-
21st October 2011, 11:58 PM
#571
Senior Member
Veteran Hubber
கலையுலக ஆண்டவரின் அக்டோபர் காவியங்கள்
பெற்ற மனம்
[19.10.1960 - 19.10.2011] : 52வது உதயதினம்
பொக்கிஷப் புதையல் : வரலாற்று ஆவணம்
பாவேந்தர் பாரதிதாசனாரின் "குயில்" இதழ் : 1.11.1960
அன்புடன்,
பம்மலார்.
-
21st October 2011 11:58 PM
# ADS
Circuit advertisement
-
22nd October 2011, 12:00 AM
#572
Junior Member
Junior Hubber
Dear Mr. Kumaresh,
Kindly excuse me if my feelings hurt you.
I'm unable to bear the disappointment of not releasing V.M. in Bangalore. We are there to give you the fullest support, please execute the release of V.M. I cannot stand when other actor movie can be released and why not our Legend's.
JAIHIND
M. Gnanaguruswamy
-
22nd October 2011, 12:08 AM
#573
Senior Member
Veteran Hubber
டியர் ராகவேந்திரன் சார்,
தங்களின் உளமார்ந்த பாராட்டுக்கும், வாழ்த்துக்களுக்கும் எனது கனிவான நன்றிகள் !
'பொம்மை' இதழ் "எங்க ஊர் ராஜா" நிழற்படங்களை கண்ணிமைக்காமல் பார்க்க வைத்து அசத்திவிட்டீர்கள் !
Dear Ramajayam Sir,
Thank you for your kind words !
Wishing you a very Happy Deepavali !
அன்புடன்,
பம்மலார்.
-
22nd October 2011, 12:11 AM
#574
Senior Member
Seasoned Hubber
டியர் பம்மலார்,
பெற்ற மனம் பற்றிய புரட்சிக் கவிஞரின் கருத்துக்களை வெளியிட்டு இதுவரை இல்லாத அளவிற்கு ஆவணங்களின் சிகரத்திற்கே போய் விட்டீர்கள். இங்கு அனைவரின் பாராட்டுக்களும் உங்களுக்கு.
அன்புடன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
22nd October 2011, 12:14 AM
#575
Senior Member
Seasoned Hubber
எல்லோரும் கருப்பு வெள்ளையிலிருந்து வண்ணப் படங்களாய்க் கொடுத்த நேரத்தில் ஸ்ரீதரின் வைர நெஞ்சம் அதிக எதிர்பார்ப்புகளை உண்டாக்கிய படம். அப்படத்தில் செந்தமிழ் பாடும் என்ற பாடல் உலகப் பிரசித்தி பெற்றது. அப்பாடல் காட்சியினைத் தற்போது கருப்பு வெள்ளையில் பார்த்தால் எப்படி இருக்கும் என்ற ஆர்வத்தின் வெளிப்பாடே இப்போது நீங்கள் காணப்போகும் பாடல். கருப்பு வெள்ளையிலும் நடிகர் திலகம் இளமைத் தோற்றத்தைக் காணுங்கள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
22nd October 2011, 12:32 AM
#576
Senior Member
Veteran Hubber
கலையுலக ஆண்டவரின் அக்டோபர் காவியங்கள்
பட்டாக்கத்தி பைரவன்
[19.10.1979 - 19.10.2011] : 33வது உதயதினம்
பொக்கிஷப் புதையல்
முதல் வெளியீட்டு விளம்பரம் : முரசொலி : 19.10.1979
குறிப்பு:
தமிழ்நாட்டில் கணிசமான அரங்குகளில் 50 நாட்களைக் கடந்து நல்லதொரு வெற்றியை அடைந்த இக்காவியம் அயல்நாடான இலங்கையின் கொழும்பு நகரிலுள்ள 'ஜெஸிமா' திரையரங்கில் 20 வாரங்கள் [140 நாட்கள்] மற்றும் யாழ்ப்பாணம் நகரிலுள்ள 'ஸ்ரீதர்' திரையரங்கில் 100 நாட்கள் ஓடி மெகாஹிட். இந்த சாதனை விளம்பரங்கள் கிடைக்கப் பெற்றவுடன் இங்கே பதிவாக அளிக்கப்படும்.
அன்புடன்,
பம்மலார்.
-
22nd October 2011, 12:43 AM
#577
Senior Member
Veteran Hubber
டியர் வாசுதேவன் சார்,
தங்களின் இதயங்கனிந்த பாராட்டுக்களுக்கு எனது சிரம் தாழ்த்திய நன்றிகள் !
"எங்க ஊர் ராஜா" நிழற்படங்கள் மற்றும் பாடல்களின் வீடியோக்கள் எல்லாம் எப்பொழுதும் போல் TOP !
"அம்பிகாபதி" ஆரம்பப்பதிவுகள் அசத்தல் !
Dear kumareshanprabhu Sir,
Thanks a lot !
அன்புடன்,
பம்மலார்.
-
22nd October 2011, 01:13 AM
#578
Senior Member
Diamond Hubber
'' 'தேவர் மகன்’ படத்தில் நடித்த போது செவாலியே சிவாஜி கணேசனுட னான மறக்க முடியாத அனுபவம் ஏதாவது?''
''நா நேஷனல் அவார்டு வாங்கலனு ரொம்பப் பேரு வருத்தப்படுவாங்க. நா அவருகிட்ட அப்பவே அத வாங்கிட்டேன். 'தேவர் மகன்’ படத்தை தேவிஸ்ரீ தியேட்டர்ல ப்ரிவியூ போட்டுக் காண்பிச்சாங்க. அப்போ, கமலா அம்மாளக் கூப்புடுற மாதிரி கமல் சாரை, 'டே கமலா, இங்க வாடா’னு கூப்புட்டாரு சிவாஜி சார். 'இந்தப் படத்துல ஒரிஜினல் மதுரைப் பேச்சுப் பேசி நடிச்சவன் இவந்தான்டா... இவன் பெரிய ஆளா வருவான்டா’னு என்னயக் காட்டிச் சொன்னாரு. என்னைய பக்கத்துல அழைச்சு 'நல்லா வருவேடா’னு அழுத்தமா ஒரு முத்தம் கொடுத்தாரு. 'இத இப்புடியே வளத்துக்கடா. காமெடியில மட்டும் இல்ல... கழுவுற கையில திங்கணும்... திங்குற கையில கழுவணும்னு பேசி, சிம்பதி கேரக்டரையும் சிறப்பா பண்ணுன பாரு... லேசா என்னயவே ஒரு சிலுப்புச் சிலுப்பி விட்டுட்டேடா. நல்லா வருவடா’னு வாழ்த்தினாரு. காதாரக் கேட்டவன் அப்புடியே அவரு கால்ல நெடுஞ்சாண் கிடையா விழுந்துட்டேன். விழுந்தவன் எந்திரிக்கவே இல்ல. 'யேய், அவன் தூங்கிட்டான்போல இருக்கு. எழுப்பி வுடுங்கப்பா’னு சொன்னாரு சிவாஜி சார். அவரோட வாய் குளிர்ந்த வாழ்த்து வேர்ல்டு அவார்டுக்குச் சமம்ணே. அந்த மகராசனோட வாழ்த்து இன்னிக்கு வரைக்கும் நெலச்சு நிக்குது. வசிஷ்டர் கையால வாங்கிய வரம்ணே அது.
தேவர் மகன்’ படம் கமல் சார் எனக்குக் கொடுத்த லைஃப். என்னோட டேர்னிங் பாய்ன்ட்டே அதுதான். இனிமே, அப்புடி ஒரு படம் கிடைக்குமானு தெரியல. பெரிய இமயங்களான சிவாஜி சார், கமல் சார் ரெண்டு பேருக்கும் நடுவுல நடந்து வார பாக்கியம் அந்தப் படத்துலதான் எனக்கு அமைஞ்சது. வளர்ற நேரத்துல அந்த மகத்தான வாய்ப்பக் கொடுத்த கமல் சாருக்கு நா காலா காலத்துக்கும் கடமப்பட்டு இருக்கேன். 'தேவர் மக’னுக்குப் பெறகு, 'பசும்பொன்’ படத்துல சிவாஜி சாரோட நடிச்சேன். அதுக்கப்புறம் சிவாஜி சாரோட வீட்ல எடுத்த 'சந்திரமுகி’ படத்துல நடிச்சேன்.
தரயில மண்ணக் குமிச்சு சிவாஜி சாரைப் பாத்த வடிவேலு, அந்த மன்னவனோட ஒண்ணா நின்னு தெரயில நடிப்போம்னு நெனச்சதுகூட இல்ல. அவரு கண்ண மூடினப்ப அவரோட கால்மாட்டுலயே நின்னு கதறினேன். அது அழுகை இல்லங்க... அத்தன சொட்டுக் கண்ணீரும் நா மிச்சம் வெச்சிருந்த நன்றிங்க!''
Last edited by sakaLAKALAKAlaa Vallavar; 22nd October 2011 at 01:17 AM.
-
22nd October 2011, 02:57 AM
#579
திரு. பம்மலார் சார்,
'பாவேந்தரின்" எழுத்தால் நமது நடிப்பு வேந்தரின் புகழ் பாடும் கவிதையையும், எழுத்தையும் எமக்கு வேண்டி அரும்பாடுபட்டு சேகரித்து அதை இவ்விடம் வெளியிட்டு மகிழ்ந்து எம்மையும் மகிழ்வித்த நீவிர் நீடுழி வாழ்க பெம்மானே.
Anm
-
22nd October 2011, 03:03 AM
#580
திரு. பார்த்தசாரதி சார்,
'பலேபாண்டியாவின்"பிரசித்தமான "மாமா', 'மாப்ளே" பாட்டை மிகவும் சிலாகித்து எழுதி அந்த வர்ணனையில் எங்களைக் குளிப்பாட்டி எல்லோரையும் மகிழ்வித்து விட்டீர்கள்!!!!
நன்றி!!!! நன்றி!!!!!
Anm
Bookmarks