Page 157 of 197 FirstFirst ... 57107147155156157158159167 ... LastLast
Results 1,561 to 1,570 of 1967

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 8

  1. #1561
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like








    அன்புடன்,
    நெய்வேலி வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 9th September 2011 at 11:57 AM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1562
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like








    அன்புடன்,
    நெய்வேலி வாசுதேவன்.

  4. #1563
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    டியர் ராகவேந்திரன் சார்,
    பாலும் பழமும் ஸ்டில்ஸ் அசத்தல். ஸ்டைல் டாக்டர் சூப்பர். அனைத்துபாடல்களையும் ஒலி-ஒளி- வடிவங்களில் தந்து கலக்கி விட்டீர்கள். அதக் காவியத்தின் மீது தங்களுக்கு எத்துணை ஈடுபாடு இருக்கிறது என்பது தங்களின் பங்களிப்புகளில் இருந்தே தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது. அனைத்துக்கும் ஒரே வார்த்தை' நன்றிகள்'.

    அன்பு பம்மலார் சார்,

    நடிகர்திலகத்தை இளையதிலகம் கண்ட பேட்டியை அருமையாக வெளியிட்டு உள்ளீர்கள். கலக்கல். பாலும் பழமும் வெளியீட்டு விளம்பரங்கள் நிஜமாகவே நெஞ்சை அள்ளுகின்றன. நன்றிகள் சார்.

    அன்புடன்,

    வாசுதேவன்.

  5. #1564
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    டியர் பம்மலார்,

    'பாலும் பழமும்' திரைக்காவியத்தின் விளம்பர அணிவகுப்பு படு சூப்பர். 50 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ஒரு படத்துக்கு, ஏதோ நேற்று வந்தது போல இவ்வளவு விளம்பரங்கள் காணக்கிடைப்பது நிச்சயம் அதிசயமே. எடுத்து, பாதுகாத்து, வைத்திருந்து, இப்போது அவற்றை மாலையாகத் தொகுத்து இங்கே வழங்கியமைக்கு மிக்க நன்றி.

    அதிலும் 100-வது நாள் விளம்பரத்துக்குக்கீழாக, இத்திரைக்காவியம் 100 நாட்களைக்கடந்து ஓடிய திரையரங்குகளின் பட்டியலை நீங்கள் அளித்திருப்பது, உண்மையை பலருக்குப்புரியவைக்கும் வண்ணம் அமைந்துள்ளது.

    டியர் ராகவேந்தர்,

    நான் கேட்டதும், 'தென்றல் வரும்' பாடலை அளித்தமைக்கு மிக்க நன்றி.

    நடிகர்திலகத்தின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகளின் அழைப்பிதழை இங்கே பதித்தமைக்கும் மிக்க நன்றி. 'சிவாஜி விருது' பெற இருக்கும் கலை விற்பன்னர்களுக்கு வாழ்த்துக்கள்.

    டியர் வாசுதேவன்,

    தங்கள் பங்கிற்கு நீங்களும் 'தென்றல் வரும்' படலின் இணைப்பைத் தந்து அசத்தி விட்டீர்கள். நன்றி.

    டாக்டர் ரவியின் பல்வேறு முகபாவங்களைக் காட்டும் நிழற்பட வரிசை அருமையோ அருமை. படத்தில் வரும் மிக முக்கிய காட்சிகளை அந்த ஸ்டில்கள் நினைவுக்குக் கொண்டு வருகின்றன. குறிப்பாக, கண்களில் கட்டோடு தன் மனைவி சாந்தியையே, நர்ஸ் நீலாவாக நினைத்துக்கொண்டு சிரித்துக்கொண்டே பாடும் 'நான் பேச நினைப்பதெல்லாம்' சோகப்பாடல் காட்சி மனதை அள்ளுகிறது. சோகப்பாடலைக்கூட சிரித்துக்கொண்டே பாடியவர் இவர் ஒருவராகத்தான் இருக்க வேண்டும்.

    இந்த நேரத்தில், இப்படத்தில் இடம்பெற்ற 'என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்' பாடல் உருவான கதையை நான் எழுதியதை இங்கே தருவது பொருத்தம் என நினைக்கிறேன். இதோ இந்த இணைப்பில் படிக்கலாம்.....

    http://www.msvtimes.com/forum/viewto...t=159&start=15

  6. #1565
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    சகோதரி சாரதா,

    தங்களின் பாராட்டுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி !

    தங்களின் எழுத்தோவியமான 'என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்' பாடல் உருவான கட்டுரை உண்மையிலேயே அசத்தல். அனைவரும் அறிய வேண்டிய பல அரிய தகவல்களை உள்ளடக்கிய ஒரு கட்டுரைப்பதிவைப் படைத்த தங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்!

    டியர் வாசுதேவன் சார்,

    பாராட்டுக்கு நன்றி !

    'டாக்டர் ரவி' ஆல்பம் அற்புதம் !

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  7. #1566
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    செல்லுலாய்ட் திலகத்தின் செப்டம்பர் சித்திரங்கள்

    "பாலும் பழமும்" : பொன்விழா நிறைவு

    [9.9.1961 - 9.9.2011] : 51வது ஆரம்பதினம்

    பொன்னுக்கு மேலான பொக்கிஷங்கள் [தொடர்ச்சி...]

    "பாலும் பழமும்" வெளியீட்டு தினமான செப்டம்பர் 9, 1961 சனிக்கிழமையன்று, இக்காவியத்தின் இயக்குனரான பீம்சிங் அவர்கள், சென்னை சாந்தி திரையரங்கிற்கு வருகை புரிந்து தான் உருவாக்கிய உன்னத படைப்பை ரசிகர்கள், பொதுமக்கள், பத்திரிகையாளர்கள், பிரமுகர்கள் புடைசூழ அனைவருடனும் இணைந்து கண்டு களித்தார். இந்நிகழ்வு குறித்த ஒரு விரிவான மிகமிக அரியதொரு கட்டுரைத் தொகுப்பு:

    வரலாற்று ஆவணம் : பேசும் படம் : நவம்பர் 1961

    முதல் பக்கம்



    இரண்டாவது பக்கம்



    மூன்றாவது பக்கம்



    நான்காம் பக்கம்


    தொடரும்.....

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  8. #1567
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    செல்லுலாய்ட் திலகத்தின் செப்டம்பர் சித்திரங்கள்

    "பாலும் பழமும்" : பொன்விழா நிறைவு

    [9.9.1961 - 9.9.2011] : 51வது ஆரம்பதினம்

    பொன்னுக்கு மேலான பொக்கிஷங்கள் [தொடர்ச்சி...]

    "பாலும் பழமும்" வெளியீட்டு தினமான செப்டம்பர் 9, 1961 சனிக்கிழமையன்று, இக்காவியத்தின் இயக்குனரான பீம்சிங் அவர்கள், சென்னை சாந்தி திரையரங்கிற்கு வருகை புரிந்து தான் உருவாக்கிய உன்னத படைப்பை ரசிகர்கள், பொதுமக்கள், பத்திரிகையாளர்கள், பிரமுகர்கள் புடைசூழ அனைவருடனும் இணைந்து கண்டு களித்தார். இந்நிகழ்வு குறித்த ஒரு விரிவான மிகமிக அரியதொரு கட்டுரைத் தொகுப்பின் தொடர்ச்சி:

    வரலாற்று ஆவணம் : பேசும் படம் : நவம்பர் 1961

    ஐந்தாம் பக்கம்



    ஆறாவது பக்கம்



    ஏழாவது பக்கம்



    எட்டாம் பக்கம்


    [இக்கட்டுரைத் தொகுப்பு மொத்தம் எட்டு பக்கங்களைக் கொண்டது.]

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  9. #1568
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Thirumbipaar movie for viewing pleasure

  10. #1569
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பம்மலார் தந்துள்ள பேசும் படம் கட்டுரையில் பீம்சிங் அவர்கள் ஒரு குறிப்பிட்ட காட்சியினைப் பற்றிக் கூறி அதை திரை அரங்கிலேயே எடிட் செய்திருக்கும் செய்தியைப் படித்திருப்பீர்கள். அந்தக் காட்சியில் ஸ்விட்சர்லாந்திலிருந்து ஒரு பார்சல் வந்துள்ளதாக ஒரு சக டாக்டர் கூறுவார். அந்த சக டாக்டராக நடித்த நடிகர் பெயர் நாகராஜன் என்பதாகும். அவர் தி.மு.க. மேடைப் பேச்சாளர். அவரைக் கட்சிக் காரர்கள் திப்பு சுல்தான் என்று அடைமொழியிட்டு அழைப்பார்கள். 1972ல் ஏற்பட்ட மாற்றத்திற்கு சில ஆண்டுகட்குப் பின் அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது, 67 கால கட்டங்களில் தான் நடிகர் திலகத்தை மேடையில் எதிர்த்துப் பேச வேண்டிய சூழ்நிலையைப் பற்றி மிகவும் மனம் வருந்திப் பேசினார்.

    இது மறக்க முடியாத நிகழ்வாகும்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #1570
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    டாக்டர் ரவியை அவரது பல்வேறு முகபாவங்களை உணர்வுகளை இங்கே பதிந்ததற்கு வாசுதேவன் சாருக்கு நன்றி. ராகவேந்தர் சாருக்கு நன்றி. நான் பொதுவாக சுவாமிக்கு நன்றி கூறுவதில்லை. காரணம் அதையேதான் தினசரி செய்து கொண்டிருக்க வேண்டும். அது மட்டுமல்ல சுவாமியுடன் அன்றாடம் உரையாடுபவன் என்ற முறையில் what Swami is capable of என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் சில நேரங்களில் எனது கணிப்பையும் மீறி சுவாமி சில ஆச்சரியங்களை அளிப்பார். அப்படிப்பட்ட ஒன்றுதான் பேசும்படம் பீம்சிங் பேட்டி அழகான நேர்முக வர்ணனையோடு இன்றைக்கு மிக சரியாக 50 வருடங்களுக்கு முன் இதே நாளில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை காணும் போது மனதில் ஒரு nostalgic feeling. நன்றி சுவாமி!

    பாலும் பழமும் படத்திற்கு மனதில் ஒரு தனி இடம் உண்டு. அந்த வருடம் வெளியான மூன்று பா வரிசை படங்களில் பாலும் பழமும் படமும் சரி, நடிகர் திலகத்தின் பாத்திரப் படைப்பும் சரி class என்று சொல்வோமே அந்த வகையில் அமைந்திருக்கும். அவரது நடிப்பை பற்றி சொல்ல ஆரம்பித்தால் முதலில் மருத்துவமனையில் நடந்து வரும் ஸ்டைல், நர்ஸ் சாந்தியின் அறிவு, அவரது தொழில் பக்தியை கவனிப்பது, அவர் மேல் உண்டாகும் பரிவு, ஒரு நாள் கிளம்புவதற்கு நேரமாகிவிட, shall I drop you, if you dont mind? என்று கேள்வி கேட்கும் நேர்த்தி, நான் பேச நினைப்பதெல்லாம் பாடலில் வெறும் ஹம்மிங்கிலேயே அசத்துவது, அதிலும் குறிப்பாக இரண்டாவது சரணத்தில் ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே! உயிர் சேர்ந்த பின்னே என்ற வரியை சரோஜாதேவி பாடியவுடன் ஊஹுகும் என்ற ஹம்மிங்க்கு வாயசைத்தவாறே அந்த இடது புருவத்தை மட்டும் ஏற்றி இறக்குவாரே, ஆஹா!, அது மட்டுமா?

    அது போல மாலையில் சீக்கிரம் வருகிறேன் என்று மனைவியிடம் சொல்லும்போது மனைவியை டா போட்டு பேசுவார். இன்றைக்கு பெண்களை பார்த்து ஆண்கள் மிகவும் common ஆக உபயோகிக்கும் இந்த வார்த்தையை 50 வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்து வைத்தவர் நடிகர் திலகம். சோகத்தின் கனம் முகத்தில் தெரிய மனைவியை சக்கர நாற்காலியில் வைத்து தள்ளிக் கொண்டே பாலும் பழமும் கைகளில் ஏந்தி என்று பாடும் அந்த பாவம் [13 வருடங்களுக்கு பின்னால் அதே போல் ஒரு காட்சியமைப்பு என்றாலும் கூட சுமைதாங்கி சாய்ந்தால் பாடலில் சோகத்திலும் ஒரு கம்பீரத்தை காட்டி அந்த மாறுபாட்டை வெளிப்படுத்துவார். என்ன இருந்தாலும் அது எஸ்.பி. சௌத்ரி அல்லவா!]. படத்தின் உயிர்நாடியான பாடலைப் பற்றி சொல்லவே வேண்டாம். அந்த மலை பாதையில் அந்த நடை! அந்த முகம்!

    கண் பாதிக்கப்பட்டு முடிந்து கட்டோடு படுத்திருக்க அப்போது நர்சாக சேரும் சரோஜாதேவியின் குரல் கேட்டு சாந்தி என்று எழுந்திருப்பாரே! எப்படி அதை வர்ணிப்பது? அந்த நேரத்தில் விரித்து வைக்கப்பட்டிருக்கும் அவரது இரண்டு கால்களுக்கு நடுவில் காமிரா கோணம் வைக்கப்பட்டு படமாக்கப்பட்டிருக்கும் அழகை என்னவென்று சொல்வது?என்னை யாரென்று பாடல் மட்டும் குறைந்ததா என்ன? சரோஜாதேவி கையைப் பிடித்துக் கொள்ள வேகமாக நடக்கும் அந்த நடை! இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

    படத்தில் போனால் போகட்டும் போடா பாடலின் அதே உயரத்திற்கு வரும் ஒரு பாடல் இருக்கிறது. காதல் சிறகை காற்றினில் விரித்து பாடல். மன்னர்கள், கவியரசர், இசையரசி மூவர் கூட்டணி அந்த பாடலை எங்கேயோ கொண்டு போய் விடுவார்கள்.

    முதல் நாள் காணும் திருமணப் பெண் போல்
    முகத்தை மறைத்தல் வேண்டுமா
    முறையுடன் மணந்த கணவன் முன்னால்
    பரம்பரை நாணம் போகுமா


    என்ற வரிகளும் சரி அதற்கு பிறகு வரும்

    பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது
    அழுதால் கொஞ்சம் நிம்மதி
    பேச மறந்து சிலையாய் நின்றால்
    பேச மறந்து சிலையாய் நின்றால்
    அதுதான் தெய்வத்தின் சன்னதி
    அதுதான் காதல் சன்னதி


    என்று சுசிலா பாடும் போது அதிலும் குறிப்பாக காதல் சன்னதி என்ற வார்த்தையை அவர் உச்சரிக்கும் விதம் இருக்கிறதே காதலிக்காதவர்களை கூட காதலின் பால் ஈர்த்துவிடும்! அந்த வரி முடிந்தவுடன் ஒரு ஹம்மிங் வரும் அதை சுசிலா பாடியிருப்பதை கேட்கும் போது இதை விட இனிமை வேறு உண்டா என்று தோன்றும். இந்த இடத்தை குறிப்பிட்டு வைரமுத்து சொல்வார். அந்த ஹம்மிங்கை கேட்கும் போதெல்லாம் என் உயிர் கூட்டை விட்டு பறந்து போய் விட்டு ஹம்மிங் முடிந்தவுடன் மீண்டும் உடலில் வந்து உட்கார்ந்து கொள்ளும் என்பார்.

    தினசரி அருந்தினாலும் உட்கொண்டாலும் எப்படி பாலும் பழமும் நமக்கு அலுப்பதில்லையோ அது போலதான் பாலும் பழமும் படத்தை எத்தனை முறை பார்த்தாலும் அதை பற்றி பேசினாலும் நமக்கு அலுப்பதில்லை.

    அன்புடன்

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7
    By saradhaa_sn in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1982
    Last Post: 22nd May 2011, 07:39 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 5
    By Murali Srinivas in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1490
    Last Post: 4th February 2010, 02:35 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 4
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1478
    Last Post: 17th November 2008, 09:45 AM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 2)
    By NOV in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1470
    Last Post: 2nd July 2007, 09:40 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •