Page 173 of 191 FirstFirst ... 73123163171172173174175183 ... LastLast
Results 1,721 to 1,730 of 1901

Thread: kavidhaikku kavidhai matrum Pattuku pattu-2

  1. #1721
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    சூடான பிசிபேளாவுடன்
    குளிரக் குளிரத் தயிர்சாதம்
    போதுமே அதான் சொர்க்கம்
    என்று சப்புக்கொட்டிச் சாப்பிடுவார் மாமா..

    வயதான பொழுதில்
    பிபி சுகர் கொலஸ்ட்ரால் இன்னபிற ஆக்கிரமிக்க
    டயட்டில்
    வெறுமனே உப்புப்போடாமல் மோரிட்ட
    கேப்பை கஞ்சிக் குடித்துக்கொண்டிருந்தவரிடம்
    இப்போ எப்படிங்க எனக் கேட்டதில்
    சொன்னார்
    இப்பவும் முன்ன சாப்பிட்டது தான் சொர்க்கம்..
    மாயை..
    இப்ப சாப்பிடறேன் பாரு..
    இது ரியாலிட்டி!”

  2. Likes venkkiram, Russellhni, kalnayak liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1722
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    இது ரியாலிட்டி - சமையல் என்றதும் பாய்ந்து வருபவரிடம்
    பிசி பேளாபாத் பத்தி கவிதை சொன்னால் சும்மா இருப்பாரா
    இதுதான் சுவர்க்கம் என்று போட்டாரே மினி பட்டியல்
    குளிரான தயிர் சாதம் என்ன, கேப்பை கஞ்சி என்ன அப்பப்பா
    இத்துடன் சொன்னாரே பாருங்கள் பிபி, சுகர், கொலஸ்ட்ரால் என்று
    புரிந்து கொண்டோம் பிசி பேளாபாத் கொண்டு வருமே அத்தனையும்
    இது நேடிவிடி விட்டு போனதால் கிடைத்த நரகம்
    எச்சரிக்கைக்கு நன்றியன்றி யாதொன்று சொல்வது
    Last edited by kalnayak; 11th May 2015 at 03:18 PM.
    .........-`҉҉´-
    -`҉҉´..)/.-`҉҉´-
    ....¨´“˜~.)/¸.~“˜¨
    ........¨´“˜~.“˜

  5. Likes venkkiram, Russellhni, chinnakkannan liked this post
  6. #1723
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    சொல்வதைக் கேள்
    அதைத் தொடாதே
    ம்ம்

    கண்ணை உருட்டி
    அதட்டினேன் பக்கத்து வீட்டு
    ஒன்றரை வயதுச் சிறுமியை..

    ஒரே ஒரு கணம் முகம் வாடி
    பின் கண் சிரிக்க
    என்னைப் பார்த்துக் கொண்டே
    தான் டேபிளில் பார்த்திருந்த
    பொருளை எடுத்தபடி
    என்னருகில் வந்து
    சோபாவில் தாவி ஏறி அமர்ந்து
    சிரித்தவளிடம் என்ன சோல்ல..

    கையை உயர்த்தி
    அடிப்பது போல் பாவலா பண்ண
    கண்ணை அதுவும் இறுக்க மூடிக் கொள்ள
    கொடுத்தேன் உச்சந்தலையில்
    ஒரு குட்டி முத்தா...!

  7. Likes venkkiram, Russellhni, kalnayak liked this post
  8. #1724
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    முத்தா பவழமா வைரமா
    முப்போரில் வென்று திரும்புகையில்
    அண்டை நாட்டிலிருந்து எதை
    அபகரித்து எடுத்துவரவேண்டும்
    அரசியிடம் ஆசை தூண்டினான் சோழன்
    நவரத்னக்கற்கள் நமக்கேன் மன்னா
    நலமுடம் நீ நாடு திரும்பிவந்தாலே போதும்
    நல்லாசியுடன் அனுப்பிவைத்தாள்
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  9. Likes Russellhni liked this post
  10. #1725
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நல்லாசியுடன் அனுப்பி வைத்தாள் பத்தினி

    நல்லாயுளுடன் வென்று வந்தான் மன்னன்



    யார் வந்திருக்கா பார் என்று பார்வேந்தன் காட்டிய

    கூர்விழி மாது போரில் வென்று முத்து மரகத வைர



    ஜொலிப்பில் மன்னனின் மற்றொரு பத்தினியாக

    களிப்பில் மன்னனுக்கு மறுமுறை இரு பத்தினிகளின்



    ஆசிகள் மன்னனுக்கு ஆசையுடன் ஆசியும் கூடுகிறது

    ஜோசியன் கூற்று படியும் மன்னனுக்கு பலநூறு வெற்றிகள்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  11. Likes Russellhni, venkkiram, chinnakkannan liked this post
  12. #1726
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    வெற்றிகள் பலவற்றை தேடித்தர வல்ல
    வெல்வதெப்படி என்ற சூட்சுமம் அறிந்த
    வெளிச்சப் பாதையை காட்டிச் செல்ல
    வெட்டொன்று துண்டு ரெண்டு வெளிப்படையான
    அயற்சியால் முடங்கிப்போகும் அனைவரையும் தொடர்
    முயற்சியால் முன்னேடுக்கவல்ல தேவையொரு பயிற்சியாளர்
    Last edited by venkkiram; 13th May 2015 at 01:02 AM.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  13. Likes chinnakkannan, Russellhni liked this post
  14. #1727
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    Chennai
    Posts
    0
    Post Thanks / Like
    பயிற்சியாளர் பலவிதம் பாரினிலே
    ஒவ்வொன்றும் ஒரு விதம் மேதினிலே

    பாடம் சொல்லியேக் கொடுப்பவர் ஒருவர்
    பகுத்து கில்லியாய் விளக்குபவர் ஒருவர்

    பாரினில் பயிற்சியாளர் சிறந்தவர் கேட்பின்
    படபடவென்று பண்ணியே காட்டுபவரே

    அவரினும் சிறந்தோர் எவரென கேட்பின்
    அரிது அரிது அவர் போல் கிடைப்பது அரிது

    பயில்வோனை புரிந்து அவன் திறன் அறிந்து
    பரிவுடன் ஊக்குவித்து செய் திறன் பார்த்து

    பாராட்டி ஆக்கம் பெறச்செய்வோரே ஆசான்
    அருமை சிற்பி அவரே வாழி வாழியவே!

    Last edited by Muralidharan S; 13th May 2015 at 08:58 AM.

  15. Likes chinnakkannan, venkkiram liked this post
  16. #1728
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வாழியவே பல்லாண்டு காலம் இந்திய கதை கேட்க வந்த நீங்கள் வாழியவே
    குறுக்கு வழியை தேடி தேடி நெடுஞ்சாலைகளை பாலையாக்கும் கதை கேட்க வந்தவர்
    வாழிய வாழிய வாழிய வாழியவே ஆ ஆ ஆ ஹ அ ஆஹ ஹா



    பிறக்கும் போது அழுது பிறப்பான் அடுத்த குழந்தையின் வளம் பார்த்து
    முகம் பார்த்து சிரிப்பான் ரூபாய் நோட்டுக்களை காட்டினால் ,
    காந்தி படம் என்பான்
    தளிர் நடை பயில்வான் அடுத்தவர் பொருள் கவர



    பள்ளி செல்வான் அடுத்து கெடுக்க கோள் சொல்லி கொடுக்க
    மதிப்பெண் தேடி பிறர் அறிவை பிரதியெடுப்பான்
    சமூக சலுகை நாடி சாதியிலும் பொய்யுரைப்பான் பிறர் இடம் கவர்வான்
    சலுகை பெற்று வாழ்ந்தாலும் சமூக பொறுப்பற்று வீழ்வான்
    பதவி சுகம் தேடல் ஊழல் லஞ்ச வாழ்வுக்காய் மனித சிலைகளுக்கு மாலை


    சொச்ச நேரம் நடிகனுக்கு பாலபிஷேகம்
    கடவுள் சிலைகளுக்கு மரியாதை களவாடி அந்நிய சந்தைகளில்
    பகுத்தறிவு சுயநலவாதிகளுக்கு தேர் வடம் இழுப்பது
    சகமனிதன் உயரம் தொட்டால் பொறாமையால் அவன் வீழ்ந்து தன்னிலை வர பிரார்த்தனை
    சக மனிதனால் உயரம் கண்டு அவனையே வீழ்த்தும் திறன்
    இருபதிலிருந்து அறுபது வரை ஒய்வூதியம் அறுபதிலிருந்து வீட்டிலிருந்து அதையே
    ஓஸி என்பது கீதை அதுவே அவன் பாதை



    நமது தேசிய தாவரம் புல்லுருவி கொடி
    தேசிய மொழி தடுமாறும் கலப்பு மொழி
    தேசிய மிருகமாய் சக இந்தியன்
    தேசிய நோட்டு அயல்நாட்டு கள்ளம்
    தேசிய விளையாட்டு சாதி சண்டை
    தேசிய பொழுது போக்கு நதிகளை தடுத்தல்
    தேசிய குணம் பல்லிளிப்பு பசப்பு



    அன்னியனால் இணைக்க பட்ட ஒட்டு செடியாய் பாரதம்

    இந்நாளில் இணைப்பு பெற மேற்சொன்ன அதிசயங்கள்



    பாரத மணிக்கொடி வாழ்கவே, கதை கேட்ட நீங்களெல்லாம் வாழியவே
    இதுக்கு பிறகும் ஆசையிருந்தால் மானம் துறந்தால் மரியாதை கெட்டு

    வாழிய வாழிய வாழிய வாழியவே
    Last edited by Gopal.s; 14th May 2015 at 06:52 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  17. #1729
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வாழியவே என் சக மானிடன் வாழ்த்தும் பக்குவம் வந்து சேர்ந்ததே

    தாழியை உடைத்தனர் சமூக வெண்ணை திரண்டு வருங்கால்

    ஊழியை நோவதில் எப்பயன் கோழியையும் ஆட்டையும் பண்டமாற்றி

    நாழிகை பார்க்காமல் நாளோட்டி வந்த உழைக்கும் வேட்டை விவசாயிகள்



    பண்டமாற்றாய் மாறியது பணமென்னும் பிண பேய் தங்க மஞ்சள் மாயை

    கண்டமாட்டில் பல தெய்வ தூதர்கள் வந்து சாதி மத பேய்களை கண்டு

    தண்டமான வீண் போதனைகளால் பிரித்தனர் சக மானுடனை சகதியில் அமிழ்த்தனர்

    மண்டையில் ஏற்றினர் மாபெரும் கொலை வெறியை இன மான உணர்வாக





    கோயிலும் அரமணையும் அதிகார பூசலுக்காய் இணைய பிணங்க மக்களோ

    நாயினும் நலிந்து மிராசுகளின் அடிமைகளாய் உழைப்பை பங்கிட்டது அரசு மதம் மிராசு

    நோயினும் கொடிதான நன்னெறி போதனைகள் உண்டி காயினும் களவு ஆகாது

    பாயினில் படுத்தால் தூங்கி வாழ்ந்தவன் மிராசுவின் வாயிலில் படுத்து காவலுமாயினர்



    அன்னியமானேன் எந்தன் நிலத்துக்காய் எந்தன் உழைப்புக்காய் எந்தன் செல்வத்துக்காய்

    அன்னியனானேன் எந்தன் இனத்துக்காய் எந்தன் குலத்துக்காய் கோடரியானேன்

    விண்ணிய வனத்துக்கு பெய்யும் வானத்துக்கு நெய்யூரும் ஊற்றுக்கு காற்றுக்கும்

    தண்ணிக்கும் வரி போட அரசு துணையாய் நின்றன ஆலயம் ஆண்டவன் ஆக்கிரமிப்பு



    புண்ணியத்துக்கும் பாவத்துக்குமே விலை வைத்து விற்பனை கையறு நிலை

    பண்ணியதெல்லாம் நானல்ல வினையருப்பது நானே யாரிடம் சொல்ல கதவு பூட்டி

    கண்ணியம் துறந்து சகமனித நேசம் துறந்து யந்திரங்களை சோதரமாக்கினேன்

    எண்ணியும் காணாத விந்தையாய் மனிதனுக்கு மனிதனே போட்டி இனவழிப்பு



    நாணுகிறேன் என்னை கண்டு நான் பூட்டிய ஆடை உண்ணும் உணவு வசிக்கும் இருப்பு

    பேணுகிறேன் என்னாலல்ல சக மனித தெய்வ அரை வயிறு உண்ட உழைப்பால்தானே

    வேணுமென்ற செல்வம் தந்தால் போகுமோ தெய்வங்களுக்கு சாத்தான்களுக்கே பங்கீடு

    காணுகிறேன் கடவுளை கண்ணால் இன்றே அந்தோ அவனுக்கோ எதுவுமில்லை வெறுமை
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  18. Likes venkkiram liked this post
  19. #1730
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    வெறுமை பரவிய சூழல்
    கைகூடாமல் போன காதல்
    விரக்தி கவ்விய எண்ணம்
    நிராகரித்துச் சென்ற காதலன்
    கோபம் தெறிக்கும் நினைவு
    கொஞ்சிப் பேசிய பொழுதுகள்
    விவேகம் கொண்ட உள்ளம்
    வீழ்ந்திடாமல் வாழ்ந்து காட்டு
    தீர்க்கம் அடைந்த பார்வை
    வெறுப்பைச் சுமக்கா வாழ்க்கை
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

Similar Threads

  1. kavidhaikku kavidhai matrum Pattuku pattu
    By Oldposts in forum Poems / kavidhaigaL
    Replies: 1486
    Last Post: 23rd December 2010, 03:53 PM
  2. Bharathi kavidhai
    By Kanmani in forum Poems / kavidhaigaL
    Replies: 1
    Last Post: 16th August 2005, 06:54 PM
  3. edhir pattu no: II
    By kanaga arumugam in forum Poems / kavidhaigaL
    Replies: 1
    Last Post: 31st March 2005, 10:59 AM
  4. edhir pattu
    By kanaga arumugam in forum Poems / kavidhaigaL
    Replies: 3
    Last Post: 2nd February 2005, 10:03 PM
  5. kanavilum kavidhai
    By mohans in forum Poems / kavidhaigaL
    Replies: 7
    Last Post: 28th December 2004, 01:29 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •