Page 168 of 191 FirstFirst ... 68118158166167168169170178 ... LastLast
Results 1,671 to 1,680 of 1901

Thread: kavidhaikku kavidhai matrum Pattuku pattu-2

  1. #1671
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    பற்றினை அறுக்க சொன்னார் வான பிரஸ்தம் சந்நியாசம்

    பற்றினேன் பரமனின் தாழ் எச்சுவையும் வேண்டேன் இனி



    வற்றிப்போன வாய்க்கு ஒரு வாய் கொக்கு மாக்கு கோக்கு

    முற்றிப்போன பசிக்காய் பர்கர் பிஸ்ஸா டபாஸ்கோ ஸாஸ்



    வற்றிப்போன புரத குறைவு கால்களை காட்டி அரைநிஜார்

    சுற்றிபோன சுற்றம் துறந்து அமர்ந்தேன் கணினி மேசை



    பெற்றுபோட்ட ஒரே மகளின் வலை மடல் மூன்று மாதம்

    சற்றுவிரைவில் அனுப்ப படும் உயர்வகுப்பு சீட்டு இரண்டு



    சுற்றினேன் பிரகாரம் சூழ உறவினருடன் அர்ச்சனை

    கற்றறிந்த நல்லோருடன் பெருமை பொங்க பயண விவரம்



    சுற்றவேண்டிய காண வேண்டிய இடங்கள் பற்றி கூகல்தேடல்

    வற்றாத சுரங்கமாய் செல்ல காண இடங்கள் சென்றேன்



    முற்றாக காணாமல் வெந்தேன் வந்தேன் பதினெட்டு மாதசிறை

    பெற்றவள் வடிச்சுகொட்ட துணி துவைக்க பாத்திரம் விளக்க



    உற்றவனோ சுற்றுவேலை வேலை வால்மார்ட் வாங்குபணி

    பற்றறுத்தேன் பாசமறுத்தேன் அடுத்த அழைப்பு வரும்வரை.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  2. Likes chinnakkannan liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1672
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    இதுதான் பாதையெனப் பயணித்து வாழ்ந்து முடித்தவர்கள்
    இயல்பாய் சிரித்தவண்ணம் சுவற்றில் தொங்க
    எதுதான் பாதையெனத் தேடியே ஓடிக்கொண்டிருக்கும்
    எந்திரமனிதர்கள் இளைப்பாற இடமில்லாமல் தவிக்க
    காலச் சக்கரமோ இரு தலைமுறைகளுக்குமே சமச்சீராய்
    பெருவெளியில் இயங்கிக் கொண்டே இருக்கிறது
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  5. #1673
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,166
    Post Thanks / Like
    ஆஸ்திகர் வேட ஒப்பனை இப்போ பிரபலம்
    திருத்தமாய் தீற்றிய திருநீறு நெற்றியில்
    சிலருக்கு குங்குமத் திலகமும் நடுவினில்
    விரைந்து கும்பிடும் கரங்களின் பணிவில்
    அசந்துதான் போகிறேன் வேட பொருத்தத்தில்
    நடிக்கத்தெரியாத நானோயிங்கு மக்கு மாணவி
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  6. #1674
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    மக்கு மாணவி தான் அவள்..
    எதைச் சொன்னாலும்
    குறைந்தபட்சம் நாலுதடவை சொன்னபிறகுதான்
    ஏறும் என்றால் அதுவுமில்லை
    முழுக்கச் சரியாய்ப் போட்டுவிட்டு
    விடையில் தப்பு பண்ணுவாள்..

    தனிக்கல்வி தான் என்றாலும்
    கோபம் எனக்கு வந்ததால்
    நன்றாகக் காதைத் திருக
    பரவாயில்லை மிஸ்
    எப்படியும் வர்ற பங்குனில கல்யாணம்
    பண்ணிடுவாங்க
    எனக்கோ கூட்டக்கழிக்க தெரியும்
    அது போதும்

    சொன்னாற்போல
    ப்ளஸ் ஒன் முடித்த லீவில்
    அவளுக்குக் கல்யாணம்
    பெற்றோர் அழைப்பை வைக்க
    போனபோது குட்டியாய்ப் புன்னகை
    எங்க கணக்குடீச்சர் எனப் பெருமையாய்
    அறிமுகம்
    கொடுவாள் மீசை வேட்டிசட்டை மாப்பிள்ளையிடம்…

    திரும்பும் போது அவள் அம்மா சொன்னார்..
    நாலு நாத்தனார் மூன்று மச்சினனாம் அவளுக்கு
    இவ தான் மூத்தவளாம்
    சுதானமா இருக்குமா என்ன தெரியலையே
    அவர் கவலை
    எனக்குத் தொற்றிக்கொண்டு கல்யாண மண்டபத்திலிருந்து
    வீடுவரை இருந்தது..

    சில வருடங்கள் கழித்து
    வேறு ஊருக்கு மாற்றலாகி
    சென்னை எதற்கோ சென்றபோது
    சந்தித்தேன் அவளை..
    அதே மாணவிதான்..சற்றே புஷ்டியாய்
    தொங்கத்தொங்க நகைகள்..அடுக்கிய வளையல்கள்
    மின்னும் பேசரி..
    பட்டுப் புடவை..யானை பார்டர்..ஆரெம்கேவியா..
    அவள்தானா..இல்லை..

    அவள் தான்..
    ஹாய் மிஸ்..
    அதே புன்னகை..
    என்னடி இவளே எப்படி இருக்க
    நான்மல்லிகா இல்லை மிஸ் மாதவி
    மறந்துட்டீங்களா..பரவாயில்லை..
    நல்லா இருக்கேன் மிஸ்..
    நாலு நாத்தனாருக்கும் கல்யாணம் ஆயிடுச்சு
    தம்பிங்க மூணு பேருல ஒருத்தன் டோஹா ஒருத்தன் துபாய்
    ஒருத்தன் பெங்களூரு
    பொண்ணு தேடிக்கிட்டிருக்கோம்..
    இவருக்கு பிஸினஸ்..தோ… அந்த மால்ல தான்
    நாலு கடை..
    ரெண்டு கடை நாந்தான் பாக்கணுமாம்
    கணக்கு வழக்கெல்லாம் நாந்தேன்..
    அட்மினும் நல்லா செய்றேனாம்..
    குழந்தையா மிஸ்..எனக் கேட்டு கன்னஞ்சிவந்து
    இப்பத் தான் நாலுமாசம்..
    எல்லாம் செட்டிலாய்ட்டு வச்சுக்கலாம்னு
    இருந்தோமா..இப்பத் தான் வேளை..
    நீங்க செளக்கியமா..

    என் கொஞ்சூண்டு கசங்கிய துப்பட்டாவினால்
    கண்ணாடியைத் துடைத்த போது
    அவளைக் காணோம்
    பார்த்தால்
    அருகில் வந்த பிஎம் டபிள் யூவில் அவள்..
    மிஸ் ட்ராப் பண்ணட்டா..
    வேணாம் மல்லிகா ஸாரி மாதவி..

    பை மிஸ்
    ஐ வோண்ட் ஃபர்கெட் யூ இன் மை லைஃப்..

    நானும்…..!
    Last edited by chinnakkannan; 21st April 2015 at 09:48 PM.

  7. #1675
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நானும் நாணும் படி ஒரு நற்காதல் பருவம் தவறி
    காணும் யாவரும் தவறாக எண்ணவே இயலாமல்

    ஊரும் உறவும் அறிய இயலா ஒன்று இதற்கு
    ஆறும் அற மீறல் என்றில்லை விடலை மனதுடன்

    உடலை நாடா உன்மத்தம் பித்து இத்தனைக்கும்
    விடலையவள் அழகில்லை குணவதியும் இல்லை

    முப்பது வருட வித்யாசம் காதலை சொல்ல விடவில்லை
    தப்பாது அறிவு தப்பது என்று சொன்னாலும் இதயம் தள்ளும்

    ஒருநாள் காணுதல் இல்லையேல் மனமெங்கும் அவளே
    மறுநாள் கண்டதும் மொழிமோ பார்வையில் ஓராயிரம்

    இந்த அலுவல் மனைவி என்னை அறிவாள் என் எண்ணம்
    சொந்தமில்லை என்றாலும் சொக்கிநிற்பாள் சுணங்குவாள்

    எப்போதுமே இற்று போகும் ஒட்டுத்துணி உறவு கழலும் கணம்
    தப்புத்தான் என்றாலும் கணமதை மனதோடு இணைத்து இளமை

    காணும் முகமும் மாறும் உடையில் நடையில் உல்லாச இளமை
    பேணும் கணங்கள் இலவச இன்ப சுற்றுலா காணும் வளமை

    என்று வேண்டுமானாலும் திருமண பத்திரிகை வரும் மொய்யுடன்
    சென்று கண்டு பொய்யுடன் வாழ்த்து தந்து வெறுமையாய் நான்
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  8. #1676
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    வெறுமையாக நானிருந்த காலமென்று கேட்டால்
    …வெகுளியாய்த்தான் பேசிடுவேன் எதுவென்று நானே
    பொறுமையுடன் கற்றிருந்த இலக்கணத்தின் பாடம்
    …போடுதற்குக் கற்பனையும் வந்திடுமா என்று
    எருமையெனச் சோம்பிநின்று மோட்டுவளை பார்த்தால்
    ..ஏகடியம் செய்துகொஞ்சம் நகர்ந்துவிட்ட பல்லி
    உறைந்துவிட்ட பயத்தினிலே ஒடுகின்ற பூச்சி
    …உளமாரச் சிரித்திட்ட நேரம்தான் அன்றோ..

  9. #1677
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அன்றோ நான் கனவுகளை மென்றவன் அதிலேயே நின்றவன்
    இன்றோ நான் கனவுகளை தின்றவன் மிச்சத்தையும் கொன்றவன்

    வையத்துள் வாழ்வாங்கு வாழ கம்யுன் கனவு இடதுசாரி விடலைக்கு
    கையதில் அடங்கா பொருள் குவித்த அதிபதியாம் சுடலைக்கு நிற்பவன்

    அக்கினி குஞ்சாக சமூகம் காக்க முதல் நிலையில் மூச்சடக்கி நின்றவன்
    திக்கினி இல்லை என்று தன் மக்களுக்கு சொத்து தந்து பேச்சடங்கி வென்றவன்

    அன்றொரு நாள் அதே நிலவில் கடற்கரை மணலில் வீதிநாடகம் விடுதலைக்காய்
    இன்றொருநாள் இதே நிலவில் விலைமகளுடன் மன இறுக்க விடுதலைக்காய்

    பூர்ஷ்வாக்களை சாடி எல்லாரும் எல்லாமும் பொதுவுடைமை பேசி கையுயர்த்தி
    கார்சாவிகளுக்கு புது அலமாரி தேடி தேவைக்காய் விற்கப்படும் மனைகள் கைகாட்டி

    மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ என்ற காரிகைகளின் நெஞ்சம் தஞ்சமானவன்
    மாறியது மஞ்சம் மாற்றியது நானே என காரிய மங்கைகளின் கொஞ்சும் பொருளானவன்

    கனவு சாகாமல் தினமும் செத்தேன் இருள் வந்ததும் விரிப்பு கண்டதும் உலகு துறந்தேன்
    நினைவு சாகாமல் நித்திரைக்கு வேண்டி மாத்திரை நாடி இருளில் கனவுக்கு ஏங்கி மதுவுடன்

    இளமை வாழ்க்கையில் கடவுள் பிறப்புடன் தந்த சேமிப்பு செல்வம் செலவழியா கனவுகள்
    வளமை கண்டும் வாழ்க்கையில் வென்றும் கனவு சேமிப்பை கரைத்து தின்று வடிவம் மட்டும் வாழ்கிறது
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  10. #1678
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,166
    Post Thanks / Like
    வாழ்கிறது சாம்பல்
    விசித்திரமான உலகில்
    எரிமலை பொங்குகிறது
    அக்னி ஆறு வழிகிறது
    எதுவும் பொசுங்கவில்லை
    அகங்காரம் அழியவில்லை
    அநீதி இறக்கவேயில்லை
    சுடுகாட்டில் பூஞ்சோலை
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  11. #1679
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    Chennai
    Posts
    0
    Post Thanks / Like
    பூஞ்சோலை ஒன்று பொன்மாலை பொழுது
    பூங்கா என பொய்யான போர்டு போட்டு
    போய்த் தான் பார்க்கவே ஆசைப் பட்டு
    போனேன் உள்ளே வந்தேன் வெளியே

    பொத்திக்கொண்டே கண் மூக்கு காது
    போதாது போதாது மரஞ்செடி கொடி அங்கே
    புதர்கள் நிறைய புதரிடை மனிதர் பதராய்
    போகிற போக்கில் இருந்தது நிறைய

    பூப்பாய் காணுமிடமெல்லாம் கழிப்பிடம் தவிர
    குடிமன்னர் குப்பியும் சூதுமாய் கொண்டாட்டம்
    கொண்டதே கோலமாய் கோலாகலமாய்
    குறைவேயில்லை நமக்கு இத்திருநாட்டில் !
    Last edited by Muralidharan S; 22nd April 2015 at 02:55 PM.

  12. #1680
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    இத்திருநாட்டில் எங்கெங்கும் மாந்த ரெல்லாம்
    ..ஏற்றமிகு நற்சிந்தை நெஞ்சில் கொண்டு
    வித்தைகளும் வேலைகளும் கற்று மேலும்
    ..வீரமுடன் பலசெயல்கள் செய்து இங்கே
    பத்திரமாய் அனைவ்ருமே வாழ்வ தற்கு
    ..பலவிதமாய்த் துணைநிற்க அடடா நன்று
    நிச்சலனம் மக்க்ளவர் நன்மை என்று
    ..நேர்மையுடன் ராமன்வாழும் கால்ந் தானே..!

Similar Threads

  1. kavidhaikku kavidhai matrum Pattuku pattu
    By Oldposts in forum Poems / kavidhaigaL
    Replies: 1486
    Last Post: 23rd December 2010, 03:53 PM
  2. Bharathi kavidhai
    By Kanmani in forum Poems / kavidhaigaL
    Replies: 1
    Last Post: 16th August 2005, 06:54 PM
  3. edhir pattu no: II
    By kanaga arumugam in forum Poems / kavidhaigaL
    Replies: 1
    Last Post: 31st March 2005, 10:59 AM
  4. edhir pattu
    By kanaga arumugam in forum Poems / kavidhaigaL
    Replies: 3
    Last Post: 2nd February 2005, 10:03 PM
  5. kanavilum kavidhai
    By mohans in forum Poems / kavidhaigaL
    Replies: 7
    Last Post: 28th December 2004, 01:29 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •