Page 2 of 2 FirstFirst 12
Results 11 to 13 of 13

Thread: INBAM ENGAE.?... Sudhaama Ka-Vidhai Thodar.!!!

  1. #11
    Senior Member Veteran Hubber
    Join Date
    Dec 2004
    Location
    USA
    Posts
    3,099
    Post Thanks / Like
    .Shifted.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #12
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    எல்லாம் நன்று.

    தெரிந்துகொள்வதற்காகக் கேட்கிறேன்.

    இந்தத் திரியின் தலைப்பில் - "ka-Vidhai" என்று பிரிக்கப் பட்டிருக்கிறதே, இப்படிப் பிரித்து எதை உணர்த்துகிறீர்கள்?


    அன்புடன்
    B.I. Sivamaalaa (Ms)

  4. #13
    Senior Member Veteran Hubber
    Join Date
    Dec 2004
    Location
    USA
    Posts
    3,099
    Post Thanks / Like

    .
    Quote Originally Posted by bis_mala
    எல்லாம் நன்று.

    தெரிந்துகொள்வதற்காகக் கேட்கிறேன்.

    இந்தத் திரியின் தலைப்பில் - "ka-Vidhai" என்று பிரிக்கப் பட்டிருக்கிறதே, இப்படிப் பிரித்து எதை உணர்த்துகிறீர்கள்?


    அன்புடன்


    மிக்க நன்றி சிவமாலா அன்பரே,


    வெகு ஆவலுடன் நான் எதிர்பார்த்திருந்த கேள்வி இது.

    உங்களது ஆர்வம் பாராட்டத்-தக்கது.

    ஆனால் உங்களது கேள்விக்கு நான் மட்டும் விடை அளித்து-விட்டால் அதில் என்ன பெரும் சுவை.? சுவாரசியம்.?

    ஏனைய அன்பர்களின் சிந்தனை கண்ணோட்ட விருந்துகளையும் நாம் கூடி அனுபவிப்பது அன்றோ இந்த பொது-அரங்க மேடையின் நோக்கம்.! அரும் சுவை.!!

    எனவே உங்களது அறிவார்ந்த நல்வினாவுக்கு பிற அன்பர்களின் மறுமொழி-விடைகளை ஆவலுடன் எதிர்பார்த்து மேலும் சில நாட்கள் பொறுத்திருக்கிறேன்.

    பின்னர் இறுதியாக விடை கூறுகிறேன்.



    ஏனைய அன்பர்களே, தமிழ்-கூறும் நல் உலகோரே,

    அன்பர் சிவமாலாவின் உரிய கேள்விக்கு விடையாக உங்களுக்குத் தோன்றுவது என்ன.?

    ….உங்களது சிந்தனைக்-குதிரைகளையும் ஓட விட்டு, அவரவர் நோக்கிலே….

    …. எங்களுக்கு பல்சுவை கருத்து-விருந்து வழங்க ஆவலுடன் அழைக்கிறேன். வருக.

    அன்புடன் – சுதாமா.

    ================================================== =====================



    தாழ்-பிறவி மந்தியரே நாங்கள்.!!...


    கேவலம் வாயில்லாப்-பிராணி மிருகமே.!



    உயர்-பிறவி மாந்தரே,


    ....உம்மிலும் சிறப்பாக வாழ்கிறோமே.! எப்படி.?




    [html:5315797c61]
    [/html:5315797c61]



    1.
    வாழப்-பிறந்தோம் வையத்து மந்தியாக காட்டு-வாழ்க்கையே நம்-உலகம் இதுவே
    சூழல் இவ்வாறே சுற்றுப்புறம் இன்னதே இப்படித்-தான் என எம் ஆதி-முன்னோர்
    தோழர் பகை எவர்-எவர் பிற-மிருகம் ஏனையவையும் வலிந்து கவனித்துத் தாமே
    ஆழக்-கற்ற அனுபவக்-கல்வியே எங்கள் வாழ்க்கைப்-பாடம் சந்ததி வழி-வழியே.!

    2.
    வழி-வழி வந்த அனுபவக்-கல்வி, முன்னோடியர் தந்த எழுத்தில்லா சாத்திர-விதி
    கொழி-சுவர்க்கம், சுய-நெறியால் பிறர்-சாரா வாழத்-தெரிந்தோரே புவி வாழ-வலர்
    பழி பிறர்-மீது சுமத்தா தன்-நெறி தானே வகுத்து முன்னெச்சரிக்கை ஜாக்கிரதை,
    மொழி மா-அறிவரே தெரிந்தீர் செயல்-படுத்துகிறீரா.? கவனப்-பிசகு ஆபத்து வாழ

    3.
    வாழ நன்முறை விழைவோர் எப்போதும் மறவாது கொள்ள வேண்டிய நியதியாம்
    வேழமே எனினும் கேவலம் ஓர் சிறு எறும்பும் கூட, மறைந்து தாக்கி மாய்க்குமே
    தோழனே ஆயினும் முன்னெச்சரிக்கை முற்றிலும் சுயச்-சார்போடு கவனம் தேவை
    சூழலைக் கணமும் நினைந்து உற்றுக்-கவனிப்பதே எமது சுபாவம் வாழ-விழித்தே.

    4.
    விழித்தே கூர்ந்து-கவனித்தால் தீ, மழை, புயல், பூகம்பம் முன்-அறிவிக்கும் சூழலே
    சுழித்து-ஓடு நதி-அழகில் மயங்கிக்-குதித்தால் அதோ-கதி, மலைப்-பாம்பு மரக்-கொடி
    குழி-சேறு மூடி புல்-தரை பூ-விரிப்போ புதைக்கும்; குளிர்-போக்கி சமை தீப்பொறியே
    அழிக்கும் தீ, மயங்காதே பொழில்-எனினும் தழுவவோ மாயம் காட்டு இயற்கையே

    5.
    இயற்கையே நம் அன்னை நமக்கு ஊண் நீர் மூச்சு வாழ்-நிலம், தீ, வான் கூரையும்
    மயக்கம்-உறு மாயா-ஜால உலகு ஆட்டிச் சுற்றி சுழற்றி இரவு-பகல் பருவ-மாற்றம்
    வயல்-பயிர் தாவரம் பற்பல கனி, நதி அருவி கடல், தேன், மலர் மணம் பொழிலே
    அயரா உழைத்தே நம்மைக்-காக்கும் தாயை நன்கு புரிந்து புரிகிறோம் பிரதி-கடமை

    6.
    பிரதி-கடமை உணர்வே உயர்-மாந்தரே வியந்து மந்தி-எம்மையே மதிக்க மன்னராய்
    நரக-புவியிலும் சுவர்க்கம் காண்-பிறவி, பிற மிருகங்களினின்றும் உயரியரோம் தூய
    தரம் மிகு மாண்-தகையராய் தலை-நிமிர்ந்து வாழ வகை செய்வனவே எம் சுய-நெறி,
    பிறர்-நிலையில் நம்மை கற்பனை நினைந்து, வலிந்து அவரவர்க்குப் பணி நம் கடன்.

    7.
    கடனே வாழ்க்கை, இயற்கை ஓயாது ஒழியாது பணியாற்றி நம்மை வாழ-வைக்கும்
    உடன் வாழ் தாய் நம்மைக் கேட்கவில்லை நாடவில்லை நமது பிரதி கடன் கடமை
    ஜடம், மிருகம் பூச்சி அனைய தாழ்-படைப்புக்களோ வீண்.? புவி உயர்-பிறவியர் நாம்
    அடர்-பொன் அறிவு-அலர் அருள்-உளம் வித்தியாசம் இலையோ பண்புறு சுய-நெறி?

    8.
    நெறி-பட வாழ்ந்து-பார் மாந்தே மந்தி நாங்கள் கண்ட அனுபவ-இலக்கணம் பிறரது
    உரிமை நீரே வலிந்து முன்வந்து தந்தால், நற்பயன் உம்மைத் தாமே நாடித் தேடி
    மரியாதை பெருமை அன்பு துணை உதவி சமுதாயம் தாமே தரும் பண்பு ஆதரவு
    பெரிதும் பிறர் போற்ற தலை-நிமிர் மன்னர் ஆக்கும் இல்லையேல் போராட்டமே.

    9.
    போராட்ட வாழ்க்கை தாழ்-பிறவி பேதைமை மிருக-நெறி நாம் பின்பற்றத்-தக்கதோ
    கோராத பிறர் உரிமை-என்றே, நாம் பட்ட பிரதி-கடனை வலிந்து வழங்காவிட்டால்
    மாறாவார் பிறர் எதிரி-ஆகி தம்-உரிமை பிடுங்கிக்-கொள்வர், பேராசை, பொறாமை
    ஏராளம் வாய்ப்பு புவி-சுவர்க்கம் தாழ்த்தவோ தீரா-நரகம் தாமே ஆக்கவோ மாந்தர்

    10.
    மாந்தரே வாழ்க்கை ஓர் உரிமையா கடமையா எனும் கேள்விக்கு விடை கடமை
    ஆந்தனையும் பிறர்-நலமும் தன்னலம்-போல், நேர்மை வழுவா பந்தக்-கடன் நாடி
    பாந்தம் அன்பு பந்தம் ஓர்-குடும்ப உணர்வு பண்பு ஒற்றுமை கூடி-ஓங்கு நோக்கம்
    வேந்தராய் புவி சுவர்க்கம் வாழ-வைக்கும் உண்மை மந்தி எம்மைப் பார் புரிவீரா.?



    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> >>>>>>>>>>>

    அரும் சொற்-பொருள்:

    [பாந்தம் = நெருக்கம்; ---- ஆந்தனையும் = இயன்ற-அளவு; ---- பந்தக்-கடன் = Commitment; --- பந்தம் = Binding.]


    <<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<< <<<<<<<<<<<<

    -- தொடரும்

    .

Page 2 of 2 FirstFirst 12

Similar Threads

  1. thooNgaL - mini thodar
    By madhu in forum Stories / kathaigaL
    Replies: 36
    Last Post: 28th April 2007, 04:33 AM
  2. "thodar" kathai
    By Oldposts in forum Stories / kathaigaL
    Replies: 77
    Last Post: 5th April 2006, 02:22 PM
  3. thodar kadhai
    By thendral in forum Miscellaneous Topics
    Replies: 40
    Last Post: 24th December 2004, 12:16 PM
  4. kadhal engae
    By ayalnatturasigan in forum Poems / kavidhaigaL
    Replies: 3
    Last Post: 7th December 2004, 04:57 AM
  5. Thodar kirukalgal
    By kirukan in forum Poems / kavidhaigaL
    Replies: 7
    Last Post: 29th November 2004, 06:23 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •