Page 2 of 11 FirstFirst 1234 ... LastLast
Results 11 to 20 of 108

Thread: Vadugapatti Vairamuthu

  1. #11
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    couple of poetry on காதல், காதலன்-காதலி பிரிந்து பின்னாளில் வாழ்க்கையில் சந்திக்கும் போது போன்ற situations etc ..
    ரொம்ப அருமையாக இருக்கும்.

    இப்படி எத்தனை காதல் கதைகளோ...... பெய்யென பெய்யும் மழை புத்தகம்.
    'சிதைந்தது மனது
    கருவேல மரத்தில் சிக்கிய பட்டமாய்...'

    இலையில் தங்கிய துளிகள்....கொஞ்சம் தேநீர் நிறைய வானம் புத்தகம்.

    கவிஞரின் private works ரொம்ப அருமையாக இருக்கும்.

    வைரமுத்துவின் ஆயிரம் பாடல்கள் வாங்கிவிட்டேன், அய்யா.
    I need to organize myself , உக்காந்து படிப்பேன்.

    There is வைரமுத்து கவிதைகள் - பெரிய தடியான 885 பக்கங்கள் உள்ள BOOK FROM EARLY 70S TO LATE 90 .. OH WHAT A FEAST.

    I love it.
    vinatha.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #12
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    ஊழி.

    நிலையாமை ஒன்றே நிலையானது என்பது நிலைத்த உண்மை. ஆனால், இந்தக் கவிதையில் நான் நிலையாமை பேசியிருப்பது மானுடத்தை மாயாவாதத்தில் தள்ள அல்ல. இருக்கும் பூமிக்கு இன்னொரு சிறகு கட்ட; அழிவை உழுது அன்பு விதைக்க.

    கடைசியாய் ஒருமுறை
    கூவிக்கொள்க குயில்களே!

    கடைசியாய் ஒருமுறை
    வான்பாருங்கள் மலர்களே!

    இப்போது வழங்கும் முத்தத்திலிருந்து
    இதழ்பிரிக்காதீர் காதலரே!

    மார்புகுடிக்கும் மழலைகளைத்
    தள்ளிவிடாதீர் தாயர்களே!

    எது நேரக்கூடாதோ
    அது நேரப்போகிறது

    சிறிது நேரம்தான்...
    பூமி சிதறப்போகிறது

    நாலரைக்கோடி ஆண்டுகளின்
    அடையாளச் சின்னம்
    அழியப் போகிறது

    சூரியக்குயவன் செய்த
    பெரிய மண்பானை
    உடையப் போகிறது

    * * * * *
    திட்டுத்திட்டாய் பூமிக்குள்ளிருக்கும்
    தட்டுக்கள் எழும்
    ஒன்றன்மீதொன்று படையெடுக்க...

    பூமியின் வயிற்றெரிச்சலாய்க்
    காலங்காலமாய்க் கனன்றுகிடந்த
    அக்கினிக்குழம்புகள் விடுதலைகேட்க...

    வெறிகொண்ட மேகங்கள்
    விரைவதைப்போலப்
    பாறைகள் பூமிக்குள்
    பயணப்பட...

    தொடங்கிவிட்டது தொடங்கிவிட்டது
    பூமிக்குள் ஒரு குருட்சேத்திரம்

    * * * * *
    பறவைகளுக்கு மூக்குவேர்த்தது
    விலங்குகளுக்கு விளங்கிவிட்டது

    குஞ்சுபிறக்கத் திறக்கும் முட்டைபோல்
    பொத்துக்கொண்டது பூமியின் ஓடு

    ஜீசஸ்! ஈஸ்வரா! அல்லா! முருகா!
    காற்றில் சமாதியாயின கதறல்கள்

    * * * * *
    வான் நடுங்கியது
    பூமியின் இடியில்

    மேகம் நனைந்தது
    கடல்களின் அலையில்

    பூமியின் வயிற்றில்
    புகுந்தன தேசங்கள்

    கடல்களை எரித்தது
    அக்கினிக் குழம்பு

    குன்று பெயர்த்துக்
    கோலி ஆடியது காற்று

    * * * * *
    பாளம்பாளமாய்
    பூமி பிளக்க...

    பூகம்ப அளவை சொல்லும்
    ரிக்டர் வெடிக்க...

    ஊழித்தீயின் உச்சிப்பொறிகள்
    கண்டம் விட்டுக் கண்டம் குதிக்க...

    அவரவர் வீடு அவரவர் கல்லறை

    * * * * *

    மலையைப் பறித்துக் கடலில் எறிந்தது
    மலை பறித்த பள்ளத்தில்
    கடல் அள்ளி ஊற்றியது
    பூகோளம் தெரியாத பூகம்பம்!

    தன் சுற்று வட்டம்
    இடவலமா வல இடமா
    முதன்முதலில் பூமிக்குச் சந்தேகம் வந்தது

    பட்டாசு கொளுத்திய புட்டியாய்
    பூமிப்பந்து பொடியாதல் கண்டு
    விசும்பியது விசும்பு

    எல்லா மேகங்களையும் இழுத்துத்
    தன் ஒற்றைக்கண்ணை மூடிக்கொண்டது

    * * * * *
    பூகோளம் அறியா பூகம்பத்திற்குச்
    சரித்திரம் எங்கேதெரியப்போகிறது

    பிரமிடுகளைப் பிய்த்துப்பிடுங்கி
    மம்மிகளை எல்லாம் வெளியேற்றியது

    உள்ளே
    புதிய பிணங்களைப் போட்டுப்போனது

    பசிபிக்கின் கன்னத்தில்
    மச்சங்களாயிருந்த ஹவாய்த் தீவுகள்
    பருக்காய் உதிர்ந்தனவே!

    மூவாயிரம் ஆண்டு மூத்தமரங்கள்
    வேரில்லாத பென்சில்களாய்
    வீழ்ந்து கழிந்தனவே!

    நிமிர்ந்ததெல்லாம்
    சாய்ந்து போனதில்
    சாய்ந்த ஒன்று நிமிர்ந்துகொண்டது
    பைசா கோபுரம்!

    * * * * *
    அட்லாண்டிக் தூக்கியெறிந்த
    அலையன்று விழுந்ததில்
    சகாப்த உறக்கம் கலைந்தது - சகாரா

    விழுந்த அலை எழுவதற்குள்
    சகாரா பாவம் சமுத்திரமானது

    சீனப் பெருஞ்சுவர் எடுத்துப்
    பாக்குப் போட்டுக்கொண்ட பூகம்பம்
    தாஜ்மகாலைச் சுண்ணாம்பாய்த்
    தகர்த்துக்கொண்டு
    வெற்றிலைபோட ஓடியது
    ஆப்பிரிக்கக் காட்டுக்கு.

    இன்னொரு கிரகம் ஏகக் கருதி
    ஆக்சிஜன் தாண்டிய உயரம் பறந்து
    இறந்து விழுந்தன இந்தியப் புறாக்கள்

    உறுப்புகள் இடம்மாறிப்போன பூமி கேட்டது :
    இது இறப்பா?
    இன்னொரு பிறப்பா?

    * * * * *
    எது நைல்? எது தேம்ஸ்?
    எது கங்கை? எது அமேசான்?
    எது காவிரி? எது வால்கா?
    பிரித்துச் சொல்ல நதிகள் இல்லை
    பெயர்கள் வைத்தவன் எவனுமில்லை

    எது சீனா? எது ரஷ்யா?
    எது இந்தியா? எது அமெரிக்கா?
    எது ஈரான்? எது லெபனான்?
    பிரித்துச் சொல்ல தேசம் இல்லை
    பிரஜை என்று யாருமில்லை

    சுவாசிக்க ஆள்தேடி
    அலைந்தது காற்று

    துள்ள ஒரு மீனில்லை
    துடித்தது அலை

    * * * * *
    வெறுமை...வெறுமை...
    தோன்றியபோது
    தோன்றிய வெறுமை
    மீண்டும் அமீபா...
    மீண்டும் பாரமேசியம்...

    மனிதா!
    வருகின்ற பூகம்பம்
    வரட்டும் என்றாவது

    போர்களை நிறுத்து
    புன்னகை உடுத்து

    பூமியை நேசி
    பூக்களை ரசி

    மனிதரை மதி
    மண்ணைத் துதி
    இன்றாவது.

    * * * * *
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  4. #13
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,160
    Post Thanks / Like

    Re: vairamuthu's freudian slip!

    Quote Originally Posted by geno
    (குறிப்பு: ஏப்பிரல் - மே 2009 -வாக்கில் வைரமுத்துவால் எழுதப்பட்டது - தினத்தந்தியிலும் இக்கவிதை மே 2009 -இல் வெளிவந்தது)

    இனம் தின்னும் ராஜபட்சே
    ---------------------------------

    சொந்தநாய்களுக்குச்
    சொத்தெழுதிவைக்கும் தேசங்களே!
    ஓர் இனமே
    நிலமிழந்து நிற்கிறதே
    நெஞ்சிரங்க மாட்டீரா?

    பூனையொன்று காய்ச்சல் கண்டால்
    மெர்சிடீஸ் கார் ஏற்றி
    மருத்துவமனை ஏகும் முதல் உலக நாடுகளே!

    ஈழத்து உப்பங்கழியில்
    மரணத்தின் வட்டத்தில்
    மனித குலம் நிற்கிறதே!
    மனம் அருள மாட்டீரா?

    வற்றியகுளத்தில் செத்துக்கிடக்கும்
    வாளை மீனைப்போல்
    உமிழ்நீர் வற்றிய வாயில்
    ஒட்டிக்கிடக்கும் உள்நாக்கோடு
    ரொட்டி ரொட்டி ரொட்டியென்று
    கைநீட்டும் விரல்கள்
    கண்குத்தவில்லையோ அமெரிக்க அதிபரே!

    தமிழச்சிகளின் மானக்குழிகளில்
    துப்பாக்கி ஊன்றித் துளைக்கும்
    சிங்களவெறிக் கூத்துகளை
    அறிந்தும் அறியாயோ ஐ.நாவே?

    வாய்வழி புகட்டிய தாய்ப்பால்
    காதுவழி ரத்தமாய் வடிவது கண்டு
    கண்வழி உகுக்கக் கண்ணீரின்றிக்
    கதறும் தாய்மார் மறந்தொழிந்தாயோ
    அழத்தெரியாத ஐரோப்பாவே!

    அடுக்கிவைத்த உடல்களில்
    எந்த உடல் தகப்பன் உடல் என்று தேடி
    அடையாளம் தெரியாத ஒரு பிணத்துக்கு
    அழுது தொலைக்கும் பிள்ளைகளின்
    பெருங்குரல் கேட்டிலையோ பிரிட்டிஷ் அரசே!

    எனக்குள்ள கவலையெல்லாம்
    இனம் தின்னும்
    ராட்சசபக்ஷே மீதல்ல

    ஈழப்போர் முடிவதற்குள்
    தலைவர்கள் ஆகத்துடிக்கும்
    தலையில்லாப் பேர்வழிகள் மீதல்ல

    எம்மைக்
    குறையாண்மை செய்திருக்கும்
    இறையாண்மை மீதுதான்



    குரங்குகள் கூடிக்
    கட்டமுடிந்த பாலத்தை
    மனிதர்கள் கூடிக்
    கட்ட முடியவில்லையே


    ஆனாலும்
    போரின் முடிவென்பது
    இனத்தின் முடிவல்ல

    எந்த இரவுக்குள்ளும்
    பகல் புதைக்கப்படுவதில்லை
    எந்த தோல்விக்குள்ளும்
    இனம் புதைக்கப்படுவதில்லை

    அங்கே
    சிந்திய துளிகள்
    சிவப்பு விதைகள்
    ஒவ்வொரு விதையும் ஈழமாய் முளைக்கும்

    பீரங்கி ஓசையில்
    தொலைந்து போன தூக்கணாங்குருவிகள்
    ஈழப்பனைமரத்தில்
    என்றேனும் கூடுகட்டும்.

    ========================

    சற்றே கூர்ந்து கவனித்தால் தெரியும் - வைரமுத்து, அவருடைய "இனத் தலைவரை" - இதில் விளிக்கவேயில்லை!

    "அவரை" விளிப்பது பொருத்தமில்லை / பயனில்லை என்றுதான் - அய்ரோப்பாவே, அமெரிக்காவே - என்று நன்றாகவே கூவுகிறாரோ?.

    இந்தக் "கிராமத்துப் பறவையை" - சில பல கடல்கள் தாண்டி அழைத்துப் போன ஈழத்தவர்களுக்கு இதுவும் வேண்டும்; இன்னமும் வேண்டும்.

    இவர், முதலில் தனக்கு வழங்கப்பட்ட "பத்ம சிறீ" விருதைத் திருப்பித் தந்துவிடட்டும்; அல்லது இதுபோல மாய்மாலக் கவிதைகள் எழுதாமல் சும்மா கிடக்கட்டும்.

    இவருடைய தலைவருடன் அதிகாலைத் தொலைபேசிப் பொழுது போக்கட்டும்; தமிழர்களை மடையர்களென்று இவர் இன்னமும் நினைக்க வேண்டியதில்லை.

    " தனது லட்சியங்களுக்கு எதிரான திசையில் காலில் குருதி வடிய" (அவருடைய சொல்லாடல்தான்!) ஓடிக்கொண்டிருக்கும் வைரமுத்து - தனது பேனா முனையை ஒடித்து விடுவது நல்லது.

    பாட்டமி? பகுத்தறிவுக்கு இடிக்கிறதே!
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  5. #14
    Senior Member Veteran Hubber jaiganes's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    West Des Moines
    Posts
    3,701
    Post Thanks / Like

    Re: vairamuthu's freudian slip!

    Quote Originally Posted by venkkiram
    Quote Originally Posted by geno
    சற்றே கூர்ந்து கவனித்தால் தெரியும் - வைரமுத்து "அவருடைய இனத் தலைவரை" - இதில் விளிக்கவேயில்லை!

    "அவரை" விளித்து பயனில்லை என்றுதான் - அய்ரோப்பாவே, அமெரிக்காவே - என்று நன்றாகவே கூவுகிறாரோ?.

    இந்தக் "கிராமத்துப் பறவையை" - சில பல கடல்கள் தாண்டி அழைத்துப் போன ஈழத்தவர்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்.

    இவர், முதலில் தனக்கு வழங்கப்பட்ட "பத்ம சிறீ" விருதைத் திருப்பித் தந்துவிடட்டும்; அல்லது இதுபோல மாய்மாலக் கவிதைகள் எழுதாமல் சும்மா கிடக்கட்டும்.

    இவருடைய தலைவருடன் அதிகாலை தொலைபேசி பொழுது போக்கட்டும்; தமிழர்களை மடையர்களென்று இவர் இன்னமும் நினைக்க வேண்டியதில்லை.

    " தனது லட்சியங்களுக்கு எதிரான திசையில் காலில் குருதி வடிய" (அவருடைய சொல்லாடல்தான்!) ஓடிக்கொண்டிருக்கும் வைரமுத்து - தனது பேனா முனையை ஒடித்து விடுவது நல்லது.
    மனதில் கொஞ்சமாவது ஈரம் இருப்பதனாலேயே இப்படிப்பட்ட கவிதைகளை எழுதினார். ஒரு எழுத்தாளர் என்ற முறையில் தன் கோபத்தை எழுத்தில் வடித்திருக்கிறார். இந்த கவிதை மட்டுமல்ல, விடை கொடு எங்கள் நாடே! என்ற ஆயுத எழுத்து படப் பாடலும் உண்டு.

    உங்கள் தார்மீக கோபத்தினை ஈழத்திலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் வாழ்ந்த அப்துல் கலாமிடம் காட்டுங்கள். அரசியல் வாதிகளிடம் காட்டுங்கள். அதை விட்டு கலைஞர்களை, புலவர்களை "விருதுகளை திருப்பிக் கொடுங்கள்!" எனச் சொல்வதில் விவேகமே இல்லை. கமலிடம் இதுபோன்ற ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஒரு பதில் நச்சென்று சொல்லியிருந்தார். இப்போ ஞாபகம் வரமாட்டேஙுது.
    விடை கொடு எங்கள் நாடே, கன்னத்தில் முத்தமிட்டால் படத்துக்கக எழுதப்பட்டது.
    Apparently, a democracy is a place where numerous elections are held at great cost without issues and with interchangeable candidates.
    - Gore Vidal

  6. #15
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    நண்பா உனக்கொரு வெண்பா என்ற தலைப்பில் உயிர்க்கொல்லி நோயாம் எய்ட்ஸ் பற்றி சில வெண்பாக்களை எழுதியிருக்கிறார்.

    *******
    ஊரைக் குடிக்கும் உயிர்க்கொல்லி நோயொன்று
    பாரைக் குடித்துவிடப் பார்க்கிறதே - பாரடா
    வையத்தில் மானுடம் வாழுமோ என்னுமோர்
    அய்யத்தில் உள்ளோம் அடா!
    *******
    போதை மருந்தில் பொருந்தாத இன்பத்தில்
    பாதை வழுவிய பாலுறவில் - காதைக்
    கழுவாத ஊசி கழிவுரத் தத்தில்
    நுழையும் உயிர்க்கொல்லி நோய்!
    *******
    இடைகாட்டி மெல்ல இளைய தனத்தின்
    எடைகாட்டி இன்பம் இழைப்பாள் - மடையா
    கொலைமகள் ஆகியே கொல்லுவாள் உன்னை
    விலைமகள் ஆசை விடு!
    *******
    கண்ணுக்குத் தோன்றாத காமக் கிருமிகளோ
    புண்ணுக்குள் சென்று புலன்கொல்லும் - கண்ணா
    முறையோடு சேராத மோகம் பிறந்தால்
    உறையோடு போர்செய்தே உய்!
    *******
    கரைமீறிச் சேர்ந்தாடும் காமக் கலப்பில்
    உறைமீறி நோய்சேர்வ துண்டே - உறைநம்பிக்
    கம்மாக் கரையோ கடற்கரையோ தேடாமல்
    சும்மா இருத்தல் சுகம்!
    *******
    தோகைமார் தந்த சுகநோயோ உன்கட்டை
    வேகையிலும் விட்டு விலகாதே - ஆகையினால்
    விற்பனைப் பெண்டிரொடு வேண்டாம் விளையாட்டு
    கற்பனையை வீட்டுக்குள் காட்டு!
    *******
    கலவிக்குப் போய்வந்த காமத்து நோயைத்
    தலைவிக்கும் ஈவான் தலைவன் - கலங்காதே
    காவலனாய் வாய்த்தவனே கண்ணகிக்கு நோய்தந்தால்
    கோவலனைக் கூசாமல் கொல்!
    *******
    ஓரினச் சேர்க்கை உறவாலே மானுடத்துப்
    பேரினச் சேர்க்கையே பிய்ந்துவிடும் - பாரில்
    இயற்கை உறவென்னும் இன்பம் இருக்கச்
    செயற்கை உறவென்ன சீ!
    *******
    தேன்குடிக்கப் போன திருவிடத்தில் உன்னுடைய
    ஊன்குடிக்க ஒட்டும் உயிர்க்கொல்லி - ஆண்மகனே!
    உல்லாச நோய்சிறிய ஓட்டையிலும் உட்புகுமே
    சல்லாப வாசலைச் சாத்து!
    *******
    மோகக் கிறுக்கில் முறைதவறிப் போனவர்கள்
    தேகம் இளைத்தபடி தேய்கின்றார் - ஆகப்
    பொறுப்பற்ற வாழ்வில் புகுந்தபலர் இங்கே
    உறுப்பற்றுப் போவார் உணர்!
    *******
    பெண்ணின் சதைமட்டும் பேணுகின்ற ஏடுகளைக்
    கண்ணைக் கெடுக்கும் கலைகளை - இன்றே
    எரியூட்ட வேண்டும் இளைய குலம்வாழ
    அறிவூட்ட வேண்டும் அறி!
    *******
    துணையோடு மட்டும் தொடர்கின்ற வாழ்வுக்(கு)
    இணையாக வேறுமருந் தில்லை - மனைவியெனும்
    மானிடத்து மட்டுமே மையல் வளர்த்திந்த
    மானுடத்தை வாழ்விப்போம் வா!
    *******
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  7. #16
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like

    Re: vairamuthu's freudian slip!

    Quote Originally Posted by jaiganes
    விடை கொடு எங்கள் நாடே, கன்னத்தில் முத்தமிட்டால் படத்துக்கக எழுதப்பட்டது.
    நன்றி. பிழை திருத்தி விட்டேன்.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  8. #17
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    ஒத்தையடிப் பாதையிலே
    ஊர்வலமாப் போறவளே
    வெட்டரிவா வச்சவளே
    விந்திவிந்திப் போறதெங்கே?....

    இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல ...புத்த்கத்திலிருந்து
    ஒரு நாட்டுப்புற கவிதை எனக்கு ரொம்ப பிடித்தமானது.

    I love this collection not only for கவிஞரின் கவிதைகள், it is extra special.

    முன்னுரை, கவிஞரின் மனைவி ரொம்ப அழகாக எழுதி இருக்காங்க.

    அவங்களே பெரிய கவிஞர், எழுத்தாளர்.

    முன்னுரை படிக்கும் போதே அவங்களுக்கு அவங்க கணவரின் மீதான காதல் , பெருமை, admiration பளிச்சுன்னு தெரியும்.

    very intimate & proud thoughts from her heart .

    மனதிற்கு நிறைவான முன்னுரை , எத்தனையோ தடவை நான் முன்னுரை மட்டுமே படித்து , சந்தோஷமா புத்தகத்தை
    மேலேயே வைத்துக்கொண்டு தூங்கிருக்கேன்....beautiful
    I just melt.

    very happy for them .

    love ,
    வினதா.

  9. #18
    Senior Member Veteran Hubber hamid's Avatar
    Join Date
    Jul 2008
    Location
    Doha, Qatar
    Posts
    3,627
    Post Thanks / Like
    last book fairla enakku entha vairamuthu book irukku, ethu illennu kozappama irukkum..

    Thannir desam is the best I have read.. naraiya lines supera irukkum.. like
    "Thanthi vanthaal iranthu pokum uLLangkaL padaiththu vittoom"

    time to recollect and enjoy them..
    Come back strong.. Come back soon..

  10. #19
    Senior Member Veteran Hubber hamid's Avatar
    Join Date
    Jul 2008
    Location
    Doha, Qatar
    Posts
    3,627
    Post Thanks / Like
    காதலிக்கும்போதும் கம்பீரம் குறையாதவன்.
    Come back strong.. Come back soon..

  11. #20
    Senior Member Veteran Hubber hamid's Avatar
    Join Date
    Jul 2008
    Location
    Doha, Qatar
    Posts
    3,627
    Post Thanks / Like
    அவள் மல்லிகைக்கரம் தொட்டு
    மணிக்கட்டில் முத்தமிட்டான்.
    நேசமின்சாரம் நெஞ்சுக்குள் பரவியது
    Come back strong.. Come back soon..

Page 2 of 11 FirstFirst 1234 ... LastLast

Similar Threads

  1. All About Kaviarasu Vairamuthu- The TAMIZH man
    By dinesh2002 in forum Current Topics
    Replies: 20
    Last Post: 13th July 2013, 11:46 PM
  2. IR - Vairamuthu combo
    By Waterloo in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 60
    Last Post: 17th December 2010, 10:34 AM
  3. Vairamuthu badhilkaL in kumudham...
    By app_engine in forum Current Topics
    Replies: 8
    Last Post: 12th February 2008, 04:06 PM
  4. vairamuthu kavithaigaL
    By Roshan in forum Poems / kavidhaigaL
    Replies: 34
    Last Post: 24th July 2005, 07:23 AM
  5. Vaanam chinnathuthaan - Vairamuthu
    By Oldposts in forum Poems / kavidhaigaL
    Replies: 7
    Last Post: 14th November 2004, 12:17 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •