-
1st May 2012, 08:26 PM
#1131
Senior Member
Diamond Hubber
Originally Posted by
San_K
சாரு பல விஷயங்களில் சேறாகிவிடுவது போல, ஞானியும் இதுபோன்ற விஷயங்களில் சாணியாகிவிடுகிறார். பிரச்சினை என்னவென்றால் இந்த விஷயத்தில் சம்பந்தமே படாத ரஹ்மானும் கறையாகிவிடுகிறார்.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
1st May 2012 08:26 PM
# ADS
Circuit advertisement
-
1st May 2012, 08:27 PM
#1132
Senior Member
Diamond Hubber
-
1st May 2012, 08:28 PM
#1133
Senior Member
Seasoned Hubber
IR wins best music award for ASK movie at Norway (Tamil) Film Festival:
http://timesofindia.indiatimes.com/e...w/12936171.cms
thanks,
Krishnan
-
1st May 2012, 08:28 PM
#1134
Senior Member
Veteran Hubber
yeah post ...SKR, beautiful photos! good for you!
Plum, congrats.. enna postleyye thunder steal panninduerukkeenga!
vinatha.
-
1st May 2012, 08:31 PM
#1135
Senior Member
Veteran Hubber
Wow, Kamesh, ennadhan ungalukku enga mele akkaraiyo! Keep it up! Ungal dhayavu engalukku thevai!
vinatha
-
1st May 2012, 09:00 PM
#1136
Senior Member
Diamond Hubber
http://www.twitlonger.com/show/h80e8l
தோழர் ஞாநி,
மீண்டும் தம் வெறுப்பை உமிழ துவங்கி விட்டார். https://www.facebook.com/permalink.p...source=message இவருக்கு ராஜா மீது என்ன வெறுப்பு என்றே தெரியவில்லை! ஒரு தலித் காலில் பார்ப்பனர்கள் விழுந்து ஆசிர்வாதம் வாங்கும் அளவுக்கு உச்சானி கொம்பில் நிற்கிறார் என்றா அல்லது ராசைய்யா தமது இசையின் தரத்தால் ஒரு கடவுளைப் போல் கொண்டாடப் படுவதை சகிக்க முடியவில்லை என்பதாலா? ரஹ்மான தமது சினிமா ஆல்பங்களில் இசை கலைஞர்களின் பெயரை சேர்த்து வெளியிடுவதற்கு வெகு காலம் முன்பே இசையமைக்க பட்ட ’ஹவ் டூ நேம் இட்’ இன் ’ஆல்பம்’ கவர் இதுதான் http://www.thehindu.com/multimedia/a...I_1065272a.jpg மிக தெளிவாக ‘எல்லா’ இசை கலைஞர்களும் பெயர் குறிப்பிடபட்டு இருக்கிறது. இசை கலைஞர்களின் பெயர் குறிப்பிடுவது என்பது உலகளவில் தனி பாப்/கிளாசிக்கல் ‘ஆல்பங்களுக்கு’ கடைபிடிக்கபட்ட நடைமுறை. எந்த சினிமா சவுண்ட்ராக்கிலும் கம்போஸரை தவிர இசைத்த கலைஞர்களின் பெயர் இருக்காது . ரஹ்மான் தமது சினிமா இசையை பாப் ஆல்பங்களாகவே பார்த்ததும் அதில் இசைக்கும் எல்லா கலைஞர்களின் படைப்பு ரீதியான பங்கேற்பை ஏற்று கொண்டதுவுமே காரனம் அவர்கள் பெயர்களையும் சேர்த்து கொண்டதற்கு. ஆனால் ராஜா உலகின் நடைமுறை எதுவோ அதையே பின்பற்றி தமது பெயரை மட்டுமே தாம் இசை அமைத்த சினிமா ‘சவுண்ட்ராக்குகளில்’ போட்டு கொண்டார். மேலும் ராஜா தமது இசை கோர்வைகளில் உலகளாவிய கம்போஸர்களின் பானியிலேயே இசைஞர்களின் படைப்பு ரீதியான பங்கேற்பை ஏற்பதில்லை. இந்த எளிய விஷயம் கூட தெரியாமல் இதை ஒரு பெரிய குற்றம் போல் பல ஆண்டு காலமாக ராஜாவுக்கு எதிராக ஞாநி கக்கி வரும் விஷம் அருவருப்பாக இருக்கிறது. கண்டிக்கதக்கது. இதற்கு முன்பு நிகழ்ந்த நத்திங் பட் விண்ட் லைவ் கான்சர்ட்டிலும் அதில் வாசித்த ஹரி பிரசாத் செளராஷியா கலந்து கொள்ளவில்லை. ஆனால் தமது பேச்சில் அவரை குறிப்பிட்டார் ராஜா அதை போலவே இங்கும் நரசிம்மன்னின் பெயரை குறிப்பிட்டார் ராஜா. அதை நேரில் பார்த்தவர்களான நாங்களும் இந்த ஒலிப்பதிவுமே சாட்சி. https://t.co/S8u4UQj3 https://t.co/wYFrPK8D
மேலும் இவ்விரு நிகழ்ச்சிகளும் அவரது மகளான பவதாரினி மூலம் ஏற்பாடு செய்யபட்டு ராஜாவின் குழுவின் முக்கிய நெறியாளுனரான ‘பிரபாகர்’ என்பவரால் மீள் உருவாக்கபட்டு நிகழ்த்தபட்டது. ராஜா ரிஹர்சல்களில் கூட பங்கு பெறவில்லை! அவரும் மற்றவரை போல் ஒரு பார்வையாளர் என்ன மேலதிகமாக அவரது இசை ஆக்கம் என்பதால் ’எ ட்ரிபியூட் டூ ராஜா’ என்று சொல்லிக் கொள்ளலாம். என்ன பாடல்கள் இடம் பெரும் எப்படி நடக்கும் நிகழ்வு என்பது கூட அவருக்கு தெரியாது. என்வேதான் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகத்தில் சில சினிமா பாடல்கள் இசைக்கபட்டதை, பாஹ்-தியாகைய்யர் படங்களை மேடையில் வைத்து கொண்டு இந்த பாடல்களை பாடலாமா அது தவறு என்று மேடையிலேயே பவாவை கண்டித்தார். பொது விஷயங்களில் நேர்மையாளராகவே அறியபடும் ஞாநி ராஜா விஷயத்தில் மட்டும் இப்படி நேர்மையற்ற அற்பதனமான வாதங்களை வைத்து மனித தன்மையிலிருந்து சறுக்கி விடுகிறார். பகுத்தறிவு என்பதை கண்மூடி பூனைப் போல் அனுகுவதின் விபரீதம் இது. சமூகத்தை திறனாய்வு செய்வது இருக்கட்டும் தமது கருத்து நிலையை திறனாய்வு செய்வாரா ஞாநி? ஏனென்றால் மனிதத் தன்மையும் நேர்மையும் இல்லாமல் ஏராளமான திறமை இருந்து என்ன பயன்!
-
1st May 2012, 09:32 PM
#1137
Senior Member
Platinum Hubber
I'll have to restate my opinion on Gnani here again (and honestly, this has nothing to do with my rAsA-liking, just to highlight in another context that is relevant here) :
Mr muraNpAdu! Totally!!
I don't know how people automatically assume that this guy is so honest otherwise in life (i.e. on non-IR matters)
Some hubbers were upset with me for ridiculing him on his statement of 'illAtha kadavuLidam koodanguLaththukku vENdi prArththanai seyyum' self-contradictory statement.
Matter simple - if someone is a strong believer of evolution (and hence not in a supreme being as the originator of life), they automatically believe in "non-accountability" (to anyone) and will be only driven by selfish opinions (which are whimsies & fancies IMO).
It's very difficult for them to fit into a framework (honesty is a framework - "yes means yes & no means no" - BTW)!
Last edited by app_engine; 2nd May 2012 at 07:53 PM.
-
2nd May 2012, 12:05 AM
#1138
Senior Member
Veteran Hubber
Who cares!
Please get back to Shri.L.Sub, Rajesh Vaidhya etc..., their interaction with Shri.Ilayaraja!
-
2nd May 2012, 04:12 PM
#1139
Senior Member
Diamond Hubber
This is the inside cover of the HTNI album sold at the concert
Gnaani:- See whose name is in bold
Last edited by sakaLAKALAKAlaa Vallavar; 2nd May 2012 at 04:14 PM.
-
2nd May 2012, 06:52 PM
#1140
Senior Member
Diamond Hubber
http://www.twitlonger.com/show/h8dkac
Saravana Kumar (@Sharankay)
Posted Wednesday 2nd May 2012 from Twitlonger
ஞாநியுடன் பேசியதில் இருந்து: ராஜாவிடம் தமக்கு தனிபட்ட காழ்ப்பு இல்லை என்கிறார். அவர் சக கலைஞர்களை மதிப்பதில்லை என்றார். ஒவ்வொரு மேடையிலும் ராமசந்திரா, நெளசாத், எம்.எஸ்.வி, சுப்பராமன், பர்மன் என்று சிலாகிக்கிறாரே என்றேன். அது ராஜா தமது உச்ச நிலையில் இருந்து இறங்கிய பின்னே செய்கிறார் என்றார். எம்.எஸ்.வி. பொருளாதார ரீதியில் நலிந்த பொழுது ராஜா உச்சானி கொம்பில் இருந்தார், மதிக்க தெரிந்ததால் தான் 1984லிலேயே அவரை தேற்ற அவருடன் சேர்ந்து இசை அமைத்தார் என்றேன். உடனே ராஜா தம்முடன் வாசிக்கும் சக கலைஞர்களை மதிக்க மாட்டார் என்றார். சதா, விஜி, புரூ போன்றோரை குறிப்பிட்டு 35 ஆண்டு காலமாக அவருடனே இருக்கிறார்களே, மதிப்பில்லை என்றால் வெளியேறி இருப்பார்களே என்றதற்கு. வாழ்கை/பொருளாதார தேவைகள் என்று அடித்தார். கடந்த பத்து+ ஆண்டுகளாக ராஜா பொருளாதார ரீதியில் வெற்றுதானே வெளியேறி இருக்கலாமே என்றதற்கு, அவருடன் வேலை செய்த மற்றும் வெளியேறிய கலைஞர்கள் தனிப் பேச்சில் சொன்னதை வைத்தே முடிவுக்கு வந்ததாக சொன்னார். அப்போ வெறும் கிசுகிசு பாணியில் ஓரிடம் விட்டு வெளியேறிய பின் அவ்விடத்தை இகழும் கிழ்தரமான மனிததன்மையையா ஆதாரமாக கொள்கிறீர்கள் என்றால் ‘ஆமாம்’ என்று அடித்து விட்டார். தனிப்பேச்சில் ரஹ்மான் வீட்டுக்குள் இருந்து கொண்டே தாம் இல்லை என சொல்ல சொன்னதாக பல கலைஞர்கள்/இயக்குனர்கள் என்னிடம் சொல்லி இருக்கிறார்கள் அவைகளை ஆதாரமாக கொண்டு ரஹ்மானை நான் இகழலாமா என்றால் மடை மாற்றுகிறார்! சரி ராஜாவிடம் வேறு குறைகள் பார்க்கிறீர்களா என்றால் ‘இல்லை’ என்பதில் தெளிவாக இருக்கிறார். இந்த கேசட்டில் பெயர் போடுவதில்லை என்ற சின்ன விஷயத்தை வைத்தா தொடர்ந்து இந்த அவதூறு செய்கிறீர்கள் அதுவும் ரஹ்மானுடன் ஒப்பிட்டு என்றால், ஆமாம் என்கிறார். இது போல் மரபு உலக திரை இசை வரலாற்றிலேயே இல்லையே ஜான் வில்லியம்ஸ், ஜேம்ஸ் ஹார்னர் போன்ற எல்லோரும் மனித தன்மை அற்றவர்களா என்றேன். தாம் தமிழத் திரை இசைத் துறை பற்றி மட்டும் பேசுவதாக சொன்னார். ரஹ்மான் வந்து ஒரு மரபை துவங்கி வைத்தார் அதன் பின்பே ராஜா அதை பின் பற்றினார் என்றார். அதன் பின்பும் ராஜா பின் பற்ற்வில்லை என்றும் 1992க்கு பின் வந்த 100க் கணக்கான ஆல்பங்களில் குரு, காதல் கவிதை, மாயக்கண்ணாடி போன்ற என்னி விட கூடிய 10-15 ஆல்பங்களில் மட்டும் அப்படி இசை கலைஞர்கள் பெயர் வந்தது என்றும் அதன் முக்கியத்துவம் கருதி அல்லது விஷேச காரணங்களால் அப்படி நிகழ்ந்திருக்கலாம் என்றும், இன்னும் ராஜா உலக சவுண்ட்ராக் கம்போஸர்களின் பாணியிலேயெ இயங்குகிறார் என்றும் தெளிவுபடுத்தினேன். ஒப்பு கொண்டார். அப்போ இதில் என்ன பிரச்சனை என்றால் ’இது உங்களுக்கு பிரச்சனையா தெரியல எனக்கு தெரியுது’ என்கிறார். அடுத்து ஹவ் டூ நேம் இட் நிகழ்வில் நரசிம்மனை கூப்பிட்டு கெளரவிக்கவில்லை என்றார். இது ராஜா ஏற்பாடு செய்த நிகழ்ச்சி இல்லை என்றால், அவருக்கு தெரியாமல் நிகழ்ந்திருக்காது என்றார். நத்திங் பட் விண்ட் நிகழ்விலும் ‘ஹரி பிரசாத்தை’ அழைக்கவில்லை மற்றும் ரஹ்மான் தமது ஒவ்வொரு இசை நிகழ்ச்சியிலும் வாசித்த அனைவரையும் அழைக்கிறாரா என்றால், அவைகள் பர்ஃபார்மென்ஸுகள் பரவாயில்லை என்றும், ஆனால் இது 25ம் ஆண்டு வெள்ளிவிழா நிகழ்வு எனவே அழைத்து கெளரவித்து இருக்க வேண்டும் என்றார். 25ம் ஆண்டு என்பது தற்செயல் என்றும் நத்திங் பட் விண்டுக்கு பின் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவே பவதாரினி ஏற்பாடு செய்தார் என்றால், ஆனால் மக்கள் மனதில் இது 25ம் ஆண்டு விழா என்றே பதிய பட்டு இருக்கிறது என்றார். எனது விளக்கதிற்க்கு பின் புரிந்து கொள்ள தயாராக இருக்கிறிர்களா என்றால் ‘இல்லை’ நான் மக்களில் ஒருவன் எனவே இது வெள்ளி விழாவுக்காக கொண்டாடபட்ட ஒரு நிகழ்வு என்பதில் இருந்து மாற்றிக் கொள்ள தயாரில்லை என்றார். நரசிம்மனை அழைத்தாகவும் அவர் உடல்நிலை காரணமாக கலந்து கொள்ள முடியவில்லை என்று பவா’வின் வட்டம் தெரிவிக்கிறது என்றேன். இருக்க முடியாது என்றார். நரசிம்மனிடமே பேசி உறுதி செய்யலாமே என்றேன். செய்கிறேன் என சொன்னார். அவரே கூட இதை இவ்வளவு பெரிய விஷயமாக எடுத்து கொள்ள மாட்டார்ப் போல் என்றேன். இந்த விஷயத்தில் ரஹ்மானை இழுத்து ராஜாவை இகழ்கிறீர்களே இதே போல் சின்ன பட்ஜெட் படங்களுக்கோ பொருளாதார ரீதியில் தத்தளிக்கும் நபர்களுக்கோ ராஜா குறைவான சம்பளத்தில் அல்லது சம்பளம் இல்லமால் இசை அமைத்து இருக்கிறாரே இந்த நல்ல குணம் இல்லாமல் பெரிய பட்ஜெட், மார்க்கெட்டிங் என்றிருக்கும் பணக்கார ரஹ்மானை கெட்ட குணம் கொண்டவர் என்று இகழ்ந்து எழுதுவீர்களா என்றால். தேவை இருப்பின் செய்வேன் எனக்கு சார்புகள் கிடையாது என்றார். பார்ப்போம்.
Bookmarks