-
9th August 2011, 10:33 PM
#311
Senior Member
Senior Hubber
’கவிதையில் ஆரம்பித்து
கவிதையில் முடிவது எது தெரியுமா...’
‘இந்தச் செவ்வானம்’
‘இல்லை’
‘இந்தக் கடல்லை’
‘ம்ஹீம்’
‘இந்த்த் தென்ற்ல்..
இந்தப் ப்டகு மறைவு..
இந்த த் தனிமை..
இங்கு நாம் பேசிய ‘ஒன்றுமில்லா இனிப்புகள்’”
“எதுவும் இல்லை’
“பின்...”
“உன் நெற்றி உச்சி;
ம்ற்றும் உன் உள்ளங்கால்...”
குப்பென்று கன்ன்ங்கள்
ரசாயனத்தால் வான நிறம் பெற
உத்டு குவிந்துச் சொன்னாள்
“ச்சீ போடா”
-
9th August 2011 10:33 PM
# ADS
Circuit advertisement
-
10th August 2011, 08:40 AM
#312
Senior Member
Platinum Hubber
போடா என்றால் வாடா
வஞ்சியின் அகராதி
அது மட்டுமா தனி
ஆழம் காணா கடல்
முத்தும் பவளமும்
சுறாவும் சிறுமீனும்
குவிந்திருக்கும் சுரங்கம்
எட்டாத தொடுவானம்
படைப்பின் அதிசயம்
விடை கண்டிடாத புதிர்
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
11th August 2011, 11:52 AM
#313
Senior Member
Senior Hubber
புதிர் தான்..
விழுந்து விழுந்து
மூன்று மாதங்கள் உழைத்து
ஆயிரத்தெட்டு மின்ன்ஞ்சல்,
நூறு தொலைபேசி அழைப்பு
பதினைந்து தடவை நேரில் சென்றது..
எனச் செய்து
நேற்று
தொழிற்சாலைப் பொருட்களை வாங்குவதற்கு
கிடைத்த ஆர்டரைச் சொல்கையில்
சிரித்து வாழ்த்திய எம்.டி
இன்று ஏனோ
சின்ன விஷயத்திற்குக் கோப்ப் பட்டு
வள் என்று விழுவது..
ம்ம்..என்ன செய்ய
தலையெழுத்து..
என்ன உழைத்தாலும்
மிஞ்சுகிற்து திட்டு ஒன்று தான்..
அட வீடு வந்து விட்ட்தே..
’சட்டை கழட்டும் போது
என்ன யோசனை..
கொஞ்சம் சிரித்தபடி
முகத்தை வைத்துக்
கொள்ளக் கூடாதா..’
‘அதெல்லாம் ஒன்றுமில்லை..
எங்கே பெரியவ..
‘அப்பவே வ்ந்துட்டாளே..
மாடில அவ அறையில் இருக்கா..
டீ இவளே..
அப்பா கூப்பிடறா பாரு..
*
போச்சு
அப்பா வந்துட்டார்..
எங்கே நைட்டி..
இந்தக் குட்டை டிராயர், டி ஷர்ட்டோட
கீழே போனால் அம்மா உதைப்பா..
வீட்ல தானே இருக்கேன்.
என் உடை என் செளகர்யம்..
அம்மாக்குப் புரிய மாட்டேங்குது..
கம்ப்யூட்டரை வேற மூடணும்..
என்ன இவன்..
ஒரு மாசமா வெய்ட் பண்ணி
என்னைப் பார்த்து சிரித்து
அதுக்கப்புறம்
இன்னும் ஒருமாசம் கழிச்சு பேசி
இன்னும் ஒண்ணும்
உருப்படியா சொல்ல மாட்டேங்கறான்..
என்னமோ கவிதை மாதிரி எழுதியிருக்கான்..
’ஒவ்வொரு முறை
உன் பெயரை
உச்சரிக்கும் போதும்
நான் உயிர்த்தெழுகிறேன்..
சொதப்பலா இருந்தாலும்
ஏனோ எனக்குப் பிடிச்சிருக்கு..
நாளக்கழிச்சு காயத்ரி ஜபம்
ச்சும்மா
என் பேரை
ஒரு ஆயிரந்தடவை
உச்சரிக்கச் சொல்ல்லாம்..!
நாளைக்கு
கோவிலுக்கு வரச் சொல்லிப் பேசணும்..
எங்க இந்த ஸ்டிக்க்ர் பொட்டு..
இட்டுக்கலேன்னா அம்மா வையும்..
அட கிடைச்சுடுத்து..
இந்த்த் தம்பிக் கடன்காரன்
விளையாடப் போனவன்
இன்னும் வரலை..
கணக்கு சுட்டாலும் வரமாட்டேங்குது
ஒன்பதாம் கிளாஸ்
கடா மாதிரி வளந்துருக்கான்..
வந்த்தும் திட்டி
நாலு ஸம் போடச் சொல்லணும்..
‘எற்ங்கி வர்றதுக்கு
இவ்ளோ நாழியா..
ப ஜ்ஜி சூடா இருக்கு சாப்பிடு..”
இல்லம்மா ஆயில்..வேணாம்
இவன் எங்கே..
வருவான் வருவான்..
*
அடிச்சது சிக்ஸர்
என்ற போது கை தட்டினாங்க..
ஆனா பந்து காணோம்னா
நான் தான் வாங்கித் தரணுமாம்..
அட டா
மணி ஆறரையாச்சா..
அக்கா கொட்டுவா..
டேய் நீங்க தேடுங்க..
கிடைக்கலைன்னா நான் வாங்கறேன்..
சைக்கிள் திற்ந்து ஒரே மிதி..
நேத்திக்கு நட்த்தினது
கால்குலசா.. ச்சே ஒண்ணும்
நினைவுக்கு வரலையே..
எதிர்ல போற
அந்த பாவாடை சட்டை
என்னப் பார்த்து எதுக்கு சிரிச்சா..
யா.. அது நம்ம
கொமாரோட தங்கை..
அப்பாடி... வந்தாச்சு..
ஸ்டாண்ட் போடலாம்
’வாடா வா..
ஒடம்பு முழுக்க வேர்வை தூசு..
கால்லம்பிண்டு வா..
ப்ஜ்ஜி சாப்பிடு..’
போம்மா.. அப்றம் சாப்பிடறேன்...
ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு
போறேன் மாடிக்கு..
*
என்ன ஜென்மங்களோ..
ஏங்க பஜ்ஜி எப்படி இருந்துச்சு..
ஓக்கேயா..
ஏன் குரல் கம்மியா வருது..
ஓ இண்டர் நெட்டா..
வழக்கம் போல ஷேர் மார்க்கெட்டா..
எஸ் அண்ட் பி அங்க கொறச்சா
இங்க விழுந்துடுத்தா..
அட்டா.. அடி பட்டிருக்காதோ..
சிரிக்காதீங்க
எனக்கு இந்த விஷய்ம் லாம் தெரியாது..
இதுங்க எப்ப வரும்..
எப்ப சாப்பிடும்..
ஆறினா நல்லா இருக்காதே
பெரியவ ஆயிலாம்..
அவளக் கெஞ்சணும்
ஒண்ணேஒண்ணு எடுத்துக்கடி.
இவன் ஒருத்தன்..
நெறயக் குத்தம் சொல்வான்..
இப்போ டின்னர் வேற
என்ன செய்யறது..
நாளக்க்கு கால்ல்ல
தோச வாக்கலாம்..
லஞ்ச்சுக்கு லெமன் ரைஸா..
பாத்திரம் வேற நெறய இருக்கு
கண்ணக் கட்டுதே..
எனக்கு மட்டும்
கண்டினுவஸ் வேலை...வேலை..
ஹீம்..
இது தான் வாழ்க்கையா..
எப்போ முடியுமோ இந்தப் புதிர்..
கடவுளே..
*
.
-
11th August 2011, 03:52 PM
#314
Senior Member
Platinum Hubber
கடவுளே உமக்கு சுக்கிர தசையோ
மக்களை வசியம் ஏதும் செய்தீரோ
நாளென்றும் கிழமையென்றும் புதுசாய்
பகலிலும் இரவிலும் அலங்காரமாய்
சந்து முக்கிலும் மலை உச்சியிலும்
ஊர் எல்லையிலும் கடைத்தெருவிலும்
எல்லா பெரிய சிறிய கோவில்களிலும்
பக்தி வெள்ளம் பெருக்கெடுத்தோடுதே
தொடரும் புதுப் புதுக் கேளிக்கையிடை
மனங்கள்தான் பழுத்த மர்மமென்ன
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
15th August 2011, 01:17 PM
#315
Senior Member
Senior Hubber
என்ன என்ன
என்ற கேள்விகளுக்கு
எதையாவது சொல்லிவைத்தால்
பின்வரும் நாட்களில்
முன்சொன்ன பதில்களை
முடிச்சு போட்டு
கேள்வி எழுப்ப
முழி பிதுங்குது
மழலையின் முன்.
-
15th August 2011, 08:21 PM
#316
Senior Member
Platinum Hubber
முன் நடந்தான் நெஞ்சு நிமிர்த்தி ஆடவன்
அவன் பின் குனிந்து நடந்தாள் பெண்மணி
நூற்றாண்டுகள் பல சென்றன இப்படியே
நாகரிகம் நல்லெண்ணம் சமத்துவம் தோன்ற
தோளோடு தோளாய் சேர்ந்து இருவரும் நடக்க
மேலும் உருண்டன வேகமாய் வருடங்கள் பல
புலியாய் பாய்கிறாள் முன்னேறிய பெண்ணின்று
பூனையாய் பம்மிக்கொண்டு பின்னால் ஆண்மகன்
வட்டம் முடிவது துவக்கப் புள்ளியில் அறிவோம்
பெண்ணே உடைப்பாயோ பழைய சித்தாந்தம்
புதிதாய் படைப்பாயோ நிகரில்லா சரித்திரம்
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
16th August 2011, 10:33 AM
#317
Senior Member
Senior Hubber
”சரித்திரம் படைப்போம் நாம்..
கொடுங்கோல் ஆட்சி ஒழிந்தது..
இனி
எல்லா உயிர்க்கும் தீங்கு வராத
நல்லாட்சியை வழங்குவோம்..”
முழங்கினான் சோழ மன்னன்
முகம் மாறாமல் சிரித்தபடி
நசுக்கினான்
காலில் கடித்த எறும்பை..
-
16th August 2011, 03:30 PM
#318
Senior Member
Platinum Hubber
எறும்பை அழைத்தூட்ட அரிசி மாவு கோலம்
ஆயின் அதை விரட்ட இனிப்புகளைச் சுற்றி
கோடாய் வரைந்த பூச்சி மருந்து தடுப்பு
அனுமதித்த சலுகைகள் அவசிய தடைகள்
என்றும் எங்கும் இருப்பது எறும்புக்கு மட்டுமா
எழுதாத சட்டங்கள் எல்லைகள் பாதுகாப்பா
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
16th August 2011, 03:52 PM
#319
Senior Member
Senior Hubber
பாதுகாப்பாய் இருக்க நினைப்பதில்
தவறில்லை..
ஆனால் நான்
நெருங்கும் போது
இறுகுவதும்
விலகி அமரும் போது
ஏக்கப் பெருமூச்சும்
ஈரவிழிப் பார்வை கொள்வதும்..
ஏன் இந்த நாடகம்...
-
16th August 2011, 04:28 PM
#320
Senior Member
Senior Hubber
ஏன் இந்த நாடகம
அஹிம்சா வழி அதர்மமாம்
ஆட்டைய போடுவது தர்மமாம்
மக்கள் தீர்மானத்தை விட
மக்களால் தேர்ந்தெடுக்க பட்டவர்கள்
(மக்கள் விரோத)தீர்மானம் தான் இறுதியானதாம்
என்ன கொடும சரவணன்...
உண்ணாவிரததுக்கு 144 போட்டா
ஊராடிச்சு உலைல போடுரவனுங்களுக்கு
என்னத்த போட
சுவிஸ் வங்கி கணக்கு
சுழியத்தின் அணிவகுப்பு
சுத்தமானவங்களாம் இவனுங்க
சொல்லி திரியரானுங்க
1 வருசத்துக்குள்ள
5 லட்சம் கோடி
வெளிய எடுத்துருக்கானுங்க
வெளங்காதவனுங்க
சொல்லுது சுவிஸ் வங்கிகள்.
பாமரனை பசிக்கவிட்டு
சுகிக்கும் நீங்கள்
வெறும்
பணம் திண்ணும் பிணங்களடா...
ஹ்க்த்துதூ..................
Bookmarks