Page 57 of 191 FirstFirst ... 747555657585967107157 ... LastLast
Results 561 to 570 of 1901

Thread: kavidhaikku kavidhai matrum Pattuku pattu-2

  1. #561
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    என்னென்பேன் ஏதென்பேன்
    என்றெல்லாம்
    இனிப்புத் தடவிய வர்ணனைகளுக்கு
    பெண்கள்
    நாணப்பட்டு கன்னஞ்சிவந்ததெல்லாம் ஒருகாலம்..

    இப்போது
    கஷ்டப்பட்டு புதுப்புது
    விதமாய்ச் சொன்னாலும்
    முகத்தில்
    உணர்வினைக் காட்டுவதில்லை...

    என்ன காதலா
    என்றெல்லாம் கிண்டல் செய்வார்கள்...

    இருந்தாலும்
    ரசிக்கத் தவறுவதில்லை
    உள்ளூர..

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #562
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,162
    Post Thanks / Like
    உள்ளூர அடைத்த சமாச்சாரங்கள்
    சமோசாவின் கிழங்கு மசாலாக்கள்
    சீயம் போளியின் தேங்காய் வெல்லங்கள்
    சிறிதளவும் சிரமமாயிருப்பதில்லை
    பச்சைக் காயும் வடையும் மெயோனைசும்
    அடக்கிய பர்கரை தின்பது சாகசமே
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  4. #563
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    சாகசம் பண்ணித்தான்
    மயக்கிப்புட்டா போல
    பாரேன் அவ்ளையும்,
    அவ வீட்டு மனுஷாளையும் மட்டும் தான்
    பார்க்கறானே தவிர
    நம்மள் மதிக்கிறானா
    இப்பவே மாறிட்டான் பாரேன்

    சின்ன்க்கா பெரியக்காவிடம்
    கண்கள் தளும்பச் சொல்லியதும்

    அதானே
    முன்னெல்லாம் என்னை வாய் நிறைய
    மாமான்னு ஆசையாக் கூப்பிடுவான்
    இப்போ
    அத்திம்பேர்னு எனக்கென்னவோ
    வயசான் மாதிரி கூப்பிடுறான்
    நீ சொல்ற்து ச்ரிதான் இவளே

    என
    அக்காவின் கணவர்
    பக்கவாத்தியம் வாசித்ததும்

    திருமண வ்ரவேற்பில்
    பழக்கமில்லாத கோட் சூட்டினால்
    விய்ர்வை வழிந்தாலும்
    செயற்கையாய்
    தெரியாதவர்களுடன்
    செயற்கைச் சிரிப்பில் கை குலுக்கி
    பக்கத்தில் இருப்பவ்ளின்
    அழகைக் கூடப் பார்க்காமல்
    க்ளைப்பாய் இருந்த் நான்
    மலங்க மலங்க முழித்தபடி
    கேட்டுக் கொண்டிருந்தது ஒரு காலம்..

    இப்போது
    போன மாதம் திருமணமான
    சின்னக்காவின் பையனைப் பற்றி
    அவரிடமே தொலை பேசினேன்..

    என்னக்கா
    மாட்டுப் பொண்
    நன்னா நம்ம பையன
    மயக்கிட்டாளா..
    உன்னை கவனிக்கறாளோ என்னமோன்னு
    ஒண்ணுவிட்ட சித்தி
    முந்தானாள் சென்னையில் இருந்து கேட்டாக்கா...

    அதெல்லாம் ஒண்ணுமில்ல க்ண்ணா
    பாவம் அந்தக் குழ்ந்தை
    வெகுளி
    எப்பவும் சிரிக்கத்தான் செய்யுது போ
    என்ன சமைக்கத் தான் தெரிய்லை
    நா ஹெல்ப் பண்றேன்
    நெட்ல அம்மா கூட் பேச்றா தான்
    அதனாலென்ன.. நாமெல்லாம் புது மனுஷா தானே
    அவளுக்காக
    நம்ம பையனும் கொஞ்சம் அவாளோட பேசறான்..
    இதெல்லாம் தப்பா எடுத்துக்கலாமா சொல்லு...

    சொல்லச் சொல்ல சிரிப்புடன்
    மனதுள் எழுந்த்து ஒரு கேள்வி..

    மாறியது காலமா..
    அல்லது மனிதர்களா...

  5. #564
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,162
    Post Thanks / Like
    மனிதர்களா பதர்களா
    கொதிக்கின்றன கோபத்தில்
    நீரும் நிலமும் நெருப்பும்
    வானும் வெளியும் கூடி நின்று
    மாசுறச் செய்தார் மதியின்றி
    அழித்து அவலமாக்கினார் அந்தோ
    மூடரிவர் திருந்தவேயில்லை
    முடிவதற்கா இந்த சொர்க்கம்
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  6. #565
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    சொர்க்கம் என்பது..

    முன்பு
    பல்லை எடுத்து பின் பொய்ப்பல்
    பொருத்தியவுடன்
    தாத்தா ஜம்மென்று முறுக்கைக் கடித்து
    ரசித்து சாப்பிட்ட போது
    அவர் கண்ணில் தெரிந்த ஒன்றா..

    மனைவி எதற்கோ வெளியில் இருந்தபோது
    அப்பா ரொம்பத் தலைவலியாப்பா
    இரு பிடிச்சுவுடறேன் சொல்லி
    குடுகுடுவென்று ஓடி
    ஸ்டூல் போட்டு
    உயரத்தில் ஷெல்பில்
    இருந்த அமிர்தாஞ்சனததை எடுத்து
    பின் அருகில் வந்து
    இருவிரல்களிலும் எடுத்து
    தலையின் இருபுறமும் அழுந்த
    தேய்த்து
    கொஞ்சம் சுற்றியும் தேய்த்து
    பின் எப்படிப்பா இருக்கு என
    சின்னவள் கேட்ட போது
    எனக்கும் தெரிந்ததா..

    காதலியின் முதல் முத்தம்,
    பிறந்த சின்னப் பூ
    குட்டி விரலால் பிடித்துக் கொள்ளும் போது,
    இன்னும் இன்னும்..

    சொர்க்கங்கள் புலப்படத்தான்
    செய்கின்றன
    உயிர்வாழும் போதே..

  7. #566
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,162
    Post Thanks / Like
    உயிர்வாழும் போதே சவ நிலை
    இல்லையில்லை தவ நிலை
    ஆனந்தம் நிர்வாணம் முக்தி
    அடி ஆத்தி ஆத்தி
    ஆடும் நித்தி நித்தி
    அஞ்ஞானமா மெய்ஞானமா
    ஆணும் பெண்ணும் ஆடிப் பாடி
    அந்தக்கால அந்தப்புரமாகுது
    ஆசிரமங்கள் ஊருலகெங்கும்
    கோடிகளை அங்கு குவித்த
    கூறு கெட்ட மக்கா மக்கா
    மானமுனக்கு இருக்கா இருக்கா
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  8. #567
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    இருக்கா இருக்கா
    இல்லையா இல்லையா
    இது என்ன கேள்வி
    இருந்தால் இல்லை
    இல்லை என்றால் இருக்கும்
    உண்ருங்க்ள் குழந்தைகளே

    சிரித்தவண்ணம் துறந்தவர்
    எனத் தன்னை
    சொல்லிக் கொள்பவர் சொல்ல

    மின்னிய்து புகைப்படக் கருவிகள்
    வெள்ளைப்பேப்பர்களில்
    பேனாக்களின் எழுத்துக்கோலங்கள்
    மறு நாள் வண்ணப் படத்தில்
    முதல்பக்கத்தில்
    தினப் பத்திரிகைகளும் வாராந்த்ரிக்ளும்
    பாராட்டிய் படி...

    சில் நாட்க்ள் கழித்து
    துறந்தவர் துறக்காத்வ்ற்றை அறிந்து
    அதுப்ற்றி அவ்ரிடமே கேட்டால்
    இருக்கும் என்றால் இருக்கும்
    இல்லை என்றால் இல்லை
    எனப் பதில்வர
    அதுவும்
    தொலைக்காட்சி,பத்திரிகைகள்
    மூல்மாக
    எதிர் மறையாக...

    துறந்தவரைத்
    இன்னும் துறக்காமல்
    கூட்டம் இருப்பதன் காரண்ம்
    பணமா
    நல்ல குண்மா
    வேறு ஏதாவ்தா..

    எதுவுமில்லை...
    கலிகாலம்...

  9. #568
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,162
    Post Thanks / Like
    கலிகாலம்தான் சந்தேகமேயில்லை
    காக்கா குருவி மைனா காணவில்லை
    குளங்களும் கொக்குகளும் இங்கில்லை
    கான்கிரீட் காடுகளில் வாழ்கின்ற நிலை
    கரைகளை உடைக்கும் விஞ்ஞான அலை
    கட்டிப்போடும் சொகுசுகளின் மாய வலை
    கரையும் சுகங்களின் நீளுகின்ற எல்லை
    கொடுக்கிறோம் கனவிலுமறியாத விலை
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  10. #569
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    விலை கொஞ்சம் ஜாஸ்தி தான்
    இருந்தாலும்
    ஆசையாய்க் கேட்டுவிட்டது..
    பட்ஜெட் நூறு தான்
    இது எண்ணூறு
    ..ம்ம்.
    வாங்க வேண்டியது தான்

    எட்டுமாசம் கொஞ்ச்ம்
    கை செலவைக் குறைக்க வேண்டியது தான்
    இவளோ திட்டுவாள்
    பரவாயில்லை
    சமாதானப் படுத்திவிடலாம்..

    கடன்..ம்ஹீம்.. வாங்க வேண்டாம்
    மில்லில்
    கொஞ்சம் ஓவர் டைம் பார்க்கலாம்..
    கொஞ்சம் சிகரெடடைக் குறைத்துக் கொள்ள்லாம்..

    இருப்பது ஒரே குட்டி...

    பலவிதமாய் அலசி
    அழகாய் ஒரு ஃப்ராக் வாங்கி

    குட்டியிடம் காண்பித்தால்
    ஒரே குஷி...

    மறந்தே போனது எல்லாம்
    தாவி
    அது கொடுத்த
    ஒரே முத்தத்தில்

  11. #570
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,162
    Post Thanks / Like
    முத்தத்தில் முழு நிமிடம் ஓட்டி
    கதையென்பதை வலிய ஓரங்கட்டி
    இசையென இரைச்சல் ஒன்றை கூட்டி
    அதையும் இதையும் கொஞ்சம் காட்டி
    திறந்து காட்டுவதில் மட்டும் போட்டி
    திரையில் விரிவது கொடுமை சாமி
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

Similar Threads

  1. kavidhaikku kavidhai matrum Pattuku pattu
    By Oldposts in forum Poems / kavidhaigaL
    Replies: 1486
    Last Post: 23rd December 2010, 03:53 PM
  2. Bharathi kavidhai
    By Kanmani in forum Poems / kavidhaigaL
    Replies: 1
    Last Post: 16th August 2005, 06:54 PM
  3. edhir pattu no: II
    By kanaga arumugam in forum Poems / kavidhaigaL
    Replies: 1
    Last Post: 31st March 2005, 10:59 AM
  4. edhir pattu
    By kanaga arumugam in forum Poems / kavidhaigaL
    Replies: 3
    Last Post: 2nd February 2005, 10:03 PM
  5. kanavilum kavidhai
    By mohans in forum Poems / kavidhaigaL
    Replies: 7
    Last Post: 28th December 2004, 01:29 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •