-
31st May 2012, 03:05 AM
#1411
Senior Member
Diamond Hubber
-
31st May 2012 03:05 AM
# ADS
Circuit advertisement
-
1st June 2012, 05:07 PM
#1412
Senior Member
Diamond Hubber
-
1st June 2012, 05:08 PM
#1413
Senior Member
Diamond Hubber
http://nchokkan.wordpress.com/2012/06/01/prmswrm/
பார்வதீப ரமேஸ்வரம்
Posted by: என். சொக்கன் on: ஜூன் 1, 2012
In: ஓசிப் பதிவு | Creativity | Follow Up | Ilayaraja | Music | Poetry | Relax | SPB | Uncategorized
Comment!
சில சமயங்களில், பதிவுகளைவிட, அவற்றில் எழுதப்படும் பின்னூட்டங்கள் மிகத் தரமானவையாக அமைந்துவிடும். மற்ற ஊடகங்களைவிட இணைய எழுத்தை அதிகச் சுவாரஸ்யமாக்குவதும் இவைதான்.
எனக்கு அப்படி ஓர் அனுபவம் இந்த வாரம்.
தமிழ் திரைப் பாடல்களில் வரும் சில Easter Egg Momentsஐக் குறிப்பிட்டு ‘பிரித்தலும் சேர்த்தலும்’ பதிவை நான் எழுதியபோதே, இதேபோன்ற இன்னும் பல ஆச்சர்யங்கள் பின்னூட்டத்தில் குவியும் என்று உறுதியாக நம்பினேன். அதற்கு ஏற்ப ஏகப்பட்ட ஈஸ்டர் முட்டைகள் (உடையாமல்) வந்து விழுந்தன.
அவற்றில் ஒன்று, என்னைத் திக்குமுக்காடச் செய்துவிட்டது. நானோ நீங்களோ ஜுவல்லரி விளம்பரத்தில் வருவதுபோல் ‘தலைகீழா நின்னாலும்’, ‘தவமே செஞ்சாலும்’, ‘குட்டிக்கரணமே போட்டாலும்’, ‘ஒத்தக்கால்ல நின்னாலும்’…. இந்த மேட்டரைக் கண்டுபிடித்திருக்கமுடியாது!
நான் பெற்ற பிரமிப்பு பெறுக இவ்வையகம் என்று அந்தப் பின்னூட்டத்தை ஒரு தனிப் பதிவாகவே இடுகிறேன். இதனை எழுதியவர் ’பாலா அறம்வளர்த்தான்’, வாசிக்க எளிதாகப் பத்தி பிரித்ததும் சில சிறு திருத்தங்கள் செய்ததும்மட்டுமே என் பங்களிப்பு:
சலங்கை ஒலி படத்தில் வரும் ‘நாத வினோதங்கள்’ பாடலைக் கேட்டிருப்பீர்கள்.
அந்தப் பாடல் ஆரம்பிக்கும்போது காளிதாசரின் ரகுவம்சத்தில் இருந்து ஒரு ஸ்லோகம் வரும். அதன் கடைசி வரி “வந்தே பார்வதி பரமேஸ்வரம்.”
SPB அந்த வரியை இரண்டுமுறை பாடுவான், (SPB, KJY எல்லாம் எனக்கு அவன் இவன்தான் கண்டுக்காதீங்க, சொல்லடி சிவசக்தி மாதிரி ). முதன்முறை ‘வந்தே பார்வதி பரமேஸ்வரம்’ என்று சரியாக வரும், இரண்டாவது முறையாக அதனைப் பாடும்போது “வந்தே பாரவதீப ரமேஸ்வரம்” என்று பாடி இருப்பான்.
அதாவது, ‘பார்வதீப’ , குட்டி gap விட்டு ‘ரமேஸ்வரம்’ என்று வரும். இப்படிப் பிரித்து உச்சரிப்பது தவறு. நன்றாகவே சமஸ்கிருதம் தெரிந்த இளையராஜா இதை எப்படி அனுமதித்தார் என்று ஆச்சர்யமாக இருந்தது.
சமீபத்தில் படித்தேன், அது வேண்டுமென்றே இளையராஜா செய்ததாம்.
முதலில் ‘பார்வதிக்கும் பரமேஸ்வரனுக்கும் வந்தனம்’, இரண்டாவது ‘பார்வதீப’ (பார்வதியோட பதி : சிவன்) மற்றும் ’ரமேஸ்வரம்’ (’ரமா’ என்பது மகாலக்ஷ்மியோட இன்னொரு பெயர் , அதனால் ரமாவின் ஈஸ்வரன் (கணவன்) விஷ்ணு). ஆகவே இளையராஜா SPB ஐ வேண்டுமென்றே ‘சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் வந்தனம்’ என்கிற அர்த்தம் வருமாறு பாடச் செய்திருக்கிறார்.
இந்தக் காட்சியில் நடித்த கமலும் இதை அற்புதமாக புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு அபிநயம் பிடித்திருக்கிறார். கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள் : முதலில் பார்வதி மற்றும் சிவன் (0:22 முதல் 0:30). இரண்டாவது முறை வரும்போது ‘பார்வதீப’ என்பதற்கு அர்த்தநாரீஸ்வருடைய அபிநயம், ‘ரமேஸ்வரம்’ என்பதற்கு மகாலக்ஷ்மியோடு பாற்கடலில் சயனம் கொண்டிருக்கும் விஷ்ணுவுடைய அபிநயம் (0:34 முதல் 0:40).
What a classic team work!
அற்புதம். பொதுவாகக் கவிஞர்கள்தான் வார்த்தைகளில் விளையாடுவார்கள். இங்கே இசையமைப்பாளரும் பாடகரும் நடிகரும் சேர்ந்து ஒரு வித்தியாசமான குறும்பு செய்து நம்மை அசரடிக்கிறார்கள். இதைக் கண்டுபிடித்துச் சொன்ன பாலா அறம்வளர்த்தான் அவர்களுக்கு மிக்க நன்றி.
-
1st June 2012, 05:11 PM
#1414
Moderator
Platinum Hubber
Was about to post this.
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
1st June 2012, 07:30 PM
#1415
Senior Member
Veteran Hubber
only goes to show how much in sync IR and Kamal have ALWAYS been as artists !! Viswaroobathukku apparam varappogam maaberum padangalukku Raajavey isai amaikkavendumena venduvom!
-
1st June 2012, 09:48 PM
#1416
Senior Member
Veteran Hubber
NADANAM....RAGHU.SHESHU
matrum
GOBIKRISHNA
WITH assistants.. info from my DVD
Let us not forget the DIRECTOR..K.VISWANATH.
You can't assume, it's by genius of kamal haasan! may be his input or may be not!
indeed kamal is a great dancer, Indian cinema ever produced!
Last edited by baroque; 1st June 2012 at 09:52 PM.
-
1st June 2012, 10:08 PM
#1417
Senior Member
Veteran Hubber
sakala, Thanks for sharing such a deep insight on Naadha VinodangaL. I too was having this doubt for a long time on why IR broke that word. I could only think in terms of aesthetics. Now it adds more value and beauty to the song.
-
2nd June 2012, 04:35 AM
#1418
Senior Member
Diamond Hubber
Raaja Sir's 'Thalapathy' was a trend setter (highest royalty ever paid in India) iRaaja Sir's 'Thalapathy' was a trend setter (highest royalty ever paid in India) in the audio marketn the audio market
-
2nd June 2012, 04:50 AM
#1419
Senior Member
Veteran Hubber
கடல் அலைகள் நிரந்தரமா அவை ஒவ்வொன்றும் புதிது
அதில் குமிழாய் நுரைகளுமாய் வரும் கவலை உடைகிறது
எந்த காற்று தீண்டும் என்றா குழல் தேடும்
எந்த காற்று நுழைந்தாலும் புது இசை பாடும்
நாம் வாழும் காலத்தில் அட யாரும் தனி இல்லை
உன் தனிமைதன்னை தனிமையாகும் துணைகள்
தாவித்தாவி போகும் மேகம் பொழியும் நேரம்
காயப்பட்ட நெஞ்சில் ஈரம் ஊற்றும்
அந்த நீர் மேகம் எங்கு போனாலும்
உந்தன் பின்னால் இன்றும் துணையாய் இங்கு தொடராதோ
Like any air is same for a flute to produce new music, every situation is same for Maestro to create new magic. Great musical year this has been! Wishing our Dearest Maestro a Very Happy Birthday. May God bless him with best of health and wish him for many more birthdays to come and much more music to come. Proud and privileged to be moving with his ever memorable musical journey. Thanks you so much!
-
2nd June 2012, 05:05 AM
#1420
Senior Member
Diamond Hubber
Raja sir Birthday Spl. Two songs. Same hero, same situation, heroine is different. Actually our Plum gaaru would tell some 'extra' (totally non musical) similarity
Bookmarks