Page 165 of 191 FirstFirst ... 65115155163164165166167175 ... LastLast
Results 1,641 to 1,650 of 1901

Thread: kavidhaikku kavidhai matrum Pattuku pattu-2

  1. #1641
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,158
    Post Thanks / Like
    நிர்மூலமாய் ஆனதன்று பழையதோர் உலகம்
    நிர்மாணமானது அதன்பின் புத்தம்புது பிரபஞ்சம்
    அதுவேதான் சூனியத்தின் மாபெரும் சூட்சுமம்
    ஒன்றுமில்லாமல் ஆகி பின்னர் பூரணம் பிறக்கும்
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1642
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பிறக்கும் போதே சொல்லிவிட்டார்
    ..பேதை நானும் உனக்கென்று
    அடடா அழகுப் பூஞ்சிரிப்பு
    …அழகி இவளும் உனக்கென்று
    பதமாய்ச் சொன்னார் உன் அம்மா
    …பார்க்க மறுத்தீர் சிறுவயதில்
    இதமாய் இளமை பூத்திருக்க
    …இனிதாய்ப் படித்தேன் வளர்ந்துவிட்டேன்

    வந்தேன் மாமா உமைத்தேடி
    ..வாகாய்ப் பேச வரச்சொன்னால்
    செந்தேள் கொட்டாய் ஒருபார்வை
    …சேர்த்துக் கோர்த்த ஒருசிரிப்பு
    பெண்ணில் நானும் அழகிலையா.
    ..பெரிய படிப்புப் படிக்கலையா
    எண்ணந் தன்னில் இன்னொருத்தி
    ..எளிதாய் உமக்கு அமைந்ததுவா..

    செல்லக் கிளியாய் சின்னத் திமிராய்
    .கள்ளச் சிரிப்பாய் கனிவாய்ச் சிவப்பாய்
    வெல்லத் துளியாய் வேகங் கூட்டி
    ..மெல்ல இங்கே அழைத்தாய் பெண்ணே
    பொய்யோ என்னும் இடையா என்றால்
    …மெய்யே என்னும் பார்வை வீச்சு
    சில்லாய்த் தெறித்த தேங்காய் வெண்மைத்
    ..தூக்கல் தெரியும் பற்கள் தன்மை

    வந்தால் எண்ணம் ஆட்டங் காண
    .;..மனதைத் திறந்து சொன்னாய் கண்ணே
    உன்னை மறந்தே இருப்பது என்றால்
    ..ஊரை என்னை மறந்தாற் போல
    திண்ணம் வேலை சிலமா தத்தில்
    ..திகைந்தால் நானும் வருவேன் உன்னூர்
    கண்ணில் நெஞ்சில் கலக்கம் விட்டு
    …கனிவாய், கனிவாய் கொடுப்பாய் முத்தம்…!

  4. #1643
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,158
    Post Thanks / Like
    முத்தம் தந்தான் வம்பாய் வெறியுடன்
    விடவில்லை என் கன்னமிரண்டையும்
    கண்ணயர்ந்த என் மேல் படர்ந்தான்
    முகத்தை முழுதாய் நனைத்துவிட்டான்
    எழ விடவும் மறுக்கிறான் போக்கிரி மகன்
    வேலை குவிந்து கிடக்கென நான் தவிக்க
    ரசித்து மகிழ்கிறான் பெரிய கள்ளன்
    இரவு லீலையின் பொல்லாத கண்ணன்
    Last edited by pavalamani pragasam; 11th April 2015 at 06:42 PM.
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  5. Likes chinnakkannan liked this post
  6. #1644
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    Chennai
    Posts
    0
    Post Thanks / Like
    கண்ணன் சொன்னது கீதையில்
    குணத்ரய விபாக யோகத்தில்
    குணங்கள் மூன்று மாந்தரில்
    குன்றியோ கூடியோ இருக்குமாம்

    சத்வம் ரஜஸ் தமஸ் என்று
    சாகச கண்ணன் சாதித்தது
    சத்வ குணம் அதிலே சிறந்தது
    சாத்வீகம் சத்தாயதில் பொதிந்தது

    சத்துவ குணம் முனிவர் குணம்
    சமச்சீர் நோக்கும் தெளிவும் உண்டாம்
    ராஜச குணம் அது ராட்சச குணம்
    கோபம் தாபம் குழப்பம் உண்டாம்

    தாமச குணமோ சோம்பியின் இனம்
    தள்ளும் கீழே எந்நாளும்
    தயக்கம் மயக்கம் அதில் இருக்கும்
    தமோ குணம் அதுவே அஞ்ஞானம்
    Last edited by Muralidharan S; 11th April 2015 at 09:00 AM.

  7. Likes chinnakkannan liked this post
  8. #1645
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    அஞ்ஞானம் தான்..
    என்ன பண்றது…

    ரோசிச்சா
    பலவருஷம் முன்னால
    தாவணி போட்டப்ப
    அம்மம்மா சொல்லுவாக
    நேரத்தோட பள்ளிக்கோடம் போய்
    நேரத்தோட வா..
    இளந்தாரிகளப் பாக்காதே
    பேசாத
    சிரிக்கக்கூடசிரிக்காத
    குனிஞ்ச தல நிமிராதம்பாக


    இளவட்டப் பொண்ணுக்கு
    எதுக்கு இத்தினி அலங்காரம்..
    ஜிம்ப்பிளா இரு புள்ள
    கல்யாணங் கட்டற்வரைக்கும்னாக

    அம்மா ஒண்ணும் சொல்லாது
    பாட்டி சொல்றதக் கேளு
    ஒன் நல்லதுக்குத் தானேம்பாக
    எப்ப நான் ஆச்சி பத்தி
    கம்ப்ளோண்டு பண்ணாலும்..

    ம்ம்
    எல்லாம் ஆச்சு
    கல்யாணங்கட்டி
    ஆறு பெத்து
    ரெண்டப் பறிகொடுத்து
    நாலையும் வளத்து
    ஆளாக்கி கல்யாணமும் பண்ணி
    அதுகளுக்கும் பொறந்து
    அதுங்களையும் வளத்தாச்சு

    அதுவும் மூத்த பேத்தி இருக்கே
    கோல்ட்ல பண்ண சிற்பம் மாரி..
    தகதகன்னு இருக்கு
    ப்ளஸ்டூ படிக்கப் போகுது
    சாக்ரதையா இருபுள்ள
    ரோட்ல நடந்துக்கிட்டே
    அந்த குட்டிப் போனை நோண்டாத..
    வெரசா நட
    கலகலன்னு சிரிக்காதேன்னு
    சொன்னா
    மூத்த மருமவ
    என்னத்திட்டறா..

    சும்மா கிடங்க அப்பத்தா
    அதுங்களுக்குத் தெரியும்
    ஒங்க காலமில்ல இது
    அதுவும்
    கராத்தே கிளாஸ்லாம் போய்ருக்கா
    ஸ்கூல்ல கிரிக்கெட்டீம் காப்டன்
    சிம்ல போய் எக்ஸர்ஸைலாம் பண்ணுதா..
    எம் பொண்ணுபத்தி எனக்குத் தெரியும்
    சும்மா சும்மா குத்தம் சொல்லாதீய
    பாவம்
    ராவானா கண்ணால ஜலம் சொட்டுது
    நா என்ன தப்புப் பண்ணிட்டேன்னு
    பாட்டி திட்டுதுன்னு புலம்பறா…
    இந்தாங்க ஒங்க கேப்பக்கஞ்சி
    டிவி போடறேன்
    நீங்க பாக்கற சீரியல் பாருங்க..

    இது நல்லாஇருக்கே
    இவ சொன்னா
    நாஞ்சும்மா இருக்க முடியுமா
    அஞ்ஞானம் இருக்க விடுமா
    நா அப்படித்தான் சொல்லுவேன்
    போடி இவளே
    எனக்கொண்ணும் ஒண்ணோட
    கஞ்சி ஓணாம்னு ரூமுல ஒக்காந்தா
    உள்ள கிளாஸோட வந்து முறைக்கா..

    குடிங்கம்மா.. ந்னு கொஞ்சம் தன்மையா
    சொன்னதுனா குடிக்க ஆரம்பிச்சேனா

    கிழவிக்கு வயசாய்டுச்சுன்னு முணுமுணு..

    சொல்லட்டுமே…எனக்கென்னா…!

  9. #1646
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,158
    Post Thanks / Like
    எனக்கென்னா குறைச்சல் இப்போ வயசா ஆச்சு
    என்ன ஆறுதானே ஆகுது அது கூட ஒரு அறுபது
    முன்னாடி உள் நாட்டுக்குள்ள அடிக்கடி பறந்ததுண்டு
    மகன்கள் வீடுகளுக்கு வான்வழியாய் சென்றதுண்டு
    மொதமொதலா இன்னும் அதிக உசரம் அதிக நேரம்
    பறந்தா மூட்டு கொஞ்சம் அல்லது அதிகம் நோகும்
    பரவாயில்ல பேராண்டிகளுடன் உல்லாசமாய் விடுமுறை
    அடுத்த மாதம் இந்த தேதி அமெரிக்காவில் மகள் வீட்டில்
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  10. Likes chinnakkannan liked this post
  11. #1647
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மகள் வீட்டில் இப்போது முதியோர் இல்லம் செல்லும் நாளை எண்ணி
    மகளுக்கு வீடொன்று ஒன்று மகனுக்கில்லை மருமகளுக்கே கேரள

    பாரம்பரிய மருமக்கள் தாயம் மருமகள் வடிவாய் நண்பர்களும் மகள்களுடன்
    ஆரம்ப நாட்களில் மனைவி சொன்னது நமக்கென்று ஒரு வீடு வீடென்று எதனை

    சொல்வீர் அதில்லை வீடு அதொரு ஆதிகால குகை உனக்கென்றே உள்ள அரண்
    செல்வீர் அதனுள் ஓய்வு நிலையில் அந்நியர்கள் அனுமதிக்க படார் உமதே அது

    அது ஒரு அந்தஸ்து மகனுக்கும் மகளுக்கும் வரன் பார்க்கும் போது வந்தவர்கள்
    பொதுவில் கேட்டது சொந்த வீடா விடையின்றி குன்றிய நாட்களில் நிலைதெளிவு

    வாடகை வீடுகளில் பிறந்து முதல் பிறந்தது முதலாய் சொந்தம் என்பது சுற்றோர் மட்டும்
    பூடகமாய் பேசி வீட்டின் சொந்தம் குடிக்கூலி ஏற்றும் கால் ஒழுகல் பணி தனதில்லை

    சுவர்களில் ஆணி கிறுக்கல்கள் என கூறி அனுமதியின்றியே அடுத்தோற்கு சுற்றி காட்டி
    எவர் இவர் என்றரரிய கூட விடாமல் மறுநாள் தகவல் வெளியேறு என்று மகனின்

    சொந்த வீட்டில் கால் மேல் கால் போட்டு செய்தி தாளுடன் தேநீர் திட்டம் தவிடு பொடி
    இந்த இடம் உனதில்லை என உரைக்கவில்லை மருமகள் ஒரு படுக்கறையே எங்கப்பாம்மா

    நாளை வருகை நீங்கள் போகலாமே மகளின் இல்லம் சொல்லி அனுப்புறோம் அறை காலியாகி
    வேளை வருங்கால் மகள் வீட்டில் மூன்று வருடமாய் அறைதான் இன்னும் காலியில்லை

    பாவம் மாப்பிள்ளையின் பெற்றோரும் மகள் வீட்டிலே அறிக்கை காத்திருப்பு சமன் ஆக
    தேவைஒரு முதியோர் இல்ல அறை விவசாய குடி போல மகனை மூலதனமாய் கண்டு

    திட்டமிடா ஓய்வில் நாள்தோறும் தேவையில்லா ஜீவனம் புழு போன்ற ஏளனம் வருடம்
    தட்டாமல் பிறந்த நாள் வருங்கால் கிழிந்த ஆடைகளுக்கு ஓய்வுவருமா என குலுக்கல்சீட்டு

    கழிசடை சமூகம் கொள்ளை காரர்களுக்கும் கந்து வட்டியாருக்கும் கற்பழிப்போர்க்கும் கருணை
    பொழிந்து கம்பளம் விரிக்கும் திட்டமிடா நடுத்தரர் தூக்கிற்கு தயார் எனினும் அதனிலும் கொடிய

    வாழும் தண்டனை அனு தினமும் இன்னுமா வாழ்கிறாய் என்ற ஏளன பார்வை ஆறுதல்
    சூழும் கணங்கள் பெற்றோரை இல்லம் சேர்த்த சுற்றம் பேசும் பட்டி மன்றங்கள் முதியோரை மதியுங்கள்
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  12. #1648
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    மதியுங்கள் எனச்சொன்னார் பாட்டி
    மனமார உதாரணங்கள் காட்டி
    பேரன்கள் படபடத்து
    பெரிதாக யோசித்து
    கத்தினரே ஓசைதனைக் கூட்டி

    சொன்னவிதம் புரியலையா கூறு
    பெரியவங்க வயசைத்தான் பாரு
    பலவிதமாய் அனுபவங்கள்
    பக்குவமா உழைச்சிருந்தார்..
    மூளைக்குள் ஏற்றிப்போய்ச் சேரு..

    சின்னவங்க நாங்கதானே பாட்டி
    சிறுவிஷமம் செய்வதனால் நாட்டி..
    எங்களுக்குப் புரியாத
    ஏதேதோ கதைகளையே
    சொல்லலாமா நீயேசொல் பாட்டி

  13. #1649
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,158
    Post Thanks / Like
    பாட்டி என்றால் பல் போய் பரிதாபமாய்
    கோல் ஊன்றி சுருங்கின கொட்டையாய்
    இளம் வயதில் பார்த்த புத்தகச் சித்திரங்கள்
    தந்த ஒரு படிமம் மூளையில் அழியாதிருக்க
    போகுமிடமெல்லாம் 'மரியாதை' மிகுந்த இந்த
    மாநகரில் எனை பாட்டி என சிறு பெண்களழைக்க
    கோபந்தான் வருகுதே மனம் வருந்துதே துவளுதே
    என்றும் பதினாறாய் நிற்கும் என் இளம்மனத்தாலே
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  14. #1650
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இளம் மனத்தாலே



    ஐஷ்வர்யாவை அபிஷேக்கிடமிருந்து அள்ளி சென்று சுவைக்க முடியும்



    ஐஸ்யர்வத்தை அம்பானிகளிடமிருந்து ஒரே நொடியில் கவர முடியும்



    வேற்று கிரகங்களுக்கு நொடியில் சென்று அங்கு தரையில் பாயிட முடியும்



    மாற்று வாழ்வில் புகுந்து காலிலிருந்து தலை வரை மாறி இன்பவாழ்வில் திளைக்கமுடியும்



    சற்றே மாற்றி மாற்றி முடிவெடுத்து எப்போதுமே சரியான திசை காண முடியும்



    சுற்றும் பூமியை நில் என்று ஆணையிட்டு அனைத்து வாழ்வையும் மாற்ற முடியும்



    கற்றும் பிறழ்ந்து வாழும் சுற்றோரை மற்றோரை கல்லெறிந்து கொல்ல முடியும்



    நினைத்தவுடன் கனவில் நினைத்த பெண்ணை அணைத்து பிணைந்து இணைய முடியும்



    வினை விதைத்து வினை அறுத்த பலன்களை கற்பனையில் கண்டு தீயோரை தீயில் இடலாம்



    இளம் மனம் இருக்கும் அறுதி இறுதி அவனவன் உள்ளத்திலே பதினாரிலும் எண்பதாவதும் மாற்றி வாழ்வதும்



    தளமிடுவதோ கனவோ கற்பனையோ அல்ல வாழும் கணம் வாழும் விதம் சூழும் எண்ணம்



    உலகை மாற்றி வளம் காணும் வித்தகனாய் விடலை பருவத்தில் இருந்தவன் அதே விடலையாய்



    கலக்கி வருகிறேன் மாற்ற மனதுடன் மண் புழுவையும் மாற்ற இயலாமல் அங்கீகரித்து சக வாழ்வில்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

Similar Threads

  1. kavidhaikku kavidhai matrum Pattuku pattu
    By Oldposts in forum Poems / kavidhaigaL
    Replies: 1486
    Last Post: 23rd December 2010, 03:53 PM
  2. Bharathi kavidhai
    By Kanmani in forum Poems / kavidhaigaL
    Replies: 1
    Last Post: 16th August 2005, 06:54 PM
  3. edhir pattu no: II
    By kanaga arumugam in forum Poems / kavidhaigaL
    Replies: 1
    Last Post: 31st March 2005, 10:59 AM
  4. edhir pattu
    By kanaga arumugam in forum Poems / kavidhaigaL
    Replies: 3
    Last Post: 2nd February 2005, 10:03 PM
  5. kanavilum kavidhai
    By mohans in forum Poems / kavidhaigaL
    Replies: 7
    Last Post: 28th December 2004, 01:29 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •