விழாப் பாடல்களில் நடிகர் திலகம் பாடி நடிப்பதும் உண்டு, பார்வையாளராகவும் வருவதுண்டு. அவை சில சூழ்நிலைகளில் தன் கதையையும் சொல்லக் கூடியதாக அமைவதுண்டு. அப்படி ஓர் சூழ்நிலையில் இதற்கு முன் பட்டாக்கத்தி பைரவன் படப் பாடலைப் பார்த்தோம்.
தற்போது பார்க்க இருப்பதும் ஒரு வாழ்த்துப் பாடலே. இதில் நடிகர் திலகம் பாடி நடிப்பார். நின்று கொண்டும் அசைந்து கொண்டும் நடந்து கொண்டும் படிகளில் ஏறிக் கொண்டும் பாடும் போது அவர் சித்தரிக்கும் நளினம் -- அது அவரால் மட்டுமே முடியும். குறிப்பாக இப் பாடலில் படிக் கட்டில் இருந்து பாடிக் கொண்டே இறங்கும் போது, ஒவ்வொரு படிக் கட்டிலும் வெவ்வேறு நடன வடிவினை வெளிப் படுத்தி, அந்தத் தாளக் கட்டினை மிகச் சரியாக கடைப் பிடித்து, இறங்கும் போது மிகவும் யதார்த்தமாக இறங்கும் போது எப்போது படிக் கட்டு இடறுமோ என்ற நமக்குத் தான் பரபரப்பு உண்டாகும். மிகவும் அநாயாசமாக அந்தக் காட்சியில் நடனம் ஆடியிருப்பார். இப் படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்றால் அதற்கு இப்பாடலும் முக்கிய காரணம். மெல்லிசை மன்னரின் மெட்டு, என்றென்றும் ஹிட்டு....குரல் டி.எம்.எஸ்., பாடல் கண்ணதாசன்....படம் - தங்கை. பாடல் ... கேட்டவரெல்லாம் பாடலாம்...
அன்புடன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
நடிகர் திலகமும் நாட்டியப் பேரொளியும் இணைந்து நடித்த படங்கள், அதுவும் குறிப்பாக 50 களில் என்றால் -- ஆஹா... பார்த்துக் கொண்டே இருக்கலாம். அந்த அளவிற்கு அற்புதமான சிருங்கார ரசத்தின் மேன்மையை இருவரும் தங்களுடைய கலையின் மூலம் சித்தரித்திருப்பார்கள். அப்படிப் பட்ட பாடல்களில் ஒன்று மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்த இல்லற ஜோதி திரைப்படமாகும். கண்ணதாசன் வசனத்தில் வெளிவந்த இப்படத்தில் வரக்கூடிய அனார்கலி-சலீம் காட்சிக்கு கலைஞர் அவர்கள் வசனம் எழுதியிருப்பார். அப்படத்தில் இசை மேதை ஜி.ராமநாதன் அவர்களின் இசையமைப்பில் மிகச் சிறப்பாக அமைந்த பாடல், களங்கமில்லா காதலிலே காண்போம் இயற்கையெலாம் பாடலாகும். குரல் ஏ.எம்.ராஜா, ஜிக்கி. பாடலைப் பார்ப்போம்..
அன்புடன்
பம்மலார் மற்றும் ராகவேந்திரன்
Last edited by RAGHAVENDRA; 24th June 2011 at 11:26 PM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
வருஷம் தோறும் வசந்தம் தேடி வருவோம் இங்கே
வாடைக் காற்றில் மூடும் பனியில் நனைவோம் இங்கே ....
--- கண்ணதாசன்
கவியரசரே
வருஷம் தோறும் உம்மைத் தேடி வருவோம் இங்கே
பாடல் வரியில் தேடும் குரலில் காண்போம் இங்கே
ஒன்று சேர்வோம் உம்மைக் காண்போம் - உள்ளமெல்லாம் பாடுவோம்
ஆடி ஆடி பாடிப் பாடி ஆயுள் முழுதும் மருகுவோம்...
அன்புடன்
Last edited by RAGHAVENDRA; 24th June 2011 at 07:36 PM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
எந்த மொழியாயினும் தன் நடிப்பால் வென்று காட்டினார் நடிகர் திலகம், விழியாலே மொழி பேசும் கலைஞனுக்கு, வார்த்தைகளை உதட்டால் பேசவும் தெரியும் விழியால் பேசவும் தெரியும். தன் கண்ணுக்கு குலமேது, இனமேது, மொழியேது என நிரூபித்தவர் நடிகர் திலகம். அப்படி அவர் நடித்த வேற்று மொழிப் படங்களிலிருந்து காட்சிகளை ஆய்வு செய்யும் முயற்சியே இது. தொடக்கமாக 1964ல் வெளிவந்த பக்த ராமதாஸு திரைப்படத்தில் நடிகர் திலகம் நடித்த காட்சி. இக் காட்சியில் தன் சொந்தக் குரலில் பேசி நடித்துள்ளார் நடிகர் திலகம். இது தெலுங்குப் படமாகும். அக்கினேனி நாகேஸ்வரராவ், நந்தமுரி தாரக ராமராவ், அஞ்சலி தேவி, கும்மடி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தில் ராமதாஸாக நடித்து, படத்திற்கு இசையமைத்து இயக்கமும் செய்தவர் சித்தூர் நாகையா. இப் படத்தின் மற்றொரு சிறப்பு முகமது ரபி அவர்கள் சில பாடல்களைப் பாடியுள்ளதாகும்.
ராமதாஸ் அவர்களின் இயற் பெயர் கோபண்ணா. ராமர் மேல் அதீத பக்தியுள்ளவர். தானே பாடல்களை இயற்றி, இசையமைத்து பாடுவார். பத்ராசலத்தில் உள்ள ராமர் கோயில் மிகவும் பரிதாபமான நிலையில் இருந்ததைக் கண்டு மன வருத்தமுற்று அக்கோயிலைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுகிறார். சந்தர்ப்ப வசத்தால் சுல்தானின் ஆட்சியில் கோல்கொண்டா கோட்டையில் சிறை வைக்கப் படுகிறார். கிட்டத்தட்ட 11 முதல் 12 ஆண்டுகள் சிறை வாசம். தான் வணங்கும் கடவுளை மிகவும் மன வருத்தத்துடன் வேண்டுகிறார். லட்சுமி தேவி இரக்கப் பட்டு விஷ்ணுவிடம் காரணம் கேட்க, பூர்வ ஜென்ம பாவத்தின் காரணத்தால் ராமதாஸு இந்த ஜென்மத்தில் கஷ்டப் படுவதாக மகாவிஷ்ணு கூறுகிறார். பின் அவரைக் காப்பாற்ற எண்ணி, தான் ராமராகவும் ஆதிசேஷனை லக்ஷ்மணனாகவும் உருவெடுத்து சுல்தான் முன் தோன்றி, ராமதாஸுவின் கஷ்டத்திற்கு நிவர்த்தி செய்கிறார்.
இந்தக் காட்சியில் விஷ்ணுவாக நாகேஸ்வரராவ், லக்ஷ்மியாக அஞ்சலி தேவி, ராமராக என்.டி.ராமராவ், சுல்தானாக கும்மடி தோன்ற, லட்சுமணனாக நடிகர் திலகம் பாத்திரமேற்று தன் நடிப்பால் அக்காட்சிக்கு ஜீவன் அளித்திருப்பார். இப்பாடலில் எம்.சத்யம் (மங்கையர் திலகம் படத்தில் நீ வரவில்லையெனில் ஆதரவேது பாடலில் நடிகர் திலகத்திற்காக பின்னணி பாடியவர்), கும்மடிக்காகவும், சீர்காழி கோவிந்தராஜன் நடிகர் திலகத்திற்காகவும், வி.என்.சுந்தரம் அவர்கள் என்.டி.ராமராவ் அவர்களுக்காகவும் குரல் கொடுத்திருக்கிறார்கள். இனி பாடலைப் பாருங்கள்.
அன்புடன்
பம்மலார் & ராகவேந்திரன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
குரங்காய் இருந்த மனிதன் மனதில் குழப்பம் ஏதும் இல்லை ..
குடும்பம் மனைவி அண்ணன் தம்பி கூட்டம் சிறிதும் இல்லை ..
ஆசை... பாசம்... காதலில்.. விழுந்தான், அமைதியை காணவில்லை ....
அலைந்தான் தவித்தான் ... துடித்தான் மடிந்தான்... யாருக்கும் லாபமில்லை ..
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
விழாப் பாடல்களில் நடிகர் திலகம் பாடி நடிப்பதும் உண்டு, பார்வையாளராகவும் வருவதுண்டு. அவை சில சூழ்நிலைகளில் தன் கதையையும் சொல்லக் கூடியதாக அமைவதுண்டு. அப்படி ஓர் சூழ்நிலையில் இதற்கு முன் பட்டாக்கத்தி பைரவன் படப் பாடலைப் பார்த்தோம்.
தற்போது பார்க்க இருப்பதும் ஒரு வாழ்த்துப் பாடலே. இதில் நடிகர் திலகம் பாடி நடிப்பார். நின்று கொண்டும் அசைந்து கொண்டும் நடந்து கொண்டும் படிகளில் ஏறிக் கொண்டும் பாடும் போது அவர் சித்தரிக்கும் நளினம் -- அது அவரால் மட்டுமே முடியும். குறிப்பாக இப் பாடலில் படிக் கட்டில் இருந்து பாடிக் கொண்டே இறங்கும் போது, ஒவ்வொரு படிக் கட்டிலும் வெவ்வேறு நடன வடிவினை வெளிப் படுத்தி, அந்தத் தாளக் கட்டினை மிகச் சரியாக கடைப் பிடித்து, இறங்கும் போது மிகவும் யதார்த்தமாக இறங்கும் போது எப்போது படிக் கட்டு இடறுமோ என்ற நமக்குத் தான் பரபரப்பு உண்டாகும். மிகவும் அநாயாசமாக அந்தக் காட்சியில் நடனம் ஆடியிருப்பார். இப் படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்றால் அதற்கு இப்பாடலும் முக்கிய காரணம். மெல்லிசை மன்னரின் மெட்டு, என்றென்றும் ஹிட்டு....குரல் டி.எம்.எஸ்., பாடல் கண்ணதாசன்....படம் - தங்கை. பாடல் ... கேட்டவரெல்லாம் பாடலாம்...
அன்புடன்
அன்புள்ள திரு. ராகவேந்தர் அவர்களே,
நடிகர் திலகத்தின் மிகச் சிறந்த நளினம் மற்றும் கௌரவமான நடிப்பால் மிகப் புகழ் பெற்ற "கேட்டவரெல்லாம் பாடலாம்" பாடலைப் பதிந்தமைக்கு நன்றிகள் பல.
இந்தப் பாடலின் பின்னணி - அநேகமாக பலருக்குத் தெரிந்திருக்கும். இந்தப் பாடலுக்குண்டான மெட்டை - வழக்கம் போல் மெல்லிசை மன்னர் அவர்கள் இயக்குனர் ஏ.சி.டிக்கும் தயாரிப்பாளர் பாலாஜிக்கும் பல மெட்டுகளைக் கொடுத்து அவைகளில் ஒன்றைத் தேர்வு செய்ய முடியாமல் அவர்களும் திணறிக்கொண்டு இருந்தார்களாம் - வழக்கம் போல் அனைத்துமே நன்றாக இருந்ததால்! அப்பொழுது அங்கு ஒரு தபால்காரர் வர, திடீரென்று பாலாஜி அவர்கள் அந்தத் தபால்காரரை அந்த பல மெட்டுகளில் ஒன்றைத் தேர்வு செய்யச் சொல்லி, அவர் தேர்வு செய்ததுதான் இந்தப் புகழ் பெற்ற பாடல்! இந்தப் பின்னணிச் செய்தியை திரு. பாலாஜி அவர்களே எழுபதுகளின் இறுதியில் வானொலியில் ஒலிபரப்பான சிறப்புத் தேன்கிண்ணத்தில் தெரிவித்தார். மேலும், அந்தத் தபால்காரரை நிரந்தரமாக சுஜாதா சினி ஆர்ட்ஸில் வேலைக்கு அமர்த்தி, இது போன்ற கிரியேட்டிவான பணிகளுக்கு உபயோகப்படுத்திக்கொண்டதாகவும் மேலும் கூறினார்!!
அன்றிலிருந்து இன்று வரை, மேடைகளில் பாடப்படும் பல புகழ் பெற்ற பாடல்களில் முன்னணியில் இடம் பெறும் பாடல் இது என்றால் அது மிகையாகாது. பாலாஜி அவர்களின் பல படங்களுக்கு - "உனக்காக நான்" வரை மெல்லிசை மன்னர் தொடர்ந்து இசையமைத்தார். பின்னர், எனக்குத் தெரிந்து "தீர்ப்பு" படத்திலிருந்து, மறுபடியும் தொடர்ந்தார் - இடையில் "நீதிபதி" கங்கை அமரன். இந்தக் கூட்டணிக்கு "தங்கை" படத்தில் அமைந்தது போல் அனைத்துப் பாடல்களுமே சிறப்பாக மற்ற படங்களில் அமையவில்லை என்பது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம்.
இந்தப் பாடலில் ஒரு கருப்பு நிற டி-ஷர்ட் - நடிகர் திலகத்திற்கு மிகப் பொருத்தமாக, அழகாக இருக்கும். "தங்கை" - இந்தப் படத்தை பற்றி எப்போது நினைவு கூர்ந்தாலும், மனம் பழைய ஞாபகங்களை அசை போட ஆரம்பித்து விடும். எனக்கு மிகவும் பிடித்த படங்களில் இது எப்போதுமே முன்னணியில் இருக்கும்.
நினைவுகளை அசை போட வாய்ப்பளித்த தங்களுக்கு மறுபடியும் நன்றி.
அன்புடன்,
பார்த்தசாரதி
Last edited by parthasarathy; 25th June 2011 at 10:06 AM.
கவியரசரே
வருஷம் தோறும் உம்மைத் தேடி வருவோம் இங்கே
பாடல் வரியில் தேடும் குரலில் காண்போம் இங்கே
ஒன்று சேர்வோம் உம்மைக் காண்போம் - உள்ளமெல்லாம் பாடுவோம்
ஆடி ஆடி பாடிப் பாடி ஆயுள் முழுதும் மருகுவோம்...
டியர் ராகவேந்தர் சார்,
உண்மையான வார்த்தைகள்....
அன்றும் இன்றும் என்றும் நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்
// பாலாஜி அவர்களின் பல படங்களுக்கு - "உனக்காக நான்" வரை மெல்லிசை மன்னர் தொடர்ந்து இசையமைத்தார். பின்னர், எனக்குத் தெரிந்து "தீர்ப்பு" படத்திலிருந்து, மறுபடியும் தொடர்ந்தார் - இடையில் "நீதிபதி" கங்கை அமரன். இந்தக் கூட்டணிக்கு "தங்கை" படத்தில் அமைந்தது போல் அனைத்துப் பாடல்களுமே சிறப்பாக மற்ற படங்களில் அமையவில்லை என்பது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம்.//
ஸாரி பார்த்தசாரதி சார்,
உங்கள் கூற்றை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என் தம்பி, எங்கிருந்தோ வந்தாள், ராஜா, நீதி போல பல படங்களில் இந்தக்கூட்டணியின் பாடல்கள் பெருவெற்றிபெற்றுள்ளன.
பாடல்கள் சோடைபோன ஒரே படமென்றால் அது 'திருடன்' மட்டுமே. அதில் 'கோட்டை மதில்மேலே ஒரு வெள்ளைப்பூனை' பாடல் தவிர வேறெதுவும் தேறவில்லை. 'பழனியப்பன் பழனியம்மாவா' மற்றும் 'என் ஆசை என்னோடு' பாடல்கள் எல்லாம் சுமாருக்கும் கீழே.
Additional Info: முன்பு சிறப்புத்தேன்கிண்ணம் வழங்கிய நடிகை விஜயலலிதா, தான் நடிகர்திலகத்துடன் நடித்த பாடல்களைப்பற்றி பெருமையாகக்கூறிவிட்டு ஒளிபரப்பியவை மூன்று பாடல்கள்.. கோட்டை மதில் மேலே (திருடன்), உங்க நல்ல மனசுக்கொரு (எதிரொலி) மூன்றாவது?.. சந்தேகமே வேண்டாம் சொர்க்கத்தில் வரும் 'பொன்மகள் வந்தாள்' தான்.
மேற்கண்ட நிழற்படத்தில் சென்னை சாந்தி திரையரங்கு 1969ம் ஆண்டில் எப்படி தோற்றமளித்தது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். நடிகர் திலகத்தின் பின்னால் சாந்தி திரையரங்கின் முகப்பில் தங்கசுரங்கம் திரைப்படத்தின் பேனரும், பக்கவாட்டில் பாரதியுடன் நடிகர் திலகம் பாடல் காட்சியில் தோன்றும் கட்அவுட்டினையு்ம், அதில் நடிகர் திலகத்தின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்திருப்பதையும் காணலாம். இக்காட்சி அஞ்சல் பெட்டி 520 திரைப்படத்தில் இடம் பெற்றதாகும். இப்படம் ராஜ் டிவி நிறுவனத்தால் டிவிடியாக வெளியிடப் பட்டுள்ளது.
அன்புடன்
Last edited by RAGHAVENDRA; 29th June 2011 at 01:21 PM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks