தேடும் பார்வை உன்னைக் காண அங்கும் இங்கும்
….நாடும் மனமோ நிலையில் லாமல் முன்னும் பின்னும்
ஓடிச் சென்றே அலைகள் போலே உந்தன் நினைவை
..ஊடி உணர்வை மேலும் மேலும் மயக்க வைக்கும்
வாடும் வஞ்சி என்னை நீயும் மகிழ வைக்க
…வாராய் கண்ணா வாவா விரைவில் இங்கே இங்கே
பாடும் பாடல் சுவையா என்று நானும் அறியேன்
..பக்தி அதனுள் உண்டே உனக்கும் தெரியும் கண்ணா..!..
Bookmarks