-
15th August 2010, 03:39 AM
#101
Senior Member
Veteran Hubber
வசூல் சக்கரவர்த்தி - 3
[மதுரையம்பதி புள்ளி விவரம்]
[திரைக்காவியம் - வெளியான தேதி - திரையரங்கம் - ஓடிய நாட்கள் - மொத்த வசூல்(ரூ.- பை.)]
1. வீரபாண்டிய கட்டபொம்மன் - 16.5.1959 - நியூசினிமா - 181 நாள் - 2,77,365-71
2. கப்பலோட்டிய தமிழன் - 7.11.1961 - ஸ்ரீதேவி - 68 நாள் - 98,371-38
அன்புடன்,
பம்மலார்.
-
15th August 2010 03:39 AM
# ADS
Circuit advertisement
-
15th August 2010, 03:51 AM
#102
Senior Member
Veteran Hubber
"சுதந்திர பூமியின் பல வகை ஜனங்களும் தோட்டத்தில் மலர்ந்த மலர்கள்!
தோட்டத்து மலர்களின் ஆயிரம் நிறங்களும் ஜனங்களின் ஆயிரம் குணங்கள்!"
நாளை 15.8.2010, நமது பாரத புண்ணிய பூமியின் 64வது சுதந்திர தினம்!
அனைவருக்கும் ஆத்மார்த்தமான சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
வந்தே மாதரம்! ஜெய்ஹிந்த்!
பக்தியுடன்,
பம்மல் ஆர்.சுவாமிநாதன்.
-
15th August 2010, 09:29 AM
#103
Senior Member
Seasoned Hubber
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்
என்றொரு காலம் ஏங்கியதுண்டு (15.08.1947)
அன்று கிடைத்தது பதிலொன்று
இன்று எவரும் போற்றிப் புகழும்
விடுதலை நாள் வந்ததென்று
...
பெற்ற விடுதலையைப் பேணிக் காக்க
நம்முடைய தாரக மந்திரமாவது
முரளி சார் சொன்னது போல்
இந்திய நாடு என் வீடு
இந்தியன் என்பது என் பேரு
அனைவருக்கும் விடுதலை நாள் வாழ்த்துக்கள்
அன்புடன்
ராகவேந்திரன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
15th August 2010, 03:02 PM
#104
Senior Member
Diamond Hubber
Veerapandiya Kattabomman on Raj TV - Kids who preen about intensity of Pacino need to watch what Sivaji does here. This Lion can't be tamed
Sivaji = Dictionary/Encyclopedia of Acting styles
...an artist without an art.
-
15th August 2010, 03:03 PM
#105
Senior Member
Diamond Hubber
Legendary control of language and diction.
...an artist without an art.
-
16th August 2010, 02:52 AM
#106
Senior Member
Veteran Hubber
சுதந்திரத் திருநாளன்று/திருநாளையொட்டி வெளியான தேசிய திலகத்தின் திரைக்காவியங்கள்
1. சாரங்கதரா - 15.8.1958
2. ராமன் எத்தனை ராமனடி - 15.8.1970
3. மூன்று தெய்வங்கள் - 14.8.1971
4. எழுதாத சட்டங்கள் - 15.8.1984
5. முதல் மரியாதை - 15.8.1985
6. அக்னி புத்ருடு(தெலுங்கு) - 14.8.1987
7. முதல் குரல் - 14.8.1992
குறிப்பு:
1. முதல் மரியாதை வெள்ளிவிழாக் காவியம்.
2. ராமன் எத்தனை ராமனடி மற்றும் அக்னி புத்ருடு(தெலுங்கு) ஆகியவை 100 நாள் பெரு வெற்றிக்காவியங்கள்.
3. மூன்று தெய்வங்கள் ஷிஃப்டிங் முறையில் 100 நாள் ஓடிய சிறந்த வெற்றிக்காவியம்.
சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு நிரந்தர சக்கரவர்த்தி சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே!
அன்புடன்,
பம்மலார்.
-
16th August 2010, 03:03 AM
#107
Senior Member
Veteran Hubber
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 107
கே: "சிவந்த மண்" படத்தில் நீங்கள் அதிகம் ரசித்த காட்சி எது? (வாழவல்லான் ஜெயா, திருச்சி - 1)
ப: நண்பர்களின் சோதனைக்கு இலக்காகி, கதாநாயகன் பாரத், தன் காதலியையே சுடப்போகிறானே அந்தக் காட்சி. விடுதலை வீரனின் பெருமையை அந்தக் காட்சி விளக்குகிறது.
(ஆதாரம் : பேசும் படம், ஏப்ரல் 1970)
அன்புடன்,
பம்மலார்.
-
17th August 2010, 11:10 PM
#108
Senior Member
Devoted Hubber
மகேஷ்,
படங்களின் வெற்றி தோல்வியில் பெரும்பங்கு வகிக்கும் பொது மக்கள் அந்த நடிகரின் அரசியல் நிலைப்பாடுகளை வைத்து படம் பார்ப்பதில்லை என்பது உண்மை என்றாலும் கூட, எல்லா நேரங்களிலும் அது சரியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அன்பே ஆருயிரே, Dr .சிவா, வைர நெஞ்சம் போன்றவற்றிற்கு அது பொருந்தும். ஆனால் பாட்டும் பரதமும் மற்றும் உனக்காக நான் படங்கள் வெற்றி பெறாமல் போனதற்கு அரசியல் சூழ்நிலை ஒரு பெரிய காரணம். நடிகர் திலகத்தின் தீவிர ரசிகர்களே அந்தக் காலக்கட்டத்தில் அவர் படங்களை சரியாக ஆதரிக்கவில்லை என்பது நான் நேரில் கண்ட உண்மை. அவர்களெல்லாம் மீண்டும் திரையரங்கிற்கு வர ஆரம்பித்ததே தீபம் படத்திலிருந்துதான்.
சுவாமி சார்,
உங்கள் கருத்தில் மாறுபடுகிறேன்! தீபம் படத்திற்கு முன் வந்த கிரகப்ரவேசம், சத்யம் 100 நாட்கள் ஓடியதே? எல்லாவற்றிக்கும் மேலாக உத்தமன் படம் சில்வர் ஜூப்ளி படமாக ஓடியதற்கும் ரசிகர்கள் தானே காரணம்?
நீங்கள்தான் பதில் சொல்லவேண்டும்
அன்றும் இன்றும் என்றும் நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்
-
17th August 2010, 11:23 PM
#109
Originally Posted by
kid-glove
Legendary control of language and diction.
Thilak,
Good point. This assumes greater importance in the context of NT's modus operandi with regard to dialogue delivery. As everyone knows NT would never read the dialogues from the paper. He would ask the assistant director to read out the dialogue once and would ask him to repeat it for the second time and then would go for the take and there you have the perfect presentation. Right from his early days till the last movie this was the practice. Imagine an actor dishing out the fire spitting dialogues backed by a cracker of a performance such as VPK by just listening to the dialogues!It was genius at his best.
Regards
-
17th August 2010, 11:37 PM
#110
Originally Posted by
J.Radhakrishnan
மகேஷ்,
படங்களின் வெற்றி தோல்வியில் பெரும்பங்கு வகிக்கும் பொது மக்கள் அந்த நடிகரின் அரசியல் நிலைப்பாடுகளை வைத்து படம் பார்ப்பதில்லை என்பது உண்மை என்றாலும் கூட, எல்லா நேரங்களிலும் அது சரியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அன்பே ஆருயிரே, Dr .சிவா, வைர நெஞ்சம் போன்றவற்றிற்கு அது பொருந்தும். ஆனால் பாட்டும் பரதமும் மற்றும் உனக்காக நான் படங்கள் வெற்றி பெறாமல் போனதற்கு அரசியல் சூழ்நிலை ஒரு பெரிய காரணம். நடிகர் திலகத்தின் தீவிர ரசிகர்களே அந்தக் காலக்கட்டத்தில் அவர் படங்களை சரியாக ஆதரிக்கவில்லை என்பது நான் நேரில் கண்ட உண்மை. அவர்களெல்லாம் மீண்டும் திரையரங்கிற்கு வர ஆரம்பித்ததே தீபம் படத்திலிருந்துதான்.
சுவாமி சார்,
உங்கள் கருத்தில் மாறுபடுகிறேன்! தீபம் படத்திற்கு முன் வந்த கிரகப்ரவேசம், சத்யம் 100 நாட்கள் ஓடியதே? எல்லாவற்றிக்கும் மேலாக உத்தமன் படம் சில்வர் ஜூப்ளி படமாக ஓடியதற்கும் ரசிகர்கள் தானே காரணம்?
நீங்கள்தான் பதில் சொல்லவேண்டும்
ராதா,
அதை எழுதியது நான்தான். சுவாமி அல்ல. நீங்கள் கூறுவது போல கிரகப்பிரவேசம் மற்றும் சத்யம் 100 நாட்கள் ஓடியது இலங்கையில்தான். அது போலவே உத்தமன் சில்வர் கொண்டாடியதும் அங்குதான். ஆகவேதான் ரசிகர்கள் அப்படி நடந்துக் கொண்டார்கள் என்று எழுதினேன். அதே நேரத்தில் வேறொன்றும் எழுதியிருக்கிறேன். இப்படிப்பட்ட எதிர்மறையான சூழ்நிலையிலும் மதுரை மட்டுமே நடிகர் திலகத்திற்கு கை கொடுத்தது என்பதையும் குறிப்பிட்டிருக்கிறேன். அதனால்தான் கிரகப்பிரவேசம் மற்றும் உத்தமன் பெரிய வெற்றியை அடைய முடிந்தது.
அன்புடன்
Bookmarks