Page 163 of 191 FirstFirst ... 63113153161162163164165173 ... LastLast
Results 1,621 to 1,630 of 1901

Thread: kavidhaikku kavidhai matrum Pattuku pattu-2

  1. #1621
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    Chennai
    Posts
    0
    Post Thanks / Like
    ஆய்வோம் அவன் ஆற்றல் அவன் ஏற்றம்
    அறிவோம் அவன் அருமை அவன் பெருமை
    இதமானது எது இறைவன் யார் ஆதாரமெது
    அச்சுதன் யார் பக்தவத்சலன் யார் -தேடினார்

    தேடி தெளிந்தார் தெளிந்தது பகன்றார்
    நாடினார் நாடி கண்டுகொண்டார் பீஷ்மர்
    நாராயணா வென்னும் நாமம் - நவின்றார்
    ஆயிரம் திருநாமம் விஷ்ணு சஹஸ்ரநாமம்

    தருகிறான் விஷ்ணு தயக்கமின்றி கேள்
    தருமம் பொருள் வம்சம் செழிக்கும்
    துதிப்பவன் இருவினை இடரும் தீரும்
    தூய்மையுடன் ஆயிரம் நாமம் சொன்னால்

    நெறி சொல்லி நின்றாரில்லை பேரறிவு பீஷ்மர்
    பெருமாள் பேர்பாட ஆயிரம் வைஷ்ணவ
    அருந்தெய்வ திருநாமம் அடுக்கடுக்காய்
    அருளினார் அழகாய் அம்பு படுக்கையில்

    அஞ்சன வண்ணன் அமலன் விமலன் பேரோடு
    இருடிகேசன் கோவிந்தன் பத்மநாபன் போக்தன்
    அமரப்ரபு மதுசூதன் கேசவன் ஸ்ரீமான் என
    அனந்த கல்யாண குணமாய் ஆயிரம் பேர்

    அத்துடன் அநேகரூபன் அஜாதன் வனமாலி
    ஆதித்யன் தாமோதரன் திரி விக்கிரமன்
    அனுகூலா அச்சலா என சில நாமம் செதுக்கி
    செவ்விய சஹஸ்ரனாம மாலை சேர்த்தார்


    மாதவன் பேர் பாடவே மானுடம் உய்யவே
    மண்ணு புகழ் மஹாவிஷ்ணு திருவடி சேரவே




    // தொடரும் ... இது விஷ்ணு பற்றி அல்ல ராமனின் புகழ் சொல்ல :: எனது கிறுக்கல்கள் //
    Last edited by Muralidharan S; 5th April 2015 at 07:48 AM.

  2. Likes chinnakkannan liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1622
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    21,885
    Post Thanks / Like
    சேரவே சேராது இருப்புப்பாதையின் தண்டவாளங்கள்
    தனித் தனிக்குணம் கொண்ட ஆண் பெண் மனங்கள்
    பங்கமின்றி தொடரும் நம் நீண்ட நெடிய பயணங்கள்
    பாங்காய் உள்வாங்க வேண்டிய பெரிய உண்மைகள்
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  5. Likes Russellhni liked this post
  6. #1623
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    உண்மைகள்



    பொய் என்ற கொழு கொழு அண்ணனின் சோனித் தம்பி



    வாய் நிறைய புகழ்ந்து அடிக்கடி அழைப்பர் போற்றுவர்



    அகப்பை நிறைய அன்னம் என்னவோ அண்ணனுக்கே



    ஜகத்தை அழிக்கும் பாரதி குரலுக்காய் சிறிதே அன்னம்



    எல்லா தொற்றும் தொ ற்றி உயிர் விடும் சாத்தியங்கள்



    கல்லாரும் கற்றோரும் கச்சேரியில் உரைக்க தேவை



    மருத்துவரை கூப்பிட்டு பிழைக்க வைத்து குறை சோறு



    கருத்து சொல்ல கூப்பிடுவது தம்பியை மறைபொருளாய்



    ஒறுத்து புறம் தள்ளி போற்றுவது அண்ணனை அக்கா லட்சுமி



    விரும்பி சேருமிடமோ அண்ணன்தான் தங்கை தரித்திரத்தை



    கருமி நெஞ்சுடன் குற்றுயிரான தம்பியுடன் குலவ சொல்வாள்



    தம்பியை போற்றி புகழ்ந்து என்ன பயன் வாழவிடாமல்



    கம்பிக்குள் போக விடாமல் கண்டோரையும் காப்பது அண்ணனே



    அண்ணா அண்ணா என தம்பிகள் அழைப்பது புரிந்திருக்குமே



    அண்ணனின் புகழுக்கு அழிவேயில்லை காணீர் ஜகத்தோரே





    பி.கு- சி.க -கச்சேரி என்றால் கோர்ட்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  7. Likes Russellhni liked this post
  8. #1624
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    Chennai
    Posts
    0
    Post Thanks / Like
    ஜகத்தோரே அறிவீர் சர்வம் விஷ்ணு மயம்
    ஜகத்ரக்ஷகன் சர்வம் கிருஷ்ணார்ப்பணம்
    துக்கித்தோரே துதியுங்கள் ஆயிரம் நாமம்
    தூரப்போகும் துன்பமெல்லாம் இன்பம் சேரும்

    அருளியே முடித்தார் பீஷ்மர் ஆயிரம் நாமம்
    அன்னை பார்வதியும் அங்கேயே பரமனும்
    ஆவலுடன் அனைத்தையும் கேட்ட பின்னர்
    அன்னபூரணி அகிலாண்டேஸ்வரி அவளது பதி
    அம்பிகாபதி அவனிடம் ஆச்சரியமாய் கேட்டதிது


    என்னதிது ! ஈஸ்வரா! எவ்விதம் சாத்தியம்
    எந்நாளும் சொல்வது ஆயிரம் திருநாமம்
    ஏது மாந்தர்க்கு காலம் நேரம் தினம்
    ஏதேனும் எளிதான உபாயம் உங்களிடம்
    இருந்தால் சொல்லவேண்டும் என்னிடம்


    இனிமையாக சிரித்துக் கொண்டே சொன்னான்
    இறைவன் : என்னுயிர் மனோரமா - ஏனில்லை
    எளிதான உபாயம் உண்டு ராம ராம என்று
    நாளும் சொன்னால் ஆயிரம் நாமத்தின்
    பலனும் அப்போதே கிடைக்கும் அறிவாய்





    " ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
    ஸஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே !!!"
    Last edited by Muralidharan S; 7th April 2015 at 07:37 AM.

  9. #1625
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    21,885
    Post Thanks / Like
    அறிவாய் அளவாய் உப்பு காரமிட்டு
    அறுசுவை விருந்து படைத்து மகிழ
    அறியாய் அழுக்கும் அவலமுமான
    அகந்தையுடன் பிறந்த ஆண்மகனை
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  10. Likes Russellhni liked this post
  11. #1626
    Senior Member Senior Hubber kirukan's Avatar
    Join Date
    Nov 2004
    Location
    udal koodu
    Posts
    600
    Post Thanks / Like
    ஆண்மகனாய் பாராது
    ஆன்மீகமாய் பார்த்திடின்
    நாமம் ஏதாயினும்
    நன்மைப் பயத்திடும்
    நஞ்சில்லா நெஞ்சுடன்
    நம்பி நினைத்திட்டால்.

    -
    கிறுக்கன்

  12. Likes kalnayak liked this post
  13. #1627
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    21,885
    Post Thanks / Like
    நினைத்திட்டால் அந்த நாளை நினைத்திட்டால்
    பாலாய் பொங்குது பாவை மனசு பரவசத்தில்
    பிறந்த வீட்டை விட்டு புது உலகம் சென்றிட
    படபடப்பாய் இமைகள் இனி துடிக்காமல் மூட
    பொருட்டில்லையிங்கு சேர்த்து வைத்த எதுவும்
    பறப்பேன் புதிய உலகில் இப்பூத உடலை துறந்து
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  14. Likes kirukan, kalnayak liked this post
  15. #1628
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    துறந்து செல்வதற்கு நான் ஒன்றும் பற்றற்றவன் இல்லை
    பறந்து மேற்பார்வை கொள்வதற்கு நான் பறவையும் இல்லை
    இறந்து போனால் எதைத்தான் பார்ப்பேன் விவரமும் இல்லை
    சிறந்து விளங்கிட எத்துறைதேடுவேன் வழிகாட்டி இல்லை
    திறந்த புத்தகமாகிட நான் என்ன சிறப்பு கொண்டேன் வாழ்வில்!!!
    .........-`҉҉´-
    -`҉҉´..)/.-`҉҉´-
    ....¨´“˜~.)/¸.~“˜¨
    ........¨´“˜~.“˜

  16. Likes kirukan liked this post
  17. #1629
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    21,885
    Post Thanks / Like
    வாழ்வில் சவாலுக்கு என்றும் பஞ்சமுண்டோ
    வரிந்து கட்டி நீயும் போராடிட வேண்டாமோ
    வருந்துவதால் எவ்விதமான பயனுமுண்டோ
    வதனம் தான் வாடி தன் ஒளி இழக்கலாமோ
    சோர்வை நீக்கி சுயபச்சாதாபம் தவிர்த்து எழுந்திடு
    சொடுக்கிக் கூப்பிடு சோதனைகளை வா வாவென
    வீழ்வேன் என நினைத்தாயோ என சண்டை போடு
    வாழ்வது ஒரு முறை அதை செய்திடு நிறைவோடு
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  18. Likes kirukan, kalnayak liked this post
  19. #1630
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நிறைவோடு வாழ்பவன்

    பிறந்த போது நிர்ணயித்த எதிர்காலம்
    சிறந்த பள்ளிக்கு வித்யா மந்திர்

    பள்ளிக்கு செல்ல எந்த கார் யார் ஓட்டுனர்
    மெள்ள கல்வி பயில நீச்சல் கற்க ஒரு இசைக்கருவி

    கூடவே டென்னிஸ் அவ்வப்போது கிரிக்கெட்
    தேடவே தேவையில்லாமல் நிர்ணயித்த இணை

    தந்தையின் செல்வ நண்பரின் ஒரே மகள்
    எந்தையும் தாயும் மகிழ வருடம் ஒரு பிறந்தநாள்

    கூடுதல் இரண்டில் ஒன்றாம் குழு முடிந்தவுடன்
    தேடுதல் இன்றி நிர்ணயித்த ஐந்து லட்ச ஐ டி தனியார்

    முடிந்ததும் டி.சி.எஸ் மும்பையில் முதல் வேலை
    கடிமணம் அடுத்த இரண்டாம் வருடம் பிள்ளை பிறந்தான்

    வித்யாமந்திர் சற்றே பெரிய கார் அடிக்கடி மாறும் ஓட்டுனர்
    மத்யமர் வாழ்வில் எங்கே மாற்றம் மகிழ்ச்சி ஒன்றே நிலை

    எப்போதாவது சேரியில் விளையாடி கழித்து தன் பிற்காலம்
    தப்போ சரியோ தன் கையிலாக நிலையாமையில் உழலும்

    வறியசிறுவனை வேடிக்கை பார்க்குங்கால் வாழ்க்கையில்
    தெரியவரா நிலையாமை அறியாமை ஆச்சர்யங்கள் தான்

    சுவையோ தன் வாழ்வை தானே வாழ்தல் தனித்தன்மையோ
    கவைக்கு உதவா நிச்சய வாழ்வில் சில திருப்பங்களும் உண்டு

    சக்கரை நோய் திடீர் பணி மாற்றம் பணி நீக்கம் திருப்பி தேடும்
    அக்கரையில் அயர்ச்சி மகனின் திடீர் குடி பழக்கம் பணப்பை

    பறிபோதல் சிலதொலைத்தல்கள் மறதிசார் மனமாச்சர்யங்கள்
    வறியோருக்கு வக்கற்றோருக்கே வாழ்க்கை சுவாரஸ்ய சுவையோ

    பிறப்பிலேயே நிர்ணயிக்க பட்ட நாடக வாழ்வு ஒரே கதை
    மறக்காத மக்களின் அதே நிலை அதே நிறை அதே அதே அதே
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

Similar Threads

  1. kavidhaikku kavidhai matrum Pattuku pattu
    By Oldposts in forum Poems / kavidhaigaL
    Replies: 1486
    Last Post: 23rd December 2010, 03:53 PM
  2. Bharathi kavidhai
    By Kanmani in forum Poems / kavidhaigaL
    Replies: 1
    Last Post: 16th August 2005, 06:54 PM
  3. edhir pattu no: II
    By kanaga arumugam in forum Poems / kavidhaigaL
    Replies: 1
    Last Post: 31st March 2005, 10:59 AM
  4. edhir pattu
    By kanaga arumugam in forum Poems / kavidhaigaL
    Replies: 3
    Last Post: 2nd February 2005, 10:03 PM
  5. kanavilum kavidhai
    By mohans in forum Poems / kavidhaigaL
    Replies: 7
    Last Post: 28th December 2004, 01:29 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •