-
4th May 2014, 08:03 PM
#1221
Senior Member
Platinum Hubber
மணத்தைப் பரப்பிடுமே நால்வகை புகை
மாநகர் மதுரையிலே இளங்கோவின் கதை
காவியத் தம்பதிக்கு சொன்ன அறிமுக உரை
மணங்கள் குறையவில்லை காரணிகள் வேறு
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
4th May 2014 08:03 PM
# ADS
Circuit advertisement
-
4th May 2014, 10:05 PM
#1222
Senior Member
Senior Hubber
வேறுவேண்டும் எனக்கேட்டால் பதிலெதுவும் சொல்லாய்
...விஷமக்கண் பார்வையினால் மெளனத்தால் கொல்வாய்
மேருபோல நிமிர்ந்திருந்த முகத்தினையே சற்றே
..மேவித்தான் இதழமுதம் பருகிடவே அழைத்தால்
சேறுபட்ட சீலையினைப் பார்த்தாற்போல் பதறி
..செவ்விதழைத் தான்மடித்துத் தள்ளலாமோ பெண்ணே
தேருநிலை மாறியதே தங்கநிறப் பெண்ணே
..தெனாவட்டாய் நிலைகொள்ளச் செய்திடுவாய் கண்ணே..
-
5th May 2014, 08:27 AM
#1223
Senior Member
Platinum Hubber
கண்ணே நீ மூட நேரும் வழி எதுவோ
பறந்த விமானம் மாயமாய் மறையுமோ
தடதடக்கும் ரயில் பெட்டி தடம் புரளுமோ
ஆபத்தில்லா ஓர் வழி சாலையில் விபத்தோ
அக்கறையில்லா மருத்துவ சேவையிலா
வெறியில் அடித்து நொறுக்கும் கொலையிலா
கலாச்சார மாற்றம் தரும் பகீர் அதிர்ச்சியிலா
விதியே இத்தனை கொடூரம் ஏன் கற்றாய்
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
5th May 2014, 12:51 PM
#1224
Senior Member
Senior Hubber
கற்றாய் அனைத்தையும்”
குரு மகிழ்ந்து நற்சான்றிதழ் கொடுக்க
வாங்கிய சீடன் சொன்னான்
“நன்றி குருவே
இனிமேல் தான்
நான் கற்பது நிறைய இருக்கிறது
வாழ்க்கையின் பாடங்கள்”
-
5th May 2014, 02:27 PM
#1225
Senior Member
Platinum Hubber
பாடங்கள் பள்ளியறையில்
எந்தப் பள்ளியறையில்
வயதை பொறுத்தது அது
அறிவும் அனுபவமும் வரும்
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
5th May 2014, 06:02 PM
#1226
Senior Member
Senior Hubber
வருமென்றே காத்திருக்கும் வஞ்சியவள் கண்களிலே
..வாகாகத் தெரிகிறது வருங்காலம் நலமெல்லாம்
தருமென்றே நம்பிக்கை ஊட்டியவன் வண்ணமுகம்
..தயங்காமல் தினம்தினமும் பார்த்தவனின் தண்ணுருவம்
மறுபடியும் வருகின்றேன் மெல்லியலே மயங்காதே
..மாதங்கள் பலவாகும் மருகாதே கட்டாயம்
வருவேன்நான் எனச்சொன்ன வார்த்தையையும் தான்நினைந்து
..வாடித்தான் நிற்கின்றாள் உயிருருகி அவனுக்காய்.
-
6th May 2014, 07:46 AM
#1227
Senior Member
Platinum Hubber
அவனுக்காய் உருகியே
சமைத்து சிங்காரித்து
சிந்தித்து சிரித்து என
தன்னை தொலைத்தவள்
தேடிப் பிடித்த சுயமின்று
முன்னே நிற்கிறது காண்
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
6th May 2014, 09:23 PM
#1228
Senior Member
Senior Hubber
காண்கின்ற காட்சிகளில் தெரிகின்றாய் கண்ணாநீ
...கண்டுவக்க நேரினிலே வரவில்லை கண்ணாநீ
பூண்கின்ற அணிகலன்கள் சூடுகின்ற பூச்சரங்கள்
..புடவையதன் வண்ணங்கள் உனக்காக த் தான்கண்ணா
நோன்புதனை நான்கொண்டு நேர்விழிகள் பார்த்தபடி
..நெகிழ்ந்திருப்ப தெதற்காக உனக்காகத் தான்கண்ணா
வேண்டுவன நாந்தருவேன் விரைவினிலே வந்திந்த
..வஞ்சியெந்தன் தாபமதைத் தீர்ப்பாயா கண்ணாநீ
-
6th May 2014, 11:06 PM
#1229
Senior Member
Platinum Hubber
நீ சொல்வது தவறென்று
நக்கீரனாய் உரைத்தாள்
மறுத்த மாதொருத்தி
மாதராய் பிறந்திடவே
மாதவம் செய்திருக்கும்
கவிமணியின் ரசிகை என்
கருத்தை இப்பெண் பிறவி
சாபமில்லை வரமே என்று
வக்கணையாய் நான் வடித்த
இணையக் கட்டுரைக்கு
கடுப்பாய் பதிலிட்டாள்
வாதங்கள் பல வைத்தாள்
எதுவும் எனக்கு ஏற்பில்லை
நகைப்பே வந்தது படித்து
ஆணுக்குக் கொடுத்தது
பலகோடி விந்தணுக்கள்
பெண்ணுக்கு வழங்கப்பட்டதோ
ஒரேயொரு சினை முட்டை
மாதத்திற்கு ஒரு முறை
புரியவில்லையா இதிலேயே
பாரபட்சமான நிலையை
படைக்கும் வித்தைக்கு
போதும் ஒரு முட்டை
பலசாலி பெண்ணுக்கு
பாவம் ஆணுக்குத்தான்
பலகோடி வேணுமடி
பதில் சொன்னேன் நானும்
பைத்தியக்காரி ஒருத்திக்கு
Last edited by pavalamani pragasam; 6th May 2014 at 11:08 PM.
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
7th May 2014, 04:35 PM
#1230
Senior Member
Senior Hubber
ஒருத்திக்கு நடனம்
ஒருத்தியுடன் பாடல்
ஒருத்தியுடன் ஊடல்
ஒருத்தியுடன் கண்ணா மூச்சி
ஒருத்தியுடன் அழுகை
மற்றும் பல கோபியரிடம் பலவிதமாய்..
எல்லாம்
அந்த மாயக் கண்ணனின் லீலை
இருந்தும்
ஒருத்தியின் அருகில் கண்ணன் காணோம்..
மயக்கத்தில் இருந்த பக்கத்து கோபிகை
எங்கே எனக் கண்ணால் வினவ
அவள்
ஷ்..கண்ணன் என்னுள்..
மனதிற்குள்..
செய்யாதே தொந்தரவு என..
மாயக்கண்ணன் முகத்தில் புன்னகை..
Bookmarks