நடிகர்திலகமும் நாட்டுப்பற்றும் இரண்டறக் கலந்தவை என்பதற்கு ராகவேந்தர் சார் தொகுத்திருக்கும் திரைப்படக் 'கிளிப்பிங்' களே சிறந்த எடுத்துக்காட்டு. அதை அழகாக தொகுத்து தந்த பம்மலார் சாருக்கு நன்றிகள்.
சாந்தி திரையரங்கில் ராஜபார்ட் ரங்கதுரை பவனிவர இருப்பது தித்திக்கும் செய்தி. ஐந்தாம் தேதியன்று விழாவை அனுபவிக்க இருக்கும் நண்பர்கள் மீது இப்போதே பொறாமை ஏற்படுகிறது.
நடிகர் திலகத்தின் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்ற திரைப்படமான பாலாடை, மற்றும் நீண்ட நாட்களுக்குப் பின்னர் ராஜகணபதி பிக்சர்ஸ் தயாரித்த தராசு இரு படங்களும் நெடுந்தகடு வடிவில் வெளிவந்துள்ளன. விரைவில் அவற்றின் படங்களை இங்கு பதிவேற்ற முயல்கிறேன்.
அன்புடன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் நல்கிய சகோதரி சாரதா மற்றும் கார்த்திக் மற்றும் நண்பர்களுக்கு என் உளப்பூர்வமான நன்றிகள்.
அன்புடன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
டியர் எழுத்து வேந்தர் பம்மலார்,
ராமருக்கு அணில் போன்று நம்முடைய நடிகர் திலகத்திற்கு முடிந்த அளவில் சிறு பங்காற்றக் கிடைத்த பெரும் பேறை எண்ணி உவகை கொள்வதற்கு முன், மேலும் மேலும் சிறப்புகளை அலசிக் கூறி, மகிழ்வை அதிகப் படுத்திவிட்டீர்கள். ஆனால் இவையெல்லாமே அந்த மஹானுக்கே அர்ப்பணம். அது மட்டுமன்றி, அந்த நிகழ்ச்சிக்கு நேரில் வராதவர்கள் அதை உணரா வண்ணம், தங்களுடைய எழுத்து நேரலை போல் கண்முன்னே காட்சியை விரிக்கிறது. பாராட்டுக்கள்.
டியர் சதீஷ் மற்றும் ராகேஷ்,
ருஷ்ய மய்யத்தில் நடைபெற்ற ஒளிக்காட்சித் தொகுப்பு இணையத்திற்கேற்றவாறு சற்று மாற்றம் செய்யப் பட வேண்டியுள்ளது. அப்பணியில் தற்சமயம் ஈடுபட்டுள்ளேன். முடிந்ததும் விரைவில் இங்கு பார்வைக்கு அளிக்கப் படும்.
அன்புச் சகோதரி சாரதா,
நடிகர் திலகத்தின் பால் உள்ள பற்றைத் தொடர்ந்து வெளிக்காட்டி. தங்கள் பாசப் பகிர்வை இங்கு அளித்து வருதற்கு என் உளமார்ந்த வாழ்த்துக்கள், பாராட்டுக்கள், நன்றிகள்.
அன்புடன்
ராகவேந்திரன்
Nantri Ragavendran sir, waiting for your vidoes....
டியர் பார்த்தசாரதி,
ஒவ்வொரு பாடலுக்கும் தங்களுடைய ஆழமான ஆய்வுபூர்வமான அலசல், பல புதிய கோணங்களில் நடிகர் திலகத்தின் நடிப்பாற்றலை வெளிக்கொணர்கிறது. தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள். இதே போல் தாங்கள் விரும்பிய காட்சிகளையும் இங்கு எதிர்பார்க்கிறோம்.
அன்புடன்
பம்மலார் & ராகவேந்திரன்
அன்புள்ள திரு. ராகவேந்தர் அவர்களே,
தங்களுடைய மனப்பூர்வமான பாராட்டுகளுக்கு என் மனமார்ந்த நன்றி.
இந்தக் கட்டுரைகள் முடிந்தவுடன் "காட்சிகளைப்" பற்றிய பதிவினை கண்டிப்பாக எழுதுவேன்.
நான் எழுதுவது என்னுடைய ஆத்ம திருப்திக்கும் இன்றைய/நாளைய தலைமுறையினருக்கு நடிகர் திலகத்தின் சிறப்பைக் கொண்டு செல்ல ஒரு அணிலின் முயற்சிதான் என்றாலும், தங்களைப் போன்றவர்களின் பாராட்டுக்கள் என்னைப் போன்றவர்களை மேலும் மேலும் எழுத ஊக்குவிக்கும்.
தங்களுடைய பல்வேறு பதிவுகள், "பட்டாக்கத்தி பைரவன்" படப் பாடலையும் சேர்த்து, மிகவும் அருமை. மேலும் மேலும் எதிர்பார்க்கிறோம்.
சென்னை சாந்தி திரையரங்கில் வரும் வெள்ளிக் கிழமை 03.06.2011 முதல் தினசரி 3 காட்சிகளாக வெற்றித் திலகத்தின் உன்னதத் திரைக்காவியம்
ராஜபார்ட் ரங்கதுரை
கொஞ்ச நஞ்சம் காமராஜரிடம் பாசம் மிச்சம் வைத்திருக்கும் கதர்ச் சட்டைக்காரர்கள் இந்த சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி தேசபக்தர்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
அன்புடன்
டியர் ராகவேந்தர் சார்,
மிக நல்ல செய்தி!!! வரும் ஞாயிறு நாம் அனைவரும் சந்திப்போம்
Dear friends,
Let us assemble again at Shanthi this Sunday evening to have dharshan of NT.
'மலர்ந்தும் மலராத பாதி மலரை, பொன்னொன்று கண்டேன்' என்று வியந்து நோக்கும் போது, அது நம்மை நோக்கி 'நலந்தானா' என்ற விசாரித்தால் எத்தகைய அதிசயமும், ஆச்சரியமும், இன்பமும், உவகையும் மேலிடுமோ அத்தகைய அனைத்தும் தங்கள் பாடல் பதிவுகளில் பரிமளிக்கின்றன.
இந்தப் பாடல்கள் எல்லாம் அன்றே பதிவாகி(Record) விட்டன. மீண்டும் இவற்றை அதன் ஒரிஜினாலிடியோடு கனக்கச்சிதமாக தாங்கள் பதிவு(Post) செய்வது என்ன அற்புதமான ரீமிக்ஸ்.
ரீமிக்ஸ் செய்பவர்கள் தங்களிடம் பாடம் படிக்க வேண்டும் !
தாங்கள் பார்த்தசாரதி மட்டுமல்ல, பாராட்டுக்கென்றே பிறந்த சாரதி !
வாழ்க தங்களின் திருத்தொண்டு !
அன்புடன்,
பம்மலார்.
அன்புள்ள திரு. பம்மலார் அவர்களே,
தங்களுடைய உணர்வுபூர்வமான பாராட்டுகளைப் படித்தவுடன் ஒருவித நெகிழ்ச்சி கலந்த கூச்சம் வந்து விட்டது.
ருஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்ற நடிகர் திலகத்தின் படங்களில் இடம் பெற்ற சுதந்திரப் போராட்ட சம்பவங்கள் மற்றும் தேசியவாதத்தைப் பற்றிய குறும்படம் மற்றும் நிகழ்வுகளைப் பற்றிய தங்களுடைய நீண்ட அற்புதமான பதிவினைப் படித்தவுடன் எனக்குத் தோன்றியது - வர்ணனையில் தாங்கள் கூத்தபிரானையும் மிஞ்சி விட்டீர்கள் என்றே தோன்றுகிறது.
அன்புடன்,
பார்த்தசாரதி
Last edited by parthasarathy; 3rd June 2011 at 12:08 PM.
தங்களின் கைவண்ணத்தில் 'பொன்னொன்று கண்டேன்' மற்றும் 'மலர்ந்தும் மலராத' பாடல்களின் திறனாய்வுகள் அருமையோ அருமை. முதல் படலை அலசியவர்கள் மிகவும் குறைவு. தற்போது அந்தக்குறை தெரியாவண்ணம் ஒவ்வொரு அசைவையும் அழகாக பதிவு செய்துள்ளீர்கள். இது எந்த அளவுக்கு சாகவரம் பெற்ற பாடல் என்பதற்கு உதாரணம், கலைஞர் தொலைக்கட்சியில் நடைபெற்றுவரும் 'பாடவா டுயட் பாடலை' என்ற போட்டி நிகழ்ச்சியில் இவ்வாரம் ஆணும் ஆணும் அதுபோல பெண்ணும் பெண்ணும் இனைந்து படும் பாடல்களை போட்டியாளர்கள் பாடினர். அதில் இரண்டு இளைஞர்கள் இப்பாடலை சிறப்பாக பாடினார்கள். அப்போது விளம்பர இடைவேளையின்போது வேறு சேனலில் என்ன நிகழ்ச்சிஎன்று பார்க்க மாற்றியபோது ஆச்சரியம், ஒரு சேனலில் (படத்தில் இடம்பெற்ற) இப்பாடல் காட்சியே ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. நடிகர்திலகமும் பாலாஜியும் பாடிக்கொண்டிருந்தனர். அதற்கு முன்புதான் உங்களது இந்த ஆய்வுக்கட்டுரையையும் படித்திருக்க என்ன ஒரு கோர்வையான நிகழ்வு.!!.
'மலர்ந்தும் மலராத' பாடல் ஆய்வைப்பொருத்தவரையில், வாராவாரம் வெள்ளிக்கிழமை வருவதுபோல, வருடாவருடம் தீபாவளி வருவது போல கொஞ்ச நாளைக்கு ஒரு முறை யாராவது இப்பாடலை ஆய்வு செய்துகொண்டிருப்பார்கள். ஒவ்வொரு ஆய்வின் போதும் புதுப்புது செய்திகள், நுணுக்கங்கள் நம்மை ஆச்சரியப் படுத்தும். இப்போது உங்கள் ஆய்வும் அப்படியே.
சில மாதங்களுக்கு முன் 'பாடல்கள் பலவிதம்' பகுதியில் முரளியண்ணா இப்பாடலை ஆய்வு செய்யும் முகத்தான், பாசமலர் படம் உருவான விதம் குறித்தே பல்வேறு அபூர்வ தகவல்களோடு அசத்தினார். இப்படத்தின் பூஜையில் இருந்து அல்ல, இப்படம் தயாரிக்கலாமா என்று யோசிக்கத் துவங்கியதில் இருந்து வெள்ளிவிழா கேடயம் வழங்கப்பட்டது வரையில் பெரிய சரித்திரத்தையே தந்து அசத்தியிருந்தார். இப்போது நீங்களும் பாடலை புதிய கோணத்தில் ஆராய்ந்து ஒரு அருமையான பதிவை தந்து மகிழ்வித்து விட்டீர்கள்.
பாராட்டுக்கள்.. வாழ்த்துக்கள்..
அன்புள்ள சாரதா மேடம் அவர்களே,
தங்களுடைய மனப்பூர்வமான பாராட்டுகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
உங்களைப் போன்றவர்களுடைய பாராட்டுகள் என்னை மேலும் சிறப்பாக எழுத ஊக்குவிக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
Bookmarks