Quote Originally Posted by P_R View Post
சாதாரண (தேடிச் சோறு நிதம் தின்று) வாழ்க்கைல கொஞ்சம் fantasy தேவைப்படுது.
வேணாங்கில! ஆனால் மற்றவர்களுக்கு இம்சை தராமலும், பார்ப்பவர்கள் முகம் சுளிக்காமலும் அமைத்துக் கொள்ளலாமே! இங்கேயுள்ள ஒரு கோயிலுக்கு கடந்த கோடையில் சென்றிருந்தேன். கூட்டமில்லாததால் பாலாபிஷேகத்தை அமர்ந்து பார்க்கக் கூடிய வாய்ப்பு. Gallon Gallon-னாக பால்..1..2..3....10(!)......20.....25.. என நீண்டு கொண்டே இருந்தது. பொறுக்க முடியல. கிளம்பி வந்துட்டேன். மனம் கட்டுப்பாடில்லாமல் இருக்கும்போது எப்படி சாமி கும்பிடுவது? எல்லாத்துக்கும் ஒரு வரையறை இருக்கிறது. தானம் செய்றதுக்கு ஆளுங்க இருக்காங்க என்றால் இப்படியா விரயம் செய்வது? மதச்சடங்குகள் படிச்சவன், படிக்காதவன் என எல்லோரையும் மறைகயண்டு போக வைக்கிறது.