-
21st December 2011, 01:18 PM
#1581
Senior Member
Devoted Hubber
சிதம்பர நினைவுகள் - பாலசந்திரன்சுள்ளிக்காடு
சிவாஜி பற்றிய கட்டுரைலிருந்து சில வரிகள் :
..................கூட வந்த நண்பர் சிவாஜியிடம் வீரபாண்டிய கட்டபொம்மனிலிருந்து ஒரு டயலாக் சொல்லக் கேட்க இப்படித் தொடர்கிறது :
“சிவாஜி கணேசன் சிறிது நேரம் கண்மூடி கைகூப்பி அமர்ந்திருந்தார். பிறகு மெதுவாகக் குனிந்து இடதுகையால் வேட்டியின் தலைப்பைப் பிடித்து மெதுவாக நிமிர்ந்தெழுந்து சட்டென விஸ்வரூபமெடுத்தது போலத் திரும்பி நின்றார். நாங்கள் மிரண்டு போனோம். உயரம் குறைவான வயதான எங்களிடம் இவ்வளவு நேரம் இயல்பாய் பேசிக்கொண்டிருந்த சிவாஜி கணேசனல்ல அது. மனித ஆத்மாவை நடுநடுங்க வைத்த வீர பாண்டிய கட்டபொம்மன் தான் அது. சூரியன் அஸ்தமம் ஆகாத பிரிட்டீஷ் சாம்ராஜ்யத்தின் பிரதிநிதியான ஜாக்சன் துரைக்கு நேராக தமிழக வீர பௌருஷத்தின் சிங்க கர்ஜனை முழங்கியது…..
………ஒரு இளம் சூட்டினை லஜ்ஜையோடு நான் உணர்ந்தபோது தான் என்னுடைய உள்ளாடைகள் நனைந்தது எனக்குத் தெரிய வந்தது”
-
21st December 2011 01:18 PM
# ADS
Circuit advertisement
-
21st December 2011, 01:37 PM
#1582
Senior Member
Devoted Hubber
சாதனையாளர்கள் பலரும் தவறி விழுவது பிள்ளைப் பாசத்தால் தான்.
ஆனால் அதிலும் நடிகர் திலகம் நடிப்பின் மீது அவருக்கிருந்த மரியாதையை நிரூபித்தார்.
தன் மகன் என்பதற்காக அவர் பிரபுவை தன் வாரிசாக மக்களிடம் திணிக்கவில்லை.
பிரபு ஒரு சமயம் ‘நான் எப்படி நடிக்கின்றேன்?” என்று கேட்டபோது “முதல்ல நீ தமிழை ஒழுங்காப் பேசு. அப்புறமா நடிக்கிறதைப் பத்திப் பார்க்கலாம்” என்று சொன்னவர் அவர். திறமையின் அடிப்படையில் கமலையே வாரிசாக ஏற்றுக்கொண்டார்.
நடிகர் திலகத்தின் நேர்மைக்கு இது ஒரு சான்றாகவும் அமைந்தது.
-
21st December 2011, 05:05 PM
#1583
Senior Member
Veteran Hubber
அன்புள்ள பம்மலார் சார்,
வான்புகழ் கொண்ட நடிகர்திலகத்தின் 'நீலவானம்' மற்றும் 'புதிய வானம்' திரைக்காவியங்களின் ஆவணப்பதிவுகள்....
நீலவானம் படப்பிடிப்புக்காட்சிகள்...
நடிகை மீனாவின் இதயத்தை நெகிழ வைக்கும் அனுபவப் பதிவு....
ராஜபார்ட் ரங்கதுரையின் 14 விதமான வித்தியாசமான கெட்-அப்புகளின் நிழற்படத்தொகுப்பு.....
என அனைத்துப்பதிவுகளுமே மிக மிக அருமை. அதெப்படி ராஜபார்ட்டின் நிழற்படங்கள் அனைத்தும் ஒரே அளவில் கிடைத்தன?. சூப்பர் சார்.
அசத்துங்கள்.
-
21st December 2011, 05:30 PM
#1584
Senior Member
Devoted Hubber
ஒரு தமிழ் ஆன்லைன் புத்தக கடையில் , அதிகம் விற்பனையில் (vcd / dvd ) உள்ள மற்றும் என்றும் இனிமை படங்களின் வரிசையில் ஆறு படங்கள் உள்ளன.
அவற்றில் 5 படங்கள் நடிகர் திலகத்தின் படங்கள் :
பாகப்பிரிவினை ;
நெஞ்சம் மறப்பதில்லை;
தில்லான மோகனம்பாள்;
பாரத விலாஸ்;
திருவரூட்செல்வர் ;
கப்பலோட்டிய தமிழன்
-
21st December 2011, 05:34 PM
#1585
Senior Member
Veteran Hubber
அன்பு வாசுதேவன் சார்,
நடிகர்திலகத்தைப்பற்றி யார் என்ன சொல்லியிருந்தாலும் அந்த துணுக்குகளையும், ஏடுகளையும் இங்கே பதித்து விடுவது என்ற நோக்கோடு, நீங்கள் த்ந்திருக்கும்
வெண்ணிற ஆடை நிர்மலாவின் ஸ்டேட்மென்ட்
ஜமுனாவின் ஸ்டேட்மென்ட்
எஸ்.என்.பார்வதியின் ஸ்டேட்மென்ட் என்று சகட்டு மேனிக்கு பொழிந்து வருகிறீர்கள். அதுவும் அவர்களுடைய அபூர்வ புகைப்படங்களோடு.
பாராட்டுக்கள்.
-
21st December 2011, 09:39 PM
#1586
Senior Member
Devoted Hubber
mr karthik
Nice write up-u have brought in front of eyes as if yesterday it happenned-i want to c the film now
-
21st December 2011, 11:27 PM
#1587
Senior Member
Veteran Hubber
Originally Posted by
KCSHEKAR
டியர் பம்மலார், ராஜபார்ட் ரங்கதுரை, 14 வித கெட்டப்புகள் கலக்கல். நன்றி.
டியர் சந்திரசேகரன் சார்,
தங்களின் அன்பார்ந்த பாராட்டுக்கு எனது மனமார்ந்த நன்றி !
அன்புடன்,
பம்மலார்.
-
21st December 2011, 11:29 PM
#1588
Senior Member
Veteran Hubber
டியர் வாசுதேவன் சார்,
நடிகர் திலகம் பற்றி நடிகை ஜமுனா, நடிகை எஸ்.என்.பார்வதி ஆகியோர் கூறிய கருத்துக்கள் கனக்கச்சிதம் ! மிக்க நன்றி !
அன்புடன்,
பம்மலார்.
-
21st December 2011, 11:41 PM
#1589
Senior Member
Diamond Hubber
-
21st December 2011, 11:50 PM
#1590
Senior Member
Veteran Hubber
டியர் mr_karthik,
தங்களின் பாராட்டுக்கு முதற்கண் நன்றி !
தாங்கள் பதிவு செய்துள்ள "ராஜபார்ட் ரங்கதுரை" நினைவுகள் உண்மையிலேயே மெய்சிலிரிக்கும் அனுபவங்கள். நாங்கள் அனைவரும்,
"தங்களுடனேயே ஸ்ரீகிருஷ்ணா தியேட்டருக்கு வந்தோம். காட்சி தொடங்குவதற்கு முன்பாக நடைபெற்ற கொண்டாட்டங்களையும் கண்டு களித்து அக்கொண்டாட்டங்களில் நாங்களும் கலந்து இன்புற்றோம். மாலைக்காட்சியை தங்களோடும் தங்களது தோழர்களோடும் மிகுந்த ஆரவாரங்களுடன் பார்த்து மகிழ்ந்தோம். வீடு திரும்பிய பின்னர், இரவு வெகுநேரம், இம்மகிழ்ச்சியில் உறக்கம் வராமல் விழித்திருந்தோம்"
என்று சொல்லுமளவிற்கு தங்களது பசுமை நினைவுகள் பதிவு தத்ரூபம் ! தங்களுக்கு எனது பாசமான பாராட்டுக்களுடன் கூடிய பொன்னான நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
Bookmarks