Page 121 of 404 FirstFirst ... 2171111119120121122123131171221 ... LastLast
Results 1,201 to 1,210 of 4034

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 9

  1. #1201
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்

    சிவந்த மண்

    [9.11.1969 - 9.11.2011] : 43வது உதயதினம்

    பொக்கிஷப் புதையல்

    'பேசும் படம்' ஜூலை 1969 இதழிலிருந்து அபூர்வ நிழற்படங்கள்

    வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்தச் சென்ற
    "சிவந்த மண்" படக்குழுவினருக்கு வழியனுப்பு விழா






    வெளிநாடுகளில் "சிவந்த மண்" படக்குழுவினர்


    செழிக்கும்...

    பக்தியுடன்,
    பம்மலார்.
    pammalar

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1202
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்

    சிவந்த மண்

    [9.11.1969 - 9.11.2011] : 43வது உதயதினம்

    பொக்கிஷப் புதையல்

    "சிவந்த மண்" காவியத்திற்காக வெளிநாடுகளில் நடைபெற்ற படப்பிடிப்புகள் பற்றி
    அக்காவியத்தின் கதாநாயகனான நடிகர் திலகம் சிவாஜினோ தரும் ஐந்து பக்க பயண-படப்பிடிப்பு கட்டுரை


    வரலாற்று ஆவணம் : பேசும் படம் : ஆகஸ்ட் 1969

    முதல் பக்கம்



    இரண்டாவது பக்கம்



    மூன்றாம் பக்கம்



    நான்காம் பக்கம்



    ஐந்தாவது பக்கம்


    செழிக்கும்...

    பக்தியுடன்,
    பம்மலாரனோ !
    pammalar

  4. #1203
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அன்பு பம்மலார் சார்,



    சிவந்தமண்ணின் அடுத்த ஏவுகணையை ஏவி விட்டு இன்பத் தாக்குதல் நடத்தியுள்ளீர்கள். அபாரம்.

    வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்தச் சென்ற"சிவந்த மண்" படக்குழுவினருக்கு வழியனுப்பு விழா 'பேசும் படம்' அபூர்வ நிழற்படங்கள் அசத்துகின்றன. நம்ம தலைவர் படு ஸ்டைலாக காட்சியளிக்கிறார்.

    "சிவந்த மண்" காவியத்திற்காக வெளிநாடுகளில் நடைபெற்ற படப்பிடிப்புகள் பற்றி நடிகர் திலகம் தந்திருக்கும் ஐந்து பக்க பேசும்படம் இதழில் வந்த பயண-படப்பிடிப்புக் கட்டுரையை இடுகை செய்து நடிகர்திலகத்துடன் நேரிடையாக நாங்கள் அளவளாவியது போல மனம் மகிழச் செய்து விட்டீர்கள். படு கேஷூவலான பேட்டி.

    சுமைதாங்கி படத்தில் திரு.ஜெமினி அவர்கள் சுமைதாங்கியாய் தாங்கிய கதாபாத்திரத்தை நினைவில் வைத்து சமயம் பார்த்து தலைவர் கோபுவை விமரிசித்தது அருமை.

    இவ்வளவு பிரம்மாண்டமான படம் எடுத்தவர்கள் கையில் காசில்லாமல் தவித்திருக்கிறார்கள். அதையும் நடிகர்திலகம் நகைச்சுவை உணர்வுகளுடன் கூறியிருப்பது சூப்பர்.

    சிகரெட் கேட்ட கோபுவுக்கு மனமே இல்லாமல் தான் வைத்திருந்த 'ஸ்டாக்'கிலிருந்து கர்ணனாய் சிகரெட் அளித்தது வயிறு குலுங்க வைத்தது.

    மிளகாய் பொடியும் ஊறுகாயும் வெளிநாடு செல்லும் இந்தியர்களுக்கு இருகண்கள் என்பது சிவந்தமண் படப்பிடிப்பு குழுவினருக்கும் மட்டுமென்ன விதிவிலக்கா? அரிசிச் சோறு பற்றியும் அவர் ஒரு குழந்தையைப் போல சிலாகித்திருந்தது ரசிக்கும்படியாக இருந்தது.

    மொத்தத்தில் அற்புதமான கட்டுரையை இடுகை செய்தமைக்கு அளவில்லா நன்றிகள்.

    இது போன்ற ஏவுகணைத் தாக்குதல்களை நாங்கள் தினமும் ஏற்றுக் கொள்ளத் தயார். தங்கள் இன்பத் தாக்குதல்களுக்கு தேங்க்ஸ்.

    அன்புடன்,
    வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 25th November 2011 at 12:45 PM.

  5. #1204
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    அன்புள்ள பம்மலார்,

    'சிவந்த மண்' மேளா முடிந்து விட்டதோ என்று எண்ணியிருந்த வேளையில், இன்னும் இன்னும் அதிகமான அன்றைய ஏடுகளை அள்ளித்தந்து பரவசத்தில் ஆழ்த்தி வருகிறீர்கள். இன்றைக்கு நூற்றுக்கணக்கான படங்கள் வெளிநாடுகளில் சரவசாதாரணமாக படமாக்கப்பட்டு வரும் வேளையில், முதல் தமிழ்ப்படத்தை ஐரோப்பிய நாடுகளில் படமாக்க சித்ராலயா யூனிட்டார் எவ்வளவு கஷ்ட்டப்பட்டுள்ளனர் என்பதை நடிகர்திலகம் மிக சுவையாக எடுத்துரைத்துள்ளார். கட்டுரை முழுவதிலும் அவரது குறும்பு பளிச்சிடுகிறது. முரளிசார் முன்பு மணியன் பற்றிய பதிவில் சொன்னதைப்போல, மிகக்குறைவான அந்நியச்செலாவணி மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்த காலம். ஏனென்றால் அப்போது இந்தியாவிலிருந்து ஏற்றுமதியும் குறைவு, என்.ஆர்.ஐ. வருமானங்களும் சுத்தமாகக்கிடையாது. (வளைகுடா நாடுகளிலும், ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளிலும் வேலை வாய்ப்புகள் துவங்கியிராத நேரம்).

    இப்போது படத்தைப்பார்க்கும்போது, ஸ்ரீதர் இன்னும் வேறுவிதமாக வெளிநாட்டுக்காட்சிகளைப் படமாக்கியிருக்கலாமோ என்று எண்ணத்தோன்றுகிறது. தமிழ் மக்கள் வெளிநாட்டுக்காட்சிகள் என்றால் வானளாவிய நவீனக்கட்டிடங்கள், மற்றும் நவீனக்காட்சிகளையும் காண விரும்புவர். ஆனால் ஸ்ரீதர் பெரும்பாலும் அந்நாடுகளிலுள்ள புராதனச்சின்னங்களையே அதிகம் கவர் பண்ணியிருப்பார். ஏரியில் 'பெடல்-போட்' ஓட்டும் காட்சி பெரும் நேரத்தை எடுத்துக்கொள்ளும். அதே சமயம் பனிமலைக்காட்சிகள் அருமையாக இருக்கும்.

    சிவந்த மண் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாரானதாக நடிகர்திலகம் சொல்லியிருக்கிறார். அப்படீன்னா தெலுங்கில் நடித்தது யார் யார்?. இந்தியில் நடித்த ராஜேந்திரகுமார், வகீதா ரெகமான் ஆகியோர் இப்போது இருக்கிறார்களா?.

    அதிகமதிகம் சிவந்த மண் ஆவணப்பதிவுகளைத்தேடித் தேடியெடுத்து வந்து பறிமாறும் உங்கள் ஆர்வத்துக்கு மனமார்ந்த நன்றிகள். சிவந்த மண் குழுவினரை வழியனுப்பும் காட்சிகளின் தொகுப்பும் காணக்கிடைக்காத அரிய பொக்கிஷம். பதிவிட்டமைக்கு மிக்க நன்றி.

  6. #1205
    Senior Member Devoted Hubber J.Radhakrishnan's Avatar
    Join Date
    Mar 2010
    Posts
    128
    Post Thanks / Like
    டியர் பம்மலார் சார்,

    "சிவந்த மண்" திரைப்படத்திற்காக வெளிநாடுகளில் நடைபெற்ற படப்பிடிப்புகள் பற்றி ntஅவர்களின் நேரடியான பயணக்கட்டுரையை பதிவேற்றி எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டீர்கள். மிக்க நன்றி!!!
    அன்றும் இன்றும் என்றும் நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்

  7. #1206
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    அன்புள்ள வாசுதேவன் சார்,

    காங்கிரஸ் கட்சியில் நடிகர்திலகத்தின் ரசிகர்மன்றங்களின் பெரும் பங்களிப்பு பற்றி ஜூனியர் விகடன் இதழில் வந்த செய்தித்தொகுப்பு பக்கங்களை பதிவிட்டதற்கு மிக்க நன்றி.

    காங்கிரஸில் நடிகர்திலகத்தின் ரசிகர்படையினரின் உழைப்பு எப்படி காங்கிரஸாரால் நாளாவட்டத்திலும் உதாசீனப்படுத்தப்பட்டு வந்துள்ளது என்பதை ப்லமுறை பல பாகங்களில் ராகவேந்தர் சார், முரளி சார், சாரதா, சந்திரசேகர் மற்றும் பல நண்பர்களால் அலசப்பட்டு வந்துள்ளது. நானும் சிலமுறை சொல்லியிருக்கிறேன். இவற்றையெல்லாம் ஊர்ஜிதப்படுத்துவதாக அமைந்துள்ளது இந்த ஜூனியர் விகடன் கட்டுரை.

    ராகவேந்தர் சார் எப்போதும் சொல்லி வருவது போல, நடிகர்திலகத்தையும் அவரது ரசிகர் படையையும் புறக்கணித்ததால் காங்கிரஸ் தற்போது தமிழ்நாட்டில் முகவரியை தொலைத்து விட்டு, தேர்தல் பிரச்சாரம் செய்யவும், கூட்டத்துக்கு கொடி கட்டவும், அவ்வப்போது கூட்டணி சேரும் திராவிடக் கட்சித்தொண்டர்களின் தயவை நம்பியிருக்கிறது.

    மீண்டும் தமிழகத்தில் காங்கிரஸை உயிர்ப்பிக்க நடிகர்திலகத்தின் ரசிகர்களால் மட்டுமே முடியும். அதற்கு கட்சி அவர்கள் கையில் வரவேண்டும். இல்லையேல் வெறும் தலைவர்கள் எத்தனை பேர் வந்தாலும் தொண்டர் படையின்றி, உதிரிக்கட்சிகளில் ஒன்றாகவே காங்கிரஸும் தமிழகத்தில் மதிக்கப்படும்.

    சரியான நேரத்தில் சரியான பதிவையிட்ட தங்களுக்கு நன்றிகள்.

  8. #1207
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    அன்புள்ள பம்மலார் சார்,

    வெற்றிகரமாக இரண்டாயிரமாவது பதிவை நெருங்கும் தங்களுக்கு எங்கள் அனைவரது வாழ்த்துக்கள். இந்த இரண்டாயிரம் பதிவுகள், எத்தனை ஆயிரம் அரிய விஷயங்களைத்தாங்கி வந்துள்ளன என்ற உண்மை பிரமிக்க வைக்கிறது. அவற்றில் நீங்கள் அளித்த பல்வேறு புள்ளிவிவரப்பதிவுகள், நடிகர்திலகத்தின் சாதனைகளைப்பறைசாற்றும் சாட்சிகளாய் நிற்கும் ஆவணங்கள், கிடைத்தற்கரிய தகவல் களஞ்சியங்கள், இதுவரை பார்த்திராத ஏடுகளின் தொகுப்புக்கள் என அனைத்துமே தங்கச் சுரங்கத்திலிருந்து வெளிவந்த தங்கக்கட்டிகள்.

    இந்த இரண்டாயிரம் இன்னும் பல ஆயிரமாக பல்கிப்பெருகி, நடிகர்திலகத்தின் ரசிகர்கள் இளைப்பாறும் ஆலமரமாய் விரிந்து பரந்து புகழ் பரப்ப வேண்டும் என்று இதயம் நிறைய வாழ்த்துகிறோம்.

  9. #1208
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    அன்பு நண்பர்களே,

    மறுபடியும் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் உங்களை இந்தத்திரியின் மூலம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

    நம் அன்பு நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பங்களிப்பை நாள்தோறும் விடாமல் செய்து வருகிறார்கள். திரு. பம்மலார் (இவர் தான் நமது திரியின் சூப்பர் ஸ்டார் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமே இல்லை), திரு. ராகவேந்தர் மற்றும் திரு. வாசுதேவன் அவர்கள் எங்கெங்கோ உள்ள ஆவணங்களையும், கட்டுரைகளையும், பாடல் காட்சிகளையும், புகைப்படங்களையும் இடுகை செய்து எல்லோரையும் பரவசப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

    திரு. முரளி அவர்களின் சில கட்டுரைகள் அவருடைய வழக்கமான சரளமான நடையில் சுவைபட இருந்தது.

    நீண்ட நாட்களுக்குப் பின்னர் சாரதா மேடத்தின் இடுகைகள் பரவசப் படுத்துகின்றன.

    திரு. சந்திரசேகர் சமூக முக்கியத்துவம் வாய்ந்த பல நல்ல காரியங்களை, தொடர்ந்து செய்து ஒவ்வொரு சிவாஜி ரசிகனையும் இறுமாந்து கொள்ள வைக்கின்றார்.

    திரு. கார்த்திக் அவர்களும் அவருடைய பங்களிப்பைத் தொடர்ந்து நல்கி வருகின்றார்.

    மேலும், நமது மற்ற நண்பர்களும் தொடர்ந்து ஏதோ ஒரு சிறிய விஷயத்தையாவது எழுதுகிறார்கள்.

    திரு. பம்மலார் அவர்கள் பதிவிட்ட "ஆலய மணி" படச் சாதனை விளம்பரங்கள் ஒவ்வொரு சிவாஜி ரசிகனையும் மகிழ்ச்சியின் எல்லைக்கே அழைத்துச் சென்றிருக்கும் என்பதில் ஐயமில்லை. என் இதயத்திற்கு மிக நெருக்கமான முதல் பத்து படங்களில், "ஆலய மணி" தியாகு எப்போதும், ஒரு முக்கியமான இடத்தில் என்றென்றும் வாழ்ந்து கொண்டே இருக்கிறார் என்னும் போது, எனக்கு வார்த்தைகளில் விவரிக்க முடியாத மகிழ்ச்சி ஏற்பட்டது. இந்தப் படத்தைப் பற்றி ஏற்கனவே, ஆய்வுக்கட்டுரை வேறு எழுதி இருந்தேன். அந்த அளவிற்கு என்னை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்ட கதா பாத்திரம் "தியாகு". நன்றி திரு. பம்மலார் அவர்களே. சிவந்த மண் பட சம்மந்தப் பட்ட ஆவணக் கட்டுரைகளும் நடிகர் திலகத்தின் பேட்டியும், வெளி நாடு செல்வதற்கு முன்னர், படக்குழுவினர் மற்றும் பிற கலைஞர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் மிக அருமை மற்றும் காணக்கிடைக்காத ஒன்று. இரண்டாயிரமாவது பதிவை நெருங்கிக் கொண்டிருக்கும் தங்களுக்கு முன் கூட்டியே வாழ்த்துகளைக் கூறிக்கொள்வதில் பெருமை கொள்கிறேன்.

    திரு. வாசுதேவன் அவர்களின் ஜூனியர் விகடன் இதழில் வெளி வந்த கட்டுரையும் மிக அருமை.

    அன்புடன்,

    இரா. பார்த்தசாரதி

  10. #1209
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    நடிகர் திலகத்தின் படங்களில் சிரஞ்சீவித்துவம் பெற்ற பாடல்கள் (தொடர்ச்சி......)

    8. "அந்த நாள் ஞாபகம்"; படம்:- உயர்ந்த மனிதன் (1968); பாடல்:- வாலி; பாடியவர்கள்:- டி.எம்.சௌந்தரராஜன் மற்றும் மேஜர் சுந்தரராஜன் (வசன நடை); இசை:- மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்; இயக்கம்:- கிருஷ்ணன்/பஞ்சு; நடிப்பு:- நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் மேஜர் சுந்தரராஜன்.

    இந்தப் பாடலை இயற்றியது வாலியா அல்லது கவியரசா என்றொரு குழப்பம் இருந்தது. அதைத் தீர்த்த டிக்ஷனரி திரு. முரளி அவர்களுக்கு முதற் கண் நன்றி தெரிவிக்கிறேன். இதற்கு முன் பதிவிட்ட "மாமா மாப்ளே" (பலே பாண்டியா படம்) பாடலில் நடிக வேளுக்குக் குரல் கொடுத்தது எம்.எஸ். ராஜு என்று கூறிய திரு. ராகவேந்தர் அவர்களுக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.

    இன்னும் எத்தனை வருடங்கள் உருண்டோடினாலும், ஒவ்வொரு தமிழனும், தன்னுடைய வாழ்க்கையைப் பின்னோக்கிப் பார்க்கும் போதும், கடந்த கால நினைவுகளை அசை போடுவது எந்த ஒரு ஊடகத்தில் விவாதிக்கப் பட்டாலும், மேற்கோள் காட்டப்பட்டாலும், மேற்கூறிய வரிகள் "அந்த நாள் ஞாபகம்" - உடனேயே ஒவ்வொருவராலும் எடுத்துரைக்கப்படும். ஒருவராலும் தப்பிக்க முடியாது. அந்த அளவுக்கு, காலத்தால் அழிக்க முடியாத வரிகள்.

    இரு நண்பர்கள் - சமூகத்தில், அவர்கள் வேறு அந்தஸ்தில் இருந்தாலும், அடிப்படையில் நண்பர்கள். இதில், ஏழை டிரைவர் அந்த அளவுக்கு வாழ்க்கையில் அடிபடா விட்டாலும், பணக்காரன் மட்டும், எவ்வளவு முடியுமோ அவ்வளவு அனுபவித்து விடுகிறான். அந்தப் பணக்காரன் பல வருடங்களுக்குப் பிறகு சிறு வயதில், அவனும் அவனது காதலியும் பழகிய ஊட்டிக்குச் செல்ல நேரும்போது (அந்தக் காதலியை ஒரு கோர தீ விபத்தில் இழந்து விடுகிறான் - அவனது பணக்காரத்தந்தை திட்டம் போட்டுச் செய்த கொலை - காரணம் ஏழை என்கிற அந்தஸ்து பேதம்!), தன்னை அறியாமல் அவனது கடந்த கால ஞாபகங்கள் அலை மோதுகிறது. அப்போது, அவன் அந்த நினைவுகளைக் கூறும்படியாக அமைகின்ற பாடல்.

    இந்தப் பாடலின் ஒவ்வொரு வரிகளும் ஒவ்வொருவரையும் சென்று சேரும் வரிகள். "அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே, நண்பனே; இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே; அது ஏன்? ஏன்? நண்பனே!" அவனது இந்த நாள் அனுபவங்கள் கசப்பாக உள்ளன என்பதை உடனே எடுத்துரைக்கும் வரிகள்!

    முதல் சரணத்தில், பள்ளி வாழ்க்கையை இலேசான நகைச்சுவையுடன் எடுத்துரைக்கும் வரிகள் "உயர்ந்தவன் தாழ்ந்தவன் இல்லையே நம்மிடம்" அன்று போல் இன்று இந்த சமூகத்தில் பழக முடியவில்லையே எனும் ஏக்கம். அந்த மனிதனின் உண்மையான குணாதிசயத்தை இயம்பும் வரிகள்.

    இரண்டாவது சரணம் இலேசான சோகம் - பள்ளிப்பருவம் முடிந்த பின்னர் நடந்த நிகழ்வுகள். கடமையும் வந்தது; கவலையும் வந்தது - என்ன ஒரு அனுபவபூர்வமான வரிகள். எல்லா வசதிகளும் எல்லா சொந்தங்களும் வந்த பின்பும் அமைதி மட்டும் இல்லை என்னும் கூற்று நிறைய பேருக்குப் பொருந்தும்.

    மூன்றாவது சரணம் - பல நாட்கள் வானொலியில் வராமல் இருந்தது. இப்போதெல்லாம் வருகிறது. அந்த மனிதனின் கடந்த கால சோகம் தெறித்து விழும் வரிகள். "தவறுகள் செய்தவன் எவனுமே தவிக்கிறான் அழுகிறான்." தன் காதலியைக் காப்பாற்ற முடியாமல் போனதை நினைத்து நினைத்துத் துடிக்கும் அந்த மனிதனின் குமுறல்கள் வெடிக்கும் வரிகள். வாலி அவர்கள் எழுதிய அத்தனை பாடல்களிலும் இன்றளவும் அவர் பேர் சொல்லும் முதல் இரண்டு பாடல்களில் இது ஒன்று எனலாம்.

    இப்போது பாடியவர். முதலில் நடிகர் திலகம் ஓட்டப் பந்தயம் வைத்து, ஓடி முடித்து, நின்று, மூச்சு வாங்கிக் கொண்டே பாடத் துவங்குவதாக ஆரம்பிக்கும் போது, அந்த மூச்சிரைப்பைக் கண் முன் நிறுத்த ஆரம்பிப்பவர், அந்தப் பாடலில் தெறிக்கும், அத்தனை உணர்வுகளையும், அற்புதமாக வடித்திருந்தார். மறுபடியும், நடிகர் திலகம் தான் பாடினார் என்கிற அளவுக்குப் பாடிய திரு. டி.எம்.எஸ்ஸைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை.

    அடுத்தது இசை. கொஞ்சம் அசந்தாலும், வெறும் வசனமாகி விடக்கூடிய பாடல். இந்தப் பாடலின் தன்மையை அழகாகப் புரிந்து கொண்டு, நகைச்சுவை வரும்போது ஒரு இசை, சோகம் வரும்போது ஒரு இசை, மிடுக்கு வரும்போது ஒரு கம்பீர இசை என்று மிக லாகவமாக இசை அமைத்து, இடையிடையே, மேஜர் அவர்கள் பேசுவதைக் கொஞ்சம் கூட அந்த இசை பிசகா வண்ணம் அமைத்து, அவரையும் மிகச் சரியாக குரல் கொடுக்க வைத்து, இந்தப் பாடல் முழு வெற்றியடைய வைத்து விடுகிறார்.

    அடுத்து இயக்கம். நண்பர்கள் ஊட்டிக்குச் செல்லுவதாகக் கதையமைத்து, உடனேயே, ஒரு பாடலையும் அமைத்து, பழைய நினைவுகளை அசை போடுவதாக வைத்து, அந்தப் படத்தின் சுவாரஸ்யம் மேலும் மெருகேற வழி வகுத்து, முழு வெற்றி அடைகிறார்கள் இயக்குனர் இரட்டையர்கள் கிருஷ்ணன் பஞ்சு அவர்கள். அப்போதெல்லாம், ஒரு படத்தின் இடைவேளைக்குப் பின் வரும் பாடல்கள் படத்தின் வேகத்தையும் சுவாரஸ்யத்தையும் அதிகரிக்கச் செய்தன. ஆனால், இப்போதோ?

    இப்போது நடிப்பு. இந்தப் பாடலைப் பொறுத்தவரையில் இயக்கமும் சற்றேறக்குறைய நடிகர் திலகம் தான் செய்தார் எனலாம் (இன்னும் இது போல் பட படங்கள்; காட்சிகள்; பாடல்கள் உண்டு என்றாலும்!). பல வருடங்களுக்கு முன்னர் ஒரு இதழில் வெளி வந்த கட்டுரையில் படித்தது. முதலில், இந்தப் பாடலை நடிகர் திலகமும் மற்றவர்களும் காரில் போய்க் கொண்டே பாடுவதாகத் தான் வைத்தார்களாம். நடிகர் திலகம் தான், "வேண்டாம் இந்தப் பாடல் சிறு வயது நினைவுகளை அசை போடுவதாக வருகிறது. சிறு வயது என்பதால், ஏதோ ஒரு விளையாட்டை விளையாடுவதாக வைத்தால் பொருத்தமாக இருக்கும். என்னைக் கேட்டால், ஓட்டப் பந்தயம் வைத்து, கடைசியில், மூச்சு வாங்கிக் கொண்டே பாடுவதாய் ஆரம்பித்தால் நன்றாக இருக்கும்" என்று செட்டியாரிடம் சொல்ல, அவரும் தயங்காமல் ஒப்புக்கொண்டாராம்.

    தனக்கேயுரிய ஸ்டைலில் ஓடத் துவங்கி, மூச்சு வாங்கிக் கையிலுள்ள தடியை ஒரு வித சுழற்று சுழற்றி அதை மேஜரின் மார்பில் வைத்து எடுக்கும் விதம் அற்புதம் என்றால்; முதல் சரணத்தில், புத்தகம் பையிலே புத்தியோ பாட்டிலே, பள்ளியைப் பார்த்ததும் ஒதுங்குவோம் மழையிலே என்று சொல்லி சிரிக்கும் விதம் அதியற்புதம். நித்தமும் நாடகம் நினைவெல்லாம் காவியம் என்று சொல்லி வேகமாய் நடந்து அந்தப் பாடலின் டெம்போவை எகிறச்செய்யும் விதம்; உயர்ந்தவன் என்று சொல்லி தடியை வானுக்கு உயர்த்துபவர்; ஒரு வித ஸ்டைலுடன் தாழ்ந்தவன் என்னும் போது சிலிர்க்கும்!! (இந்த ஒரு விதத்தைப் பார்த்தால் தான் புரியும்!)

    இரண்டாவது சரணம் - பாசமென்றும் - ஒரு வித ஸ்டைல்; நேசமென்றும் - வேறொன்று; வீடு என்றும் - இன்னும் ஓர் ஸ்டைல்; மனைவி என்றும் - பிய்த்து உதறுவார்; நூறு சொந்தம் வந்த பின்பும் தேடுகின்ற அமைதி எங்கே என்று இலேசாக துயரத்தை வெளிப்படுத்துவார். உடனேயே, சமாளித்துக் கொண்டு வேகமாக அந்த நாள் ஞாபகம் என்று நடை போடத்துவங்கும் சரளம் பிரமாதமாக இருக்கும்.

    மூன்றாவது சரணம் - பெரியவன், சின்னவன், நல்லவன் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வகையான பாவம், கடைசியில், கெட்டவன் என்னும்போது கையை ஒரு மாதிரி அசைப்பார் - மற்றொரு இலக்கணம். எண்ணமே சுமைகளாய் (வலது புருவத்தை தனக்கேயுரிய பாணியில் உயர்த்துவார்), இதயமே பாரமாய் - ஒரு மாதிரி. மறுபடியும், சோகம் - தவறுகள் செய்தவன் எவனுமே தவிக்கிறான், அழுகிறான் எனும்போது எப்படி அவர் முகத்தை சோகம் கவ்வுகிறது! மறுபடியும், சமாளித்து, பல்லவி, அந்த நாள் ஞாபகம் என்று கடைசியில், கைத்தடியை லாகவமாக சுழற்றியபடியே செல்லும்போது, மேஜர், சிவகுமார், பாரதி மட்டுமல்லாமல், பார்க்கும் அனைவரும் அல்லவா வியந்து மெய் மறக்கிறார்கள்!!

    இந்தப் பாடலில், மேஜர் அவர்களும், நடிகர் திலகத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்து நடித்து, இந்தப் பாடலுக்குப் பெருமை சேர்த்திருப்பார் என்பதை மறக்க முடியாது. எனக்குத் தெரிந்து, இப்படத்திற்குப் பின்னர் தான், இவர்களின் காம்பினேஷன் தொடர்ந்து வரத் துவங்கியது.

    இந்தப் பாடலும், ஒரு சிறப்பான பாடலுக்குரிய அனைத்து அம்சங்களிலும் முதல் இடத்தைப் பிடித்து, பாடல் வெளி வந்த நாள் முதல், இன்று வரை, அனைவராலும் ஒரே மாதிரி ரசிக்கப் படுவதால், இந்தக் கட்டுரையில், அதாவது நடிகர் திலகத்தின் படங்களில் இடம் பெற்ற சிரஞ்சீவித்துவம் பெற்ற பாடல்களில் இடம் பெறுகிறது.

    தொடரும்,

    இரா. பார்த்தசாரதி
    Last edited by parthasarathy; 25th November 2011 at 04:03 PM.

  11. #1210
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    டியர் பார்த்தசாரதி சார்,

    தாங்கள் பதிவிட்டுள்ள 'நடிகர் திலகத்தின் படங்களில் சிரஞ்சீவித்துவம் பெற்ற பாடல்கள்' வரிசையில் இடம் பெற்றுள்ள "அந்த நாள் ஞாபகம்" பாடல் பற்றிய பதிவு பட்டையைக் கிளப்புகிறது. அருமையான சரளமான நடை. என் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்.

    பொதுவாகவே ஒரு புகழ் பெற்ற பாடலைப் பற்றி ஆய்வு செய்து எழுதும் போது அப்பாடலில் நடித்தவர் பெயரை ஒரு மரியதைக்காகக் குறிப்பிட்டு வைத்து அப்பாடலைப் பற்றி முழுமையாக அலசுவார்கள். ஆனால் நம் நடிகர் திலகம் விஷயத்தில் அவர் நடிப்பை முழுமையாக ஆய்வு செய்தால் தான் பாடலையே ஆய்வு செய்து ரசித்து எழுத முடியும்.அதை மிகப் பிரமாதமாக நீங்கள் கையாண்டுள்ள விதம் அருமை. மிகச் சிறப்பாக அவருடைய அசைவுகளை வர்ணித்துள்ளீர்கள். (பாடல் வரிகளையும் தான்) படிக்க மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறது. நன்றி!

    அன்பு பம்மலார் அவர்களை இத்திரியின் 'சூப்பர் ஸ்டார்' என்று புகழ்ந்துரைத்திருப்பது நூற்றுக்கு இருநூறு சதவீதம் உண்மை. அதற்காக தங்களுக்கு என் அன்பு நன்றி!

    அன்புடன்,
    வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 25th November 2011 at 08:48 PM.

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan Part 8
    By RAGHAVENDRA in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1966
    Last Post: 20th September 2011, 10:04 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7
    By saradhaa_sn in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1982
    Last Post: 22nd May 2011, 07:39 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 6
    By pammalar in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1499
    Last Post: 6th August 2010, 11:57 AM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan
    By Oldposts in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1492
    Last Post: 12th August 2006, 11:20 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •