-
10th September 2011, 02:59 PM
#1581
Senior Member
Devoted Hubber
I have one doubt.
முறையுடன் மணந்த கணவன் முன்னால்
பரம்பரை நாணம் போகுமா
I think the last word should be "thondruma" and not "poguma"
Please clarify.
Originally Posted by
Murali Srinivas
டாக்டர் ரவியை அவரது பல்வேறு முகபாவங்களை உணர்வுகளை இங்கே பதிந்ததற்கு வாசுதேவன் சாருக்கு நன்றி. ராகவேந்தர் சாருக்கு நன்றி. நான் பொதுவாக சுவாமிக்கு நன்றி கூறுவதில்லை. காரணம் அதையேதான் தினசரி செய்து கொண்டிருக்க வேண்டும். அது மட்டுமல்ல சுவாமியுடன் அன்றாடம் உரையாடுபவன் என்ற முறையில் what Swami is capable of என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் சில நேரங்களில் எனது கணிப்பையும் மீறி சுவாமி சில ஆச்சரியங்களை அளிப்பார். அப்படிப்பட்ட ஒன்றுதான் பேசும்படம் பீம்சிங் பேட்டி அழகான நேர்முக வர்ணனையோடு இன்றைக்கு மிக சரியாக 50 வருடங்களுக்கு முன் இதே நாளில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை காணும் போது மனதில் ஒரு nostalgic feeling. நன்றி சுவாமி!
பாலும் பழமும் படத்திற்கு மனதில் ஒரு தனி இடம் உண்டு. அந்த வருடம் வெளியான மூன்று பா வரிசை படங்களில் பாலும் பழமும் படமும் சரி, நடிகர் திலகத்தின் பாத்திரப் படைப்பும் சரி class என்று சொல்வோமே அந்த வகையில் அமைந்திருக்கும். அவரது நடிப்பை பற்றி சொல்ல ஆரம்பித்தால் முதலில் மருத்துவமனையில் நடந்து வரும் ஸ்டைல், நர்ஸ் சாந்தியின் அறிவு, அவரது தொழில் பக்தியை கவனிப்பது, அவர் மேல் உண்டாகும் பரிவு, ஒரு நாள் கிளம்புவதற்கு நேரமாகிவிட, shall I drop you, if you dont mind? என்று கேள்வி கேட்கும் நேர்த்தி, நான் பேச நினைப்பதெல்லாம் பாடலில் வெறும் ஹம்மிங்கிலேயே அசத்துவது, அதிலும் குறிப்பாக இரண்டாவது சரணத்தில் ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே! உயிர் சேர்ந்த பின்னே என்ற வரியை சரோஜாதேவி பாடியவுடன் ஊஹுகும் என்ற ஹம்மிங்க்கு வாயசைத்தவாறே அந்த இடது புருவத்தை மட்டும் ஏற்றி இறக்குவாரே, ஆஹா!, அது மட்டுமா?
அது போல மாலையில் சீக்கிரம் வருகிறேன் என்று மனைவியிடம் சொல்லும்போது மனைவியை டா போட்டு பேசுவார். இன்றைக்கு பெண்களை பார்த்து ஆண்கள் மிகவும் common ஆக உபயோகிக்கும் இந்த வார்த்தையை 50 வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்து வைத்தவர் நடிகர் திலகம். சோகத்தின் கனம் முகத்தில் தெரிய மனைவியை சக்கர நாற்காலியில் வைத்து தள்ளிக் கொண்டே பாலும் பழமும் கைகளில் ஏந்தி என்று பாடும் அந்த பாவம் [13 வருடங்களுக்கு பின்னால் அதே போல் ஒரு காட்சியமைப்பு என்றாலும் கூட சுமைதாங்கி சாய்ந்தால் பாடலில் சோகத்திலும் ஒரு கம்பீரத்தை காட்டி அந்த மாறுபாட்டை வெளிப்படுத்துவார். என்ன இருந்தாலும் அது எஸ்.பி. சௌத்ரி அல்லவா!]. படத்தின் உயிர்நாடியான பாடலைப் பற்றி சொல்லவே வேண்டாம். அந்த மலை பாதையில் அந்த நடை! அந்த முகம்!
கண் பாதிக்கப்பட்டு முடிந்து கட்டோடு படுத்திருக்க அப்போது நர்சாக சேரும் சரோஜாதேவியின் குரல் கேட்டு சாந்தி என்று எழுந்திருப்பாரே! எப்படி அதை வர்ணிப்பது? அந்த நேரத்தில் விரித்து வைக்கப்பட்டிருக்கும் அவரது இரண்டு கால்களுக்கு நடுவில் காமிரா கோணம் வைக்கப்பட்டு படமாக்கப்பட்டிருக்கும் அழகை என்னவென்று சொல்வது?என்னை யாரென்று பாடல் மட்டும் குறைந்ததா என்ன? சரோஜாதேவி கையைப் பிடித்துக் கொள்ள வேகமாக நடக்கும் அந்த நடை! இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
படத்தில் போனால் போகட்டும் போடா பாடலின் அதே உயரத்திற்கு வரும் ஒரு பாடல் இருக்கிறது. காதல் சிறகை காற்றினில் விரித்து பாடல். மன்னர்கள், கவியரசர், இசையரசி மூவர் கூட்டணி அந்த பாடலை எங்கேயோ கொண்டு போய் விடுவார்கள்.
முதல் நாள் காணும் திருமணப் பெண் போல்
முகத்தை மறைத்தல் வேண்டுமா
முறையுடன் மணந்த கணவன் முன்னால்
பரம்பரை நாணம் போகுமா
என்ற வரிகளும் சரி அதற்கு பிறகு வரும்
பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது
அழுதால் கொஞ்சம் நிம்மதி
பேச மறந்து சிலையாய் நின்றால்
பேச மறந்து சிலையாய் நின்றால்
அதுதான் தெய்வத்தின் சன்னதி
அதுதான் காதல் சன்னதி
என்று சுசிலா பாடும் போது அதிலும் குறிப்பாக காதல் சன்னதி என்ற வார்த்தையை அவர் உச்சரிக்கும் விதம் இருக்கிறதே காதலிக்காதவர்களை கூட காதலின் பால் ஈர்த்துவிடும்! அந்த வரி முடிந்தவுடன் ஒரு ஹம்மிங் வரும் அதை சுசிலா பாடியிருப்பதை கேட்கும் போது இதை விட இனிமை வேறு உண்டா என்று தோன்றும். இந்த இடத்தை குறிப்பிட்டு வைரமுத்து சொல்வார். அந்த ஹம்மிங்கை கேட்கும் போதெல்லாம் என் உயிர் கூட்டை விட்டு பறந்து போய் விட்டு ஹம்மிங் முடிந்தவுடன் மீண்டும் உடலில் வந்து உட்கார்ந்து கொள்ளும் என்பார்.
தினசரி அருந்தினாலும் உட்கொண்டாலும் எப்படி பாலும் பழமும் நமக்கு அலுப்பதில்லையோ அது போலதான் பாலும் பழமும் படத்தை எத்தனை முறை பார்த்தாலும் அதை பற்றி பேசினாலும் நமக்கு அலுப்பதில்லை.
அன்புடன்
-
10th September 2011 02:59 PM
# ADS
Circuit advertisement
-
10th September 2011, 03:15 PM
#1582
Senior Member
Devoted Hubber
Originally Posted by
vasudevan31355
டியர் முரளி சார்,
தங்கள் வாழ்த்துதல்களுக்கும் அன்பிற்கும் நன்றிகள் சார். சில நாட்களுக்குப் பிறகு தங்கள் பதிவு. அருமை. மிக அருமையாக நடிகர் திலகத்தின் (பாலும் பழமும்) அசைவுகளை அற்புதமாக அலசி உள்ளீர்கள். 50 ஆண்டுகளுக்கு முன்னமேயே மனைவியை 'டா' போட்டு இன்றைய தலைமுறைக்கு வழி காட்டியவர் என்றால் அதே போல் பல விஷயங்களுக்கும் முன்னுதாரணம் அவர்தான்.
'ராஜா' திரைப் படத்தில் ஒரு அருமையான சண்டைக்காட்சி. பணத்தை எடுத்துக் கொண்டு தன் காதலியுடன் ஓடி ஒரு பங்களாவுக்குள் ஒளிந்திருக்கும் வில்லனை பாலாஜியும்,நடிகர் திலகமும் கண்டு பிடித்து விடுவார்கள். முதலில் பாலாஜி அந்த வில்லனிடம் சண்டையிட்டு தோற்றுப் போவார். பின் நடிகர் திலகம் வில்லனிடம் சண்டையிட வருவார். முதலில் வில்லனை ஒரு அடி அடித்துவிட்டு குறுக்கே நிற்கும் வில்லனின் காதலியிடம் (பத்மா கண்ணா) படு ஸ்டைலாக
"Escuse me Mam" என்றபடி தன் வலது உள்ளங்கையை மடக்கி, மோதிர விரலில் படும்படியாக வாயால் சிறிது காற்றை ஊதி பின் லேசாக கையை முத்தமிடுவது போன்ற பாவனையோடு களத்தில் இறங்குவார்.
அந்த சூப்பர் சண்டைக் காட்சியின் குறிப்பிட்ட ஸ்டில்.
1972-லேயே 'மேடம்' என்ற வார்த்தையை
""மேம்" என்று ஸ்டைலாக உச்சரித்த அந்த ஸ்டைல் சக்கரவர்த்தியை என்னவென்று சொல்வது!
அன்புடன்
வாசுதேவன்.
In "Siranjeevi", NT will pronounce the word "Madam" as a french person does, while addressing Sowcar Janaki.
What a wonderful contrast!!
-
10th September 2011, 04:03 PM
#1583
Senior Member
Devoted Hubber
சிவாஜி பற்றி சுவையான சிறு குறிப்புகள்
சிவாஜி கணேசன்... இந்திய சினிமாவின் திறந்தவெளிபல்கலைக்கடிதம். எல்லா நடிகர்களுக்கும் ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால், அனைத்து நடிகர்களும் இவருக்கு ரசிகர்கள். அந்தக் கலைச் சமுத்திரத்திலிருந்து சில துளிகள்....
சத்ரபதி சிவாஜி வேடத்தில் நடித்த வி.சி.கணேசனை மேடைக்குக் கீழ் இருந்து பார்த்த தந்தை பெரியார், 'இனி இவர்தான் சிவாஜி!' என்று சொன்னார். அதுவே காலம் சொல்லும் பெயரானது!
நடிகர் திலகம் முதன்முதலில் போட்டவேடம் பெண் வேடம் தான். உப்பரிகையில் நின்றுகொண்டு ராமனைப் பார்க்கும் சீதை வேடம்தான் சிவாஜி ஏற்ற முதல் பாத்திரம்!
1952 -ல் நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்த `பராசக்தி’யில் 'குணசேகரன்' பாத்திரத்தில் சிவாஜியைக் கதாநாயகனாக்க படத் தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் முடிவு செய்தபோது. பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் சிவாஜியை ஹீரோவாக்கிய பெருமை பெருமாளுக்கே உண்டு!
சின்சியாரிட்டி,ஒழுங்கு நேரந் தவறாமைக்கு சிவாஜி ஒர் உதாரணம், ஏழரை மணிக்கு ஷீட்டிங் என்றால், ஆறே முக்கால் மணிக்கே செட்டில் ஆஜராகிவிடுவார். தனது வாழ்நாளில் ஒரு நாள்கூடத் தாமதமாக் ஷீட்டிங்குக்குச் சென்றது இல்லை!
கலைஞரை 'மூனா கானா', எம்.ஜி.ஆரை 'அண்ணன்', ஜெயலலிதாவை 'அம்மு', என்றுதான் அழைப்பார்!
வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ.உ.சி, பகத்சிங் திருப்பூர் குமரன் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பாத்திரங்கள் அனைத்தையும் ஏற்று நடித்தவர் சிவாஜி ஒருவரே!
தன்னை 'பராசக்தி' படத்தில் அறிமுகம் செய்த தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் வீட்டுக்கு ஒவ்வொரு பொங்கல் அன்றும் சென்று, அவரிடம் ஆசி பெறுவதை வழக்கமாகவே வைத்திருந்தார் சிவாஜி!
திருப்பதி, திருவானைக்கா, தஞ்சை மாரியம்மன் கோயில்களுக்கு யானைகளைப் பரிசளித்துள்ளார்!
தமிழ் சினிமா உலகில் முதன்முதலாக மிகப்பெரிய கட் – அவுட் வைக்கப்பட்டது சிவாஜிக்குத்தான். 1957 ல் வெளிவந்த அந்தப் படம் 'வணங்காமுடி'!.
சிவாஜி தனது நடிப்புக்காக வாங்கிய முதல் பரிசு ஒரு வெள்ளித்தட்டு, 'மனோகரா' நாடகத்தைப் பார்த்த கேரளா கொல்லங்காடு மகாராஜா கொடுத்த பரிசு அது!
தனது அண்ணன் தங்கவேலு, தம்பி சண்முகம் போன்றவர்களுடன் ஒரே கூட்டுக் குடும்பமாக இறுதிவரை வாழ்ந்தார்.சிவாஜியின் கால்ஷீட், நிர்வாகம் அனைத்தையும் கவனித்துகொண்டவர் அவரது தம்பி சண்முகம்தான்!
சிவாஜி நடித்த மொத்தப் படங்கள் 301. இதில் தமிழ்ப் படங்கள் 270. தெலுங்கில் 9, ஹிந்தி 2, மலையாளம் 1, கெளரவத் தோற்றம் 19 படங்கள்!
ஒவ்வொரு வருடமும் குடும்பத்துடன் தனது சொந்த ஊரான் சூரக்கோட்டையில் பொங்கல் விழா கொண்டாடுவதை வழக்கமாகவே வைத்திருந்தார். அன்றைக்குப் பல சினிமா பிரபலங்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார்கள்!
விநாயகர் மீது மிகுந்த பக்திகொண்டவர் சிவாஜி, சிறு வெள்ளியிலான பிள்ளையார் விக்கிரகத்தை எப்போதும் கூடவே வைத்திருப்பார்!
சிவாஜிக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது. 'பராசக்தி' படத்தை இயக்கிய, இயக்குநர்கள் கிருஷ்ணன் – பஞ்சு முன்னிலையில் மட்டும் சிகரெட் பிடிக்கமாட்டார்!
'ரத்தத் திலகம்' படத்தில் இவரது நடிப்பைப் பாராட்டி சென்னை சினிமா ரசிகர் சங்கம் கொடுத்த பரிசு ஒரு துப்பாக்கி!
படப்பிடிப்பின்போது அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்காத நேரங்களில் மற்றவர்கள் நடிப்பதை உற்றுக் கவனிப்பார். ஆர்வமாகக் கேட்டால் மற்றவர்களுக்கு டிபஸ் கொடுப்பார்!
சிவாஜியும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி!
விதவிதமான கடிகாரங்களை அணிவதில் இவருக்கு அலாதி பிரியம். ஒமேகா, ரோலக்ஸ் போன்ற வாட்சுகளை ஏராளமாக வாங்கி வைத்திருந்தார்!
தன் தாய் ராஜாமணி அம்மையாருக்கு சிவாஜி கார்டனில் சிலை ஒன்றை அமைத்தார் சிவாஜி. அந்தச் சிலையைத் திறந்துவைத்தவர் எம்.ஜி.ஆர்!
'ஸ்டேனிஸ் லா வோஸ்கி தியர்' என்கிற நடிப்புக் கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் 64 வகையான முகபாவங்களைப் பிரதிபலிக்கும் திறமை பெற்றவர் என்று குறிப்பிட்டு சிவாஜியின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன!
அவரது தீவிரமான ஆசைகளில் ஒன்று தந்தை பெரியார் வேடத்தில் நடிப்பது கடைசி வரை அது நிறைவேறவே இல்லை!
பிரபலதவில் கலைஞர் வலையப்பட்டி. 'தமிழ் சினிமாவில் நீங்கள்தான் எல்லோருக்கும் ரோல் மாடல்' என்று சிவாஜியிடம் சொன்னபோது, 'டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா வரிசையில் மூன்றாவதாகத்தான் நான்' என்றாராம் தன்னடக்கமாக!
பெருந்தலைவர் காமராஜரின் மீது அளவிட முடியாத அன்புகொண்டவர் இவர்.`அந்த சிவகாமியின் செல்வனின் அன்புத் தொண்டன் இந்த ராஜாமணியின் மகன் – என்பதுதான் தன்னைப்பற்றி சிவாஜி செய்துகொள்ளும் அடக்கமான அறிமுகம்!
கிரிக்கெட், கேரம்போர்டு இரண்டும் இவருக்குப் பிடித்தமான விளையாட்டுகள்!.
-
10th September 2011, 04:17 PM
#1584
Senior Member
Devoted Hubber
-
10th September 2011, 04:18 PM
#1585
Senior Member
Seasoned Hubber
ஒரு நினைவூட்டல்
நடிகர் திலகம் பிறந்த நாள் நிகழ்ச்சிகள்
1. டாக்டர் சிவாஜி கணேசன் நினைவுப் பரிசு வழங்கு்ம் நிகழ்ச்சி - 01.10.2011 - சென்னை தியாகராய நகர் ஹபிபுல்லா சாலை, கர்நாடக சங்கத்தைச் சார்ந்த ராமராவ் கலா மண்டபம், மாலை 6.00 மணியளவில். பரிசுகள் பெறுவோர் இயக்குநர் ஏ.சி. திருலோக்சந்தர், சுகுமாரி, திரு பாலமுருகன், திரு ஏ. வின்சென்ட், திரு சித்ராலயா கோபு.
2. கலைநிலை சிவாஜி ரசிகர் மன்றம் 11வது ஆண்டு விழா மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா - 02.10.2011 காலை 10.00 மணி, சமபந்தி போஜனம், சிறப்பு விருநதினர் கலந்து கொள்கிறார். சந்திர சேகர் திருமண மண்டபம், சென்னை பெரம்பூர் லட்சுமியம்மன் கோயில் அருகில்
3. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் - நடிப்புக்கு கை கொடுத்த தெய்வம்/ கௌரவம். திரு ஒய்.ஜி.மகேந்திரா வழங்கும் நிகழ்ச்சி. 02.10.2011 மாலை சென்னை தேனாம்பேட்டை அண்ணா சாலையில் உள்ள காமராஜர் அரங்கம். நேரம் மற்றும் நிகழ்ச்சி விவரங்கள் விரைவில்.
4. இதயராஜா சிவாஜி பித்தர்கள் குழு சார்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள் மற்றும் ஏழை எளியோர்க்கு இலவச பாட நூல்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா, 16.10.2011 ஞாயிறு மாலை, சென்னை பெரம்பூர் லட்சுமியம்மன் கோயில் அருகில் உள்ள சந்திரசேகர் திருமண மண்டபம்.
மேலும் நிகழ்ச்சிகளின் விவரங்கள் கிடைக்கும் போது உடனுக்குடன் இங்கு பகிரந்து கொள்ளப் படும்.
அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை சிறப்பிக்க வேண்டுகிறேன்.
அன்புடன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
10th September 2011, 04:19 PM
#1586
Senior Member
Veteran Hubber
டியர் வாசுதேவன்,
ராஜா படத்தில் நடிகர்திலகமும், பத்மா கன்னாவும் இரண்டே முறைதான் சந்திப்பார்கள். அந்த 'எக்ஸ்க்யூஸ் மி மேம்' தவிர இருவருக்கும் நேரடி வசனமே கிடையாது. நீங்கள் குறிப்பிட்டது முதல் சந்திப்பு.
இரண்டாவது சந்திப்பும் மிக வித்தியாசமாக இருக்கும். நாகலிங்கத்தின் (ரங்காராவ்) இருப்பிடத்துக்கு முதன்முதலாக பாபுவால் (பாலாஜி) அழைத்து வரப்படும் ராஜா, அங்கே மதுபானப்புட்டிகள் கொண்ட வீல்-ட்ரேயைத் தள்ளிக்கொண்டு வரும் தாராவைப்பார்த்ததும் ஆச்சரியப்பார்வை பார்ப்பார். உடன் திரும்பி பாபுவைப் பார்ப்பார்.
பார்வையிலேயே ராஜாவின் கேள்வி :'இவள் குமாரின் காதலி அல்லவா?. இங்கே எப்படி?'
பாபுவும் பார்வையாலேயே பதில்: 'இப்ப ஒண்னும் கேட்டுக்காதே, அப்புறமா விளக்கமா சொல்றேன்'.
தாராவின் பார்வையிலும் சற்று வெறுப்பு: 'தன் காதலனை மாட்டவைத்து, தான் நாகலிங்கத்தின் அடிமையானதற்கு இந்த ராஜாவும் ஒரு காரணமல்லவா'. (பாவம் அதுவரையிலும் குமார் தப்பிப்போய் எங்கோ உயிருடன் இருப்பதாகவே தாரா நினைத்துக்கொண்டிருப்பாள். அடியாட்கள் 'பறவை சுட்ட கதை' அப்புறம்தானே தெரியும்).
டியர் தனுஷ்,
கொஞ்சநாளைக்கு ஒருமுறை வந்து எட்டிப்பார்த்துவிட்டு காணாமல் போய் விடுகிறீர்களே ஏன்?. முன்போல உங்களின் தொடர்ந்த பங்களிப்பை எதிர்பார்க்கிறோம்.
-
10th September 2011, 04:21 PM
#1587
Senior Member
Devoted Hubber
-
10th September 2011, 04:41 PM
#1588
Senior Member
Devoted Hubber
சிவாஜியின் நடிப்பிலக்கணம் பகுதி – 2
1. பாட்டும் – நடிப்பும்
நாடகம் என்பது நடிப்பும் – பாட்டும் ஆகும். அதுவே கூத்து. சிலபத்திகார் கூறும் சாந்திக்கூத்து மற்றும் வினோதக் கூத்துகள் பாடல் கலந்து ஆடப்பெற்றவைகளே என்பதை மூன்றாம் இயலில் விரிவாகக் கண்டோம். கதை தழுவாது பாட்டின் பொருள்பற்றி அபிநயிக்கும் கூத்து ‘அபிநயக்கூத்து’. ஒரு கதையைத்தழுவி நடிக்கும் கூத்து ‘நாடகக்கூத்தாகும்.
ஆக, திரைப்படம் என்பது நம்மைப் பொறுத்தவரை ‘அபிநயமும் – நாடகமும் இணைந்து ‘நாடகக்கூத்து’ என்ற பெயர் கொண்ட ஒன்று என்று கொண்டால் தவறாகாது.
உலகின் முதல் நாகரீகம் கண்டவன் தமிழன் என்ற இறுமாப்புடன் மகிழ்ச்சியுடனும், இசையிலும் பாட்டிலும் சிறந்தவன் தமழனே எனக் கூறலாம். சிலப்பதிகாரக் காலத்தில் தனித்தமிழ் இசை வழங்கியது. அவ்வாறே, கடைச் சங்கத்தில் நாட்டியக் கலை அடைந்திருந்த பெருமையை சிலப்பதிகாரத்தின்’ ‘அரங்கேற்றுக்காதை’ நன்கு விளங்கும்.
நடனமாதின் இலக்கணம், ஆடலாசிரியன் அமைதி, இசையாசிரியன் அமைதி, முழவாசிரியன் அமைதி, முழலோன் அமைதி, அரங்கின் அமைதி, கூத்திலக்கணம் ஆகியவற்றை அரங்கேற்றுக் காதை விளக்குகிறது. அமைதி என்ற சொல்லுக்குத் தன்மை என்று பொருள்.
“உள்ளத்தில் ஓங்காரமாய் நின்ற ஐயா” என்று இறைவனை வாழ்த்துகிறார் மாணிக்கவாசகப் பெருமாள். அந்த ஓங்காரத்தின் விரிவே நாதயோகமான இசைக்கலை. உயிரும் உலகும் நாதக் கடலிலே மிதக்கின்றன. ஓமே எல்லாம்ந அதுவே உள்ளொலி; அதனின்றும் சத்தம் பிறந்தது; அதனின்று எழுத்து; அதனின்று சொல் தொடர்; மொழிகள், நூல்கள், காவியம், சங்கீதம் எல்லாம் உண்டாயின.
கீதம், வாத்தியம், நிருத்தம் (நடனம்) ஆகிய மூன்றும் சேர்ந்தது சங்கீதம்.
நாததிலிருந்து இசையொலி (சுருதி) இசையொலியிலிருந்து இசை (ஸ்வரம்); இசையிலிருந்து பண் (இராகம்); பண்ணிலிருந்து பாட்டு(கீதம்) உண்டாகிறது.
சங்கீத்ததிற்கு தாய் இசையொலி; (சுருதி அல்லது அலகு); தந்தை தாளம் ஆகும்.
ஆன்மாவிலிருந்து பாட்டு வருகிறது. அதுவே பொறிகளை (காணங்கள், இந்திரியங்கள்) ஏவி, ஒரு தீயை, ஓர் ஆர்வத்தை உண்டு பண்ணுகிறது. அந்த ஆர்வத் தீ காற்றை உந்துகிறது. காற்று, நாபி, இதயம், பண்டம், உச்சி, மூக்கு, இதழ், நா, பல், அண்ணம் (உண்ணாக்கு, மேல்வாய்) இவற்றைத் தொழிற்படுத்துகிறது. அதனால் உயிர்மெய் ஆகிய எழுத்துக்கள் உண்டாகின்றன.
உயிரெழுத்துக்களும், இடையின எழுத்துக்களும் கழுத்திற் பிறக்கும். மெல்லெழுத்துக்கள் மூக்கையும், வல்லெழுத்துக்கள் மார்பையும் இடமாகக் கொண்டு பிறக்கும். எழுத்துக்கள் அளபெடுத்து ஆலாபனமாய் நீண்டு இசையாகிப் பண்ணாகும்.
நெஞ்சு, கழுத்து, நாக்கு, மூக்கு, மேல்வாய் (அண்ணம்), உதடு, பல, தலை ஆகியவை நாதம் பிக்கும் எட்டுப் பெருந்தானங்களாகும் (இடங்கள்)
எனவே, பாட்டு நம் திரைப்படங்களில் இடம் பெறுவது நமது கலாச்சாரத்தின், இலக்கியத்தின் நீண்ட வரலாற்றுப் பின்னணியோடு பிணைந்த ஒன்று. பாட்டு பிறக்கும் இடம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் எதனை அடிப்படையாகக் கொண்டு பாட்டுபிறக்கிறதோ அவ்வாறு பிறந்த பாட்டு அந்தச் சூழலில் பாடப்படுவது இயல்பான ஒன்றா என்ற ஆய்வுக்குள் செல்லாது இடம் பெற்ற ஆடல் காட்சிகளில் நடிகர்திலகத்தின் நடிப்பிலக்கணத்தை எவ்வாறு வரையறை செய்து தர வேண்டும் என்பதே நோக்கம்.
பாடகன்
பண்டைய நிருத்தங்களில், கூத்துகளில் பாடகன் ஒருவன் இசைப்பதற்கென்றே இருந்திருக்கிறான் என்பதை சிலப்பதிகாரத்தின் ‘அரங்கேற்றக் காதை’யிலிருந்து நம்மால் அறிய முடிகிறது அவன், யாழ், குழல், தாளம், ணீர், வாய்ப்பாட்டு, சன்னக்குரலுடன் அமைப்பாக வாசிக்கும் மத்தளம், முன்னே சொன்ன கூத்தின் வகை – இவற்றுடன் இசைந்த பாடலை இனிமையாக, இசையொலி (சுருதி) தாளங்களுடன் (லயம்) பொருந்தப் பாடவேண்டும். வரிப்பாட்டிற்கும், ஆடலுக்கும் உரிய பொருளை இலக்கி (விளக்கி) இயற்சொல், திரிசொல், திசைசொல், வடசொல், ஆகிய சொற்களின் ஓசைகளைச் சுத்தமாகக் கடைப்பிடித்து, அந்த ஓசையின் இலக்கணங்களையெல்லாம் குற்றமறத்தெரிந்த அறிவாளியாயிருக்க வேண்டும் பாடகன், என்பது இசையாசிரியன் தன்மை.
