Page 175 of 191 FirstFirst ... 75125165173174175176177185 ... LastLast
Results 1,741 to 1,750 of 1901

Thread: kavidhaikku kavidhai matrum Pattuku pattu-2

  1. #1741
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    கடவுளாகும் பாத்திரத்தை நம் கருத்திலேற்றும் இதிகாசம்
    அடவுகட்டி மேடையேறி கலைக் காட்சிதரும் அவதாரம்
    அல்லல்படும் வாழ்க்கையில் அற்புதங்கள் நிகழ்த்து மென
    அற்றதை போற்றவைக்கும் ஆத்திகச் சலவைக் கூட்டம்
    Last edited by venkkiram; 19th May 2015 at 01:03 AM.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1742
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கூட்டத்தில் இடித்துப் பிடித்து
    முன்னேறி
    கடைசியில் டிக்கட் கிடைத்து
    சீட் தேடி அமர்ந்து
    வியர்க்க விறுவிறுக்க
    எந்த விமர்சனமும் படிக்காமல்
    பார்த்து
    பின் பத்திரிகையைப் பார்த்து
    ஒப்பிட்டுக் கொள்வதன் சுகமே அலாதிதான்..

    இதே போல இந்தக் கால இளைஞர்கள்
    இன்னும் பல்வருடம் கழிந்தபின்
    நினைக்க என்ன இருக்கிறது
    என யோசித்தால்
    கிடைப்பது கேள்விக்குறி..
    Last edited by chinnakkannan; 19th May 2015 at 03:39 PM.

  4. #1743
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    கேள்விக்குறி
    ஏன் ஆச்சர்யக்குறிபோல
    திமிராக
    நிமிர்ந்து நிற்கவில்லையென
    நினைத்தததுண்டு
    எதையுமே
    யார்மனதும் புண்படாவண்ணம்
    ஆழம் அகலம் புரிந்து
    விவரமாகக் கேட்டு
    விடைக்காக காத்திருக்க
    உணர்த்துவதே
    அவ்வளைவும் பணிவும்

    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  5. Likes Russellhni, chinnakkannan liked this post
  6. #1744
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like

    பணிவும் துணிவும் துணை நிற்பின்
    பதவிகள் பாராட்டுகள் வந்தடையும்
    அன்பும் அறனும் துணை நிற்பின்
    அகம் புற வாழ்க்கை மேலோங்கும்
    விவேகமும் விடாமுயற்சியும் துணை நிற்பின்
    வாய்ப்புகள் அனைத்தும் வாகைசூடும்
    வாய்மையும் தூய்மையும் துணை நிற்பின்
    காய்மையில்லா வார்த்தை வசப்படும்


    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  7. Likes Russellhni liked this post
  8. #1745
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    வசப்படும் வானமே எண்ணத்தில் மட்டும்
    கசந்துபோகும் முயற்சிகள் தோல்விகள் கண்டு
    வசந்தங்கள் வருமே காலத்திலும் அதுபோன்று
    பசுமைகள் திரும்பும் வாழ்விலும் ஆங்கு
    நிசத்திலும் வசப்படும் வானம் மனிதனுக்கு.
    .........-`҉҉´-
    -`҉҉´..)/.-`҉҉´-
    ....¨´“˜~.)/¸.~“˜¨
    ........¨´“˜~.“˜

  9. Likes Russellhni, venkkiram liked this post
  10. #1746
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வானம் மனிதனுக்கு சொர்க்க லோகம் அங்கல்லவா
    காணும் உறவெல்லாம் கசந்த நாட்களில் நாடும் வீடு
    பேணும் கனவெல்லாம் தீர்ந்து மக்கள் சுற்றத்திடம் இரவல்
    நாணும் வரை இக்கடன்கள் தீர்க்கவே பெறாமல் சுமை

    என்ன வைத்திருக்கிறது பூமியில் மண் பொன் பெண் ஆக்கிரமிப்பு
    மண்ணும் பொன்னும் மனிதனுக்கு இதயம் தொடா சேமிப்பு
    பெண்ணும் சிக்கலானதில் சக ஆண்களிடத்தும் மோகம்
    இன்னும் ஆக்கிரமித்தால் இருக்கவே இருக்கிறது அமெரிக்கா
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  11. Likes Russellhni liked this post
  12. #1747
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ”அமெரிக்கா”
    கண்கள் முழுக்கக் கனவோடு
    வேலை கிடைத்துச் சென்ற பெண்
    கல்யாணமும் கட்டிப்
    பின் நான்கு வருடம் கழித்து
    திரும்பினாள்..

    விவாகரத்தாம்
    மனமொன்றவில்லையாம்
    என்னடி
    என்றால்
    கண்ணீருடன் கட்டிப் பிடித்தாள்
    யாருமில்லாத நேரத்தில்..
    “அம்மா..
    உனக்கு முப்பது வருஷமாச்சா
    கல்யாணமாகி
    எத்தனை கஷ்டம் எத்தனை அவஸ்தை
    உன்னை அப்பாவும்
    அப்பாவை நீயும்
    பரஸ்பரப் படுத்தல்
    அழுகை கோபம் துக்கம் இன்பம்
    சுவாரஸ்யம் போர்
    எல்லாவற்றிலும் சமமாக
    இருந்து
    ஸ்டில் இட் இஸ் கோயிங்க் ஆன்..
    பட் ஆனால்
    மேஜர் சுந்தர்ராஜ த் தடுமாற்றம் குரலில்

    ”வரவே வராதும்மா
    இந்தியா போல்..”

  13. Likes venkkiram, kalnayak, Russellhni liked this post
  14. #1748
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    Chennai
    Posts
    0
    Post Thanks / Like
    இந்தியா போல் எங்கும் காணோம்
    ஏழை நாட்டில் நடக்காது எதுவும்
    எக்கச்சக்க சட்டம் எதற்கும் திட்டம்
    ஏமாற்று வேலை பம்மாத்து எல்லாம்

    கருப்பு பணம் கையூட்டு கூடவே குப்பை
    கொடிய நச்சு சூழல் குடிநீரில் சாக்கடை
    கூடும் பணவீக்கம் விவசாயி வேதனை
    குண்டும் குழியுமாய் நெடுஞ்சாலை

    கொள்ளையர் ஆளும் நொள்ளை நாடிதே
    குறை ஒன்றும் இல்லை அவர் பாடுகிறார்
    கூசாமல் பொய் கூடையாய் சொல்கிறார்
    கோபம் ஆத்திரம் பொத்து கிட்டு வருதே

    காரோட்டியின் மனைவி
    -----------------------------
    எல்லாம் போகட்டும் கதை தேவையில்லை
    என்ன சொல்லியும் ஒன்னும் ஆவதில்லை
    எதானாலும் சரி! நமக்கு ஒன்னும் பெரிதில்லை
    எனது பிரச்னை இப்போ அதுவுமில்லை !

    இத்தனை கார் எதுக்கு எங்கு நோக்கினும்?
    எப்படி இந்த ஏழை நாடு உருப்படும்?
    என்ன கொடுமை இது ? என்ன செய்வோம் ?
    இந்த ரோட்டிலே இல்லியே இடம்!

    எங்கே காரை நாம் பார்க் பண்ணுவோம்?
    ஏதேனும் செய் ! ஆச்சு பார்ட்டிக்கு நேரம் !


    Last edited by Muralidharan S; 25th May 2015 at 07:33 PM.

  15. Likes venkkiram, kalnayak liked this post
  16. #1749
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    நேரம் நெருங்கிக் கொண்டெ இருக்கு
    விடப்போகும் கடைசி மூச்சினை
    வீடே நெடுநாட்களாய் எதிர்பார்த்து நிக்குது
    தொண்டையிலிருந்து இறங்கவா வேணாமா
    போராட்டம் நடத்துது காய்ச்சிய பசும்பால்
    கால்மாட்டில் கொள்ளுப்பேரன் பேத்திகள்
    தலைமாட்டில் கணவன் மகன் மகள்
    வெறிக்குது பார்வை விட்டத்தை நோக்கி
    கடைசியாய்...கடைசியாய்..
    நினைவுகளில் நிழலாடுகிறான்
    கல்லூரிக் காதலன்
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  17. Likes kalnayak, Russellhni liked this post
  18. #1750
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    Chennai
    Posts
    0
    Post Thanks / Like
    காதலன் வர காத்திருந்தேன்
    கண்ணிமையாமல் பூத்திருந்தேன்
    கண்ணன் வந்தான் கண் பொத்தினான்
    கை மங் கை பற்றினான் தொற்றினேன்

    காணமல் போன கோபம் தேடினேன்
    கடிந்தேன் கால தாமதம் ஏனென்றேன்
    கண்ணே கடிதாய் காற்றாய் வந்தேன்
    காதல் கைகூட பரிசும் கைகூட என்றான்

    கள்ளனே பரிசென்ன காட்டு என்றேன்
    கபடமாய் சிரித்தான் காட்டேன் என்றான்
    கன்னி உன் பெற்றோருக்கு பரிசு முன்னே
    கண்டிப்பாய் காதலி உனக்குண்டு பின்னே

    காட்டுவேன் பரிசாய் மாப்பிள்ளை நானே
    கொண்டு செல் என்னை அவரிடம் தேனே !
    குறும்பாய் சிரித்தான் கொஞ்சலாய் தானே
    கொள்ளை போனேன் நொடியில் நானே !




    * Perhaps this guy will be a parents-in-law pet ! I bet
    Last edited by Muralidharan S; 31st May 2015 at 09:40 AM.

  19. Likes kalnayak liked this post

Similar Threads

  1. kavidhaikku kavidhai matrum Pattuku pattu
    By Oldposts in forum Poems / kavidhaigaL
    Replies: 1486
    Last Post: 23rd December 2010, 03:53 PM
  2. Bharathi kavidhai
    By Kanmani in forum Poems / kavidhaigaL
    Replies: 1
    Last Post: 16th August 2005, 06:54 PM
  3. edhir pattu no: II
    By kanaga arumugam in forum Poems / kavidhaigaL
    Replies: 1
    Last Post: 31st March 2005, 10:59 AM
  4. edhir pattu
    By kanaga arumugam in forum Poems / kavidhaigaL
    Replies: 3
    Last Post: 2nd February 2005, 10:03 PM
  5. kanavilum kavidhai
    By mohans in forum Poems / kavidhaigaL
    Replies: 7
    Last Post: 28th December 2004, 01:29 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •