-
23rd March 2008, 03:25 AM
#501
Senior Member
Devoted Hubber
Originally Posted by
HBK
Originally Posted by
gta129
Abi will be away fro two months, so they might bring Ganga back. After all Ganga was introduced to extend the story while Devvayani was on maternal leave.
drama star panruppa avanga marriage koda pannula-nu nenakuren.. now 2nd child,
She got married a while ago. Way before the serial began.
-
23rd March 2008 03:25 AM
# ADS
Circuit advertisement
-
23rd March 2008, 03:51 AM
#502
Senior Member
Seasoned Hubber
Saradhaa madam, thanks for ur updates, keep posting
Sarva dharman parithyajya mamekam sharanam vraja, aham thva sarvapapebhyo mokshayishyami ma suchaha
-
25th March 2008, 12:58 PM
#503
vanakkam..
enekkum abi character pidikathu...
Iyarkaiyai nesittu paar kavithai varum..
endrendrum anbudan,
Tamizh Penn
-
29th March 2008, 07:21 PM
#504
Moderator
Diamond Hubber
Originally Posted by
Braandan
Can somebody tell me what is the name of the actor who does the role of 'Maddy' ?(Anjali's lover).
Mathan
-
30th March 2008, 01:12 PM
#505
Senior Member
Seasoned Hubber
ANY IMPROVEMENT IN KOLANGAL?
Sarva dharman parithyajya mamekam sharanam vraja, aham thva sarvapapebhyo mokshayishyami ma suchaha
-
30th March 2008, 01:59 PM
#506
Senior Member
Veteran Hubber
அபியும் தொல்ஸும் பேசிக்கொண்டிருந்ததை அரைகுறையாக கேட்ட கிருஷணன், அபியின் இடத்தில் ஆர்த்தி தற்காலிகப் பொறுப்பேற்பது தொல்ஸுக்கு பிடிக்கவில்லையென்று தவறுதலாக ஆர்த்தியிடம் சொல்லி வைக்க. ஆர்த்திக்கு தொல்ஸ் மேல் உள்ளுக்குள் கோபம் வருகிறது. அதை வெளிக்காட்டாமல் தன் நடவடிக்கைகளில் காட்டுகிறாள். தனக்கு கிருஷ்ணன உள்பட அனைவரும் 'மேடம்' என்ற அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்று சட்டம் போடுகிறாள். தொல்ஸை இன்ஸல்ட் பண்ணும் முகமாக, கிருஷ்ணனுக்கு சம்பளம் உயர்த்தி, அவருக்கு தொல்ஸ் கேபினிலேயே டேபிள், சேர் போடுகிறாள்.
இந்நிலையில், ஆதி எப்படி தந்தையின் சொத்துக்கள் முழுவதையும் தன் பெயருக்கு மாற்றினான் என்பதை கிரியின் மூல்மாக தெரிந்துகொண்ட திருவேங்கடம், சதீஷ், அர்ஜுன் மூவரும் பொய்க்கையெழுத்துப்போட்ட குலோத்துங்கன் என்பவனைப்பிடித்து தங்கள் கஸ்டடியில் வைத்து அவனிடமிருந்து உண்மையை வரவழைத்து அதை மொபைல் போனில் பதிவு செய்கின்றனர். ஆக்ரோஷத்துடன் ஆதியைச் சந்தித்த அர்ஜுன், ஆதி செய்த சதிவேலைகள் தங்களுக்கு தெரிந்து விட்டது என்று உண்மையைப் போட்டு உடைக்கின்றான். (இது எதுக்கு தேவையில்லாமல் ஆதியை உஷார் படுத்தும் வேலை?). ஆதி உஷாராகி அர்ஜுனை மடக்க வழியை யோசிக்கிறான்.
தந்திரத்தில் குள்ள நரியான ஆதி, தம்பி அர்ஜுனின் மனைவி ரேகாவை விட்டு அர்ஜுன் மேல் வரதட்சணை கொடுமை கேஸ் பதிவு செய்ய வைக்கிறான். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸ் உஷாவின் வீட்டுக்கு வந்து தேடி விட்டு ஈஸ்வரனையும், உஷாவையும் மிரட்டி விட்டுப்போகின்றனர். அவர்கள் போனதும் உஷா அர்ஜுனுக்கு போன் செய்து விஷயத்தை சொல்லி அவனை போலீஸ் கண்ணில் மாட்டாமல் ஜாக்கிரதையாக இருக்கும்படி எச்சரிக்கிறாள்.
(இந்த இடத்தில் நமக்குத் தோன்றுவது, ரேகாவைக்கொண்டு அர்ஜுன் மேல் வரதட்சனை கொடுமை கேஸை ஆதி பதிவு செய்திருக்கும்போது, அவனை மடக்க உஷாவைக்கொண்டு ஆதியின் மேல் அதே கேஸை பதிவு செய்தால் என்ன?. அர்ஜுன் கைதானால் ஆதியும் கைதாவான் அல்லவா?. அதற்கு பயந்து ரேகாவின் கேஸை வாபஸ் வாங்குவான் அல்லவா?).
சரி, தொல்ஸ் வேறு ஏதாவது ஐடியா வைத்திருப்பார்....
-
30th March 2008, 02:16 PM
#507
Senior Member
Veteran Hubber
வேனில் போகும்போது தன் அண்ணனுக்கு ஆக்ஸிடெண்ட் ஆவதைப்பார்க்கும் ராஜேஷ், அண்ணனுக்கு ஒரு கை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து அவனையும் அவன் குடும்பத்தையும் தன் வீட்டுக்கு அழைத்து வருகிறான். அங்கு தன் மாமியாரும், ராஜேஷும், ஆர்த்தியும் தங்கள் மேல் பாசம் காட்டுவதை உணர்ந்த கலா அதில் நெகிழ்ந்துபோய் அவர்களோடு தங்கிவிட சம்மதிக்கிறாள். மனோ, அவன் மனைவி அனு ஆகியோரும் அந்த வீட்டில்தான் தங்கியிருக்கின்றனர். எப்போ என்ன பூகம்பம் வெடிக்கும் என்பது தெரியவில்லை.
ஐந்துநட்சத்திர ஓட்டல் கட்டுவதற்கு இடம் வாங்க தம்பி ரெட்டியிடம் சென்று அவமானப்பட்டு வந்த மேனகா, இப்போது அண்னன் ரெட்டியை அணுக, விஷயம் தெரிந்த பெரிய ரெட்டி தம்பியை விட காட்டமாக அவளைத்திட்டி அணுப்பிவிடுகிறான். இதனிடையில் பெரிய ரெட்டியின் மகளுடைய காதலனைத் தெரிந்துகொண்ட மேனகா, அவர்களை வைத்து ரெட்டியை மடக்க, அவனுக்கு தன் கம்பெனியில் பெரிய உத்யோகம் தருகிறாள். (கொக்கு தலையில் வெண்ணை வைத்துப்பிடிப்பது என்பது இதுதானோ..!)
("எதிர் கேள்வி கேட்காதே, நான் சொன்னதை செய்" என்ற ஆணவம் கலந்த வசனம் இரண்டு சீரியல்களிலும் மாறி மாறி கேட்கும். ஆம், "அங்கே" அரசி, "இங்கே" மேனகா).
அர்ஜுன் தன்னை எதிர்ப்பதற்கு பக்கபலமாக இருப்பது தன் சித்தப்பா திருவேங்கடம்தான் என்பதையறிந்த ஆதி, அவரை அடித்து நொறுக்க தேவராஜ் பாண்டியன் தலைமையில் அடியாட்களை அனுப்ப, அங்கே திருவேங்கடம் இல்லாததால், போன் பண்ணி கூப்பிடும்படி சாரதாவிடம் மிரட்ட, உடனே சாரதா புத்திசாலித்தனமாக கணவருக்கு போன் செய்வது போல் பேசிக்கொண்டே ஆனந்தியை போனில் அழைத்து விஷயத்தைச்சொல்கிறாள் (சாரதா என்றால் புத்திசாலியாகத்தான் இருக்க வேண்டும் ). உடனே ஆனந்தி மற்றும் தோழர் பாலகிருஷ்ணன் தலைமையில் பத்திரிக்கையாளர்கள், புகைப்படக்காரர்கள் வந்து அங்கு நடப்பதை படம் பிடிப்பதுடன், ஆனந்தியும் தோழரும் அவர்களை மிரட்டி அனூப்பிவிடுகின்றனர்.
தோழரின் இடத்தில் ஆலோசனை செய்யும் ஆனந்தி, சித்தப்பாவையும், எவிடன்ஸான குலோத்துங்கனையும் தோழர் பாதுகாப்பில் விட்டு விட்டு, அர்ஜுனையும் சதீஷையும் அழைத்துக்கொண்டு அபியின் வழக்கறிஞரைப்பார்க்க செல்கிறாள்.
-
30th March 2008, 02:43 PM
#508
Senior Member
Veteran Hubber
பாஸ்கரின் கல்குவாரியின் பழைய மேனேஜர், தன் முதலாளியைக்கொன்றது பாஸ்கர்தான் என்று முதலாளியின் மகள் (பாஸ்கரின் மனைவி) சங்கீதாவிடம் சொல்லப்போக, அதைப்பற்றி பேச்செடுக்கும் சங்கீதா பாஸ்கருக்கு சந்தேகம் வருவதுபோல பேசப்போக, அதுமட்டுமல்லாமல் தங்கள் ஆடிட்டரிடம் தன் பேரிலுள்ள சொத்து விவரங்களை தெரிந்துகொண்டு திரும்பும்போது, பாஸ்கர் அவளைப்பார்த்து விடுகிறான். (அவன் பார்த்தது சங்கீதாவுக்கு தெரியாது). உடனே ஆடிட்டரிடம் சென்று விவரத்தை அறியும் பாஸ்கர், இதற்கெல்லாம் பழைய மேனேஜர்தான் காரணமாக இருக்குமோ என்று சந்தேகித்து, தேவராஜ் பாண்டியனைக்கொண்டு மேனேஜரைத் தூக்கிவந்து செம்மையாக அடித்து, மிரட்டி அனுப்புகிறான். (பாவம் அந்த மேனேஜர். உண்மையைச்சொன்னதற்கு சங்கீதா வாங்கிக்கொடுத்த பரிசு ).
அடுத்த வாரம் பார்ப்போம்.......
-
30th March 2008, 05:43 PM
#509
Moderator
Diamond Hubber
Thank you Saradhaa fpr the whole updates
Originally Posted by
saradhaa_sn
அபியும் தொல்ஸும் பேசிக்கொண்டிருந்ததை அரைகுறையாக கேட்ட கிருஷணன், அபியின் இடத்தில் ஆர்த்தி தற்காலிகப் பொறுப்பேற்பது தொல்ஸுக்கு பிடிக்கவில்லையென்று தவறுதலாக ஆர்த்தியிடம் சொல்லி வைக்க.்....
I thought Krishnan is innocent and good man but ...
Originally Posted by
saradhaa_sn
் (சாரதா என்றால் புத்திசாலியாகத்தான் இருக்க வேண்டும்
). ்.
purikiRathu.....
why so doubt?
-
2nd April 2008, 05:54 AM
#510
Senior Member
Devoted Hubber
Krishnan always starts these problems is office. He did it before too. I just can't remember the exact situation.
Bookmarks