of the World War II was presented by a 2ng Year Student of Stella Maris, Ms.Archana. Mr.Thangappan of Russian cultural centre welcomed the gathering and he have us a pleasant surprise by announcing that the works of Nadigar Thilagam is going to be archived in the Russian cultural centre, the work for which would start by July on the occasion of 10th Anniversary of Nadigar Thilagam. He also expressed his desire that the function to celebrate the Golden jublies of Paava Mannippu, Paasa Malar, Paalum Pazhamum and Kappalottiya Thamizhan should be held in the Russian Cultural centre.

    Ragavender Sir then spoke briefly about the topic Indian Independence projected through the films of Nadigar Thilagam and the clippings were screened. முதலில் வந்தது கட்டபொம்மன் கிளைமாக்ஸ் காட்சி. நடிகர் திலகத்தின் சிம்ம கர்ஜனையை கேட்டு புல்லரித்து நிற்க கப்பலோட்டிய தமிழனில் வெள்ளி பனி மலை மீதுலாவுவோம் பாடலின் ஒரு சிறிய பகுதியும் கப்பலை வாங்கி கொண்டு அதில் பயணம் செய்து வரும் வ.ஊ.சி வரவேற்பை ஏற்றுக் கொண்டு பேசுவது இடம் பெற்றது. அடுத்தது பகத்சிங். ராஜபார்டில் இன்குலாப் பாடல் முழுமையாக வந்தது. தொடர்ந்தார் திருப்பூர் குமரன்[ பாடலிலும் அடுத்து திருப்பூர் குமரன் காட்சியிலும் பெருந்தலைவரை குறித்த வரிகளுக்கு பலத்த வரவேற்பு].

    அடுத்தது வாஞ்சிநாதன். சினிமா பைத்தியத்தில் இடம் பெற்ற அந்த காட்சிக்கு பிறகு வந்தார் நாம் பிறந்த மண் சந்தன தேவன், தூக்கில் போடப் போகும் காட்சியும் அப்போது வரும் இந்திய சுதந்திர அறிவிப்பும் சந்தன தேவன் விடுதலையாவதும் வந்தது. தொடர்ந்து வந்தது தாயே உனக்காக காட்சி. ராணுவ வீரனாக நடிகர் திலகம் போர் முனைக்கு புறப்படும் காட்சியும் [முதல் காட்சியில் சிக்கென்று வெகு இளமையாக காட்சியளிப்பார். அடுத்த காட்சியில் ராணுவ உடையில் படு கம்பீரமாக வருவார்] பிறகு போர் முனையில் காயமுற்று படுக்கையில் இருந்த படியே சிவகுமாரிடம் பேசும் காட்சி திரையிடப்பட்டது.

    பிறகு நடிகர் திலகம் படங்களின் பாடல் காட்சிகளில் தேசிய சிந்தனைகள் என்ற தலைப்பில் இரத்த திலகம் படத்தில் பனி படர்ந்த மலையின் மேலே, பிறகு பாரத விலாஸ் படத்தில் இந்திய நாடு என் வீடு பாடல், இறுதியாக கை கொடுத்த தெய்வம் படத்தில் சிந்து நதியின் மிசை நிலவிலே பாடலுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.

    காட்சிகளை அழகாகவும் சுவைபடவும் தொகுத்திருந்த ராகவேந்தர் சாருக்கு அனைத்து பாராட்டுகளும் உரித்தாகும்.

    அன்புடன்
    It's a great honour, pride and opportunity bestowed on Mr. Raghavendran, to present a short film, with clippings from NT's various films involving freedom struggle and nationalism. This film may be circulated and shown to various people in various countries and has a great wider reach and will showcase the seriousness with which NT took his film career; that he not only took his career for his own professional satisfaction and satisfaction of the audience but; he also utilised the media to effectively instil in the minds of the Indian citizens in highlighting the importance of nationalism and the sacrifices made by various freedom fighters in getting us independence. This, to my knowledge, has not been done by any other Artiste to date, not only in India but; in any other country in the entire world.

    Mr. Raghavendran richly deserves kudos from every one for his efforts in compiling and presenting such a wonderful film covering the subject with precision. I deemed it a previlege to be part of the elite audience, along with Messrs. Murali, Pammalar and Ramajayam.

    We salute you Mr. Raghavendran.

    Regards,

    R. Parthasarathy
    Last edited by parthasarathy; 27th May 2011 at 05:28 PM.

  5. #44
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    அன்புள்ள திரு. பம்மலார் அவர்களே,

    பாசமலர் திரைக்காவியம் சம்பந்தப்பட்ட அன்றைய நாளிதழ்களின் விளம்பரங்களை சரியான நேரத்தில் பதிவிட்டு, டைமிங்கில் நீங்கள் ஒரு புலி என்பதை மறுபடியும் நிரூபித்து விட்டீர்கள். பாசமலர்-51 - காத்துக் கொண்டிருக்கிறோம், வழக்கம்போல் அசர!

    அன்புடன்,

    பார்த்தசாரதி

  6. #45
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    பாசமலர் - காலத்தை வென்ற இத்திரைக்காவியம் - அண்ணன் தங்கைப் பாசத்தை உணர்வுபூர்வமாகக் காட்டிய உயிரோவியம் - ஒவ்வோர் தமிழ்க் குடும்பத்திலும் நீக்கமற நிறைந்து விட்ட ராஜசேகரும் ராதாவும் புவி உள்ளளவும் எல்லோர் மனத்திலும் இருப்பார்கள்.

    அன்புடன்,

    பார்த்தசாரதி

  7. #46
    Senior Member Regular Hubber Mahesh_K's Avatar
    Join Date
    Mar 2010
    Posts
    186
    Post Thanks / Like
    Quote Originally Posted by Murali Srinivas View Post
    மே 27,1961 - இந்த நாள் தமிழ் சினிமா வரலாற்றில் மட்டுமின்றி தமிழ் நாட்டில் மட்டுமன்றி உலகெங்கும் வாழும் தமிழ் குடும்பங்களுக்கு எல்லாம் ஒரு இலக்கணம் வகுக்கப்பட்ட நாள். குடும்ப உறவுகளில் அண்ணன் தங்கை உறவு என்பது எப்படிப்பட்டது எப்பேர்ப்பட்ட அன்பையும் தியாகத்தையும் உள்ளடக்கியது என்பதை அனைவர்க்கும் உணர்த்திய நாள். அன்று முதல் இன்று வரை அண்ணன் தங்கை பாசத்திற்கு ஒரு Bench Mark ஏற்படுத்தப்பட்ட தினம். நேற்றல்ல, இன்றல்ல என்றென்றும் அது தொடரும். வாடாத பாச மலராக அது மலரும்.

    பொன் விழா காணும் ராஜசேகருக்கும் ராதாவிற்கும் வாழ்த்துகள். பொன் விழா நூற்றாண்டு விழாவாக வளரட்டும்.

    அன்புடன்.
    முரளி சார்.. பாலாஜி அவர்கள் தயாரித்த படங்களின் கதாநாயகன் மற்றும் கதாநாயகி பெயர் எப்போதுமே ராஜ சேகர் ( ராஜா) , ராதா என்றுதான் இருக்கும். வாழ்க்கை போன்ற நமது வேறு பல படங்களிலும் இப்படித்தான்.

    இவை அனைத்துக்கும் தூண்டுகோலாக அமைந்தது பாசமலர் படம் தானா? அல்லது இதற்கு முன்பே இந்தப் பெயர்கள் புகழ் பெற்றிருந்தனவா?

  8. #47
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    நடிகர் திலகத்தின் படங்களில் சிரஞ்சீவித்துவம் பெற்ற மிகச்சிறந்த பாடல்கள் (தொடர்ச்சி...)

    2. பொன்னொன்று கண்டேன் (படித்தால் மட்டும் போதுமா, 1962) - பாடல் - கவியரசு கண்ணதாசன்; இசையமைப்பு - மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி; பாடியவர்கள் - டி.எம்.சௌந்தரராஜன் / பி.பி.ஸ்ரீனிவாஸ்; இயக்கம் - பீம்சிங்; நடிப்பு:- நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் கே.பாலாஜி

    இந்தக் கட்டுரையில் எழுதப்பட்ட முதல் பாடலான "நலந்தானா" மட்டும் தான் தர வரிசையில் இனம் பிரிக்க முடிகின்ற பாடல். மற்ற ஒன்பது பாடல்களை அதே போல், இரண்டு, மூன்று என்று பிரிக்க முயல்வது குதிரைக் கொம்பு; அதனால், மற்ற ஒன்பது பாடல்களை என் போக்கில் எழுதுகிறேன்.

    இந்தப் பாடல் இந்த வகையில் அமைந்த பத்து சிரஞ்சீவித்தன்மை அடைந்த பாடல்களுள் ஒன்று. இந்தப் பாடலை உடனே எழுதுவதற்குக் காரணம், ஆண் பாலர் டூயட் பாடல்களைப் பற்றிய மற்ற அன்பர்களின் கலந்துரையாடல். நிறைய பாடல்கள் இந்த வகையில் வந்து விட்டாலும், சிரஞ்சீவித் தன்மையில், என்றும் முதல் இடத்தைப் பிடிக்கும் பாடல் இந்த "பொன் ஒன்று கண்டேன்" பாடல் தான் - அதாவது, கேட்க மட்டுமின்றி, பார்த்து ரசிக்கவும், அனைத்து அம்சங்களும் தலை சிறந்து விளங்கும் விதத்தில்.

    இந்த வகை ஆண் பாலர் டூயட்டுகளில் கூட, இந்த நிமிடம் வரை, நடிகர் திலகமே முந்துவதற்குக் காரணம், அவருக்கு எந்த விதமான சோதனை முயற்சியிலும் இறங்குவதற்கு அவருக்கிருந்த மனோதிடம், ஆர்வம் மற்றும் முயற்சி; அவர் மேல் அனைத்து படைப்பாளிகளுக்கும் இருந்த நம்பிக்கை; இதற்கும் மேல், அவர் எந்த வகை சோதனை முயற்சியில் இறங்கினாலும், பாராட்டுகள் மட்டுமல்லாமல், வியாபார ரீதியாகவும் வெற்றி பெற்று விடுவார் என்று தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் அவர் மீது வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கை.

    இன்னொரு விஷயம் - இந்த வகை பாடல்கள் ஏன் மற்ற வெற்றிகரமான கதாநாயகர்களுக்கு - இன்றளவும் - பெரிய அளவில் கிடைக்கவில்லை? காரணம், அவர் மட்டுமே, மற்ற கதாநாயகர்களுக்கும் சம வாய்ப்பு கொடுத்தது மட்டுமல்லாமல், அவர்களுக்கும் பாடல்கள் பாடவும், அவர்களது திறமையைக் காட்டவும் தொடர்ந்து சந்தர்ப்பம் கொடுத்தார். எத்தனை வெற்றிகரமான பாடல்கள் – ஆசைக்கிளியே கோபமா, நல்லவன் எனக்கு நானே நல்லவன், கவலைகள் கிடக்கட்டும் மறந்து விடு, அவள் பறந்து போனாளே, வாழ்ந்து பார்க்க வேண்டும், ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும் - இப்படி. எத்தனை கலைஞர்கள், உச்ச நட்சத்திர அந்தஸ்தில் இருந்த போதும், நடிகர் திலகம் அளவுக்கு மற்றவர்களுக்கு நிறைய பாடல்கள் கொடுத்து, தான் ஒரு பாடல் கூட பாடாமல் நடித்திருக்கிறார்கள் (தில்லானா மோகனாம்பாள், மோட்டார் சுந்தரம் பிள்ளை, ...).

    இந்தப் பாடலின் சூழலே வித்தியாசமான ஒன்று. இன்றைக்கும் புதியது. ஒரு மாறுதலுக்கு, அண்ணனுக்காக தம்பியும், தம்பிக்காக அண்ணனும் பெண் பார்க்கப் போய், தம்பிக்குப் பார்த்த பெண்ணை அண்ணனுக்குப் பிடித்து விட, எப்படியாவது, அந்தப் பெண்ணை தான் மணந்து கொள்ள வேண்டும் எனத் தீர்மானித்து, குயுக்தியாகத் திட்டம் தீட்டி, அந்தப் பெண்ணை மணம் முடித்து தம்பியின் வாழ்வை திசை திருப்பி விடுவார்.

