மிக்க நன்றி "இடை கை இரண்டில் ஆடும்" வீடியோ தந்ததிற்காக. அருமையான பாடல். தேன் நிலவு பாடல் இந்த பாடலிற்கு பிறகு வந்ததாகும்.
ஸ்ரீதர் சிவாஜிக்கு அறிமுகமான படம் "எதிர்பாராதது" என்று நினைக்கிறேன். அதற்கு பிறகு அவர்கள் இருவரும் கலந்து இடம் பெற்ற படங்கள் "அமர தீபம்", "உத்தம புத்திரன்" ஆகியவை. என்ன ஆச்சரியம் என்றால் அந்த கால கட்டத்தில் ஸ்ரீதர் சிவாஜியை வைத்து டைரக்ட் செய்த படம் "விடிவெள்ளி" ஒன்றுதான். மற்றவை எல்லாம் ஜெமினி கணேசன், முத்துராமன் இவர்களை அல்லது புதிய நடிகர்களை வைத்து ஸ்ரீதர் டைரக்ட் செய்ததுதான். கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்கு பிறகு தான் இவர்கள் மீண்டும் இணைந்தார்கள் விடிவெள்ளிக்கு பிறகு. என்ன காரணம்?
பார்க்க பார்க்க சிரிப்பு வருது. அடக்க முடியலே. ( you know the reason)
அந்தி நேரம் வந்தாலே காதல் வேகம் உண்டாகும்
பெற்ற தாயைக் கண்டபோதும் நெஞ்சில் கோபம் உண்டாகும்
என்ன அழகான observation...
மாலையும் இரவும் சந்திக்கும் மங்கிய வெளிச்ச நேரத்தில் காதல் கொண்ட மனம் எதையோ எண்ணி எண்ணி
ஏங்கிக் கொண்டிருக்கும்போது அம்மா அன்பாக அருகில் வந்து என்ன என்று கேட்கும் வரை கூட கோபம் காத்திருப்பதில்லையாம்.
அம்மாவைப் பார்த்தாலே கோபம் வருமாம். ஆனால் அடுத்த வரியில் சொல்கிறார் பாருங்கள்.
"பிறர் பார்த்து விட்டாலும் பெண்மை நாணம் கொண்டாடும்" அம்மா பார்த்தால் கோபம். மற்றவர்கள் பார்த்தால் நாணம். காரணம் அம்மா உண்மையை கண்டு பிடித்து விடுவாள் என்ற பயம்தான். :P
ம்ம்ம்.. நாணத்துக்கும் வெட்கத்துக்கும் உள்ள வித்தியாசத்தை கவிஞர் இன்னொரு பாடலில் விளக்கி இருக்கிறார். அது என்னன்னு சொல்லுங்க பார்க்கலாம் ?
பிரபுராம் (பிரபு, ராம்குமார்) pictures சிவாஜி கணேசனுடைய பிள்ளைகள் இருவருடைய பெயர்களில் ஆரம்பித்த ஒன்று என்று படித்த ஞாபகம். பிறகு தான் சிவாஜி productions ஆரம்பித்தார் என்று கேள்வி.
Bookmarks