Page 46 of 191 FirstFirst ... 3644454647485696146 ... LastLast
Results 451 to 460 of 1901

Thread: kavidhaikku kavidhai matrum Pattuku pattu-2

  1. #451
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,164
    Post Thanks / Like
    காலம் காற்றாய் அல்லவோ பறக்கிறது
    குட்டிப் பெண் அன்று பட்டுப்பாவாடையில்
    பாட்டி வீட்டில் செட்டுப் பிள்ளைகளுடன்
    கொட்டமடித்தது அதிரச இனிப்பு
    குமரியாய் உறவுகளை சந்தித்த
    கொண்டாட்டம் குலாப்ஜாமுன் தித்திப்பு
    மறுவீடு சென்று இரு வீட்டு சீராடியது
    மனம் நிறைந்த மைசூர்பாகின் சுவை
    மக்களைப் பெற்று அவர் ருசிக்குக் கிளறியது
    மங்காத மகிழ்ச்சி தரும் பாதாம் அல்வா
    பேரப்பிள்ளைகள் கொறிக்க முறுக்கும் மிக்சரும்
    பேரின்பம் தரும் போளியும் பாதுஷாவும்
    அக்கரையிலும் தொலைதூர பணியிடங்களிலும்
    மக்கள் இன்று - மாட்டிக்கொண்டோம் தனித்தீவில்
    கடையில் வாங்கிய பலகாரம் போதுமென
    அக்கம் பக்கம் பகிர்ந்துண்டு அருகிருக்கும்
    பழுத்த மர நிழலில் சற்றே ஆசுவாசம்
    பெற்றவரை பார்த்து ஆசி பெறுதல் பணியாரம்
    பண்டிகை கொண்டாடியதாய் நீயும் இன்று
    பேர் பண்ணிக்கொள் மனமே வேணாம் பேராசை
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #452
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பேராசை கொண்ட முதலை
    குரங்கை
    பழத்தைச் சாப்பிடச் சொல்லிச்சா
    எனப் பாட்டி ராகத்துடன் சொன்னதை
    கேட்டபடி
    பாட்டியின் முதுகில்
    தூங்கிய குழந்தை
    தானே குரங்காக மாறுகையில் புன்னகை புரிந்து
    முதலையாய் மாறுகையில்
    கொஞ்ச்ம நடுங்கி
    புடவையை இறுக்கப் பிடித்தபடி
    கண்களை இறுக்க மூடித் தூங்குவதை
    வியப்புடன்
    பார்த்துக் கொண்டிருந்தன
    கதைப் புத்தகத்து முதலையும்
    குரங்கும்..

  4. #453
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,164
    Post Thanks / Like
    குரங்கும் அதன் குறுகுறு கண்களும்
    குட்டியை கவ்விச் செல்லும் பாங்கும்
    தவழும் நீண்ட அழகிய வாலும்
    மெத்தென்ற சிறு கைவிரல்களும்
    கூட்டமாய் வாழும் ஓர் ஒழுங்கும்
    ஈர்க்கும் சங்கதிகள்தான் எத்தனை
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  5. #454
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    எத்தனை ஆண்டுப்பழக்கம்
    மறந்து விட்டாயா புவனமகாதேவி..
    நட்பு உதவிக்குக் கணக்கு வைப்பதில்லை..
    அறியாதவளா நீ..
    எல்லோரும் உன்னை அம்மா என்றழைக்க
    நான் உன்னை அக்கா என...
    என் மகன் உன் ம்கனென
    தத்தெடுத்துத்
    திருமணமும் செய்வித்தாய்...

    எனக்கும் வயதாகிறதே
    என்னையும்
    மற்றவர்க்ள்
    அம்மா என அழைக்க
    நான் ஆசைப்பட்டால்
    அது குற்றமா..

    காலங்கள் மாறும்
    மனிதர்கள் மாறுவார்கள் தான்
    நீ மாறலாமா..

    நான ஆசைப்பட்டதையெல்லாம்
    நிறைவேற்றினாய்
    எனது குடும்பம்
    உன்னால உயர்ந்தது
    என எண்ணம் கொண்டிருக்கிறாய்
    தவறு தோழி..
    என் எண்ணத்தில்
    அவர்கள் உயர்ந்தார்கள்..

    இருந்தாலும்
    என்னை
    அவையிலிருந்து நீக்கி விட்டாய்
    உன் மனத்திலும் என
    மனப்பால் குடிக்கிறாய்...
    ஒருவேளை இதெல்லாம் உன் நாடகமா..

    எது எப்படியோ
    எனது ஆசையும்
    உனது முடிவும்
    சரியா தவறா என
    சொல்லும் காலம்...
    இந்த செம்பியன் மாதேவி...
    ...யார் என
    புரியும் அனைவருக்கும்...

  6. #455
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,164
    Post Thanks / Like
    அனைவருக்கும் திருப்தியா
    அப்படியொரு தீர்வு உளதா
    அது என்றும் சாத்தியமா
    தாத்தன் பேரன் கழுதை
    பயணித்த கதை சொல்லும்
    சமுதாயத்தின் இயல்புதனை
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  7. #456
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    இயல்புதனை மறந்த காலத்தை விட
    இருந்த காலம் எப்பொழுது...

    ரகசியமாய்ப்
    பக்கத்து கிளாஸ்மேட் கொடுத்த
    மயிலிறகை
    புத்தகத்தில் இரவில் ஒளித்து வைத்துவிட்டு
    கண்ணை இறுக்க மூடி
    தூக்கம் வரும் வரை
    இரவெல்லாம் சாமியை வணங்கி
    காலையில் பார்த்தால்
    வளராமல் போக
    கண்ணீல் குளம் கட்டி அழுத போது..

    ஸ்ஸ் பச்சமிளாகா பிடிக்காது தெரியுமல்
    ஏன் போட்ட
    எனக் கத்தி ஆர்ப்பாட்டம் செய்ய
    ஏண்டி நா போடவேஇல்லையே
    எனப் பதறித்
    தண்ணீர் தந்த அம்மாவிடம்
    கண் சிமிட்டிச் சிரித்த போது...

    பருவ நிலைக்கேற்ப
    மாறுதலடைந்ததால்
    கண்களில் கொஞ்சம் கனவு,
    கொஞ்சம் பூரிப்பு
    கொஞ்சம் நாணமாய்த் தலைகுனிதல்,
    மற்றவர் கொஞ்சம் வியந்து பார்க்கையில்
    ஏற்பட்ட பெருமிதம்...
    கண்ணாடி காட்டும் முக அழகில்
    ஏற்படும் மெலிதான கர்வம்...
    எதற்கும் குறைவில்லை..

    இவ இவ்ளோ அழகா இருக்காளேங்க்
    எப்ப படிப்ப முடிப்பாளோன்னு
    ரொம்ப பயம்மா இருக்கு
    அம்மா சொல்ல
    அப்பா நல்லா பிஜியே படிக்கட்டும்
    வேலை கிடைத்தாலும் சரிதான்..
    இந்தக்காலத்தில் அழகு மட்டும் கூடாதுடி..
    படிப்பும் வேண்டும் என்று சொன்ன போது
    வயதை மறந்து ஓடிச் சென்று
    அப்பாவை கட்டிக் கொண்டு
    தாங்க்ஸ்பா சொன்ன போது...
    இயல்பாகத் தானிருந்தேன்...

    கல்லூரியிலும் பின் வேலையிலும்
    எல்லோரிடமும் சகஜமாகத் தான் பேச்சு..பழக்கமெல்லாம்..

    பின்..எப்படி..
    கடங்காரா.. எங்கிருந்து வந்தாயடா..

    பொருத்தமெல்லாம் சரியா இருக்காம்..
    இந்தா பையன் ஃபோட்டோ..
    பிடிச்சிருந்தா வரச்சொல்லட்டா..

    அப்பா காட்டிய புகைப்படத்தில்
    உன்னைப்பார்த்ததில்...

    கொஞ்சம் முகம் மலர ...
    நாணமும் உடன் வர
    உள்ளே ஓடி
    வழ்க்கம் போலக் கண்ணாடி பார்க்கையில்
    தெரிந்தது மாற்றம் துல்லியமாக..
    இன்னொன்றும் புரிந்த்து..
    அது நிரந்தரம் என.......

    ***..

  8. #457
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,164
    Post Thanks / Like
    நிரந்தரம் என நினைத்து ஆணவம்
    நிலைமை புரியாமல் அட்டகாசம்
    நின்று யோசிக்காமல் அவசர ஓட்டம்
    நிலைக்காது இந்த வெத்து ஆட்டம்
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  9. #458
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஆட்டம் இப்போது தான் ஆரம்பம்
    என நினைக்கையில்
    பொசுக்கென முடிவதும்..
    ஆட்டம் முடிந்தது என எண்ணுகையில்
    மறுபடி ஆரம்பிப்பதுமாய்...
    நீள் தொலைக்காட்சி த் தொடரைவிட
    நீண்ட தொடர் கதை தான்..
    ஆரம்பம்
    கதை வசனம் முடிவு என
    எல்லாவற்றையும்
    ஒளித்து வைத்திருப்பவன்
    மேலே உள்ளவன்

  10. #459
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,164
    Post Thanks / Like
    உள்ளவன் சுமக்கிறான் பொறுப்பு
    செல்வம் செழுங்கிளை தாங்க
    மேதமை இம்மானிடம் ஓங்க
    தைரியம் முன்னால் நடக்க
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  11. #460
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    நடக்க நடக்க
    நாராயணன் செயல்
    என
    அடிக்கடி சொல்வாள் பாட்டி...
    அம்மா
    நடகக நடகக
    அவ்ர் செயல் என்பாள்
    மேலே பார்த்துக் கொண்டு..
    எனில் புருஷன் பெயரைச்
    சொல்லக் கூடாதாம்...

    சில வருடங்களாக
    நானும்
    நடக்க நடக்க நாராயணன் துணை
    என்கிறேன்..
    என் மேலதிகாரியின் பெயர்
    பத்ரி நாராயணன்..

Similar Threads

  1. kavidhaikku kavidhai matrum Pattuku pattu
    By Oldposts in forum Poems / kavidhaigaL
    Replies: 1486
    Last Post: 23rd December 2010, 03:53 PM
  2. Bharathi kavidhai
    By Kanmani in forum Poems / kavidhaigaL
    Replies: 1
    Last Post: 16th August 2005, 06:54 PM
  3. edhir pattu no: II
    By kanaga arumugam in forum Poems / kavidhaigaL
    Replies: 1
    Last Post: 31st March 2005, 10:59 AM
  4. edhir pattu
    By kanaga arumugam in forum Poems / kavidhaigaL
    Replies: 3
    Last Post: 2nd February 2005, 10:03 PM
  5. kanavilum kavidhai
    By mohans in forum Poems / kavidhaigaL
    Replies: 7
    Last Post: 28th December 2004, 01:29 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •