-
26th September 2010, 12:35 AM
#171
Senior Member
Devoted Hubber
I haven't failed. I've just found 10,000 ways that won't work..
Thomas A. Edison (1846 - 1931)
-
26th September 2010 12:35 AM
# ADS
Circuit advertisement
-
26th September 2010, 12:40 AM
#172
Senior Member
Devoted Hubber
Telegu Brindhavanam trailer.
SAMANTHA seema dance with NTR & kajal agarwal.
I haven't failed. I've just found 10,000 ways that won't work..
Thomas A. Edison (1846 - 1931)
-
6th November 2010, 10:45 PM
#173
Senior Member
Devoted Hubber
I haven't failed. I've just found 10,000 ways that won't work..
Thomas A. Edison (1846 - 1931)
-
12th December 2010, 12:40 PM
#174
Senior Member
Devoted Hubber
I haven't failed. I've just found 10,000 ways that won't work..
Thomas A. Edison (1846 - 1931)
-
6th January 2013, 01:24 AM
#175
Junior Member
Junior Hubber
Samantha in SVSC telegu film with Mahesh babu...
-
28th April 2016, 02:10 PM
#176
Senior Member
Veteran Hubber
வெல்வெட் கேக், ஆர்டினரி கேக் ரெண்டும் பார்சல் சமந்தாவுக்கு!! #HBDSamantha - VIKATAN
தமிழ்நாட்டு இளைஞர்கள் தம் காதலிகளை 'அம்மு' எனக் கொஞ்சியது போய் 'சம்மு' எனக் குழையவைத்த அழகு தேவதை சமந்தா. ஆர்ட்ஸ் காலேஜில் படித்துக்கொண்டே மாடலிங் செய்துகொண்டிருந்த பெண் ரவிவர்மனின் கண்களில் சிக்கி 'மாஸ்கோவின் காவிரி' படத்தில் வாய்ப்பு பெற்று இன்று டாப் ஹீரோயின். வடநாட்டு நாயகிகளையே கொண்டாடும் தமிழ் ரசிகர்களுக்கு நம்ம ஊர் நடிகை ஏக்கத்தைத் தீர்க்க வந்த பக்கா பல்லாவரம் பொண்ணு இந்த சமந்தா.
சென்னைப்பெண்ணாக இருந்தாலும் சமந்தா பேசப்பட்டது என்னவோ தெலுங்குத் திரையுலகின் மூலம் தான். 2010 ல் நம்மூர் இளைஞர்களின் காதல் படமான 'விண்ணைத்தாண்டி வருவாயா'வின் ஒரிஜினலான 'ஏ மாய சேசாவே' தெலுங்குப் படத்தில் 'ஜெஸ்ஸி'யாக அறிமுகமானார். நாயகனை விட இரு வயது மூத்தவராக, படம் முழுக்க மெச்சூர்ட் டைப் பெண்ணாக வரவேண்டும். திருமணம் செய்துகொள்ள விருப்பமிருந்தாலும் கூட தன் குடும்பத்தினருக்கு பிடிக்காது எனும் காரணத்தினால் விலகி விலகிப் போகும் ஒரு பெண்ணின் காதல் தான் கதை. காதல், குடும்பம் இரண்டில் எதுவெனத் தீர்மானிக்கும் இடங்களில் வசனத்தை விடவும் முகபாவம் மிக முக்கியம். அதைத் திறம்படச் செய்திருப்பார் சமந்தா.
பின்பு, 'பாணா காத்தாடி' படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்குத் தலைகாட்டிய சமந்தா அதன்பின்னர் 2012 ல் 'நீதானே என் பொன்வசந்தம்' திரைப்படத்தில் நித்யா எனும் பாத்திரத்திற்கு உயிர் கொடுத்தார். ஜீவாவுடன் கலகலவென காதலிப்பதாகட்டும், ஈகோ மோதலில் டூ விட்டுப் பிரிவதாகட்டும், குறும்புப் புன்னகையோடு கண்களால் ஜீவாவைத் தேடுவதாகட்டும். எல்லாக் காட்சிகளிலும் ரசிக்க வைக்கும் சமந்தா சோ க்யூட். படத்தின் இறுதிக்காட்சிகளில் ஜீவாவின் திருமண ரிஷப்சனில் கலந்துகொண்டு சமந்தா கலங்கும் இடத்தில் நம் மனதையும் கல்லாக்கிக் கொண்டுதான் பார்க்க வேண்டும். அத்தனை எக்ஸ்ட்ரெசன்களையும் அநாயசமாகத் தன் கண்களால் வெளிப்படுத்தியிருப்பார்.
சமந்தா வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் பெரும்பாலானோரால் நினைவுகொள்ளப்படுவது 'நான் ஈ - பிந்து'வாகத் தான். நானியை புறக்கணிப்பது போல் நடித்துக் கொண்டே அவரை காதலிக்கிறேன் என்ற வார்த்தையை நடப்பது அறியாமல் சொல்கின்றவரையிலும் அவரது பாவனை அத்தனையும் அசத்தல் ரகம். நானியின் ஒவ்வொரு கமெண்ட்டுக்கும் சமந்தா கொடுக்கிற ஆக்சன் சூப்பர்ப்.. அதிலும் குறிப்பாக கோவிலில், “நான் அவளுக்கு ரொம்ப ஸ்பெஷல்..” என நானி சொல்லும்போது சமந்தாவின் ரியாக்சனை பார்க்கணுமே..? யப்பா!!
இதேபோல, சுதீப்பை திடீரென்று தனது அலுவலகத்தில் பார்த்தவுடன் அதிர்ச்சியாகும் காட்சியில் அவரது முகம் மனதின் பயம் சொல்லும். அதற்குப் பிறகும் பல வித்தியாசமான கதாபாத்திரங்களாலும், நடிப்பாலும் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறது இந்த பல்லாவரம் பால்கோவா.
'பத்து எண்றதுக்குள்ள' திரைப்படத்தில் வாளெடுத்து சுழற்றும் கடுமையான வேடம் ஒன்று, அதற்கு நேர் எதிரான குறும்புத்தனமான க்யூட் சமந்தா கேரக்டர் மற்றொன்று என டபுள் ஆக்ஷன் ட்ரீட் கொடுத்தார். எதிரில் இருப்பவர்களைப் புகைப்படம் எடுப்பதாகச் சொல்லி தன்னையே படம்பிடித்துக்கொள்ளும் காட்சி, விக்ரம் லேஸ் பாக்கெட்டைப் பிரித்ததும் சட்டென விழித்து அதைப் பறித்துத் தின்னும் காட்சி, நிறைமாதக் கர்ப்பிணியாக நடிக்கும் காட்சியில் "இருந்தாலும் உன் பையன் ரொம்பத்தான் துள்ளுறான்.." எனச் சொல்லும்போதும் பப்ளி அண்ட் லவ்லி சமந்தாவாக டோட்டல் ஸ்கோர் செய்திருப்பார். 'நான் ஈ - பிந்து' விற்கும் இந்த ஷகீலா கேரக்டருக்கும் ஆறென்ன? ஆயிரம் வித்தியாசங்கள் கண்டுபிடிக்கலாம்! இரண்டிலும் செஞ்சுரி ஸ்கோர் நடிப்பை வழங்கியிர
இவர் வாங்கிய ஃப்லிம்ஃபேர் விருதுகளும், நந்தி விருதும் இவரது சோ க்யூட் புன்னகைக்கு முன்பு ஒன்றுமே இல்லை. தமிழ் சினிமாவில் தற்போது சமந்தா காற்று தீவிரமாக வீசுகிறது. பிந்து, ஷகீலா என்று கதாபாத்திரங்களில் கலக்கிய சமந்தா, மித்ராவாக விஜய்யுடனுடம் தெறிக்கவிட்டார். அடுத்து சூர்யா, விஜய் சேதுபதி என முன்னணி ஹீரோக்களுடன் வரிசையாகப் பட வாய்ப்புகள் குவிந்துகொண்டிருக்கிறது. அடுத்த வருடம் வரை அம்மணி அம்புட்டு பிஸி.
நடிப்பில் மட்டுமல்லாமல் சமூக சேவைகளில் மிகுந்த அக்கறையுள்ள சமந்தா விளம்பரங்கள் மற்றும் தொடக்கவிழா நிகழ்வுகளில் பங்கேற்பதால் கிடைக்கும் பணத்தை தனது அறக்கட்டளையின் மூலம் 'ப்ரதியுஷா' அமைப்பிற்காக வழங்குகிறார்.
2015 ஆம் ஆண்டு முதல் ஆந்திரா ஹாஸ்பிட்டல்ஸில் அதிதீவிர சிகிச்சை பெறும் 21 வயதுக்கு உட்பட்டவர்களில் வாரம் ஒருவரது மருத்துவ செலவில் மூன்றில் ஒரு பங்கினை சமந்தா ஏற்றுக்கொண்டுள்ளார். அதன்பின்னர், ஆறு மாதங்களுக்கு உட்பட்ட எல்லாக் குழந்தைகளின் தடுப்பூசி செலவுகளையும் தான் வழங்குவதாகத் தெரிவித்தார். மேலும், சென்னை, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது பல்லாவரம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளின் மீட்புப் பணிகளுக்காக முப்பது லட்சம் ரூபாய் அளித்து சமந்தா ஆல்வேஸ் சமர்த்து என சொல்லாமல் சொல்லிக்கொண்டிருக்கிறார். இப்படி ஸ்டாரென்ற பந்தா இல்லாமல், சத்தமில்லாமல் பல சமூக சேவைகளும் செய்துவரும் இவருக்கு வெல்வெட் கேக், ஆர்டினரி கேக் இரண்டுமே பார்சலாகக் கொடுக்கலாம். முகம் முழுக்க, அவரது டிரேட் மார்க் புன்னகையோடு வாங்கிக் கொள்வார்!
ஹேப்பி பர்த்டே டு லவ்லி பேபி சம்மு!
Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam
-
6th May 2016, 03:56 PM
#177
Senior Member
Veteran Hubber
நயன்தாராதான் எனக்குப் போட்டி!- சமந்தா சிறப்பு பேட்டி
தெலுங்கில் முன்னணி நாயகியாக வலம்வந்தாலும் சென்னை பேச்சையும், அவருடைய நட்பு வட்டத்தையும் இன்னும் மறக்கவில்லை சமந்தா. சென்னை வந்திருந்த அவரிடம் பேசியதிலிருந்து…
சென்னையில் உங்களை எந்தவொரு திரைப்பட நிகழ்ச்சிகளிலும் காண முடியவில்லையே?
உண்மைதான். மே மாதத்தில் 6-ம் தேதி ‘24', 13-ம் தேதி ‘ஆ ஆ', 20-ம் தேதி ‘பிரம்மோற்சவம்' ஆகிய படங்கள் வரவிருக்கின்றன. ஆகையால் அடுத்தடுத்துப் பட வேலைகள் என ஓடிக்கொண்டே இருக்கிறேன். அதனால்தான் சென்னைக்கு வந்து போக முடியவில்லை. ஹைதராபாதில் நடைபெற்ற ‘தெறி', ‘24' ஆகிய படங்களின் விழாக்களில் கலந்துகொண்டேன். சென்னைக்கு வர முடியாததில் வருத்தம்தான்.
என் வீடு ஹைதராபாதில் இருந்தாலும், சென்னைக்கு வருவது எனக்குப் பிடிக்கும். சத்யம் திரையரங்கும், பெசன்ட் நகர் கடற்கரையும் எனக்குச் சென்னையில் விருப்பமான இடங்கள். இப்போதும் பல்லாவரம் நண்பர்கள் மற்றும் என்னுடைய கல்லூரி நண்பர்கள்தான் எனக்கு நெருக்கமானவர்கள்.
‘யு-டர்ன்' படத்தின் தமிழ், தெலுங்கு மறு ஆக்கங்களில் நடித்து, தயாரிக்கவும் போகிறீர்களாமே?
பெங்களூருவுக்குப் போய் ‘யு-டர்ன்' படத்தைப் பார்த்தது உண்மை. பிடித்திருந்தது, ஆகையால் நடிக்கிறேன். ஆனால், அந்தப் படத்தை நான் தயாரிப்பதாக வந்த செய்தியில் உண்மை இல்லை.
நடிப்புத் துறையில் இலக்கு ஏதாவது வைத்திருக்கிறீர்களா?
இனிமேல் நல்ல கதாபாத்திரங்கள் இருக்கும் கதைகளையே தேர்வு செய்து நடிக்கத் தீர்மானித்திருக்கிறேன். சும்மா பாடல்களுக்கு மட்டும் கவர்ச்சி யாக வந்துவிட்டுப் போவதில் விருப்ப மில்லை. அப்படி நல்ல கதைகள் எனக்கு வரவில்லை என்றால் வீட்டில் இருப்பேன்.
முன்னணி நடிகர்களுடைய படங்களில் மட்டுமே நாயகியாக நடிக்கிறீர்களே?
அப்படி எந்தவொரு படத்தையும் நான் ஒப்புக்கொள்வதில்லை. நான் ஒரு படத்துக்கு ஒப்பந்தமாகும்போது நடிகர் யார் என்று கேட்டதில்லை. இயக்குநர் யார் என்பதுதான் எனக்கு முக்கியம். இப்போதுகூட ‘வடசென்னை' படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறேன். எனக்கு மிகவும் சவாலான படம். அந்தப் படத்தில் ஏற்கவிருக்கும் கதாபாத்திரத்துக்காக வடசென்னையில் இருக்கும் குடிசைப் பகுதிக்குச் சென்று பயிற்சி எடுக்கப் போகிறேன். கண்டிப்பாகத் தமிழில் நீங்கள் வழக்கமாகப் பார்க்கும் சமந்தாவை ‘வடசென்னை'யில் காண முடியாது.
எனக்குச் சவால் நிறைந்த படங்களில் நடிக்க ஆசை. நான் மிகவும் அழகான நடிகை, திறமையான நடிகை என்று சொல்லிக்கொள்ளவில்லை. ஆனால், கடினமாக உழைத்து நடிக்கும் முதல் 5 நடிகைகளின் பட்டியலில் நான் இருப்பேன் என நினைக்கிறேன்.
தமிழ், தெலுங்குத் திரையுலகில் உங்களுக்குப் போட்டி யார்?
நயன்தாராதான் எனக்குப் போட்டி. பெண்களை மையப்படுத்தி வரும் படங்களில் நடிக்க எனக்கு ஆர்வ மில்லை. இதுவரை நான் நடித்த படங்கள் அனைத்துமே மனரீதியான சவால்கள் நிறைந்தவை. போட்டி இருந்தாலும் அனைவருமே நண்பர்களாகத்தான் இருக்கிறோம். ஒரு படத்தில் ஒரு நடிகை நன்றாக நடித்திருந்தால், உடனே போன் செய்து பாராட்டிவிடுவேன். ‘இஞ்சி இடுப்பழகி' படத்தின் கதாபாத்திரத்துக்காக அனுஷ்கா தந்த உழைப்பு அலாதியானது. ஒரு பெண்ணாக அவருடைய துணிச்சல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
நீங்கள் நடத்திவரும் தொண்டு நிறுவனத்துக்குத் தூண்டுகோல் யார்?
என் அம்மாதான். நான் நடிகையாகும் முன்பு எங்களது குடும்பம் மிகவும் நடுத்தர வர்க்கம்தான். ஆனால், உதவி என்று யாராவது கேட்டால் எங்கள் அம்மா உடனே கொடுத்துவிடுவார். நடுத்தர வர்க்க குடும்பத்துப் பெண்ணாக ஆரம்பித்துக் கடுமையாக உழைத்து இந்த நிலையை அடைந்திருக்கிறேன். உழைப்பு மட்டுமன்றி கடவுளின் அருளும் முக்கியக் காரணம். நான் நல்ல நிலைமையில் இருந்தால் மட்டும் எனக்கு மகிழ்ச்சியைத் தராது. பிறருக்கு என்னால் முடிந்த உதவி செய்வதன் மூலம் மட்டுமே எனக்கு மனநிம்மதி கிடைக்கிறது.
இந்தியில் நடிக்கத் தயங்குவது ஏன்?
தயக்கம் எல்லாம் இல்லை. தமிழ், தெலுங்கில் நடிக்கவே எனக்கு நேரமில்லை. சரியான வாய்ப்பு வரும் பட்சத்தில் எந்த மொழி என்றாலும் ஒப்புக்கொள்வேன்.
Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam
-
9th May 2016, 06:53 PM
#178
Senior Member
Veteran Hubber
புதுப் படங்களில் ஒப்பந்தம் இல்லை: சமந்தா தற்காலிக முடிவு
சில காலங்களுக்கு புதிய படங்கள் எதையும் ஒப்புக்கொள்ளப் போவதில்லை என்று சமந்தா அறிவித்திருக்கிறார்.
தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நாயகியாக வலம் வருபவர் சமந்தா. தமிழில் இவர் நடிப்பில் வெளியான 'தெறி', '24' ஆகிய படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. தெலுங்கில் 'அ.. ஆ', 'பிரம்மோற்சவம்' ஆகிய படங்களின் படப்பிடிப்பை முடித்திருக்கும் சமந்தா, தற்போது 'ஜனதா கரேஜ்' என்னும் படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு நாயகியாக நடித்து வருகிறார்.
திடீரென்று தனது ட்விட்டர் பக்கத்தில் இன்னும் சில காலத்துக்கு புதிய படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளப் போவதில்லை என்று அறிவித்திருக்கிறார்.
இது குறித்து சமந்தா, "இன்று நிம்மதியாக தூங்குவேன். (நான் நடித்த) கோடை கால பட வெளியீடுகள் முடிந்தன. கடந்த 8 மாதங்கள் கடுமையாக இருந்தது. களைப்படைந்து சோர்ந்து போகும்படியானாலும், நான் அவற்றைத் தாண்டி வந்திருக்கிறேன் என்பது மகிழ்ச்சி.
என்னோடு எப்போதும் துணை நிற்கும் என் குடும்பத்துக்கு நன்றி. நான் சிறந்த மகளாகவோ, தோழியாகவோ இருந்ததில்லை. இனி சற்று நிதானித்துப் போகிறேன். சில காலங்களுக்கு புதிய படங்களை ஒப்புக்கொள்ளப் போவதில்லை. எனக்கு உறுதுணையாய் இருக்கும் அனைவருக்கும் நன்றி"” என்று கூறியிருக்கிறார் சமந்தா.
முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தாவின் இந்த திடீர் அறிவிப்பால், முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் ஆச்சர்யத்தில் இருக்கிறார்கள்.
Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam
-
23rd May 2016, 05:16 PM
#179
Senior Member
Veteran Hubber
Samantha Deletes Tweet On Mahesh
Samantha who raved about ‘Bala Tripuramani’ song in Brahmotsavam has deleted that tweet now. Why did Samantha delete a tweet where she showered praise upon Mahesh?
Samantha should have feared that this tweet might be used for trolling Mahesh as his dance moves in that song are being ridiculed by one and all. Samantha tweeted that in a positive sense, but the song has made Mahesh a laughing stock on the internet.
Few people started to point out at Samantha’s tweet saying that she has intentionally made fun of Mahesh. Samantha ended up in a controversy when she posted negative comments on Mahesh’s 1 poster.
She didn’t want to rub Mahesh fans again on the wrong side and maybe for that reason she has deleted the tweet immediately after the release of the movie.
Even Sam is receiving flak for her performance in this film. But what can actors do when the director comes up with such a ridiculous characterizations and script.
Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam
-
26th May 2016, 11:48 AM
#180
Senior Member
Veteran Hubber
Naga Chaitanya in Samantha’s life? - deccanchronicle
Is Naga Chaitanya the secret man in Samantha’s life? The actress had tweeted earlier that she was in love and had even said that the man was from Hyderabad.
She has often stated that she has five close friends from the industry and Naga Chaitanya is one among them. Now, a source claims that Naga Chaitanya is more than just a friend.
The two have also been seen together at lunches and dinners. With Samantha’s marriage being a current topic in the industry, many are speculating whether the lucky man is indeed Chaitanya.
Thus all eyes are now on Naga Chaitanya, the eligible bachelor from the Akkineni family. Meanwhile, under a lot of pressure from her fans and others, Samantha tweeted saying, “No more talk of marriage until I say so ... I I I I ME ME ME ME aka SAMANTHA says so. Thankyou.”
Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam
Bookmarks