Results 1 to 3 of 3

Thread: Mazhalai

  1. #1
    Junior Member Admin HubberNewbie HubberTeam HubberModerator HubberPro Hubber srijk's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Chennai
    Posts
    12
    Post Thanks / Like

    Mazhalai

    ஆழகிய மாலை

    ஆழகிய மாலை
    என்னவனும் அருகினில்
    புரியாத சிலிர்பு
    ஆடங்ஹாத பூரிப்பு
    இயல்பாக இல்லை நான்
    நிலைகொள்ளாமல் இருந்தது மனம்
    இது நாள் வரை அறிந்திராத ஓர் உணர்வு
    உச்சி முதல் பாதம் வரை படர்ந்திருந்தது
    விளங்காமல் தவித்தேன்
    என்னவனின் அரவனைபில் கிடந்தேன் !!

    எதிர்பாரத நிகழ்வாய்
    உதைத்தது ஒரு கால், என் வயிற்றில் பலமாக
    கத்தினேன் கதறினேன்
    உயிர் பிரியும் வலியால்
    ஆம், பிரிந்தது உயிர் தான்
    என் உயிருடன் கலந்திருந்த உயிர், என்னை பிரிந்து பிறந்தது !!

    அழுகை , கதறல்
    ரசித்து கொண்டிருன்தேன் நான், கண்ணீருடன் !!
    என் கரங்களை நிரப்பினால்
    அழகான எங்கள் தேவதை!!

    மிருதுவான கேசம்
    சீரான நெற்றி
    மொழி பேசும் விழிகள்
    கிளியின் மூக்கு
    சிவந்த அதரங்கள்
    சிறிய காதுகள்
    நீண்ட விரல்கள்
    நேர்த்தியான நகங்கள்
    என்று ரதியின் பிம்பமாய் எங்களின் அவள்!!

    தாயின் உருவம்
    தந்தையின் சாயல்
    தாத்தாவின் பார்வை
    பாட்டியின் சிரிப்பு
    மாமனின் குறும்பு
    அத்தையின் குரல்
    என்று மொத்த குடும்பத்தின் ப்ரதிபலிப்பாய் எங்களின் அவள் !!

    ஆழுகையும் சிரிப்பும் கலந்தது அவள் பாஷை
    மொழிபெயர்பாளர் இன்றி திகைத்திருந்தோம் நாங்கள் !!
    அவளின் கண் அசைவுக்கும், கை அசைவுக்கும்
    ரசிகர்களானோம் !!
    தூங்கிய போதும் தூங்காத அவள் அழகை
    பருகி களித்திருந்தோம்!!

    வசந்தமானது வாழ்க்கை
    எங்கள் தேவதையின் வரவினால்!!

    இந்த பூலோக சொர்கத்தையெல்லாம் தரப்போகும்
    அந்த "அழகிய மாலைக்காக"
    காத்திருக்கும் இருவர்!!

    - ஸ்ரீ

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    21,889
    Post Thanks / Like
    மிகவும் அருமை! வாழ்த்துக்கள்!
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  4. #3
    Devoted Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    33
    Post Thanks / Like
    மகனோ மகளோ பிறக்கும் என் தந்தை முகமாக...

    Atavism என்னும் தலைமுறை தாவும் ஜீனின் செயலைக் கவியரசர் சொன்ன வரி இது ( திரிசூலம்.... மலர் கொடுத்தேன்..)

    தாத்தாவின் பார்வை, பாட்டியின் குறும்பும் அடாவிச எச்சங்கள்.

    வளர்வதும் ஜீன் பிரதி எடுப்பதுமே பிறப்பின் தலையாய நோக்கங்கள்..

    அதற்கான பாதையை அழகாகச் செதுக்கியதில்தான் மனித நாகரீகம் தழைத்தது..

    செதுக்கியதில் இசைக்கும் கவிதைக்கும் முக்கிய பங்குண்டு..

    வாழ்த்துகள் - கவிதைக்கும், மழலைக்கும்!
    நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •