-
2nd October 2011, 02:29 PM
#431
Senior Member
Senior Hubber
ஆக்குவதை எல்லாம்
அழகாய் தட்டில் போட்டு
மேலே ஒரு துணியையும் போடுவாள்
என் வட இந்திய மனைவி..
ஏன் சப்பாத்திமேல் துணி போடுகிறாய்
என்றால்
மென்முறுவலுடன்சொல்வாள்
அவள் அம்மா வழக்கமாம்..
அவள் அம்மாவிற்கு
அம்மாவின் அம்மா சொன்னதாம்..
சூடு போகாதாம்..
சுவையும் இருக்குமாம்..
சிலபேர் வழக்கத்தை மாற்றிக் கொள்ளாமல்
அப்படியே வைத்துக் கொண்டிருக்கிறார்கள்..
நான் தான்..
அம்மாவின் சுவைக்கு அடிமையாய்
இருந்த நாக்கு
இப்போது இவளுடைய சமையலுக்கு..
ம்ம்
உடலிலேயே மோசமானது
நாக்கு தான்..
-
2nd October 2011 02:29 PM
# ADS
Circuit advertisement
-
2nd October 2011, 02:52 PM
#432
Senior Member
Platinum Hubber
நாக்குதான் குழறியது
வாய் கூட உளறியது
கவிதை மறந்துபோனது
காதல் பறந்தேபோனது
கயவனுடன் பார்த்தபோது
கற்பனை நொறுங்கியது
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
2nd October 2011, 03:31 PM
#433
Senior Member
Senior Hubber
நொறுங்கியது என்னவோ
கை தவறித்தான்..
கண்ணாடிப் பாத்திரம்
சுக்குநூறுதான்..
ஜாக்கிரதையாய்ப் பைய்பபையக்
கால் வைத்து
விளக்குமாற்றால் பெருக்கி
குப்பைக்கூடையில் போட்டுவிட்டு
பின்
வெண்பஞ்சினால் ஒற்றி ஒற்றி
அதையும் தூரப் போட்டு
ஈரத்துணியால்
துடைத்தும் விட்டாயிற்று
ஆனால் மீண்டும்
நடக்கையில்
மெல்லத்தான் காலடி வைக்கத்
தோன்றுகிறது.
.
ம்ம்
ஏதோ குத்துவது போலவும்..
பிரமை...
-
2nd October 2011, 07:02 PM
#434
Senior Member
Platinum Hubber
பிரமையில் நானோ
பகல் கனவுதானோ
பிறந்த பலனிதுவோ
பொற்காலமிதுவல்லவோ
பாரெங்கும் நல்லொழுக்கம்
பகையில்லா நெருக்கம்
பார்த்தாலே பரவசம்
பாலில் விழுந்தது பழம்
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
4th October 2011, 12:03 AM
#435
Senior Member
Senior Hubber
பழம், பாக்கு எல்லாம் கொடுத்தும்
அந்தப் பட்டுப்பாவாடைச் சிறுமி
தயங்கி நின்றது..
என்னம்மா...
இன்னிக்கு சுண்டல் இல்லை..
ஆமை வடைதான்
தட்டுல சாப்பிட்டியே..
இன்னும் பார்சல் பண்ணட்டுமா..
இல்லை என ஆரம்பித்துச் சொல்லத் துவங்க..
அவள் அம்மா இடைமறித்து
வாடி போகலாம்..
சும்மா இரும்மா..
மாமி..
என்பாட்டு எப்படி..
பேஷா இருந்தது போ..
பொய்..
நா நிறைய இடத்துல
தப்பு பண்ணினேன்..
அம்மா கூட முறைச்சா..
சிரித்து..
செல்லம்.. பாடறது எனக்காக இல்ல
ஒம்மாச்சிக்கு...
அது எதும் சொல்லாது..
த்ப்பு தப்புதான்..
நாளக்கி வரட்டா..
நாளக்கி நல்லா பாடறேன்..
சரி., வாயேன்..
சற்றே தயங்கி..
நாளக்கி
என்ன சுண்டல் மாமி...
-
4th October 2011, 03:21 PM
#436
Senior Member
Platinum Hubber
மாமி நான் மாமாவின் மடியில் அமர்வதை தடுக்கமாட்டாயே
மணப்பெண்ணிடம் குறும்பாய் கேட்ட போது கோபம் வரவில்லை
வாழ்த்துமடலில் அப்படி விண்ணப்பித்தவள் வேறு யாருமில்லை
அருமை நாத்தனாரின் அழகிய மூன்று மாதக் குழந்தைதானே
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
7th October 2011, 08:30 PM
#437
Senior Member
Senior Hubber
குழந்தை தானே
என்றெல்லாம் பார்க்க மாட்டாள்
கொல்லைப்பக்கத்து வீட்டு
ஆண்டாள் மாமி
இரண்டு பையன்கள்
ஒன்று ஆறாவது வகுப்பு ஒன்று மூன்றாவது..
ஒரே டெர்ரர்தான்
பள்ளி முடிந்து வந்தால்
கைகால் கழுவி
உடனே படிக்க வேண்டும்
விளையாட்டெல்லாம் கிடையாது..
விடுமுறைகளிலும் கூட
எதையாவ்து படிக்கச் சொல்லி இருப்பாள்..
பையன்கள் காலேஜ் சேர்ந்த பிறகு
கண்டிப்பெல்லாம் இல்லை..
அவர்களிடமும் அம்மா தானே
என்று
அன்பெல்லாம் இல்லை..
அவர்கள் இஷ்டம் தான்..
ஆனால் படிப்பார்கள்..
ஏண்டா இப்படி
அவர்களைக்கேட்டால்
அதான் படிக்கறோம்ல
சின்னவயசுல எவ்ளோ படுத்தினா..
நீர் உம் வேலையைப்பாரும் ஓய்..
மாமியைக் கேட்டேன்..
குழந்தை தானே விடுங்கோ..
எல்லாம் சரியாய்டும் என
வந்தது பதில்..
-
7th October 2011, 10:55 PM
#438
Senior Member
Platinum Hubber
பதில் வந்தது அம்பாய்
சுவற்றில் அடித்த பந்தாய்
கேட்டிருக்க வேண்டாமோ
காலங்கடந்து வந்த ஞானம்
முடியில்லா தலைக்கு சீப்பு
இதுதானே இங்கு வாடிக்கை
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
9th October 2011, 12:39 PM
#439
Senior Member
Senior Hubber
வாடிக்கையாய்
மல்லி,வெண்டைக்காய், எலுமிச்சைப்பழம்
விற்கும் கிழவியைக் காணோம் சந்தையில்..
பொல்லென வெண்மேகமாய் முடி..
நெற்றியில் அக்லக் குங்கும்ம்..
வெற்றிலைச்சாற்றில் சிவந்த உதடு..
பருத்திப் புடவையுடன்
பளிச்சென
மல்லீய், வெண்டிக்காய் என
அவள் கூவும் குரலும் கணீர்..
விலை விசாரித்தால்
எல்லாம் மலிவு தான்சாமி
நம்ம தோட்ட்த்தில வெளஞ்சது..
பிஞ்சு வெண்டிக்கா பாரு
ஒன்ன மாரி இருக்கு.. என்பாள்..
அப்படியும் பேரம் பேசுவேன்..
ஏன் சாமி..
கல்யாணத்துக்கா சேக்கற
நல்ல வில கொடுத்துட்டுப் போயேன்..
பொண்ணு எங்க கெடைக்குது..
ஏஞ்சாமி..
எல்லாம் ஒன்ன மாதிரிப் பொண்ணா
பாக்கறோம்ல..
அதுக்கு என் வீட்டுக்கார்ரில்லா கேக்கணும்
குறும்ப்ப் பாரு..
எனச் சிரிப்பாள் வெள்ளந்தியாய்
காதுகளில் கிழங்காய்
தண்ட்ட்டியும் ஆடும்..
இன்று பார்த்தால் அவளில்லை..
அவளிட்த்தில் ஒரு சிறுவன்..
எங்கப்பா பாட்டி?
பாட்டியா..
போனவாரம் செத்துப் போச்..
ஒரு நொடி மெளனித்தவன்
தொடர்ந்தான்..
‘சாமீ.. மல்லி.. வெண்டிக்கா.ய்..வாங்குங்க..
பிஞ்சா இருக்கு
ஒங்கள மாதிரி இளமையா..’
-
9th October 2011, 02:59 PM
#440
Senior Member
Platinum Hubber
இளமையாய் மனசிருக்கு
எண்ணத்தில் துள்ளலிருக்கு
ஆனாலும் என்ன செய்ய
சபையில் நுழையும்போது
முடியில் பரவிய நரையும்
முகத்தில் முதிர்ச்சியும்
முன் வந்து கிழவியென
கட்டியம் கூறுதே
ஆயின் சில நொடி பேச்சில்
தெளிவாய் புரிந்துவிடும்
கிழவியல்ல குமரியென
இன்னும் கூட குழந்தையென
குறை தீர்ந்திடுமெனக்கு
போதும் இந்த பாக்கியம்
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
Bookmarks