    இந்தப் பாடல், அப்படி, சகோதரர்கள் பெண் பார்த்து விட்டு வந்தவுடன், பேசிக் கலந்து கொள்வதற்கு பதிலாக பாடுவதாக அமைந்த பாடல். படம் பார்க்கின்ற மக்களுக்கு, சகோதரர்கள் இருவரும் இப்படிப் பெண் பார்த்து விட்டு வந்த அனுபவத்தையும், அந்தப் பெண்ணைப் பற்றி ஒருவர் மற்றவரிடம் சொல்வதை, வித்தியாசமான யுக்தியின் மூலம் வடிவமைத்த, இயக்குனர் பீம்சிங்கை பாராட்டுவதா? (எப்போதும் போல், பேசிக் கொள்வதாக அமைத்திருந்தால், மக்களுக்கு அது பெரிய அளவில் சென்று சேர்ந்திருக்காது.)

    அந்தக் காட்சியின் முக்கியத்துவத்தை சரியாக உள்வாங்கி, அற்புதமாக கனகச்சிதமாக எழுதிக் கொடுத்த கவியரசு கண்ணதாசனைப் பாராட்டுவதா?

    அது மெட்டாகவே இருந்த போதிலும் (அதுவும் இருவரும் மாறி மாறி சொல்லிக் (பாடிக்) கொண்டே போக வேண்டும்), சங்கீதத்தின் தன்மையைக் கொஞ்சம் கூடக் குறைக்காமல், மெட்டின் இலக்கணமாக ஒரு தெளிந்த நீரோடையைப் போன்ற நடையைக் கடைசி வரையிலும் maintain செய்து அந்தப் பாடலை சுவையாக இசை அமைத்த மெல்லிசை மன்னர்களைப் பாராட்டுவதா?

    இயக்குனரும், பாடலாசிரியரும், இசை அமைத்தவரும் சொல்ல வந்ததை சரியாகப் புரிந்து கொண்டு, அந்தப் அந்தப் பாடலில் நடித்த நடிகர்களுக்கேற்றவாறு அற்புதமாகப் பாடிய பாடகர்கள் டி.எம்.எஸ் / பி.பி.எஸ்ஸைப் பாராட்டுவதா?

    மேற்க்கூறிய கலைஞர்களின் படைப்பின் தன்மையை மிகச்சரியாக உள்வாங்கி மிக அற்புதமாக நடித்துக் கொடுத்த நடிகர் திலகம் மற்றும் பாலாஜியைப் பாராட்டுவதா?

    பாடல், ஆரம்பத்தில் ஒரு நீச்சல் குளத்தில் இருவரும் பாடுவது போல் துவங்கும். நடிகர் திலகம், பாலாஜி இருவரில், பாலாஜிக்கு மட்டுமே அவர் பார்த்த பெண் (சாவித்திரி அவர்கள்) பிடித்திருந்ததால், அவர் பாடும்போது, அதாவது வர்ணிக்கும்போது, அவர் காதல் வயப்பட்டவராகக் காட்சியளித்து, நடித்திருப்பார். நடிகர் திலகத்தைப் பொறுத்தவரை அந்த உணர்வு எதுவும் இல்லை என்பதால், அந்தக் காதல் உணர்வை இம்மி கூடக் காட்டாமல், அவருக்கே உரிய ஸ்டைலில் குழந்தைத் தனத்துடன் கூடிய ஸ்டைலில் - நடித்திருப்பார். (அந்த பாத்திரமே ஒரு வகையான வெள்ளந்தியான முரட்டுத்தனமான பாத்திரமல்லவா?) ஆரம்பத்தில், அந்த மெட்டின் லயத்திற்கேற்ப, நடிகர் திலகம் ஒவ்வொரு கையாக தண்ணீரில் தட்டித் தட்டி ஸ்டைலாக நீந்தியபடியே துவங்க, பாலாஜி நிதானமாகத் தொடருவார்.

    பல்லவி முடிந்தவுடன், இருவரும் தண்ணீருக்குள் முங்கும் போது, நடிகர் திலகம் முங்குவது, ஒரு குழந்தையின் குதூகலம் மற்றும் வெகுளித்தனத்துக்கு ஒப்பாகும்.

    நீச்சல் முடிந்து வெளியில் வரும் போது, பாலாஜி கைத்துண்டால் அழகாக முதுகைத் துடைத்தவாறே பாடுவது கொள்ளை அழகு. முதல் சரணம் முடியும் தருவாயில், நடிகர் திலகம் கையை ஸ்டைலாக உயர்த்தி "விண்ணோடு விளையாடும் பெண் அந்த பெண்ணல்லவோ!" எனும் போது, இன்னமும் திரை அரங்குகள் அலறிக் கொண்டிருக்கிறது!! உடனே, அனு பல்லவி துவங்கும் போது, பாலாஜி பாடப் பாட, நடிகர் திலகம் அவரை ஸ்டைலாக கவனித்து மறு மொழி கொடுப்பது அதியற்புதம்!!!

    இரண்டாவது சரணம் துவங்குவதற்கு முன் வரும் அந்த இசையிலும், நடிகர் திலகம் குழந்தை போல் அந்த திண்டுகளில் மேல் தாவி ஏறி மறுபடி கீழே குதிப்பது - ஒரு குழந்தையின் குதூகலம் அதில் மறுபடியும் கொப்பளிக்கும்.

    இரண்டாவது சரணத்தில் "என் விழியில் நீ இருந்தால்" எனும் போது, அவரது அகன்ற (பேசும்) விழிகளும் நடிக்குமே!

    இந்தப் பாடலில், நடிகர் திலகத்துடன் சிறந்து, பாலாஜி அவர்களும் இயல்பாக நடித்து, பாடலுக்கு மிகப்பெரிய பெருமை சேர்த்திருப்பார்.

    தொடரும்,

    அன்புடன்,

    பார்த்தசாரதி
    Last edited by parthasarathy; 27th May 2011 at 05:23 PM.

  9. #48
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    அன்பு சகோதர சகோதரியர்க்கு
    அனைவருக்கும் பாசமலர் வாழ்த்துக்கள். இந்நன்னாளில் அனைவரும் தங்கள் சகோதர சகோதரியர்க்கு ராக்கி கயிறு கட்டும் தினமாக நாம் தமிழகத்தில் வரும் ஆண்டு முதல் கடைப்பிடிப்போம்.
    டியர் பம்மலார்
    கலக்கி விட்டீர்கள். சூப்பர்...
    டியர் முரளி சார், பார்த்த சாரதி சார், பம்மலார் சார், மற்றும் ராமஜெயம், பாலதண்டபாணி உள்ளிட்ட பல நண்பர்களுக்கும்,
    என் உளமார்ந்த நன்றிகள். தாங்கள் அனைவரும் வருகை தந்து நேற்றைய நிகழ்ச்சியினை சிறப்பித்து என்னை கௌரவித்தமைக்கு.
    எல்லாப் புகழுக்கும் திலகத்திற்கே.

    பாசமலர் நினைவாக இதோ மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்



    அன்புடன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #49
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    இன்று ராகவேந்திரா ஐயாவின் பிறந்தநாளா? எனில் , இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  11. #50
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    ரசிக திலகத்திற்கு, ரசிக முதல்வருக்கு, வீடியோ வேந்தர் ஆகிய ராகவேந்திரன் சாருக்கு உளங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் !

    தாங்கள் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்ந்து நடிகர் திலகத்தின் புகழ் பாடும் இந்த அரும்பெரும் திருத்தொண்டினை தொடர்ந்து ஆற்றுவதற்கு எல்லாம் வல்ல இறைவனையும், நமது இதயதெய்வத்தையும் வேண்டுகிறேன் !


    பாசப்பெருக்குடன்,
    பம்மல் ஆர்.சுவாமிநாதன்.
    pammalar

Page 5 of 197 FirstFirst ... 345671555105 ... LastLast

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7
    By saradhaa_sn in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1982
    Last Post: 22nd May 2011, 07:39 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 5
    By Murali Srinivas in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1490
    Last Post: 4th February 2010, 02:35 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 4
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1478
    Last Post: 17th November 2008, 09:45 AM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 2)
    By NOV in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1470
    Last Post: 2nd July 2007, 09:40 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •