-
20th August 2011, 07:34 PM
#1141
Junior Member
Senior Hubber
Sorry friends. iwas not able to contact you because of technical problems. REGARDING THE DISCUSSIONS ON KB ISSUE. FRIENDS HAVE ENLIGHTENED THE FACTS VERY WELL. IT IS UPTO HAMSADWANI TO REGRET FOR THE HAPPENINGS. ONE THING EVEN THOUSANDS OF KB COMES NT WILL SWALLOW THEM IN SINGLE ACTION THIS FACTS EVERY BODY KNOWS VERYWELL MOULDING IS NOT NECESSARY FOR NT NECESSARY FOR KB
-
20th August 2011 07:34 PM
# ADS
Circuit advertisement
-
20th August 2011, 09:22 PM
#1142
Senior Member
Seasoned Hubber
MOULDING IS NOT NECESSARY FOR NT NECESSARY FOR KB
Well said Ramajayam Sir.
Raghavendran
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
20th August 2011, 09:22 PM
#1143
Senior Member
Seasoned Hubber
டியர் பம்மலார்,
என் மகன் என்று நடிகர் திலகம் கொஞ்சும் அளவிற்கு அவர் மேல் தாங்கள் வைத்துள்ள பாசம், பக்தி அனைத்தும் நெஞ்சை நெக்குருக வைக்கின்றன. பாராட்டுக்கள்.
அன்புடன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
20th August 2011, 09:23 PM
#1144
Senior Member
Seasoned Hubber
என் மகன் படப் பூஜையைப் பற்றி பொம்மை மாத இதழில் வெளிவந்த செய்திப் படம்
மேலே உள்ள படத்தில் காமிராவின் அருகில் நிற்பவர் ஒளிப்பதிவாளர் மஸ்தான். முடுக்கி வைப்பவர் பாலாஜியின் மகள், பெயர் சுஜாதா என்று நினைக்கிறேன்.
தொடரும்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
20th August 2011, 09:27 PM
#1145
Senior Member
Seasoned Hubber
படம் வளரும் செய்திப் படங்கள்
தொடரும்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
20th August 2011, 11:04 PM
#1146
Senior Member
Diamond Hubber
டியர் பம்மலார் சார்,
'என் மகன்' 38வது ஜெயந்தி தினத்தை ஒட்டி தாங்கள் வெளியிட்டுள்ள பேசும் படம் முதல் வெளியீட்டு விளம்பரம், மற்றும் தினத்தந்தி 100வது நாள் விளம்பரம் இரண்டுமே அற்புத பொக்கிஷங்கள். அளித்தமைக்கு நன்றி.
டியர் ராகவேந்திரன் சார்,
என் மகன் படப் பூஜையைப் பற்றி பொம்மை மாத இதழில் வெளிவந்த செய்திப் படம் அசத்துகிறது. அபூர்வமான, காணக் கிடைக்காத புகைப்படங்கள். 'என் மகன்' வளரும் போது வந்த செய்திப் படங்களும் அற்புதம்.
நன்றிகள் சார்..
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்..
Last edited by vasudevan31355; 20th August 2011 at 11:12 PM.
-
21st August 2011, 12:09 AM
#1147
Senior Member
Diamond Hubber
நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா?
"நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்?"....
மனசாட்சி இல்லாத மனிதர்களைப் பார்த்து
நடிகர் திலகம் கேட்கிறார்...முடிந்தால் மனசாட்சி உள்ளவர்கள்
பதில் சொல்லட்டும்....
அன்பு நெஞ்சங்களே,
'என்மகன்' 38வது ஜெயந்தியை முன்னிட்டு நடிகர் திலகத்தின் அற்புத அங்க அசைவுகளில்.... இதோ..
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.
Last edited by vasudevan31355; 21st August 2011 at 12:15 AM.
-
21st August 2011, 12:42 AM
#1148
காளிதாசனின் புகழ் பாடிய ராகவேந்தர் சாருக்கும் வாசுதேவன் சாருக்கும் நன்றி.
என் மகன் விளம்பரம் கண்டவுடன் சில பல நினைவுகள். தங்கப்பதக்கம் மிக நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் போது இந்தப் படம் வெளியாகிறதே என்று ஓர் எண்ணம். இருந்தாலும் ஆகஸ்ட் 15 -ஐ எதிர்பார்த்திருக்கும் போது தமிழ் திரையுலக வரலாற்றிலே அது வரை கண்டிராத ஒரு வேலை நிறுத்தம். அன்றைய ஆட்சியாளர்களின் அடக்குமுறையை எதிர்த்து நடந்த போராட்டம். தனிப்பட்ட கோவத்தை தீர்த்துக் கொள்ள திரைப்படங்களுக்கு 70 சதவீதம் கேளிக்கை வரி விதிக்கப்பட அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகமெங்கும் இயங்கிக் கொண்டிருந்த அனைத்து திரை அரங்குகளும் ஆகஸ்ட் 15 முதல் மூடப்பட்டன. அன்றைய நாளில் தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக இருந்த நடிகர் திலகம் அவர்களின் தலைமையில் கூடிய திரையுலக அமைப்புகள் வேலை நிறுத்தம் செய்வதென முடிவு எடுத்து அதை நடை முறைப்படுத்தியது.
இதன் மூலம் அரசாங்கத்திற்கு எந்த முதலீடுமில்லாமல் வந்து கொண்டிருந்த வரி வருமானம் நின்று போகவே அதிர்ந்து போன அரசு திரையுலக அமைப்புகளை பேச்சு வார்த்தைக்கு அழைத்தது. நடிகர் சங்கம் சார்பில் நடிகர் திலகமும் கலந்து கொண்டார். அரசு எந்திரத்தை கண்டு அஞ்சாமல் அமைப்புகள் உறுதியாக இருப்பதை உணர்ந்த அரசு கூட்டிய வரி விகிதத்தை குறைத்து தான் அறிவித்த அரசாணையை திரும்பப் பெற்றது. 5 நாட்கள் நடைபெற்ற வேலை நிறுத்தம் விலக்கி கொள்ளப்பட்டு ஆகஸ்ட் 20 அன்று திரையரங்குகள் இயங்க ஆரம்பித்தன.
ஆகஸ்ட் 15 ந் தேதி வெளியாக வேண்டியிருந்த என் மகன் இதன் காரணம் ஆகஸ்ட் 21 புதனன்று நியூசினிமாவில் ரிலீஸ் ஆனது. முதன் முறையாக மதுரையில் நான்கு காட்சிகள் முறையே 1,4,7,10 மணிக்கு நடைபெற்றது. இது முதல் மூன்று நாட்களுக்கு இப்படி தொடர்ந்து பின் சனி ஞாயிறு வழக்கம் போல் காட்சிகள் நடைபெற்றன. சிறப்பான வெற்றியைப் பெற்ற என் மகன் மதுரையில் 100 நாட்களை நிறைவு செய்தது. இதன் மூலம் மதுரை மாநகரில் மீண்டும் தொடர்ந்து மூன்று படங்கள் 100 நாட்கள் கடந்து ஓடும் சாதனையை நடிகர் திலகம் புரிந்தார். முதலில் வாணி ராணி அடுத்தது தங்கப்பதக்கம் பிறகு என் மகன்.
என் மகனை பொறுத்தவரை மறக்க முடியாத மற்றொரு அம்சமும் உண்டு. 37 வருடங்கள் கடந்து விட்டன, எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன. இருப்பினும் பொய்க்காத கவிஞனின் வாக்கும் அதற்கு திரையில் உருவம் கொடுத்த உண்மையே பேசிய கலைஞனின் குரலும் அன்றைய இன்றைய சூழலுக்கும் எத்தனை அழகாய் பொருந்துகிறது.
சட்டத்தின் பின்னால் நின்று சதிராடும் கூட்டம்
தலை மாறி ஆடும் இந்த அதிகார ஆட்டம்
என்றைக்கும் மேலிடத்தில் இவர் மீது நோட்டம்
இப்போது புரியாது எதிர்காலம் காட்டும்
நாடக வேஷம் கூட வராது
நாளைய உலகம் இவரை விடாது சொல்கின்றேன்.
பல நாள் திருடன் ஒரு நாள் சிறையில்
பாவம் செய்தவன் தலைமுறை வரையில் பார்க்கின்றேன்.
அன்புடன்
-
21st August 2011, 01:39 AM
#1149
Senior Member
Veteran Hubber
டியர் mr_karthik,
பாராட்டுக்கு நன்றி ! தாங்கள் குறிப்பிட்டது போல் சென்னை 'தேவிபாரடைஸ்' திரையரங்கில் "என் மகன்", 21.8.1974 புதன் முதல் 12.11.1974 புதன் வரை 84 நாட்கள் ஓடிய பெருவெற்றிக்காவியம். 13.11.1974 தீபாவளியன்று "அன்பைத் தேடி" ரிலீஸ்.
ஓடும் படத்திற்காக வரும் படத்தை நாம் எப்பொழுதுமே நிறுத்தி வைத்ததில்லையே !
அன்புடன்,
பம்மலார்.
-
21st August 2011, 01:45 AM
#1150
Senior Member
Seasoned Hubber
டியர் முரளி சார்,
சத்தியமான வார்த்தைகளை உரைப்பதும் அந்த சத்தியமான வாக்குகள் பலிப்பதும் ஒரு சத்தியமான மனிதனால் தான் முடியும். அது நடிகர் திலகத்தைத் தவிர வேறு யாரால் இருக்க முடியும். இந்த வரிகளை உச்சரிக்கும் தகுதி இன்றைக்கு யாருக்கு உள்ளது.... தேடணும்... தேடணும்.... தேடிக் கொண்டே இருக்கணும்....
அன்புடன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks