-
30th November 2011, 07:48 AM
#1301
Senior Member
Diamond Hubber
டியர் ராமஜயம் சார்,
தங்கள் உயரிய உன்னத பாராட்டுக்கு என் பணிவான நன்றிகள். நடிகர் திலகத்தை தாங்கள் தரிசனம் செய்ததைப் பற்றி குறிப்பிட்டுள்ளது அழகு.
அன்புடன்,
வாசுதேவன்.
-
30th November 2011 07:48 AM
# ADS
Circuit advertisement
-
30th November 2011, 07:49 AM
#1302
Senior Member
Diamond Hubber
டியர் சந்திரசேகரன் சார்,
தங்களது உயர்ந்த மனிதன் பதிவு பற்றிய பாராட்டிற்கு என்னுடைய உச்சமான நன்றிகள்.
அன்புடன்,
வாசுதேவன்.
-
30th November 2011, 08:05 AM
#1303
Senior Member
Diamond Hubber
அன்பு பம்மலார் சார்,
கலைச்செல்வத்தின் வண்ணப் புகைப்படம் ஆவணச் செல்வத்தின் அற்புதப் பரிசு.
'படிக்காதவன்' நாளிதழ் விளம்பரங்கள் கலக்குகின்றன.
'ஜெமினி சினிமா' வில் வெளியான படிக்காதவனின் வெள்ளிவிழா ரிப்போர்ட் அருமை!
நடிகர் திலகத்துக்கு ராஜசேகர் வரைந்த மடல் ஒரு சிகர மடல். "நீங்கள் எட்டிப்பிடித்த உயரத்தை இனி எவரும் எட்டிக் கூடப் பார்க்க முடியாது"
என்று அவர் கூறியிருப்பது சத்தியமான வார்த்தை. நடிகர்திலகத்தின்பால் அவர் கொண்டிருந்த அன்பும், பாசமும் மெய் சிலிர்க்க வைத்து விட்டது. பிரமாதமாக முன் வரிசையை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்த அந்த இளஞ்சிங்கம் இளவயதிலேயே காலனுக்கு பலியானது கொடுமை!
மொத்தத்தில் தங்களின் பதிவுகள் அறுசுவை விருந்து. பதிவுகளுக்கு பரிபூரணமான நன்றிகள்.
அன்புடன்,
வாசுதேவன்.
Last edited by vasudevan31355; 30th November 2011 at 05:39 PM.
-
30th November 2011, 02:54 PM
#1304
Senior Member
Veteran Hubber
Anbulla Pammalar sir,
I am much impressed with your posts carrying...
'Annan Oru Koyil' vikatan review....
'Selvam' advertisement....
V.K.R's wonderful rememberances about NT's help to recover from his debts, which includes about NT's wonderful charector on maintaining friendship.....
'PadikkAthavan' ads and Bommai report about its Silver Jubilee function.... and
The wonderful essay of Director Rajasekhar.
Hats off to you sir.
-
30th November 2011, 03:04 PM
#1305
Senior Member
Veteran Hubber
Anbulla Vasudevan sir,
Your posts with the outstanding face expressions of NT in 'Uyarndha Manidhan' are just awsome.
Your post with Film News Anandan sir's nerration about the pond created in Vahini Studio for our beloved 'Sivandha Mann' is wonderful. (actually it was said in dialogues as river (Kaattaaru) . My humble openion is, Director Shreedhar spent (wasted..?) lot of amount for this kind of matters, which in noway helped for the success of the movie. Even without that artificial river, the movie would have succeeded because of NT).
Thank you Vasu sir for your posts.
-
30th November 2011, 03:54 PM
#1306
Senior Member
Senior Hubber
Originally Posted by
vasudevan31355
டியர் பார்த்தசாரதி சார்,
தாங்கள் பதிவிட்டுள்ள 'நடிகர் திலகத்தின் படங்களில் சிரஞ்சீவித்துவம் பெற்ற பாடல்கள்' வரிசையில் இடம் பெற்றுள்ள "அந்த நாள் ஞாபகம்" பாடல் பற்றிய பதிவு பட்டையைக் கிளப்புகிறது. அருமையான சரளமான நடை. என் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்.
பொதுவாகவே ஒரு புகழ் பெற்ற பாடலைப் பற்றி ஆய்வு செய்து எழுதும் போது அப்பாடலில் நடித்தவர் பெயரை ஒரு மரியதைக்காகக் குறிப்பிட்டு வைத்து அப்பாடலைப் பற்றி முழுமையாக அலசுவார்கள். ஆனால் நம் நடிகர் திலகம் விஷயத்தில் அவர் நடிப்பை முழுமையாக ஆய்வு செய்தால் தான் பாடலையே ஆய்வு செய்து ரசித்து எழுத முடியும்.அதை மிகப் பிரமாதமாக நீங்கள் கையாண்டுள்ள விதம் அருமை. மிகச் சிறப்பாக அவருடைய அசைவுகளை வர்ணித்துள்ளீர்கள். (பாடல் வரிகளையும் தான்) படிக்க மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறது. நன்றி!
அன்பு பம்மலார் அவர்களை இத்திரியின் 'சூப்பர் ஸ்டார்' என்று புகழ்ந்துரைத்திருப்பது நூற்றுக்கு இருநூறு சதவீதம் உண்மை. அதற்காக தங்களுக்கு என் அன்பு நன்றி!
அன்புடன்,
வாசுதேவன்.
அன்புள்ள திரு. வாசுதேவன் அவர்களே,
தங்களுடைய பாராட்டுக்கு நன்றி. அந்தப் பாடலின் வீடியோ பதிவையும் கண நேரத்தில், பதிவிட்டமைக்கு மிக்க நன்றி. டைமிங் கன கச்சிதம்.
நடிகர் திலகம் நடித்த பாடல் காட்சிகளை எழுதினால் மட்டுமே, நடிப்பைப் பற்றி பெரிதாக எழுத முடியும். அது தானே அவருடைய தனிச் சிறப்பு.
திரு. முரளி அவர்கள் கூறியது போல் பாதுகாப்பு பற்றிய தங்களுடைய கட்டுரை ஒரு லைவ் ரிலே மாதிரி தான் இருந்தது. தங்களுக்குத் தான் எவ்வளவு பெரிய ஞாபக சக்தி? மிகவும் சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது. இந்தப் படத்தின் "ஒரு நாள் நினைத்த காரியம்" பாடல் நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்த பாடல் எனலாம்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
Last edited by parthasarathy; 30th November 2011 at 04:54 PM.
-
30th November 2011, 04:08 PM
#1307
Senior Member
Senior Hubber
Originally Posted by
anm
பார்த்தசாரதி சார்,
உங்களின் ஆய்வுக்கட்டுரையான "அந்த நாள் ஞாபகம்" மிகவும் அருமையானதொரு ஆழமான சிந்தனைக் கட்டுரை.அதில் ஒவ்வொரு வரிக்கும் ஒரு முகபாவத்தைக் கையாண்டிருப்பார் நடிகர் திலகம் அவர்கள்!!!!
மிக நன்று.
Anm
அன்புள்ள திரு. Anm (தங்கள் பெயர்?) அவர்களே,
தங்களது பாராட்டுகளுக்கு நன்றி. இந்தப் பாடலில் ஒவ்வொரு வரிக்கும் ஒரு முக பாவம் காட்டியதைக் கூட என்னுடைய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன்.
நன்றியுடன்,
இரா. பார்த்தசாரதி
-
30th November 2011, 04:30 PM
#1308
Senior Member
Senior Hubber
Originally Posted by
pammalar
டியர் பார்த்தசாரதி சார்,
திறனாய்வு சூப்பர் ஸ்டாரான தங்களின் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் பெற்றது எனது பேறு. தங்களுக்கு எனது சிரம் தாழ்த்திய நன்றிகள் !
தங்களின் 'நடிகர் திலகத்தின் படங்களில் சிரஞ்சீவித்துவம் பெற்ற பாடல்கள்' கலக்கல் நெடுந்தொடரில், லேட்டஸ்ட் பதிவாக வெளிவந்துள்ள "உயர்ந்த மனிதன்" காவியப்பாடலான 'அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே' பாடலின் அலசல் அசத்தலோ அசத்தல் ! நடிகர் திலகத்தின் மறைவுக்குப்பின் நடந்த ஒரு அஞ்சலிக்கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்த திரு.குமரி அனந்தன் பேசும் போது இந்தப்பாடல்காட்சியைக் குறிப்பிட்டு ஒரு வாசகம் சொன்னார். அது ஒரு வாசகமானாலும் திருவாசகம் போல் என் மனதில் நிலை பெற்றுவிட்டது. அப்படி அவர் என்னதான் சொன்னார் என்றுதானே கேட்கிறீர்கள்?, 'அந்த நாள் ஞாபகம்' பாடலைக் குறிப்பிட்டு. "இப்பாடலில் நடிகர்திலகத்தின் உடம்பில் ஓடுகின்ற நரம்பும் நடிக்கும், அவர் கையில் ஆடுகின்ற பிரம்பும் நடிக்கும்" என்றாரே பார்க்கலாம், அரங்கமே அதிர்ந்து ஆர்ப்பரித்தது.
மணியான பாடலைப் பற்றி மணிமணியாக தகவல்களை வழங்கி ஆய்வு செய்தமைக்காக தங்களுக்கு எனது பொன்னான பாராட்டுக்களுடன் கூடிய கனிவான நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
அன்புள்ள திரு. பம்மலார் அவர்களே,
தங்களுடைய அன்பான பாராட்டுகளுக்கு என் நன்றிகள். இந்தக் கட்டுரையின் அடுத்த பாடலை விரைந்து பதிவிட உங்களைப் போன்றோரின் பாராட்டுகள் எனக்கு மிகுந்த ஊக்கமளிக்கும்.
நன்றியுடன்,
இரா. பார்த்தசாரதி
-
30th November 2011, 04:36 PM
#1309
Senior Member
Senior Hubber
Originally Posted by
mr_karthik
அன்புள்ள பார்த்தசாரதி சார்,
சிறிது இடைவெளிக்குப்பின் உங்கள் 'காவியப்பாடல்கள்' சீரியலில் நீங்கள் ஆய்வு செய்திருக்கும் 'அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே' பாடல் விவரிப்பு மிக மிக அருமை. என்ன ஒரு முழுமையான ஆய்வு. (அதை உடனே ரெஃபர் செய்துகொள்ளும் வண்ணம் பாடல் காட்சியைப்பதிப்பித்த வாசுதேவருக்கு நன்றி).
நிச்சயம் இரு ஒரு சாகாவரம் பெற்ற பாடல்தான். ஏனென்றால் இப்பாடலில் பங்கேற்ற பலரே இப்பாடலைப்பற்றி விரிவாகப்பேசியிருக்கிறார்கள்.
அதை இன்னும் ஒரு படி உயர்த்தும் வண்ணம் நீங்களும் மிக அருமையாக ஆய்வு செய்துள்ளீர்கள்.
நிச்சயம் இது காலங்களைக் கடந்த சாதனைப் பாடல்தான். அருமையாக திறனாய்வு செய்த தங்களுக்கு சிறப்புப் பாராட்டுக்கள்.
அன்புள்ள திரு. கார்த்திக் அவர்களே,
தங்களுடைய அன்பான பாராட்டுகளுக்கு என் நன்றிகள். இந்தக் கட்டுரையின் அடுத்த பாடலை விரைந்து பதிவிட உங்களைப் போன்றோரின் பாராட்டுகள் எனக்கு மிகுந்த ஊக்கமளிக்கும்.
நன்றியுடன்,
இரா. பார்த்தசாரதி
-
30th November 2011, 06:34 PM
#1310
Senior Member
Diamond Hubber
Bookmarks