Page 15 of 191 FirstFirst ... 513141516172565115 ... LastLast
Results 141 to 150 of 1901

Thread: kavidhaikku kavidhai matrum Pattuku pattu-2

  1. #141
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பூரணத்தை முழுதாய்க் கொண்டே
    இருந்த தா இளையவன் சிரித்த சிரிப்பும்..?
    *
    அரியணை மேலே அண்ணலுமே
    அருகில் சீதை அமர்ந்திருக்க
    அனுமனும் பணிவாய்த் தரையினிலே
    அழகாய்த் தொழுதே அமர்ந்திருக்க
    பின்னால் கொற்றக் குடையைத்தான்
    பிடித்தே நின்ற இளயவனின்
    அருகில் வந்தாள் நித்ராவும்
    வ்ரவா நண்பா எனக்கேட்டாள்..

    லஷ்மணன் நினைவோ முன்னால்போய்
    லட்சியம் அடைய அவளிடமே
    ஈரேழ் ஆண்டுகள் முன்னாலே
    கேட்ட்தை நினைத்தே பார்த்ததுவே..
    *
    ’நித்ரா தேவி உந்தனைத் தான்
    நெஞ்சினில் பதித்து வணங்கிடுவேன்
    இன்றுத் தொடங்கி ஈரெழு
    ஆண்டுகள் எந்தன் அருகினிலே
    வராமல் இருந்தால் நான் மகிழ்வேன்
    அண்ணல் அண்ணி இவர்களுக்கு
    பணிவிடை செய்தே மகிழ்ந்திடுவேன்..”
    இளையவன் பணிவாய்க் கேட்டிடவும்
    மெல்ல்ச் சிரித்தே தான் சொன்னாள்
    ’ ஈரே ழாண்டுகள் நானுந்தன்
    அருகிலே என்றும் வரமாட்டேன்..
    ஆண்டுப் பொழுது கழிந்தவுடன்
    உடனே வருவேன் விடமாட்டேன்..
    இளைய லஷ்மணப் பெருமாளே..
    இனிதாய்ப் போய்வா’ என்றவள் தான்
    இன்று பட்டா பிஷேகம் என்றே
    நன்றாய் உணர்ந்தும் தான் கூட
    நல்ல சமயம் பார்த்தே தான்
    வருகிறேன் என்கிறாள் என்செய்ய
    என்றே மனதுள் நினைத்தபடி
    இளையவன் மெல்லச் சிரித்தனன்தான்..
    *


    பலரும் அங்கே பலவிதமாய்
    இளையவன் சிரிப்பைத் தான் நினைத்தார்..
    **
    நாட்கள் கோள்கள் எல்லாம் தான்
    முன்பே பார்த்தே தான் குறித்தீர்..
    அண்ணல் அரியணை ஏறத்தான்
    இவ்வளவு ஆண்டுகள் ஆனதையா..
    என்றே சிரிக்கிறான் என நினைத்தார்
    பிரம்ம ரிஷியான வஷிஷ்டரும் தான்..
    *
    எவ்வளவு கஷ்டம் தான்பட்டாய்
    இனிய சித்தி நீயும்தான்
    பரதன் அம்ர முடிந்த்துவோ..
    பாதுகை தானே ஆண்ட்து..
    என்றே நினைத்துச் சிரிக்கின்றான்
    என்றே நினைத்தாள் கைகேயி..
    *
    கோட்டைக் கிழித்தே தான்சொன்னேன்
    அண்ணி தாண்டாதே என்று..
    என்னைச் சொற்களி னால்கிழித்தே
    அனுப்பித் தாண்டினீர் என்னாச்சு..
    கஷ்டம் இல்லாதிருந்திருக்கும்..
    கனிவாய் என்சொல் கேட்டிருந்தால்’
    என்றே நினைத்துச் சிரிக்கின்றான்
    என்றே நினைத்தாள் சீதையும் தான்..
    *
    தம்பி உடம்பைப் பார்த்துக்கொள்
    ஒழுங்காய் உணவை உண்டாயா
    உறக்கம் நன்றாய்க் கொண்டாயா...
    ஈரேழாண்டுகள் உடன் இருந்தும்
    ஒருவார்த்தை இவனைக் கேட்ட்தில்லை..
    அதைத்தான் நினைத்துச் சிரிக்கின்றான்
    என்றே நினைத்தார் அண்ணலும்தான்..
    *
    லஷ்மணப் பெருமாள் யாரென்றால்
    அண்ணலின் அம்சம் தானன்றோ..
    பூரணம் என்ற பரம்பொருளைக்
    கிள்ளியே அங்கே நின்றதன்றோ..
    பூரண்ந்தன்னைக் கிள்ளினாலும்
    பூரணத்தைத் தான் அடையும்..
    அதுவே இறையின் விதியன்றோ..
    **
    பூத்த்து என்னவோ ஒருசிரிப்பு
    பலரது நினைவில் பல பூக்கள்..
    மலரச்செய்த லஷ்மணனை
    மயங்க வைத்தாள் நித்ராவும்
    சற்றே லஷ்மணன் கண்மூடக்
    குடையும் சற்றே சாய்ந்த துவே..
    *
    Last edited by chinnakkannan; 12th April 2011 at 03:15 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #142
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,249
    Post Thanks / Like
    சாய்ந்ததுவே சாம்ராஜ்யம்
    சாகச ராணியின் சிரிப்பில்
    பெண்பால் கவர்ச்சி வீழ்ச்சியா
    பலியானார் விசுவாமித்திரரும்
    சுட்டுவிரலில் ஆட்டி வைக்க
    சுண்டெலியாய் ஆணை மாற்ற
    வரம் வாங்கி வந்தவள்தான்
    வரலாறு உரைக்கும் உண்மை
    மோகினியே அமுதினைத் தா
    மோகத்தால் ஆணை அழிக்காதே
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  4. #143
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    அழிக்காதே..
    அழி..
    எதிர்ச்சொல் நேர்ச்சொல் விளையாட்டு
    சின்ன வயதில்
    அப்பாவிடம் விளையாடுவது பிடிக்கும்..
    கற்றுக்கொண்ட்தும் நிறைய..
    வளர்ந்த பின்னர் ஒரு நாள்.
    மனதிலிருப்பதைச் சொல்வதற்காக....
    எதிர்ச்சொல் விளையாடலாமா..டாட்...
    ‘காதலிக்காதே’ இதற்கு என்ன..
    ’சரி’ என்றார் அப்பா..!

  5. #144
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,249
    Post Thanks / Like
    அப்பாவுக்கு இன்று தாய் வேஷம்
    வக்கணையாய் சமைத்து ஊட்டி
    விளையாடிக் களித்துப் பின்னே
    கதை சொல்லி தூங்கவைத்து
    முழு நேர பிள்ளை வளர்ப்பு
    பொறுப்பான வீட்டு பராமரிப்பு
    இதுவும் புருஷ லட்சணமென்று
    இன்றைய அம்மா காட்டுகிறாள்
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  6. #145
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    காட்டுகிறாள் இயற்கை அன்னை
    தனது மனதிற்குள்
    பொங்கும் சீற்றத்தை..
    கடலைப் பொங்க வைக்கிறாள்
    பூமியை ஆட வைக்கிறாள்
    ஒரு நாள் அழித்தும் விடுவாள்..
    இது தெரியாமல்
    இன்னும்
    மண்ணின் மைந்தர்கள் என சொல்பவர்கள்
    போடுகின்றனர் ஆட்டம்..

  7. #146
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,249
    Post Thanks / Like
    ஆட்டம் போட்டோம்
    அன்று பாட்டி வீட்டில்
    கோடை விடுமுறையில்
    கூட்டமாய் உறவினர்
    கற்றோம் பல விஷயம்
    கூட்டமில்லை இன்று
    கலையும் திறனும் கற்பிக்க
    களமிறங்கும் மையங்கள்
    காசினை குவித்திட
    காலம் இது புதிது
    குழந்தைகள் வளரும்
    களமும் சவாலானது
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  8. #147
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    சவாலானது எனச் சொல்ல முடியாது..
    வரிசையாய் அடுக்கியிருக்கும் புத்தகங்கள்..
    இடமும் சின்னதாக இருக்கும்..
    கொஞ்சமாய் எடுத்துப் பார்த்து
    கீழே வைத்து
    அடுத்த்தைப் பார்க்க வேண்டும்..
    அடுக்கிலிருந்து தவறிவிழும்
    புத்தகங்கள் தூசு கிளப்பும்..
    சற்றே தும்மல் வரச் செய்யும்..
    இருந்தாலும்..
    பொறுமையாய்த் தேடினால்
    பொக்கிஷம் கிடைக்கும்..
    கல்கியின் அமரதாரா மணியத்தின் படங்களுடன்..
    சாண்டில்யனின் கடல்புறா பழைய லதாவின் ஓவியத்தில்..
    ஏர்போர்ட் ராகிர தமிழாக்கம்..
    கொஞ்சம் பழுப்படைந்த ஆங்கிலப் புத்தகங்கள்..
    தேர்ந்தெடுத்த்தைக்
    கடைக்கர் ர ரிடம் சொன்னால்..
    ஆர்வத்திற்கேற்ப விலை சொல்வார்..
    பேரம் பேசவேண்டும்..
    எனில் அப்போது கைச்செலவுப்பணம் குறைவு..
    முழுதும் வாங்க முடியாமல்
    சிலவற்றை தியாகம் செய்ய வேண்டும்...
    வாங்கியதை வீட்டில் எடுத்து
    ஒவ்வொன்றாய்
    படிக்கும் சுகம் இருக்கிறதே..அட்டா..
    இப்போது
    புதியவைகளையே வாங்க முடிகிறது..
    இருப்பினும்
    அன்று அப்படி வாங்கிய சந்தோஷம் இல்லை....
    வாங்கலாம் என்றால்
    பழைய புத்தக்க் கடைகளும்
    அவ்வளவாய் இல்லை..

  9. #148
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,249
    Post Thanks / Like
    இல்லை இன்று இலக்கணம்
    இயல்பாய் மலர்ந்து காய்த்து
    இனிப்பாய் கனிந்த காட்சி
    பொருத்தமான பருவத்தில்
    பூக்காத மணக்காத சூல்கொள்ளா
    பொருள் தேடும் பெண்பூவில்
    இருக்கிறதா ஈர்க்கும் அழகோ
    இனம் வளர்க்கும் சாரமோ
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  10. #149
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    சாரம் எல்லாம் அவிழ்த்து,
    எல்லா வேலைகளும் முடிந்து,
    வண்ணமயமாய்...
    புதியதாய் நடிக்கும் வெகு இளைய கதானாயகி போலப்
    பளிச்சென இருந்த்து..
    ம்ம்.இரண்டு வருடப் பழக்கம்..
    இனி அவ்வளவு தான்..
    கடைசி நாள் சம்பளம்
    மேஸ்திரி வாங்க
    கையசைத்தது வீடு...

  11. #150
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,249
    Post Thanks / Like
    வீடு போ போங்குது
    காடு வா வாங்குது
    பெருசுகள் சொல்லில் அலுப்பு
    பொழுதுக்கும் பேசும் புரணி
    மனம் முழுக்க வினை வம்பு
    மரியாதை தகும் வயது
    அதனால் தப்பிக்கும் தவறு
    இப்படியும் இருக்கு சில கிழடு
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

Similar Threads

  1. kavidhaikku kavidhai matrum Pattuku pattu
    By Oldposts in forum Poems / kavidhaigaL
    Replies: 1486
    Last Post: 23rd December 2010, 03:53 PM
  2. Bharathi kavidhai
    By Kanmani in forum Poems / kavidhaigaL
    Replies: 1
    Last Post: 16th August 2005, 06:54 PM
  3. edhir pattu no: II
    By kanaga arumugam in forum Poems / kavidhaigaL
    Replies: 1
    Last Post: 31st March 2005, 10:59 AM
  4. edhir pattu
    By kanaga arumugam in forum Poems / kavidhaigaL
    Replies: 3
    Last Post: 2nd February 2005, 10:03 PM
  5. kanavilum kavidhai
    By mohans in forum Poems / kavidhaigaL
    Replies: 7
    Last Post: 28th December 2004, 01:29 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •