-
11th June 2011, 11:49 AM
#161
Senior Member
Senior Hubber
அன்புள்ள திரு. கிருஷ்ணாஜி மற்றும் திரு. முரளி அவர்களுக்கு,
உங்களுடைய ராஜபார்ட் ரங்கதுரை படம் பார்த்த அனுபவம் மிகவும் சுவையாக இருந்தது. அதிலும் திரு. கிருஷ்ணாஜி அவர்கள் பல நாட்களுக்குப் பின்னர் நீண்ட பதிவை இட்டது மகிழ்ச்சியைத் தருகிறது.
என்னுடைய நினைவோடையைத் தருகிறேன். இது, திரை அரங்கு அனுபவம் அல்ல.
எனக்கு அப்போது சுமார் முப்பது வயதிருக்கும். (எதற்கு சொல்கிறேன் என்றால், நடிகர் திலகத்தைப் பற்றிய ஒரு விஷயத்துக்கு வயது வரம்பே கிடையாது. எத்தனை வயதானாலும், அவர் என்றால் மட்டும், அந்த வீக்னெஸ்!) எனது தந்தை என்னை ஒரு வேலையாக அனுப்பியிருந்தார். குறிப்பிட்ட நேரத்திற்குள் அதை முடித்துத் திரும்பவும் அவரிடம் தகவலைத் தெரிவிக்க வேண்டும். இப்போது போல் அப்போதெல்லாம் மொபைல் போன் வசதியில்லை. வீட்டிலும் அப்போது தொலைபேசி இணைப்பு இல்லை - நேராகத் திரும்பவும் வீட்டிற்கு வந்துதான் வேலையை முடித்து முடிவைத் தெரியப் படுத்த வேண்டும். நானும் சொன்ன வேலையை முடித்து விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தபோது, வழியில் ஒரு இடத்தில், பெரும் கூட்டமும் சிரிப்பும் கைத்தட்டலுமாக இருக்கவே, அருகில் சென்று பார்த்தேன். தொலைக் காட்சிப் பெட்டியில், நடிகர் திலகத்தின் "உத்தமபுத்திரன்" திரைப்படம் ஓடிக் கொண்டிருந்தது. விக்கிரமனும், பார்த்திபனும் முதன்முதலில் சந்தித்து மோதிக் கொள்ளும் சுவாரஸ்யமான கட்டம். (அப்போதெல்லாம், இது போல் vcp / vcr -ஐயும் கேசட்டுகளையும் வைத்து, அங்கங்கு இது போல் திரையிட்டு, வசூல் செய்வார்கள். சில நேரம், ஆடி மாதம் திருவிழாவின் கடைசி வாரத்தன்றும் இந்தத் திரையிடல்கள் நடைபெறும் - எட்டு முழ வேட்டியைக் கட்டி ப்ரொஜெக்டர் மூலம் திரையிடும் வழக்கம் ஒழிந்து, இந்த வழக்கம் துவங்கியிருந்த காலம்.) நமக்குத் தான் நடிகர் திலகம் என்றாலே, வீக்னெஸ் ஆயிற்றே! அவ்வளவுதான், வந்த வேலை மறந்து, கூட்டத்தோடு கூட்டமாய்ப் படத்தை பார்க்க ஆரம்பித்து, கிட்டத்தட்ட படம் முடியும் தருவாயில்தான், வந்த வேலை நினைவுக்கு வந்து, விழுந்தடித்துக் கொண்டு வீட்டிற்கு ஓடி, தகவலை அப்பாவிடம் தெரிவித்தேன். நல்ல வேளையாக, பணித்த காரியத்தை முடித்து விட்டதால், தாமதமாக தகவலைத் தெரிவித்தாலும், சின்ன வசவோடு தப்பித்தேன்.
என்னுடைய நினைவுகளையும் அசை போட வைத்த திரு. முரளி அவர்களுக்கும் திரு. கிருஷ்ணாஜி அவர்களுக்கும் நன்றி.
அன்புடன்,
பார்த்தசாரதி
Last edited by parthasarathy; 11th June 2011 at 11:51 AM.
-
11th June 2011 11:49 AM
# ADS
Circuit advertisement
-
11th June 2011, 12:41 PM
#162
Senior Member
Veteran Hubber
முரளி சார், கிருஷ்ணாஜி, மற்றும் பார்த்தசாரதி சார்,
சுவையான மலரும் நினைவுகள். பகிர்வுக்கு நன்றி.
கிருஷ்ணா சார்,
நீங்கள் சொன்ன காட்சியைக் கற்பனை செய்து பார்த்தேன். 'அகத்தியர்' படத்தில் நாரதர் வேடத்தில் வரும் டி.ஆர்.மகாலிங்கம் கையில் எண்ணெய்க் கிண்ணத்தை ஏந்திக்கொண்டு அதே கவனமாக 'நாராயண' நாமத்தை உச்சரிக்க மறந்த காட்சி நினைவுக்கு வந்து சிரிப்பு மூட்டியது. ரசிகர்கள் எல்லாம் படம் பார்ப்பதில் எப்படிப்பட்ட தீவிரவாதிகளாக இருந்துள்ளார்கள் என்பது இப்படி பலருடைய மலரும் நினைவுகளில் இருந்து தெரிகிறது.
முரளி சார்,
மற்ற காரணங்களுக்காக சனி, ஞாயிற்றுக்கிழமைகளை ஒதுக்கியது போல திங்களையும் பெரியாருக்காக ஒதுக்கி மறுநாள் ரங்கதுரையைக்காணச் சென்றிருந்தீர்களானால், முதல் தடவையிலேயே முழுமையான ஈடுபாட்டுடனும் குதூகலத்துடனும், குறிப்பாக மனதில் பயமின்றியும் ரசித்திருக்க முடியும். (நீங்கள் விரும்பாவிடினும்) பெரியாருக்கும் அஞ்சலி செலுத்தியது போலிருக்கும்.
பார்த்தி சார்,
நீங்கள் சைக்கிள் தொலைத்த அனுபவத்துக்கு முன் இது சற்று சிறியதுதான். இந்த அனுபவம் பொதுவாக எல்லா சிறுவர்களுக்கும் ஏற்படுவதுதான். இப்படிப்பட்ட தருணங்களில் குறளி வித்தைக்காரர்கள், தெருக்கூத்தாடிகள் போன்றோர் நம் கவனத்தைத் திருப்பி, நம் நேரங்களைத் திருடிக்கொள்வார்கள்.
Last edited by mr_karthik; 11th June 2011 at 12:43 PM.
-
11th June 2011, 02:11 PM
#163
rangadurai ninaivugal
நெட் connection disturb ஆனதால் சில வரிகள் விட்டு போய் விட்டன . 24 /12 /1973 monday முதல் வகுப்பு திரு வானமாமலை அவர்கள்
ஆங்கில வகுப்பு உள்ளே நுழைந்தவுடன் கேட்ட முதல் கேள்வி "ஏய் கிருஷ்ணா எண்ணெய் கொட்டாமல் ஆற்றிக்கு சென்று குளித்தாயா "
திருடனுக்கு தேள் கொட்டியது போல் ஆகி விட்டது ஸ்கூல் நண்பர்கள் அனைவரும் ஒரே கேலி . நேற்று இரவு அதை பற்றி எனது இரண்டு பெண்களடிமும் சொல்லி சிரித்து வயிறு வலி . எனனடுய ஸ்கூல் நண்பர் ஒருவர் நீண்ட நாள் கழிது சமீபத்தில் சந்திதேன் அவர் பெயர் செல்லயா அவர் ஒரு mgr ரசிகர். இப்போது தண்டையார்பேட்டை corporation பள்ளியில் chemistry டீச்சர்.
அவரிடம் சாந்தியில் ராஜபார்ட் ரங்கதுரை பார்த்ததை சொன்னேன். அப்போது அவர் கூறிய வார்த்தை உண்மையான ஒன்றை சொன்னார். "சிவாஜியின் நடிப்பை மறக்க முடியுமா ? நான் கூட அப்போது சிவாஜி போஸ்டர் மீது சாணி அடித்து இருக்கிறேன் ஆனால் நடிகர் என்றால் அது சிவாஜி ஒர்வர்தான் எப்பேர்பட்ட நடிப்பு அந்த ஆண்டு MGR படம் இரண்டு தான் ஒன்று நெல்லை சென்ட்ரல் உலகம் சுற்றும் வாலிபன் ரிலீஸ் 11 May 1973 100 நாள் வெற்றிப்படம் இரண்டாவது நெல்லை லக்ஷ்மியில் பட்டிகாட்டு பொன்னையா திரை படம் (ரிலீஸ் 10 Aug 1973 . சுமார் 63 நாட்கள் ஓடியதாக நினவு பாதி படம் MGR இல்லாமலே வெளி வந்தது திருப்பி திருப்பி இரண்டு படங்களையும் மற்றும் palace de walace திரை அரங்கு வெளியிடும் பழைய படங்கள் மட்டும் பார்த்தேன். எத்தனையோ நல்ல சிவாஜி படங்கள் வெளி வந்தன எதையும் பார்கவில்லை இப்போது dvd /டிவி யில் எல்லா சிவாஜி படங்களையும் பார்த்து கொண்டு இருக்கிறேன் " நான் அவரிடம் கூறியது "இரண்டு காரணங்களுக்குக்காக நான் உன்னை பாராட்டுகிறேன் 1 உன்னுடைய மெமரி (டீச்சர் அல்லவா) 2 உண்மை ஒப்புக்கொண்டதற்கு "
வாய்மையே வெல்லும்
Gk
-
11th June 2011, 06:07 PM
#164
Senior Member
Seasoned Hubber
Thanks
Thanks guys for sharing your real attachment with our NT. I think only our NT has true fans and no other actor in the world has true fans like us.
To tell my experience , I think on 1984 of 85 when Vellai Roja released time, VJ shown at one of church festivel time at Madurai Kuyavara Palayam in a open show and I was on class 6 or 7 that time and movie started night 10 PM, I just went without informing at home and watched full movie till 1 PM and every one from my home started searching me and finally found me watching VJ.
I think countless time I have watched VJ in Madurai Central theatre.
Long live NT fame.
Cheers,
Sathish
-
11th June 2011, 11:32 PM
#165
ஜோ,
எனக்கு உங்களை நினைப்பதற்கு வேறு ஒருவரை தேட வேண்டாம். நீங்கள் இந்த திரியில் குறைவாக எழுதினால கூட மற்ற திரிகளில் உங்கள் பதிவுகளை படிக்கின்றேன். தவிரவும் நண்பர் சுவாமி அவர்களோடு உரையாடும்போது கூட உங்களை நேரில் சந்தித்த அனுபவங்களை பற்றி அடிக்கடி சொல்லுவேன்.
கார்த்திக்,
அஞ்சலி என்பதெல்லாம் பள்ளிக்கூட பையன் லெவலுக்கு அதிகமல்லவா. அப்படி சொல்லும்போது நீங்கள் சொன்ன ஒரு உண்மையையும் ஒப்புக் கொள்ள வேண்டும். அது இங்கே நான் பல முறை எழுதியதுதான். என்னைப் பொறுத்தவரை பெருந்தலைவரை தவிர வேறு எவரையும் தலைவர் என்று ஏற்றுக் கொள்ள முடிந்ததில்லை. அதற்கு என்னளவில் பல நியாயமான காரணங்கள் இருக்கின்றன. அது மற்றவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கலாம். மேலும் எழுதினால் அரசியல் சர்ச்சை ஆகிவிடும் என்பதனால் ஸ்டாப்.
சாரதி, சதீஷ் நன்றி. கிருஷ்ணாஜி தொடருங்கள்.
ராகவேந்திரன் சார்,
பழைய சித்ராலயா இதழ்கள் சிலவற்றை காணும் வாய்ப்பு கிடைத்தது. நடிகர் திலகம் நடித்த இந்தி படமான தர்த்தி சென்னையில் வெளியாகும் இன்று முதல் விளம்பரம், மிட்லண்ட் அரங்கில், தேதி 04-06-1971, அதில் வந்திருக்கிறது. வடநாட்டில் 06-02 -1970 ல் வெளியானது என்று தெரியும். அதன் பிறகு இத்தனை நீண்ட இடைவெளிக்கு பிறகுதான் சென்னையில் வெளியானதா?
அன்புடன்
-
12th June 2011, 11:53 AM
#166
Senior Member
Regular Hubber
Originally Posted by
Murali Srinivas
என்னைப் பொறுத்தவரை பெருந்தலைவரை தவிர வேறு எவரையும் தலைவர் என்று ஏற்றுக் கொள்ள முடிந்ததில்லை. அதற்கு என்னளவில் பல நியாயமான காரணங்கள் இருக்கின்றன. அது மற்றவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கலாம்.
அன்புடன்
இந்த விஷயத்தில் நானும் உங்களைப் போலத் தான்.
ஆனால் 80 களின் தொடக்கத்தில் இந்திரா காந்தியின் தீவிர ஆதரவாளராக இருந்தேன் இருந்தேன். அப்போதெல்லாம் நம்ம படங்களில் அவரைத்தானே அடிக்கடி காட்டுவார்கள்.
ஆனால் பின்னாட்களில் நான் பார்க்க நேர்ந்த நடிகர் திலகத்தின் பழைய படங்கள் காமராஜ் அவர்களையே பல முறை முன்னிலை படுத்தியதை கவனிக்க நேர்ந்தது. அதற்குப் பிறகு நெல்லை ஜெபமணி என்ற பெரியவரின் பொதுக்கூட்டங்கள், துக்ளக் பத்திரிகையில் சோ, அவர்களின் காமராஜர் மற்றும் எமர்ஜென்சி குறித்த கருத்துக்கள் எல்லாம் என்னை மாற்றி விட்டது.
-
12th June 2011, 06:20 PM
#167
Senior Member
Seasoned Hubber
Dear friends,
Prepare yourself for another treat.
Let's meet on 19th June 2011 Sunday again - same time same venue.
Raghavendran
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
12th June 2011, 06:39 PM
#168
Senior Member
Seasoned Hubber
Mannavan Vanthanadi
What a treat for you guys again. Just missing it. Enjoy guys again on Sunday at Shanthi and believe will be more colourful than RPR.
Swamy sir, could you please give us the details of MV, 100 days theatre and collections.
Cheers,
Sathish
-
12th June 2011, 09:29 PM
#169
Senior Member
Seasoned Hubber
Mannavan Vandhanadi 100 days ad, courtesy, www.nadigarthilagamsivaji.com, Sivaji Girija.
Dear Sathish,
We all miss you here. However, shall try to compensate maximum through our coverage.
This is a film for the fans, of the fans, by the fans .... and so.....
we expect more fanfare.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
13th June 2011, 03:05 AM
#170
Senior Member
Veteran Hubber
My sincere thanks to Mr.Satish, Mr.Senthil & mr_karthik.
டியர் சந்திரசேகரன் சார் & ராகவேந்திரன் சார்,
மிக்க நன்றி ! வெள்ளியன்று [10.6.2011] 'The Hindu' நாளிதழில் ரிலீசான ஒய்ஜி அவர்கள் எழுதிய "ராஜபார்ட் ரங்கதுரை" கடிதக்கட்டுரையை Previewஆக திங்களன்றே [6.6.2011] நமது திரியில் தந்தமைக்கு தெவிட்டாத நன்றிகள் ! Hats Off to You, Mr.Mahendra !
டியர் பார்த்தசாரதி சார் & ஜேயார் சார், மிக்க நன்றி !
டியர் கிருஷ்ணாஜி,
22.12.1973 ஸ்திர வாரத்தன்று "ராஜபார்ட் ரங்கதுரை" என்னும் நடிப்புக் கடலில் நல்முத்துக்குளித்த பின்னர் 'தாமிரபரணி' ஆற்றில் நல்லெண்ணெய்க் குளியல் முடித்த தங்களது 'ராஜபக்தி' உண்மையிலேயே ஓர் மெய் சிலிர்க்கும் அனுபவம்.
டியர் முரளி சார், பார்த்தசாரதி சார் & கோல்ட்ஸ்டார்.
தங்கள் ஒவ்வொருவரது மலரும் நினைவுகளிலும் நறுமணம் கமழ்கிறது.
அன்புடன்,
பம்மலார்.
Bookmarks