Page 111 of 191 FirstFirst ... 1161101109110111112113121161 ... LastLast
Results 1,101 to 1,110 of 1901

Thread: kavidhaikku kavidhai matrum Pattuku pattu-2

  1. #1101
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    சேவையிலே மோர்க்குழம்பு
    ஊற்றி சாப்பிட்டால் நல்லா இருக்கும்டா
    அது என்ன பிடிக்கலைங்கற..

    திட்டிக் கொண்டே உண்டது அந்த்க் காலம்..
    இன்று
    ஹார்லிக்ஸ் நூடுல்ஸாம் நல்லதாம்
    சாப்பிடு என்கிறாள் மனைவி
    ம்ஹீம்
    பேசவில்லையே மறுபேச்சு!

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1102
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,168
    Post Thanks / Like
    மறுபேச்சு பேசாமல்
    தரக்குறைவைத் தாங்கி
    மக்கள் மாக்களாய்
    மாறுகின்ற கொடுமை
    நெஞ்சு பொறுக்குதில்லையே
    காடழிக்க காத்திருக்கு
    அக்னி குஞ்சொன்று
    ரௌத்திரம் பழகியே
    என்னென்று சொல்ல
    எப்படி விவரிக்க
    பொங்கும் ஆத்திரம்
    வார்த்தை தின்றதோ
    வாய் செத்ததோ
    பித்தாகி திகைக்க
    அனலாய் மூச்சு
    துருத்தியாய் வீச
    அக்கிரமத்தை சொல்ல
    அமைதியை தேட
    தவிக்கிறேன் நழுவும்
    நிதானத்தைப் பற்ற
    முயல்கிறேன் நானும்
    முடியலையே இன்னும்
    குலக்கொழுந்தொன்று
    பசுந்தளிரொன்று எங்கள்
    பால்வடியும் முக செல்வன்
    ஒன்பது வயது பாலகன்
    பாட்டியுடன் கொஞ்ச வந்த
    அழகிய விடுமுறையில்
    பத்து நாளுக்கு முந்தைய
    வயிற்றுபாதை திரும்பவே
    கூர்மதி கொண்டவளாம்
    அனுபவமுள்ளவளாம்
    என் பின்னே பிறந்தவளாம்
    மருத்துவம் பயின்றவளாம்
    எதற்கும் ரத்த பரிசோதனை
    பார்த்திடலாமென பரிந்துரைக்க
    கையில் கொடுக்கப்பட்ட
    சோதனை முடிவுத்தாள்
    அணுகுண்டை போட்டது
    கிட்டதட்ட நான்கு பங்கு
    வெள்ளை அணுக்கள்
    சொல்ல நா கூசும்
    பொல்லாத நோயின்
    காலனின் கைப்பிடியை
    கொடிய வேதனையை
    சுட்டிக் காட்ட அதிர்ந்தோம்
    சிதைந்தோம் மொட்டையாய்
    எச்சரிக்கை முறையாய்
    சுமக்காத சீட்டினை கண்டு
    சீறிய என் தங்கையும்
    வேறிடத்தில் மறுபரிசோதனை
    செய்திட பணிக்க இரவும்
    துவங்கிட காத்திருந்தோம்
    மறு நாள் மறு சோதனை
    முடிவை கையில் வாங்க
    வார்த்தது பாலை வயிற்றில்
    அந்த இரண்டாம் சோதனை
    ஒரு கோளாறுமில்லையென
    கண்ணகியாய் எரிக்கக்
    கிளம்பியவளை நிறுத்தி
    பொறுமை புகட்டினர்
    நகரின் உச்ச தரம் கொண்ட
    சோதனை கூடத்தில்
    மறுநாள் மூன்றாம் முறை
    சோதனை முடித்து அதிலும்
    இருக்கவில்லை பிழையேதும்
    சிறந்த குழந்தை நிபுணரையும்
    கண்டு தெளிந்த பின்னும்
    ஆறவேயில்லை எனக்கு
    நுகர்வோர் நீதிமன்றத்தில்
    தண்டனை பெற்றுத் தராது
    குடும்பம் அடைந்த துயர்
    கொஞ்சமும் ஆறாது
    என்றே ஒற்றைக்காலில்
    நின்றவள் முதல் சோதனை
    மையத்தின் தலைமையை
    தொலைபேசியில் அழைத்து
    நடந்ததை விவரித்தேன்
    இது நீதியா நியாயமா
    நெஞ்சு பொறுக்குமா
    அடுக்குமா இக்கொடுமை
    பத்திரிகையில் கிழிக்கட்டுமா
    கோர்ட்டில் வழக்காடட்டுமா
    தொழில் தர்மம் இதுதானா
    குமுறினேன் கொதித்தேன்
    மழை இன்னும் பெய்திட
    காரணனாய் ஒரு நல்லவன்
    மறுமுனையில் இருந்து
    என் எரிமலையை
    அப்படியே உணர்ந்து
    கண்ணியமும் கொள்கையும்
    கொண்ட கனவானாய்
    கொள்ளை பணிவாய்
    மன்னிக்கக் கோரி
    எளிதில் மன்னிக்கும்
    சாமானிய குற்றம்
    இதுவல்லதான் என்றும்
    உடனடியாய் விசாரித்து
    நடவடிக்கையாய் அக்கொடிய
    தவறு செய்த அலுவலரை
    பத்து நாள் பணிநீக்கம் செய்து
    பழிவாங்கும் திட்டத்தை என்
    மனதிலிருந்து துடைத்தானே
    நொந்த மனமும் உடலும்
    என்று முழுதாய் தேறுமோ
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  4. #1103
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    தேறுமோ இல்லை என்றால்
    ..தெளிவுடன் சொல்க ஐயா
    ஆருடம் சொலலக் கையில்
    ..அரைமணி பார்க்க லாமா
    மாறுதல் வருமா தந்தை
    ..மருந்தினில் குணமாய் போமா
    ஊரிடம் கேட்ட போது
    ..உள்ளதைச் சொல்வீர் என்றார்...

    காரிருள் படர்ந்த கண்கள்
    ..கலங்கவெ வைக்கு தய்யா
    மீறியே வந்த அழுகை
    ..மென்மையாய்ப் பீற ஜோஸ்யர்
    பாரிலே உனது தந்தை
    ..பலதினம் இருப்ப ரென்றார்
    வாரியே மகனும் தந்து
    ..வசந்தமாய்த் தாவிச் சென்றான்..

    சொன்னது பொய்தான் என்றே
    ..சிந்தையில் படுது என்றே
    வண்ணமாய் மனைவி கேட்க
    ..வருத்தமாய் அவரும் சொன்னார்
    என்னதான் சொல்ல இவளே
    ..இவனது ஜாத கத்தில்
    திண்ணமாய் இவனின் முடிவு
    ..தெரிவதை என்று சொன்னார்..
    Last edited by chinnakkannan; 12th October 2013 at 12:00 AM.

  5. #1104
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,168
    Post Thanks / Like
    சொன்னார் சிந்தனை சிற்பி சாக்ரடிஸ் அன்றே
    சமூகம் கெட்டதே சீரிய கலாசாரம் அழிந்ததே
    அதர்மமும் அக்கிரமமும் தலைவிரித்தாடுதே
    இன்று வாழ்வது போல் கணக்காய் சொன்னாரே
    ஆயிரமாயிரம் ஆண்டுக்கு முன்னும் கலிகாலம்
    சுற்றி உருளுது மாற்றமின்றி இக்காலச்சக்கரம்
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  6. #1105
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    சக்கரம் சுற்றச் சுற்ற
    ..சடக்கெனப் பானை அங்கே
    பக்குவம் கொண்ட வாறே
    ..பாங்குடன் எழவும் அங்கே
    சக்கையைத் துடைத்து மெல்ல
    ..சங்கடம் கொளாத வாறு
    வெக்கையில் வைக்க பானை
    ..விம்மியே மிளிரு மன்றோ..

    சொக்கிடும் அழகு கொண்ட
    ..சுந்தரப் பானை எல்லாம்
    தக்கன வாக வைத்து
    ..தகுந்ததாய்ப் பணமுங் கேட்டால்
    பக்கெனச் சிரிக்கும் ஆட்கள்
    ..பார்த்திடேன் இவனை இங்கே
    சொக்கிடும் தங்கம் போன்று
    ..சொல்கிறான் விலையை என்றே

    திக்கெனச் சோல்லும் போதில்
    ..தேகமும் சோர்ந்து போக
    மிக்கவும் துக்கம் வந்து
    ...மென்மையாய் மனதில் ஏற
    சிக்கலை நீக்கப் பானை
    ..சிரிப்பது போலத் தோன்றி
    பக்குவம் கொள்வான் நெஞ்சை
    ..பாவமக் கலைஞன் தானே..
    Last edited by chinnakkannan; 20th October 2013 at 10:45 PM.

  7. #1106
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,168
    Post Thanks / Like
    கவிஞன் தானே
    காண்கிறானே
    கலைக்கண்ணாலே
    ஒளிந்திருக்கும் அழகை
    கலைந்திருக்கும் ஒழுங்கை
    அத்திறமையும் கண்ணும்
    வடிக்கும் நேர்த்தியும்
    வாய்க்குமோ எல்லோர்க்கும்
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  8. #1107
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    எல்லோர்க்கும் நமஸ்காரா
    ஐ யாம் ரியல்லி ப்ரெளட் டு
    மீட் யூ டாமில் பீப்பிள்..
    இஃப் யூ ஆர் நாட் தேர் ஐயாம் ஆல்ஸோ நாட் தேர்.
    டாமில் குட் மொழி லாங்க்வேஜ்
    என்னை இந்த டாமில் கான்ஃபெரன்ஸிக்கு
    கூப்பிட்டு ஹானர் பண்ணியமைக்கு தாங்க்ஸ்
    ஐ லவ் யூ ஆல்
    ஜெய் ஹிந்த்

  9. #1108
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,168
    Post Thanks / Like
    ஜெய் ஹிந்த் என சொன்னால்
    தேகம் முழுதும் சிலிர்க்கும்
    ஜவான்களின் அணிவகுப்பு
    அவர் நடையின் மிடுக்கு
    அணிந்த உடையின் எடுப்பு
    காதர் சட்டைகள் குல்லாக்கள்
    அந்நியனைத் துரத்திய
    ஆண்டுக்கணக்கில் நடத்திய
    செக்கடியிலும் குண்டடியிலும்
    தூக்கு மரத்திலும் செத்து
    பல வழியில் போராடிய
    மாவீரர்களும் அவர்கள்
    பெற்றுத் தந்த சுதந்திரமும்
    நினைவுக்கு வருகுதே
    Last edited by pavalamani pragasam; 22nd October 2013 at 02:06 PM.
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  10. #1109
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    வருகுதே மன்னர் தேர்தான்
    ..வாசலில் நிற்கா தேடா
    உருக்கிடும் வெய்யில் அங்கே
    ...உளமுடன் உடலை வாட்ட்
    பருவமோ விளையாட் டென்றால்
    ..பற்பல அடிகள் எல்லாம்
    பருகுவாய் எந்தன் பிடியில்
    ..பாங்குடன் சிக்கி விட்டால்..

    சொல்லச் சொல்லக் கேட்காமல்
    ..சிறுவா நீயும் நின்றாயே
    வில்லில் சென்ற அம்பைப்போல்
    ..வேகங் கொண்ட தேரதுவும்
    கொள்ளை கொண்ட துன்னுயிரை..
    ..கொவ்வை ஆனது என்விழிகள்
    கல்லாய்ப் போன நெஞ்சம்தான்
    ..காலன் கொண்டான் என்மகனே..

    எத்தனை பணந்தந் தாலும்
    ..என்னுயிர் சென்ற தய்யா
    சத்தமும் சந்தங் கொண்டு
    ..சலங்கையின் ஒலிகள் போல
    முத்தெனப் பிறந்த அந்த
    ..மூத்தவன் மரித்து விட்டான்
    பித்தென ஆன தய்யா
    ..பாவியென் மனமும் இன்று..

    குறுக்கிலே வந்த எந்தன்
    ..குறுகுறு மைந்தன் காலன்
    விரித்தவவ் வலையில் நன்றாய்
    ..விழுந்ததை என்ன சொல்ல
    மறுகுதே எந்தன் நெஞ்சம்
    ..மன்னவர் நீரும் இதற்கு
    பொறுப்பெனச் சொல்லு கின்றீர்
    ..பொறுப்பெலாம் விதிதான் ஐயா...

  11. #1110
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,168
    Post Thanks / Like
    ஐயா புது யுகமிதில்
    படித்தவன் பாமரன்
    யார் அறிவாளியென
    அறிந்தேன் கதையிதில்
    குறுக்கு சந்தொன்றில்
    ஒருநாள் ஷோக்கான
    குட்டிப்பூனையொன்று
    தன வாலை உயர்த்தி
    சுற்றி சுழன்று நெடுநேரம்
    ஆடக் கண்டது ஓர்
    பெரிய பூனையுந்தான்
    என்ன செய்கிறாய் என்றது
    மிடுக்குடன் குட்டிப்பூனை
    பெரிய படிப்பு படித்தேன்
    வாலில் உள்ளது சந்தோசம்
    என்றே கற்றதையொட்டி
    பிடிக்க முயல்கிறேன் அதை
    என்றவுடன் சொன்னது
    பெரிய பூனை எளிமையாய்
    நான் பெரிய படிப்பேதும்
    படித்தேனில்லை ஆயினும்
    அறிவேன் சந்தோசம் என்
    வாலில் உள்ளதென என்
    வேலைகளை நான்பாட்டுக்கு
    செய்து வர வால்பாட்டுக்கு
    என் பின் வருகிறதாக்கும்
    அதனுடன் சந்தோசமும்
    சாதாரணமாய் சொல்லிவிட்டு
    கிளம்பியது சோலியைப் பார்க்க
    Last edited by pavalamani pragasam; 24th October 2013 at 03:20 PM.
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

Similar Threads

  1. kavidhaikku kavidhai matrum Pattuku pattu
    By Oldposts in forum Poems / kavidhaigaL
    Replies: 1486
    Last Post: 23rd December 2010, 03:53 PM
  2. Bharathi kavidhai
    By Kanmani in forum Poems / kavidhaigaL
    Replies: 1
    Last Post: 16th August 2005, 06:54 PM
  3. edhir pattu no: II
    By kanaga arumugam in forum Poems / kavidhaigaL
    Replies: 1
    Last Post: 31st March 2005, 10:59 AM
  4. edhir pattu
    By kanaga arumugam in forum Poems / kavidhaigaL
    Replies: 3
    Last Post: 2nd February 2005, 10:03 PM
  5. kanavilum kavidhai
    By mohans in forum Poems / kavidhaigaL
    Replies: 7
    Last Post: 28th December 2004, 01:29 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •