-
12th April 2012, 08:54 PM
#11
Senior Member
Senior Hubber
http://www.facebook.com/raagadevan
இசைஞானி பக்தர்கள் (The Maestro’s Devotees)
11 hours ago
ஜூன் 2002 ‘கணையாழி’யில் வெளியான திரு. செழியன் அவர்களின் கட்டுரையிலிருந்து…
”ஒருமுறை எனது இசைவகுப்பின் ஆசிரியர் மேற்கத்திய இசையின் கூட்டுச்சுரங்கள் (Chords) பற்றிய பாடத்தில் ‘C Major’ Scale பற்றி நடத்தினார். அப்போது ‘C Major’ Scale’ன் முதல் Chord ‘C’ Major, இரண்டாவது Chord ‘D Minor”. ஒரு பாடலின் ஏற்பாட்டில் (Arrangements) இந்த இரண்டு Chordகளையும் அடுத்தடுத்து இசைப்பது தவறானது' என்று சொன்னார். கர்நாடக சங்கீதத்திலும், ஸட்ஜமம் என்கிற முதல் ஸ்வரத்திற்கு, அடுத்து வருகிற இரண்டாவது ஸ்வரமான ரிஷபம் பகைஸ்வரம். இதுபோலவே மேற்கத்திய இசையிலும் முதல் Chord (இதனை Tonic Chord என்றும் இரண்டாவது Super tonic Chord என்றும் அழைக்க வேண்டும்) அதற்கடுத்த இரண்டாவது Chord’உடன் இணைந்து வருவதில்லை.
’உதிரிப்பூக்கள்’ படத்தில் ‘அழகிய கண்ணே’ பாடலைக் கேட்கும்போது அந்தப் பாடலின் துவக்கமே C Major, D Minor இரண்டு Chord’களின் அடுத்தடுத்த தொடர்ச்சியோடு இருந்தது ஆச்சரியமாக இருந்தது. இதைப்போல ஹார்மனி (Harmony) பற்றிய பாடத்தில், ஒரு இசையை இயற்றும்போது, ஒரு ஸ்வரத்திலிருந்து அடுத்த ஸ்வரத்திற்கு நகருகையில் ஒரு ஒழுங்கான இயக்கம் (movement) இருக்க வேண்டும். முதல் ஸ்வரத்திலிருந்து ஏழாவது ஸ்வரத்துக்கு தாவுதல் போன்ற Great Jump செய்யக்கூடாது; அது இனிமையாக இருக்காது என்பது இசைக் கோட்பாடு. ஒரு இசைவிதி. ‘செந்தூரப்பூவே’ என்ற ‘பதினாறு வயதினிலே’ பாடலைக் கேட்கும்போதும், ‘என்னுள்ளில் எங்கோ..’ என்ற ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ பாடலின் ஹம்மிங் கேட்கும்போதும் இந்த விதி இவரால் எவ்வளவு அழகாக மீறப்பட்டிருக்கிறது என்பது புரிந்தது.
இவை மிகச்சிறிய உதாரணங்கள். இதுபோல மேலோட்டமாகப் புலப்படாத, இசைவிதிகளுக்கு முரணான மீறல்களைத் தனது பாடல்கள் பெரும்பாலானவற்றில் நிகழ்த்துவதன் மூலம் விதிகளைத் திருத்தி எழுதியிருக்கிறார். இதுபோலவே ‘மலர்களே, நாதஸ்வரங்கள்’ என்ற பாடலின் முடிவு அந்தரத்தில் ஒரு மணியோசையோடு முடியும். Cadence’ விதிகளின் இனிமையான மீறல் இது.
ஒரு பாடலை ஏதேனும் இசைக்கருவியில் வாசித்துப் பார்க்கும்போதுதான் ராகங்களை, அதன் கடினத்தன்மையை எப்படியெல்லாம் இவர் இனிமையாக்கியிருக்கிறார் என்பது புரியும். Chord Progression’ல் Dischord என்று ஒதுக்கப்படுகிறவைகளைக்கூட இவர் இனிமையாகக் கையாள்கிற விதம் ஆச்சரியமானது. ‘என் வானிலே’ என்ற ‘ஜானி’ படப்பாடலின் ஸ்வரங்களின் முரணான தொடர்ச்சியும், அதன் போக்குக்கேற்ப புனையப்படும் chordகளின் தொடர்ச்சியும் அலாதியானது.
ஒரு மைத்துளி நீர்ப்பரப்பில் உதிரும்போது உள்வரையும் சித்திரம்போல, இவரது படைப்புச் செயல்பாடு தன்னிச்சையாக, விதிகளைப் பொருட்படுத்தாமல் தனக்குள்ளாக ஒரு இயங்குதலோடு நிகழ்கிறது.
நன்றி : கணையாழி, ஜூன் 2002
தகவல் நன்றி: திரு. Senthil Kumar Jayakumar — with Bala Venkatesh.
-
12th April 2012 08:54 PM
# ADS
Circuit advertisement
Bookmarks