Page 61 of 191 FirstFirst ... 1151596061626371111161 ... LastLast
Results 601 to 610 of 1901

Thread: kavidhaikku kavidhai matrum Pattuku pattu-2

  1. #601
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    குழ்ந்தையாய்த் தான்
    இருக்க வேண்டியிருக்கிறது
    சில சமயங்களில்..
    வளர்ந்த பிறகும்...
    அதுவும் ஆணாக..

    மன்னி பின்னாலேயே போய்டுவியாண்ணா..
    சே சே நீ என்ன சொல்றேன்னே புரியலை..

    டேய் அவ பேசற பேச்சப் பாத்தியா..
    இல்லையேம்மா..
    ஒண்ணு சொல்லட்டுமா
    என்ன இருந்தாலும் நீ
    சொல்றது தான் சரி..

    ஏங்க..உங்க அம்மா..
    ச்ச் இனிய இதயமே
    நான் உனக்குத்தான் ஒத்துழைப்பு தருவேன்..

    என்ன செய்வது
    குழந்தைகள் வளர்ந்து விட்டன
    என்று
    தெரிவதே இல்லை பெண்களுக்கு...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #602
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,168
    Post Thanks / Like
    பெண்களுக்கு என்றும் எழுதப்பட்ட படாத சட்டங்கள் பல
    கண்ணுக்குத் தெரிந்த தெரியாத வேலிகள் கோடுகள் பல
    சட்டத்துக்குள் அடங்காத ஒரு சித்திரம் விசித்திரம் அவள்
    வேலிக்குள் கோட்டுக்குள் ஒடுங்காத வண்ணக்கோலம் அவள்
    அணைக்கும் அலைக்கரங்களை கடலன்னை சாட்டையாக்குவாள்
    கரைமேல் கறையும் கறையானும் அவள் கண்ணை உறுத்தினால்
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  4. #603
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    உறுத்தினால் என்ன செய்வது..
    இது தான் விதி
    ஏற்க வேண்டியது தான்..

    மூன்றாவது மாடி அடுக்ககத்தில்
    பார்த்தால் கொஞ்சம் தள்ளி
    ஒரு வீட்டின் மொட்டை மாடி, பின்
    அந்தப் பக்கம் ஆரம்பித்து வளர்ந்திருக்கும்
    நெடிதுயர்ந்த மரம்..
    மாடியின் பாதி மறைந்திருக்கும்..

    அந்தி வேளையில்
    கசமுச கசமுச எனக் கூச்சலாய்க்
    குருவிகள்
    டபக் டபக் என அந்த மரக்கிளைகளில்
    சரணடையும்..
    அதிகாலையில் மறுபடி கசமுச..
    இரைதேடக் கிளம்பும்
    நிதப்படி விஷயம்..

    குடிவந்தமுதல் கொஞ்சம் கஷ்டமாய் இருந்தஒலி
    இன்னிசையாய் மாறிப்போனது நாட்பட..

    திடீரென வந்த புயல்
    மரத்தைசாய்க்க
    ஓரிரு நாட்களில் முழுவதுமாய்
    வெட்டுப்பட்டுக் காணமற் போக..
    முதலில் தவித்த குருவிகள்
    பின் அவையும் காணாமல் போக..

    எப்போது வரும் என நினைப்பில்
    நாட்கள் நகர்ந்த போது..

    வீட்டில்
    ஸ்ப்ளிட் ஏசி வைக்க வேண்டும்
    மனைவி மகள் மகன் அடம்பிடிக்க
    வேண்டாம் நேரா என்மேல் அடிக்கும்
    ஒத்துக்காது என நான் மறுத்தாலும்
    சரி என பொருத்தவேண்டியதாய்ப் போனது..

    முன்னம் இருந்த ஜன்னல் ஏசியைக் கழட்டி
    ப்ளைவுட்டால் மறைத்தால்..

    ஒரு நாள் அதிகாலையில்
    மறுபடி குய் குய்..

    ஏசி ஓட்டையின் பின்புறம்
    காணாமல் போயிருந்த குருவிகளில் சில
    மறுபடியும் குடித்தனம்..

    மாற்றத்திற்கு குருவிகள்
    பழகிவிட்டன..

    எனக்குத் தான் புதிய ஏசி
    ஒத்துக்கொள்ளவில்லை
    அடிக்கடி சரியில்லாமல் போகிறது உடம்பு

  5. #604
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,168
    Post Thanks / Like
    உடம்பு எங்கே
    தேடுது உயிர்
    எரிந்து போனதா
    புதைந்து போனதா
    நீரில் மூழ்கியதா
    வல்லூறு தின்றதா
    பஞ்சபூதத்தில் கரைந்ததா
    பிரியா விடை பெற்றதா
    பிறக்குமா மீண்டுமது
    தேடுவதை நிறுத்து
    பறந்து செல் உயிரே
    பிரபஞ்சம் காத்திருக்கு
    பிணியறுக்கும் நேரமிது
    பெருவெளியில் கலந்துவிடு
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  6. #605
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கலந்து விடு
    முதலில் டிகாக்ஷன்
    பின் ஏற்கெனவே கொதித்த பால்
    சூடில்லை எனில் மறுபடி கொதிக்கவை..
    இப்படித்தான்…

    கண்ணில்
    தூக்கக் கலக்கத்துடன்
    தலை முடியைச் சற்றே சுருட்டிக் கொண்டு
    காப்பி போடுவதை விட
    குடிக்கும் ஆசையால்
    பார்த்துக் கொண்டிருப்பேன்..

    கொடுத்ததும்
    டபரா டம்ளரில் ஆற்றி
    பஃபென்று பாவாடை கூடாரமானாலும்
    படக்கென்று கிச்சனிலேயே அமர்ந்து
    குடித்தது இன்னும் நினைவில்..

    பாத்துடி.. பதறுவாள்..
    வாய் சுட்டுடும்.
    பரவால்லம்மா.
    எப்படி இருக்கு
    ம்ம்ம் சுமார்தான் ஷீகர் போடலியா
    இதுக்கு மேல் வேண்டாம்..இந்தா
    அரை மனதாக அரை டீஸ்பூன் வரும்..

    மெல்ல மெல்லப்பருகி
    வாசலுக்கு வந்தால் ஒரு மணி நேரப்பாடம்
    ஒரு நொடியாய் ஓடும்..

    இப்போது இருப்பது பெரிய
    மாடுலர் கிச்சன்
    லேடஸ்ட் ஓவன்..
    டிகாக்ஷனுக்கு குட்டி டிரம் கிடையாது
    பெர்கொலேட்டர் தான்.

    நிமிடங்களில்கலந்து
    கணவர் குழந்தைகளுக்குக் கொடுத்தால்
    ம்ம் சூப்ப்ர்மா என்கிறார்கள்..

    இருந்தாலும்
    மனதில் எப்போதும்
    முகிழ்த்திருக்கிறது
    அம்மாவின் கைமணம்…

  7. #606
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,168
    Post Thanks / Like
    கைமணம் ஒரு காரணம்
    கட்டிப்போடும் மந்திரம்
    குட்டிப்போட்ட பூனையாய்
    காலைச் சுற்றி வரும் குமரன்
    தாய்க்குப் பின் தாரம்
    தொடரும் பாரம்பரியம்
    தழைத்திடும் உறவுகள்
    தவமின்றி பெற்ற வரங்கள்
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  8. #607
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    வரங்களில் ஒன்று போலத் தான்
    மாறி விட்டது மெதுவாக...

    இப்போதெல்லாம்..
    குறிப்பிட்ட நேரத்தில்...
    அமைதியாய் இருக்க முடிகிறது..

    வீட்டில் இருந்தாலும்
    உடலின் கலோரிகள் தானாகக்
    குறைகின்றன..

    முன்போலில்லாமல்
    திட்டமிட்டுக் காரியங்கள்
    பழகிக் கொள்ள முடிகிறது...

    நிறைய் சிந்தனை செய்ய முடிகிறது..
    ம்ம்
    ஒரு காலத்தில் இப்படித் தானே
    நாமும் இருந்தோம்..
    அந்தக் காலத்தில் தாத்தா பாட்டி
    கொள்ளுத் தாத்தா கொள்ளுப் பாட்டி
    அதற்கு முன்னால் இருந்த
    ராஜ வம்சங்கள்..பாவம்
    ரொம்பக் கஷ்டப் பட்டிருப்பார்கள்..என
    யோசிக்க முடிகிறது..

    தொலை பேசி கட்டாய மெளனமாய் இருக்கும்
    அலைபேசியையும் அணைத்து விட்டால்
    இன்னும் ஆனந்தம்..

    உணவுகள்
    அன்றன்று தேவைக்கு மட்டும்
    தயார் செய்தால் போதும்..
    செளகர்யம் தான்..

    உங்கள் வட்டாரத்தில் இந்த நேரமா
    என் வட்டாரத்தில் இந்த நேரம்..
    பேசுவதற்கு ஒரு கூடுதல் தலைப்பு...

    தொலைக்காட்சித் தொடர் கவலை இல்லை..
    ம்ம்
    நன்றாகத் தான் இருக்கிறது..கொஞ்ச்ம் பழகியதால்...

    நன்றி
    மின்வெட்டே..!

  9. #608
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,168
    Post Thanks / Like
    மின்வெட்டே ஆனது நல்ல காரணம்
    மாற்றி யோசிக்க வேண்டிய தருணம்
    கண்டுபிடிப்பின் தாய் தேவையல்லவோ
    தாராளமாய் கிடைக்கும் சூரிய ஒளியே
    தந்திடும் தடையில்லா நாகரிக வாழ்வு
    மீண்ட சொர்க்கமினி நனவாகும் கனவு
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  10. #609
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கனவுகள் கண்ணில் மின்ன
    ...கவிதையாய் எண்ணம் துள்ள
    நனவினில் நானும் கேட்டேன்
    ...நங்கையாய் இருந்தபோதில்

    மனதினில் மகிழ்ச்சி மின்னல்
    ...முகிழ்க்கிற தன்மை எல்லாம்
    என்றுமே இருப்ப தற்கு
    ...எளிமையாய் வழிகள் சொல்வாய்..

    பெண்ணினம் என்று பாரில்
    ...பெருமையாய்ப் பிறந்த தற்கு
    கன்னிநீ நினைப்ப தெல்லாம்
    ...கவிதையில் சொல்ல நன்று..

    கண்களில் கனவு நானும்
    ...காலமாய்க் கண்டு இருந்தேன்
    விண்ணிலே சிறகை விட்டே
    ...உளத்திலே மகிழ்ந்தி ருந்தேன்

    நுண்ணிய காலப் போக்கில்
    ...நொறுங்கியே உடைந்த தெல்லாம்
    வண்ணமாய்க் கனவு எல்லாம்
    ...வாழ்க்கையில் உதவா தம்மா..

    கஜங்களின் மீது ஏறி
    ...காடுகள் மலைகள் சென்று
    கோட்டையைப் பிடித்த காலம்
    ..ஓடியே போயே போச்சு..

    நிஜங்களை எண்ணிப் பார்த்து
    ..நேர்மையாய் உளத்தில் எண்ணி
    நலமுடன் நன்கு வாழ
    .. நங்கைநீ பழகு என்றாள்..

  11. #610
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,168
    Post Thanks / Like
    பழகு என்றாள் எனை நெருங்கி
    யாரிவள் பாப்பைய்யாவின் மகளா
    வேண்டாம் மச்சி வேண்டாம்
    இந்த பொண்ணுங்க காதலு
    காதுக்குள்ளே நண்பன் குரலு
    பொண்ணுங்க எல்லாம் வாழ்வின் சாபம்
    இன்னொருத்தனின் நிலையோ பரிதாபம்
    கையளவு நெஞ்சுக்குள்ளே
    கடலளவு ஆசை வச்சான்
    சொய்ங் சொய்ங் நானும் போறேன்
    எங்கேடி கூட்டிட்டு போறேன்னு
    அனுபவ ஞானம் பெறுவேனே
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

Similar Threads

  1. kavidhaikku kavidhai matrum Pattuku pattu
    By Oldposts in forum Poems / kavidhaigaL
    Replies: 1486
    Last Post: 23rd December 2010, 03:53 PM
  2. Bharathi kavidhai
    By Kanmani in forum Poems / kavidhaigaL
    Replies: 1
    Last Post: 16th August 2005, 06:54 PM
  3. edhir pattu no: II
    By kanaga arumugam in forum Poems / kavidhaigaL
    Replies: 1
    Last Post: 31st March 2005, 10:59 AM
  4. edhir pattu
    By kanaga arumugam in forum Poems / kavidhaigaL
    Replies: 3
    Last Post: 2nd February 2005, 10:03 PM
  5. kanavilum kavidhai
    By mohans in forum Poems / kavidhaigaL
    Replies: 7
    Last Post: 28th December 2004, 01:29 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •