உன்னை காதலிக்கும்
ஒவ்வொரு கணமும்
ஜனனமும் மரணமும்
ஒருசேர நிகழ்கிறது என்னுள்..
ஜனிக்கும் ஒவ்வொரு முறையும்
உன் காதல்
மழை மேகம் படிந்த
சிறு வானவில்லை
எனக்கு பரிசாகத் தரும்..
உபரியாக நீ தரும்
அசரடிக்கும் அன்பு,
சின்ன அனைப்பு,
சிலிர்க்கும் தீண்டல்,
சிரிக்கும் கண்கள்,
சிவக்கும் கன்னம்,
அத்தனையும் சேர்ந்து
சந்தோஷத்தில் சாகடிக்கும்..
எனினும் மீண்டும் மீண்டும்
பிறப்பேன்.. உனக்காக.