'நீதி' நினைவலைகளை நீங்கா நினைவலைகளாய் ஆக்கி விட்டீர்கள். உங்கள் அபார நினைவாற்றலுக்கு என்னுடய ஒரு 'நீதி' (தேங்க்ஸ் )சல்யூட். அற்புதமான பதிவு. நாங்கள் கடலூரில் கொட்டும் மழையில் (ஒரே வெள்ளக்காடு) அதைவிட பிரம்மாண்டமான மக்கள் வெள்ளத்தில் மூழ்கி டிக்கட் முத்தை எடுத்து, நீந்தி, நீதியை நியூசினிமா திரை அரங்கில் கண்டு களித்தது உங்கள் பதிவைப் பார்த்ததும் நினைவுக்கு வந்து விட்டது. அடாது மழையிலும் விடாமல் அரங்கு ஐந்தே நிமிடங்களில் நிரம்பி விடும். கிட்டத் தட்ட ஒரு மாதம் ஓடி வசூல் மழை பொழிந்து அபார வெற்றி கண்டது நீதி. அந்தக் காலங்களெல்லாம் நமக்கு குப்தர்களின்....... போல.
'நீதி' மற்றும் 'மனிதரில் மாணிக்கம்' பதிவுகளுக்காக தங்களின் அன்பான பாராட்டுதல்களுக்கு என்னுடைய மகிழ்ச்சி கலந்த நன்றிகள்.
அன்புடன்,
வாசுதேவன்.
Last edited by vasudevan31355; 8th December 2011 at 11:19 AM.
தங்கள் பாராட்டுகளுக்கு என் தலை வணங்கிய நன்றிகள். தங்கள் பாராட்டும், அன்பும் திக்குமுக்காட வைக்கிறது.
தேவ் ஆனந்த் அவர்களுக்கு நம் அன்புத்தலைவரை சம்பந்தப்படுத்திய அவருடைய பேட்டியை வைத்தே அஞ்சலி செய்திருப்பது மிகப் பொருத்தம்.(இதற்குத் தான் பம்மலார் வேண்டுமென்பது) தன் காதலைப் பற்றிய அவருடைய ஒளிவு மறைவு இல்லாத மனம் திறந்த பேட்டி நிஜமாகவே வியக்க வைத்து விட்டது. ஒரு புகழ் பெற்ற ஸ்டைல் ஹீரோவிற்கு சம அந்தஸ்துடைய இன்னொரு ஹீரோ (ராஜ்கபூர்) வில்லனாகிப் போனது தேவ் ஆனந்த் அவர்களின் துரதிருஷ்டம் தான். இப்படி போல்டாக இங்கெல்லாம் யார் இப்படி பேட்டி தருகிறார்கள்? இந்தியாவே வாயைப் பிளந்து பார்த்த அந்த அசத்தல் கதாநாயகனுக்கே காதல் தோல்வி. ம்... விதி யாரை விட்டது?
(தேவ் ஆனந்த் அவர்கள் 110 திரைப்படங்களில் நடித்தும், 19 படங்களை இயக்கியும், 35 படங்களைத் தயாரித்தும் மாபெரும் சாதனைகள் புரிந்த நடிகர். 1946- இல் 'Hum Ek Hai' என்ற ஹிந்திப் படத்தில் அறிமுகமானார். 2011- இல் வெளியான 'Charge Sheet'தான் அவருடய கடைசிப் படம். 2001-இல் 'பத்மபூஷன்' அவார்டும், 2002-இல் 'தாதா சாகேப் பால்கே' விருதும் பெற்ற பெருமைக்குரியவர்.).
நடிகர் திலகத்தைப் பற்றி அவர் சிலாகித்து சொன்ன விதம் அவர் உண்மையாகவே ஒரு ஜென்டில்மேன் தான் என்று நிரூபித்து விட்டது. அவருடய நல்ல உள்ளத்திற்கு அவருடய ஆத்மா நல்லபடியாக சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம்.
வித்தியாசமான அருமைப் பதிவை அளித்ததற்கு தங்களுக்கு என்னுடைய அகம் குளிர்ந்த அன்பான நன்றிகள்.
அது போலவே 'Khoya Khoya Chand' வீடியோப் பாடல் பதிவு செய்து கலக்கியிருக்கிறீர்கள். என்ன பாடல் அது!....இப்படிப்பட்ட பாடல்களை இனி கேட்க முடியுமா?... சூப்பர் பதிவு.
'லக்ஷ்மி கல்யாணம்' முதல் வெளியீட்டு விளம்பரம், பேசும் படம் முதல் வெளியீட்டு விளம்பரம் இரண்டும் அதி அற்புதம். எங்கிருந்துதான் தேடித் பிடிக்கிறீர்களோ.... அசுர சாதனை.
அன்புடன்,
வாசுதேவன்.
Last edited by vasudevan31355; 8th December 2011 at 11:18 AM.
தங்களுடைய மனமுவந்த 'நீதி' பதிவு பற்றிய பாராட்டிற்கு பணிவான நன்றிகள். நான்கே வரிகளில் 'நச்'சென்று நடிகர் திலகத்தின் அந்த பாலாஜியுடனான கட்டத்தை சொல்லியிருப்பதற்கு என் அன்பு பாராட்டுதல்கள்.
இப்படத்தில் நடிகர்திலகம் கௌரவத்தோற்றம் என்றுதான் பெயர். ஆனால் படம் முழுவதும் வருவார். கதாநாயகன் ஏ.வி.எம்.ராஜனுக்கு ரொம்பவே சீரியஸ் ரோல் என்பதால், தனது ஜோவியலான, வித்தியாசமான நடிப்பின் மூலம் படத்தை தூக்கி நிறுத்துபவர் நடிகர்திலகம்தான். ஞாபக மறதிக்காரரான டாக்டர் ரோலில் வெளுத்து வாங்கியிருப்பார்.
(இப்படத்தைப்பார்த்து இதே போல ஒரு ரோலில் நடிக்க வேண்டுமென்று தான் விரும்பியது, 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட 'சுயம்வரம்' படத்தில் நிறைவேறியதாக நடிகர் கார்த்திக் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். இருந்தாலும், இரண்டு பேருடைய பெர்பாமன்ஸுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் என்பதையும் கார்த்திக் ஒப்புக்கொண்டிருந்தார்).
சட்டை போடாமல் வெறும் பனியன் மட்டும் அணிந்து, அதன் மேல் கோட்டுப்போட்டுக்கொண்டு, தாடையில் குறுந்தாடியுடன் தோன்றும் அந்த ரோல், அதுவரை நடிகர்திலகம் செய்திராதது. பயங்கரமாக சண்டை நடந்துகொண்டிருக்கும்போது, மாஸ்ட்டர் ராமுவின் கையைப்பிடித்துக்கொண்டு, சண்டையில் அடிபட்டு விழும் ஒவ்வொருவரையும் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டே நடந்துபோகும் இடம் ஒன்று போதும் அவருடைய அப்பாவித்தனத்தைக்காட்ட.
கையில் கத்தியுடன் மிரட்டும் பிரமீளாவின் மிரட்டலுக்குப்பயந்து 'ஐ.வி.ஸிங் ஃபார் யூ' பாடலுக்கு ஆடும்போதும் செம கிளாப்ஸ் வாங்குவார். இறுதிக்காட்சியில் 'லவ் இஸ் காட்' என்று சல்யூட் அடித்து படத்தை முடித்து வைப்பதும் நடிகர்திலகம்தான்.
1973 டிசம்பர் 7 அன்று இப்படம் வெளியானது. சரியாக 15 நாட்கள் கழித்து 22-ம் தேதியன்று 'ராஜபார்ட் ரங்கதுரை' வெளியானது. சென்னை பைலட் தியேட்டரில் ரா.ரங்கதுரை வெளியானதால், மனிதரில் மாணிக்கம் அத்தியேட்டரில் ரிலீஸாகும்போதே 15 நாட்களுக்கு மட்டும் என்று போடப்பட்டது. வடசென்னையில் ஏழுகிணறு பகுதியில் இருந்த, (புதுப்படங்கள் அபூர்வமாகவே வெளியாகக்கூடிய) ஸ்ரீ முருகன் தியேட்டரில் வெளியானது. அந்த தியேட்டர் அதிபர் திரு பரமசிவ முதலியார் ஒரு தீவிர எம்.ஜி.ஆர்.ரசிகர், என்றாலும் நடிகர்திலகத்தின் பழைய படங்கள் நிறைய அந்த தியேட்டரில்தான் பார்க்க முடியும். மனிதரில் மாணிக்கம் புதிய ரிலீஸாக அந்த தியேட்டரில்தான் பார்த்தோம். கிரௌனில் 'கௌரவம்' ஓடிக்கொண்டிருக்க, ஸ்ரீ கிருஷ்ணாவில் 'ராஜபார்ட் ரங்கதுரை' வெளியானது. கௌரவமும், ராஜபார்ட்டும் ஓடிக்கொண்டிருக்கும்போதே, அகஸ்தியாவில் 'சிவகாமியின் செல்வன்' ரிலீஸாகி விட்டது. ரசிகர்களுக்கு ஒருபக்கம் கொண்டாட்டம். இன்னொருபக்கம், இப்படி கியூவில் படங்கள் ரிலீஸாகிறதே என்ற வருத்தம்.
பின்னர் வீடியோ யுகம் வந்த பிறகு, வீடியோ கேஸட்டில்தான் மீண்டும் 'மனிதரில் மாணிக்கம்' பார்க்க முடிந்தது.
(இப்படத்தைப்பார்த்து இதே போல ஒரு ரோலில் நடிக்க வேண்டுமென்று தான் விரும்பியது, 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட 'சுயம்வரம்' படத்தில் நிறைவேறியதாக நடிகர் கார்த்திக் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். இருந்தாலும், இரண்டு பேருடைய பெர்பாமன்ஸுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் என்பதையும் கார்த்திக் ஒப்புக்கொண்டிருந்தார்).
Totally different type of character. Karthik's was funny, forgetful doctor - totally dangerous character in real world (imagine he forgets sympthoms of fever and gives patient laxative).
NT's, though comedic, is introspective. He might look dumb, but he knows what's happening and he's AVM Rajan's conscience in the film. One should not dismiss this as another cameo, I believe it's one of his best cameo. More of an extended cameo. I revisit this film sometimes with the remote control in end, just watch NT's antics (I will sing for you, hillarious) and watch him turn sagely in another scene. Wonderful role.
To all the fans making this thread pick up awesome, thank you, thank you, thank you. I know I am hardly here, but I try to catch up. Truly appreciate your contributions here.
" நல்ல படம் , சுமாரான படம் என்பதையெல்லாம் தாண்டியவர் நடிகர் திலகம் . சிவாஜி படம் தோற்கலாம் ..சிவாஜி தோற்பதில்லை." - Joe Milton.
தாங்கள் வழங்கிய, 'லட்சுமி கல்யாணம்' ஆவணங்களுக்கும், தேவ்ஜியின் நூல் வெளியீட்டு விழா பற்றிய குமுதம் இதழ் பக்கங்களுக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.
ஜீனத்துடனான தேவ்ஜியின் காதல் ஒருதலை ராகமாகத்தெரிகிறது. அத்துடன் கால வித்தியாசமும் அதிகம் தெரிகிறது. Hare Rama Hare Krishna வெளியானது 1971-ல். ஆனால் Sathyam Shivam Sundharam வெளியானது 1978-ல். இதற்கிடையே ஜீனத் நிறைய வெளிப்படங்களில் நடித்து விட்டாரே. சரி, நமக்குத் தெளிவாகத்தெரியவில்லை.
இருந்தாலும் ஒளிவு மறைவில்லாமல் தேவ்ஜி சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது.
பிற்காலத்தில் ஜீனத்தின் திருமண வாழ்க்கை தியாகம் நிறைந்தது என்றும். தீராத நோய்வாய்ப்பட்ட கணவருக்கு பணிவிடை செய்வதில் அவர் மன நிறைவு கண்டார் என்று படித்திருக்கிறேன்.
நம் அனைத்து ரசிகர்களின் உள்ளத்திலும் பாகுபாடின்றி இடம் பெற்ற திரைப்படங்களில் ஒன்று மனிதரில் மாணிக்கம், குறிப்பாக ஐ வில் சிங் பார் யூ பாடல் அந்தக் கால கட்டத்தில் இடம் பெறாத மெல்லிசைக் கச்சேரி மேடைகளே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு மிகப் பிரபலமாகி, இன்று வரை சௌந்தர்ராஜனின் சிறந்த பாடல்கள் வரிசையில் இடம் பெற்றுள்ளது.
இந்தப் பாடலைப் பற்றி நாம் விவாதிக்கும் போது அதைப் பார்க்க வேண்டுமே என்ற எண்ணம் தோன்றாமலிருக்குமா
பார்க்காவிட்டால் தூக்கம் தான் வருமா
பார்ப்போம்... இதோ...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
தங்கள் ஏற்றமிகு எழுத்தில் மேலும் எழுச்சி பெற்ற 'வாராயென் தோழி வாராயோ' பாடலின் ஒலி-ஒளிக்காட்சி:
அன்புடன்,
பம்மலார்.
அன்புள்ள திரு. ராதாகிருஷ்ணன் அவர்களே,
தங்களுடைய பாராட்டுதலுக்கு (போன் வழியாகவும்) மிக்க நன்றி.
அன்புள்ள திரு. பம்மலார் அவர்களே,
பாராட்டியதோடு நில்லாமல், உடனே "வாராய் என் தோழி வாராயோ" படப் பாடலைப் பதிந்தமைக்கும் மிக்க நன்றிகள். அதோடு நில்லாமல், போனிலும் அழைத்துப் பாராட்டியதற்கு மிக்க நன்றிகள்.
உங்கள் எல்லோருடைய பாராட்டுதல்கள் என்னை மேலும் மேலும் எழுத ஊக்குவித்துக் கொண்டே இருக்கும்.
சூட்டோடு சூட்டாக அடுத்து ஒரு அற்புதப் பாடலோடு களம் இறங்கி ஆய்வுசெய்து வழக்கம் போல ஜெயக்கொடி நாட்டி உள்ளீர்கள். அதுவும் என் மனம் கவர்ந்த பின்னணிப் பாடகி (போன முறை பட்டத்து ராணி, இம்முறை "வாராயென் தோழி வாராயோ") அவர்களின் பொன்னான இரு பாடல்களை ஆய்வு செய்து ஆனந்தப்படுத்தியதற்கு ஆயிரமாயிரம் நன்றிகள்.
அன்புடன்,
வாசுதேவன்.
அன்புள்ள திரு. ராதாகிருஷ்ணன் அவர்களே,
தங்களுடைய பாராட்டுதலுக்கு (போன் வழியாகவும்) மிக்க நன்றி.
அன்புள்ள திரு. பம்மலார் அவர்களே,
பாராட்டியதோடு நில்லாமல், உடனே "வாராய் என் தோழி வாராயோ" படப் பாடலைப் பதிந்தமைக்கும் மிக்க நன்றிகள். அதோடு நில்லாமல், போனிலும் அழைத்துப் பாராட்டியதற்கு மிக்க நன்றிகள்.
உங்கள் எல்லோருடைய பாராட்டுதல்கள் என்னை மேலும் மேலும் எழுத ஊக்குவித்துக் கொண்டே இருக்கும்.
நன்றியுடன்,
இரா. பார்த்தசாரதி
மேலும், போனில் அழைத்துப் பாராட்டிய திரு. சதீஷ் அவர்களுக்கும் மிக்க நன்றி.
உங்கள் எல்லோருடைய அங்கீகாரமும் பாராட்டு மழையும், என்னை மேலும் மேலும் எழுத ஊக்குவிக்கிறது.
Bookmarks