ஒவ்வொரு நடிகனுக்கும் ஏற்றபடி தன் குரலை மாற்றி மாற்றிப் பாடிய ஒரு பாடல் கலைஞனைக் கூடத் தமிழகமேதான் கண்டிருக்கிறது ஒரு பாடல் சங்கம் வைத்துத் தமிழ்வளர்த்த மதுரையிலே பிறந்த டி.எம். சௌந்தர்ராஜன் என்ற திரைப்படப் பாடகர். ஆரம்பகாலங்களில் இவர் தம் வளமான – இனிமையான – காந்தம் போன்ற குரலால் பொதுப்படையாகப் பாட ஆரம்பித்தாலும் நடிகர் திலகதின குரல் வளமும், இவரின் குரள்வளமும் ஒன்றாக அமைந்தது விந்தையிலும் விந்தை. ச்ற்று மிகைப்படுத்திச் சொல்வதென்றால் இப்படித்தான் சொல்ல வேண்டும். இவர் குரலால் நடித்து நடிகர் திலகத்தை உடலால் நடிக்கச்செய்தார். பாடலுக்கு நடிப்பது என்ற பகுதியில் இருவரையும் தனித்தனியே பிரித்துப் பார்ப்பதென்பது இயலாத செயலாகும்.
மேலும் இவர் மட்டுமல்ல. சிதம்பரம் சி.எஸ். ஜெயராமன், சந்திரபாபு, கண்டசாலா, ஏ.எம். ராஜா, சீர்காழி கோவிந்தராஜன், மலேசியா வாசுதேவன், என்ற தமிழகத்தின் அருமையான பாடற் கலைஞர்களின் பாட்டுக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், அவரவர்களின் குரல்வளத்திற்கேற்ப, தன் முகத்தோற்றத்தை மாற்றி மாற்றி நடித்திருக்கிறார்.
இவருக்குப் பின்னும், இவர் திரையுலகில் சுறுசுறுப்பாக நடித்துக் கொண்டிருந்த காலங்களிலும், பாட்டுக்கு ஏற்ப வாயை அசைப்பது, பாடலின் பொருளுக்கேற்ப, காட்சியின் தன்மைக்கேற்ப நடிக்கும் நடிகர் எவரும் இன்னும் தோன்றவில்லை. இன்னும் சொல்லப்போனால், இவ்வகையான நடிப்புத்திறனை ஒரு நடிகன் வெளிப்படுத்த உதவும் வண்ணம், இப்பொழுதெல்லாம் காட்சிகளும் அமைக்கப்படுவதே இல்லை. பாடலை உருவாக்கும் போதே இது வாயசைப்பிற்கு அல்ல, இது வாயசைப்பிற்கு என்று இருவகைப் பாடல் கட்சிகளைப் பிரித்துவிட்ட நிலையில், இது வாயசைப்பிற்உக (For Lip Movement) என்று உருவாகும் பாடல்களே தற்போது இல்லை என்று திட்டவட்டமாகக் கூறலாம்.
கல்தோன்றாக்காலத்தே முன்தோன்றினாலும், கண்டகண்ட மொழிகளின் பாதிப்புக்கு ஆளாகி கன்னித் தமிழாகவே இருந்துவரும் நம் தமிழுக்கு, சமீபகாலமாக திரைப்படங்களின் மூலம், அதன் பாடல்களில் மூலம் , ஆங்கிலேயர் நம்மை அடிமை கொண்டிருந்தபோது கூட அடிமையாகாத தமிழும் – அதன் கவிதையும் இன்று ஆங்கில மயமாக்கப்பட்டு வருவது ஆபத்தானது என்பதை அறிஞர்கள் ஒப்புக்கொள்வர்.
தமிழ் அதன் இளமை, அதன் இனிமை உலகம் முழுவதும் பரவ வேண்டும் என்பதில் எந்தத் தமிழரும் ஆர்வமே கொள்வர். ஆனால் ஆர்வம் என்பது தவறானு முறையைத் தேர்வுசெய்யும் முறையாக அமைந்துவிடக்கூடாது.
ஒரு மொழியை, அதன் இலக்கியத்தை, அதன் இசையை அதன் இயல்பான வழியில் நின்று பேசி, படித்துப்,பாடினால்தான் அது அம்மொழிக்குச் செய்யும் பெருமையாகும். மாறாக, ஒரு மேலைநாட்டு தாளகதியில் (Rhythm) நம் தமிழ்ப்பாடலொன்றை அமைத்து, அதை வேற்று மொழியினர் எளிதாகப் பாடக் கொற்றுவிடுகின்றனர். என்று வைத்துக்கொள்வோம். அது…. ‘பார்த்தீர்களா என் இசையால் உலக மக்கள் அனவரும் நம் தமிழைப்பாடும் வண்ணம் செய்துவிட்டேன் என்று பெருமை பேசினால் அதனினும் அறியாமை, அறிவீனம் வேறொன்றுமிருக்க முடியாது. மாறக தமிழை இப்படித்தான் பேசவேண்டும் – பாட வேண்டும் போலிருக்கிறது’ என்று எண்ணி புதிதாக ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுபவனுக்கு, அது ஒரு தவறான வழிகாட்டுதலாகும்.
இந்த நிலையில், பாடல் காட்சிகளிலும், தொல்காப்பியம் கூறிய ஒன்பான் சுவைகளின் வழியே பாடல் வடிவங்கள் நடிகர்திலகம் எவ்வாறு உருவாக்கித் தந்துள்ளார் என்பதைக் கண்டு வழங்கினால் எதிர்காலக் கலைஞர்களுக்கு அதுவே ‘இலக்கணமாக’ அமையும்.
1. நகைச்சுவைப் பாடல் நடிப்பு
அ. எள்ளல் (பிறரை இகழ்ந்து பாடல்)
தன் ஒரே தங்கையின் திருமணம், தாய்நாட்டைக் காணப்போகிறோம் என்ற தனியாத ஆவலில் கனவுகள் தரைமட்டமாகிப் போகின்றன. படுக்க இடமும் பசிக்கு உணவும் தர மறுக்கிறது பாசமுள்ள தாய்நாடு. ஏமாற்றுபவனுக்கு இடமென்று தெரிந்து கொள்கிறான். பைத்தியக்காரனாக வேடம் புனைந்து தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறான். அப்போது பிறக்கும் பணம் பற்றிய பாடலில் பணம் என்று அலைவோரை எள்ளி நகையாடுகிறான். பாடல்மூலம். அது…
“தேசம் ஞானம், கல்வி, ஈசன் பூசையெல்லாம்
காசு முன் செல்லாதடி – குதம்பாய்
காசு முன் செல்லாதடி
ஈசனும் ஈசனார் பூசையும் – தேசத்தில்
காசுக்குப் பின்னாலே ….
……………………………………” என்று
கேலி செய்யும் பாடலில், அப்பாடலின் ஒவ்வொரு வரியின் பொருளும் அவன் முகத்தில் அவ்வப்போது மாறிமாறத் தோன்றி மறையும். நடிகர் திலகத்திற்கு முதன் முதலில் குரல் கொடுத்துப் பெருமை பெற்றவர். சிறந்த இசையறிஞரான சிதம்பரம் சி.எஸ். ஜெயராமன்
அவ்வாறே……
“சாப்பாடு இல்லாம தவிக்குதுங்க
ஜனம்
கூப்பாடு போட்டுமனம் குமுறுதுங்க
உயிர்
காப்பாத்த கஞ்சி தண்ணி ஊத்துங்க
என்றால்
தாப்பாளைப் போடுறாங்க பாருங்க
அந்தச் சண்டாளர் ஏங்கவே
தன்னலமும் நீங்கவே
தாரணி மீதிலே பாடுங்க
ராகம் கா.. கா….”
இப்பாடல்களையும், கதை – வசனத்தையும் தந்தவர் கலைஞர் மு. கருணாநிதி – படம் பராசக்தி (1952).
-
10th September 2011, 04:42 PM
#1589
Senior Member
Devoted Hubber
ஆ. இளமை
(இளமை கண்டு எள்ளல்) தன்மை ஒரு ஓட்டுநர் எனத் தவறாகப்புரிந்து கொண்ட பெண்ணை அவள் அறியாமையை எண்ணி அவள் இளமையை (அறிவு முதிரா தன்மையை) எள்ளிப் பாடும் பாடலின் வடிவத்தை அன்னை இல்லம் (1963) படத்தில்,
“நடையா – இது நடையா
ஒரு
நாடகமன்றோ நடக்குது
இடையா – இது இடையா
அது
இல்லாத்து போல் இருக்குது(நடையா)
……………………..
என்ற பாடலில் காணலாம். கண்ணதாசனின் கவிதை இது. குரல் தந்தவர். டி.எம். சௌந்தர்ராஜன்.
இ. பேதமை (அறிவின்மை)
சட்டாம்பிள்ளையின் மகன் விரித்த வலையில் விழுந்த அரண்மனைப் பெண்கள், நடுராத்திரியில் கோவிலுக்கு வந்து அவனுக்காகக் காத்திருக, அவர்கள் அறியாமையை எண்ணி எள்ளிப்பாடும் பாடல் தூக்குத்தூக்கி (1954)யில் டி.எம். எஸ். குரலில் -
“ஏறாத மலைதனிலே
ஜோரான கௌதாரி ரெண்டு
தாராளமா இங்கே வந்து
ததிங்கிணத்தோம் தாளம் போடுதய்யா
ததிங்கிணத்தோன் தாளம் போடுதய்யா.
தொகையறா
கல்லான உங்கள் மனம்
கனிஞ்சு நின்று ஏங்கையிலே
கண்கண்ட காளியம்மா
கருணைசெய்வ தெக்காலம்.?!
கோமாளி உடையுடன் , தனது குண்டு குண்டான கண்களை உருட்டி உருட்டி பாடலுகேற்றவாறு ஒரு சின்ன நடனமு ஆடும் இடமே பேதமையின் பாடல் வடிவம்.
ஈ. மடன் (தன் மடமை பற்றித் தோன்றுவது)
தற்கொலைக்கு முயன்றவனைத் தடுத்து நிறுத்தி ‘வாழ நினைத்தால் வாழலாம். ஆசையிருந்தால் நீந்திவா’ என்று அழைத்தவளின் காதலுக்குத் தந்தை ஒரு தடையாக இருக்கிறார். வீரம் விவேகம், கலையில் விற்பன்னாக உள்ளவனுக்கே தன் மகள் என்ற தந்தை, சங்கீதப் போட்டியில் தன்னோடு பாட அழைக்கிறார்.
“நீயே என்றும் உனக்கு நிகரானவன்” – என்று பாட்தொடங்கி அவர் இசையில் இழுத்த இழுப்புக்கெல்லாம் ஆடி அவரை மகிழ்விக்கிறாள். அவர் தந்தையின் இசை வெறியைக் கண்டவன் பாடப்பாட தன் தலையில் அடித்க்கொள்கினாற் பாண்டியன்; தன் மடமையை எண்ணி. நடிகவேள் எம்.ஆர். ராதா நடிகர் திலகத்திற்கு இப்பாடல் காட்சியில் துணையாக வருவது பலேபாண்டியாவில். (1962).
2. அவலச் சுவை பாடல் நடிப்பு
அ. இளிவு (இகழப்பட்டதால் வந்தது)
‘பறவைகள் பலவிதம் – அவை ஒவ்வொன்றும் ஒருவிதம்’ எனப் பாடித்திரிந்தவனின் பார்வையில் மாடப்புறாவொன்று படுகிறது. மணமாலை சூட்டுகிறேன் என்கிறான். கறை படிந்த உன் காதலைக் குப்பையிலே போடு என்கிறான். ஆனால் உண்மையான மனமாற்றத்திற்கு உள்ளனவன், தான் திருந்தி வாழ மாடப்புறாவை மனையாளாக்குமாறு பெற்றவளை வேண்டுகிறான். மகனின் வாழ்வை எண்ணி, விரும்பாத அவளை மகனுக்குமணம் முடித்து வைக்கின்றனர். ஆனால் அவள் உள்ளமோ அவன் கடந்த காலக் கறைபடிந்த வாழ்வை எண்ணி எண்ணி இகழ்ந்து அவனோடு ஒட்டாது உறவாடாது வாழ்கிறது. வீணானது வாழ்வு என்று விழிநீர் சிந்துகிறது மாடப்புறா. முற்றிலுமாக மாறிய கணவன் கேட்கிறான்……
“ஏனழுதாய் ஏனழுதாய்
என்னுயிரே ஏனழுதாய்
நானழுது ஓய்ந்ததற்கு
நன்றி சொல்லவோ அழுதாய்.!…ஆனவரை சொல்லி விட்டேன்
அழுதழுது பார்த்து விட்டேன்
தாய்மொழியில் வார்த்தையில்லை
வாய்மொழிக்கும் வலிமையில்லை. (ஏனழுதாய்)
என்வழக்கில் சாட்சியில்லை
எனதுபக்கம் யாருமில்லை
சட்டம் தரும் சலுகைகூட
சமுதாயம் தரவில்லையே!…..(ஏனழுதாய்)
………………..”
என்று மனைவியின் இகழ்ச்சிக்கு ஆளானதை எண்ணிப் புலம்பும் இச்சுவையின் வடிவம், இருவர் உள்ளம் (1963) படத்தில் கண்ணதாசன் கவிதையை டி.எம். எஸ். குரலில் பாடுகையில கிடைக்கும்.
-
10th September 2011, 04:43 PM
#1590
Senior Member
Devoted Hubber
ஆ. இழிவு (உயிராவது பொருளாவது இழத்தல்)
கட்டிய மனைவியைத்தவிக்க விட்டு, பரத்தையின் பஞ்சணையில் படுத்துப் புரண்டு, முடிவில் கண்ணைப் பறிகொடுத்து விட்டு வந்து கட்டிய மனைவியின் காலடியில் விழுகிறான். மனைவி தவிக்கிறாள்.
தொகையறா
“ஈடற்ற பத்தினியின் இன்பத்தைக்கொன்றவன் நான்
அவள்
இதயத்தில் கொந்தளித்த எண்ணத்தைக் கொன்றவன் நான்
வாழத்தகுந்தவனை வாழாமல் வைத்துவிட்டு
பாழும் பரத்தையினால் பண்பதனைக் கொன்றவன் நான்
அந்தக் கொள்கைக்கே ஆளாய் இருந்து விட்டேன்
இனி
எந்தக் கொலை செய்தாலும் என்னடி என் ஞானப் பெண்ணே!
பாடல்
“தவறுக்கும் தவறான தவறைப் புரிந்து விட்டு
தனிப்பட்டுப் போனவன் ஞானப்பெண்ணே
பதறிப் பதறி நின்று கதறிப்புலம்பினாலும்
பயன்பட்டு வருவானோ ஞானப்பெண்ணே”
(“ஐயோ… அத்தான்! உங்கள் கண்கள் எங்கே அத்தான்… எங்கே?” கதறுகிறாள் மனைவி.)
“கண்ணைக் கொடுத்தவனே பறித்துக்கொண்டாண்டி
மானே வளர்த்தவனே வெறுத்துவிட்டாண்டி”
- என்று கதறிப்புலம்பும் வடிவத்தை மக்கள் கவிஞன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கவிதைவரிகளுக்கு சி.எஸ். ஜெயராமன் குரல்கொடுக்கும் தங்கப்பதுமை (1959)யில் காணலாம்.
இ. அசைவு (தளர்ச்சி)
தாயோடு அறுசுவை போகும்;
தந்தையோடு கல்வி போகும்
சேயோடு இன்பம் போகும்;
நல்ல
மனைவியோடு எல்லாம் போகும்!;
மனைவி இறந்துவிட்டாள். மகனோ குற்றவாளி தானோ…. கடமையே கண்ணெனக்கருதும் காவலதிகாரி. அடிமேல் அடி விழுந்தால் ஆடாதார் யார்?
“சோதனை மேல் சோதனை
போதுமடா சாமி
வேதனைதான் வாழ்க்கையென்றால்
தாங்காதுபூமி (சோதனை)
…………………………………………….
…………………………………………….
தானாடவில்லையம்மா சதையாடுது
அது
தந்தையென்றும் பிள்ளையென்றும் உறவாடுது
பூவாக வைத்திருந்தேன் மனமென்பதை
அதற்குள்
பூநாகம் புகுந்துகொண்டு உறவென்றது
அடிதாங்கும் உள்ளமிது இடிதாங்குமா
இடிபோல பிள்ளை வந்தால் மடிதாங்குமா”
வீரமான உள்ளத்தின் தளர்ச்சியைப் படம்பிடித்துக் காட்டும் வரிகள், குரல் வளம், குணச்சித்திர நடிப்பு. கண்ணதாசன், டி.எம். எஸ். கணேசன் இவர்கள் பின்னணியில் இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் இணைந்தளித்த இவ்வடிவம் தங்கப்பதக்கம (1974).
ஈ. வறுமை(பொருளின்மை)
ஏற்கனவே குறிப்பிட்டதுபோல், நடிகர் திலகம் வறுமையில் வாடும் நாயகனாக வேடமேற்றது ஒன்றிரண்டு படங்கள்தான். செல்வம். அதன் மதிப்பு குறித்து தன் மகனை முன்னிலைப்படுத்திப் பாடி வறுமையை வெளிப்படுத்திய வடிவம் ‘நான் பெற்ற செல்வம்’ (1956) படத்தில் கிடைக்கும். பாடலுக்குக் குரல்தந்தவர் டி.எம்.எ. , பாடல்,
“வாழ்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்
வையகம் இதுதானடா.(வாழ்ந்தாலும்)
வாழ்ந்தாரைக் கண்டால் மனதுக்குள் வெறுக்கும்
தாழ்ந்தாரைக் கண்டால் வாய்விட்டுச் சிரிக்கும்
இல்லாது போனால் ஏளனம் செய்யும்
இருப்பவன் கேட்டால் நடிப்பென மறுக்கும்”
Bookmarks