Page 112 of 191 FirstFirst ... 1262102110111112113114122162 ... LastLast
Results 1,111 to 1,120 of 1901

Thread: kavidhaikku kavidhai matrum Pattuku pattu-2

  1. #1111
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பார்க்கப் பார்க்க
    வெகு அழகாய் இருக்கும்
    விதம் விதமாய் வட இந்திய இனிப்புகள்
    விலை அதிகம் என
    எனக்குத் தெரியாத பருவம்
    எச்சில் ஊறும் நாவில்
    கேட்டால்
    அம்மா அதெல்லாம் வேண்டாம்
    நான் பண்ணித்தரேன் நம்ம மைசூர்பாகு..

    பண்ணியும் தருவாள்..

    ம்ம்
    இப்போதோ
    ஸ்வீட்ஸ்டாலே வைக்கலாம்
    சம்பாத்யம் அதிகம்
    ஆனால் முடியாது..

    வீட்டுக்காரருக்குச் சர்க்கரை..
    ஏதோ என்னால் முடிந்த
    தியாகம்..

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1112
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,172
    Post Thanks / Like
    தியாகம் செய்யணுமாம்
    மகள் வளர்ந்ததும்
    அலங்காரமாய் பூணுவதை
    மருமகள் வருமுன்
    ருசியாய் தின்னுவதை
    அவ்விருவர் தடை
    இன்பம் அனுபவிக்க
    எந்த நொந்த கிழம்
    சொன்னதிது அறியேன்
    நேரெதிர் என் வாழ்வில்
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  4. #1113
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    என்வாழ்வில் வந்துவந்த தீபா வளியை
    ...எண்ணயெண்ண நெஞ்சினிலே உற்சா கந்தான்
    பொன்னாக மின்னிவரும் புதிதாய்த் தைத்த
    ..பாவாடை தாவணியில் இளமை கொண்ட
    பெண்ணுடைய கண்களிலே மின்ன லைப்போல்
    ..பூரிக்கும் துடிப்பான துள்ள்லைப் போல்
    வண்ணமெனப் பொங்கிவரும் என்றும் தானே
    ..வார்த்தைகளில் சொல்லவொண்ணா எழிலும் தானே..

  5. #1114
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,172
    Post Thanks / Like
    எழிலும் தானே இடம் பிடித்தது
    இதழோர சின்னப் புன்னகையில்
    பேரெழில் கண்டிட பெரிதாய்
    சிரிக்கத் தூண்டிய பேராசையில்
    பேரழிவே நிகழும் பெண்ணே
    தவிர்த்திடுக பெருந்துன்பம்
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  6. #1115
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பெருந்துன்பம் கண்களிலே கொண்ட அந்தப்
    ..பாவையிடம் பெரியவரும் சென்று கேட்டார்
    பருவத்தின் வாயிலிலே நிற்கும் பெண்ணே
    ..பார்வையிலேன் சோகத்தைக் காட்டி நின்றாய்
    உருவத்தில் குமரியென இருக்கும் உந்தன்
    ..உணர்வினிலே துயரமேந்தான் வந்த திங்கே
    குருவெனவே நினைத்துநீயும் சொல்வாய் நானும்
    ..கூறிடுவேன் ஏதேனும் நன்மை என்றால்..

    உருவாக்கி விட்டபெற்றோர் யாரோ அறியேன்
    ..உணர்வுகளைத் தூண்டிவிட்ட வல்ல நண்பன்
    சுறுசுறுப்பாய் என்னுடனே ஆடி நின்றே
    ..சோர்விலாமல் பலகதைகள் பேசி வந்தான்
    துரும்புக்கும் துயர்செய்யா தூய உள்ளம்
    ..தோற்றுத்தான் போனதையா பாழும் விபத்தால்
    முறுவலிக்கும் அதிர்ஷ்டமது எனக்கு இல்லை..
    ..மேனியுடன் நானிருக்க அதுவும் தொல்லை..

    காதலனின் மரணத்தால் கலங்கி நிற்கும்
    ..கன்னியவள் கைபற்றிச் சொன்னார் அவரும்
    பாதகந்தான் பெருந்துயர்தான் அறிவேன் நானும்
    ..பாவியான எமனுந்தான் பழியைச் செய்வான்..
    வாதஞ்செய வரவில்லை உனக்கு பெண்ணே
    ..வாழ்க்கையது இருக்கிறது எழுந்து நிற்பாய்..
    மோதவ்ரும் துயரங்களை நின்று ஏற்று
    ..மேய்ப்பதுவே வாழ்க்கையெனச் சொன்னார் நன்றாய்.

    உப்பென்றும் காரமென்றும் உடலில் ஏற
    ...உணர்வுகளில் துயரந்தான் மறந்துபோகும்
    சப்பென்று இருந்தாலது தயிரில் ஊறி
    ..சாரமில்லா புளிப்பான சாதமன்றோ
    தொப்பென்று இதயத்தை விட்டி டாதே
    ..தோல்விகளும் துயரங்களும் நிலைத்து நிற்கா
    முப்பொழுதும் இறைவனையே நினைக்கும் போதில்
    ..முன்னிற்கும் வாழ்க்கையது விரைந்து போகும்..

    சொன்னவரோ பெரியவர்தான் ஆனால் என்ன
    ..சோர்வதனை நீக்கினரே ஆஹா நன்று
    வண்ணமயில் சற்றுசற்றாய் தேறிக் கொஞ்சம்
    ..வாகாகக் கேட்டுவிட்டாள் ஐயா நீர்யார்..
    எண்ணமதில் வைக்குவண்ணம் நானும் ஒன்றும்
    ..ஏற்றமிகு பெரியவனா ஒன்றுமில்லை..
    உன்னைப்போல் பேரழகாய் பெண்கள் ரெண்டு
    ..அழகான சம்சாரம் இரண்டு பிள்ளை..

    சின்னதான வியாபாரம் சொத்து கொஞ்சம்
    ..சோர்விலாமல் வாழ்க்கைதான் சென்ற தம்மா
    கண்வைத்தார் யாரென்றால் காலம் தானே
    ..காலத்தில் மாற்றத்தில் விபத்து ஒன்றில்
    என்குடும்பம் மரித்திடவும் இலக்கில் லாமல்
    ..எங்கெங்கோ சுற்றுகையில் கண்ணில் பட்டாய்
    என்றேதான் சொல்லியவர் செல்லப் பார்த்தால்
    ..எளியவரின் கைகளிலே ஒன்று இல்லை....
    Last edited by chinnakkannan; 1st November 2013 at 06:59 PM.

  7. #1116
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    பெருந்துன்பம் கண்களிலே கொண்ட அந்தப்
    ..பாவையிடம் பெரியவரும் சென்று கேட்டார்
    பருவத்தின் வாயிலிலே நிற்கும் பெண்ணே
    ..பார்வையிலேன் சோகத்தைக் காட்டி நின்றாய்
    உருவத்தில் குமரியென இருக்கும் உந்தன்
    ..உணர்வினிலே துயரமேந்தான் வந்த திங்கே
    குருவெனவே நினைத்துநீயும் சொல்வாய் நானும்
    ..கூறிடுவேன் ஏதேனும் நன்மை என்றால்..

    உருவாக்கி விட்டபெற்றோர் யாரோ அறியேன்
    ..உணர்வுகளைத் தூண்டிவிட்ட வல்ல நண்பன்
    சுறுசுறுப்பாய் என்னுடனே ஆடி நின்றே
    ..சோர்விலாமல் பலகதைகள் பேசி வந்தான்
    துரும்புக்கும் துயர்செய்யா தூய உள்ளம்
    ..தோற்றுத்தான் போனதையா பாழும் விபத்தால்
    முறுவலிக்கும் அதிர்ஷ்டமது எனக்கு இல்லை..
    ..மேனியுடன் நானிருக்க அதுவும் தொல்லை..

    காதலனின் மரணத்தால் கலங்கி நிற்கும்
    ..கன்னியவள் கைபற்றிச் சொன்னார் அவரும்
    பாதகந்தான் பெருந்துயர்தான் அறிவேன் நானும்
    ..பாவியான எமனுந்தான் பழியைச் செய்வான்..
    வாதஞ்செய வரவில்லை உனக்கு பெண்ணே
    ..வாழ்க்கையது இருக்கிறது எழுந்து நிற்பாய்..
    மோதவ்ரும் துயரங்களை நின்று ஏற்று
    ..மேய்ப்பதுவே வாழ்க்கையெனச் சொன்னார் நன்றாய்.

    உப்பென்றும் காரமென்றும் உடலில் ஏற
    ...உணர்வுகளில் துயரந்தான் மறந்துபோகும்
    சப்பென்று இருந்தாலது தயிரில் ஊறி
    ..சாரமில்லா புளிப்பான சாதமன்றோ
    தொப்பென்று இதயத்தை விட்டி டாதே
    ..தோல்விகளும் துயரங்களும் நிலைத்து நிற்கா
    முப்பொழுதும் இறைவனையே நினைக்கும் போதில்
    ..முன்னிற்கும் வாழ்க்கையது விரைந்து போகும்..

    சொன்னவரோ பெரியவர்தான் ஆனால் என்ன
    ..சோர்வதனை நீக்கினரே ஆஹா நன்று
    வண்ணமயில் சற்றுசற்றாய் தேறிக் கொஞ்சம்
    ..வாகாகக் கேட்டுவிட்டாள் ஐயா நீர்யார்..
    எண்ணமதில் வைக்குவண்ணம் நானும் ஒன்றும்
    ..ஏற்றமிகு பெரியவனா ஒன்றுமில்லை..
    உன்னைப்போல் பேரழகாய் பெண்கள் ரெண்டு
    ..அழகான சம்சாரம் இரண்டு பிள்ளை..

    சின்னதான வியாபாரம் சொத்து கொஞ்சம்
    ..சோர்விலாமல் வாழ்க்கைதான் சென்ற தம்மா
    கண்வைத்தார் யாரென்றால் காலம் தானே
    ..காலத்தில் மாற்றத்தில் விபத்து ஒன்றில்
    என்குடும்பம் மரித்திடவும் இலக்கில் லாமல்
    ..எங்கெங்கோ சுற்றுகையில் கண்ணில் பட்டாய்
    என்றேதான் சொல்லியவர் செல்லப் பார்த்தால்
    ..எளியவரின் கைகளிலே ஒன்று இல்லை....
    சி.க அருமை அருமை

  8. #1117
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,172
    Post Thanks / Like
    ஒன்று இல்லை ரெண்டு இல்லை
    பலகாரக்கடையே போலிருக்கும்
    சுட்டு வைத்த பட்சணங்கள்
    ஆளுக்கொன்று பிடிக்கும்
    அனைவரும் ருசித்துண்பதை
    கண்டு மனம் முழுதும் இனிக்கும்
    இன்று பிள்ளைகள் வராததால்
    எண்ணைசட்டி அடுப்பிலேறாமல்
    பண்டிகையில்லா சாதாரண நாள்
    வரும் வருடம் வரமாகட்டும்
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  9. #1118
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    வரமாகட்டும் மக்களுக்கு
    என் அறிவும் அனுபவமும்
    என்று தான் இந்தப் பதவியை ஏற்றேன்..
    அது ஏனோ சாபமானது..

    மெளனத்தின் மூலம்
    சில பல விஷயங்களைச்
    சமாளிக்கலாம் என நினைத்தது
    பூசியது முகத்தில் கரி..

    ஓய்வு பெறும் நாள் நெருங்க
    நெருங்க என் முகத்தில் கூடுகிறது
    பிரகாசம்..

    நாட்டிலும் அது ஏற்படும் என
    பலர் எண்ணுவது
    எனக்கு வேதனை..
    மற்றவர்க்ளுக்கு ம்ம் நம்பிக்கை..

  10. #1119
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,172
    Post Thanks / Like
    நம்பிக்கை தொலைத்த ஆசாமிகள்
    அகங்காரம் தொனிக்கும் குரல்கள்
    அர்த்தம் அதிகமில்லா தீர்ப்புகள்
    பட்டினிச்சாவு நாட்டில் நடக்க
    கோடிகளைக் கொட்டி சாட்டிலைட்டா
    அரசுக் கொட்டிலின் பாதுகாப்பு
    ஆடம்பர செலவை விட கம்மியடா
    குரங்காய் மரத்தில் வாழ்ந்தவன்
    சொகுசாய் காரில் பயணிப்பதெப்படி
    ஓயாத விஞ்ஞான ஆராய்ச்சியாலடா
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  11. #1120
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஆராய்ச்சியால் அடா
    எல்லாம் என்னுழைப்பு
    நான் தான் செய்தேன்
    இந்த நோய்தீர்க்கும் மருந்தினை
    என விஞ்ஞானி முழங்க
    உதவியாளன் கண் நிலம் நோக்க
    தட்டுப்பட்டன
    மீளா உறக்கத்தில் இருந்த வெள்ளெலிகள்..

Similar Threads

  1. kavidhaikku kavidhai matrum Pattuku pattu
    By Oldposts in forum Poems / kavidhaigaL
    Replies: 1486
    Last Post: 23rd December 2010, 03:53 PM
  2. Bharathi kavidhai
    By Kanmani in forum Poems / kavidhaigaL
    Replies: 1
    Last Post: 16th August 2005, 06:54 PM
  3. edhir pattu no: II
    By kanaga arumugam in forum Poems / kavidhaigaL
    Replies: 1
    Last Post: 31st March 2005, 10:59 AM
  4. edhir pattu
    By kanaga arumugam in forum Poems / kavidhaigaL
    Replies: 3
    Last Post: 2nd February 2005, 10:03 PM
  5. kanavilum kavidhai
    By mohans in forum Poems / kavidhaigaL
    Replies: 7
    Last Post: 28th December 2004, 01:29 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •