-
1st August 2010, 09:20 AM
#1391
Senior Member
Seasoned Hubber
டியர் நவ் சார்,
தங்களுடைய வார்த்தைகள் தங்களுடைய உள்ளக் கிடக்கையை உருக்கமாக வெளிப் படுத்துகின்றன. நடவாதது எதுவுமில்லை என்ற நம்பிக்கையுடன் நிச்சயம் வெல்வீர்கள். பாரிஸ்டர் ரஜினிகாந்த் நம்மை ஏமாற்ற மாட்டார். விரைவில் வெள்ளித்திரையில் கௌரவம் வெளியாகும் என்ற ஆவலுடனும் நம்பிக்கையுடனும் காத்திருப்போம்.
டியர் முரளி மற்றும் பம்மலார்,
தங்களுடைய பாராட்டுக்களுக்கு நன்றி. திரு கோபால் போன்ற எண்ணற்ற எதிர்காலத் தலைமுறை ரசிகர்களையெல்லாம் எதிர்பார்த்திருப்பாரோ என்னவோ, நடிகர் திலகம் பல தலைமுறைகளுக்கான நடிப்பிலக்கணத்தை வடித்து வைத்துச் சென்றிருக்கிறார்.
அன்புடன்
ராகவேந்திரன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
1st August 2010 09:20 AM
# ADS
Circuit advertisement
-
1st August 2010, 09:40 AM
#1392
Administrator
Platinum Hubber
RAGHAVENDRA
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
1st August 2010, 11:36 AM
#1393
Senior Member
Veteran Hubber
நேற்றைய தினம் மதுரையில் நடைபெற்ற தியாகி கக்கன் அவர்களின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் கூடியிருந்த லட்சக்கணக்கானோர் மத்தியில், திரு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள் 'சிங்கத்தமிழன் சிவாஜி' அவர்கள் பற்றிக்குறிப்பிட்டபோது, கூட்டத்தினர் மத்தியில் பலத்த கைதட்டல் மற்றும் விஸில். (வசந்த் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பாகக் காண்பிக்கப்பட்டது).
-
1st August 2010, 12:28 PM
#1394
Senior Member
Seasoned Hubber
நேற்றைய கக்கன்ஜி நூற்றாண்டு விழா நிகழ்ச்சியின் நேரலையை வசந்த் தொலைக்காட்சியைப் பார்த்த பொழுதும் அந்தக் கூட்டத்தைப் பார்த்த பொழுதும் பழைய காட்சிகள் மனத்திரையில் நிழலாடின. அதற்கேற்றாற்போல் இளங்கோவன் அவர்கள் தம்முடைய உரையில் அந்தக் கூட்டத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது, சிங்கத் தமிழன் சிவாஜியும் மூப்பனார் அவர்களும் உரையாற்றும் கூட்டத்துக்கு எவ்வளவு கூட்டம் வருமோ அந்த அளவிற்கு உள்ளதாகக் குறிப்பிட்டார்.
ஆனால் ஒரே ஒரு வருத்தம். தியாகசீலர் கக்கன்ஜி அவர்களுக்காக தம்முடைய நாடகம் மூலம் ஈட்டிய வசூலை கொடுத்த நடிகர் திலகத்தின் நற்செயலைப் பற்றி யாருமே நினைவு கூறாதது ஏமாற்றமே, குறிப்பாக கக்கன்ஜி அவர்களின் குடும்பத்தினர் கூறுவர் என எதிர்பார்க்கப் பட்டது.
இவர்கள் என்ன செய்தாலும், நடிகர் திலகத்தை உரிய முறையில் நினைவு கூறாமலும் கௌரவிக்காமலும் இருக்கும் வரையிலும் காங்கிரஸ் பேரியக்கம் தமிழ்நாட்டில் தனியாக ஆட்சியமைப்பது கனவிலும் கூட நடக்காது. நடிகர் திலகம் அவர்களுடைய பெயரைச் சொல்லாமல் தேசிய இயக்கம் திராவிட இயக்கங்களுக்கு ஈடு கொடுப்பது என்பது என்றைக்குமே கைகூடாது. இதுவே என் எண்ணம்.
அன்புடன்
ராகவேந்திரன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
1st August 2010, 01:28 PM
#1395
Senior Member
Veteran Hubber
Originally Posted by
RAGHAVENDRA
ஆனால் ஒரே ஒரு வருத்தம். தியாகசீலர் கக்கன்ஜி அவர்களுக்காக தம்முடைய நாடகம் மூலம் ஈட்டிய வசூலை கொடுத்த நடிகர் திலகத்தின் நற்செயலைப் பற்றி யாருமே நினைவு கூறாதது ஏமாற்றமே, குறிப்பாக கக்கன்ஜி அவர்களின் குடும்பத்தினர் கூறுவர் என எதிர்பார்க்கப் பட்டது.
டியர் ராகவேந்தர்,
அவர்கள் நினைவுகூறாவிட்டாலும் நாம் நினைவுகூர்வோம். (ஏற்கெனவே பதிந்ததுதான். இருந்தாலும் புதியவர்களுக்காக).....
வறுமையில் வாடிய தியாகி கக்கன் அவர்களுக்கு உதவும் பொருட்டு, கோவையில் நடிகர்திலகம் 'தங்கப்பதக்கம்' நாடகம் நடத்தினார். பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் தலைமை தாங்கினார். நாடகத்தைக்காண பெருங்கூட்டம் திரண்டது. நல்ல வசூல். நாடகத்தின் செலவு முழுவதையும் நடிகர்திலகம் ஏற்றுக்கொண்டதால், வசூலான தொகை முழுவதும் அப்படியே கக்க்கன் அவர்களிடம் அளிக்கப்பட்டது. விழாவில் பெருந்தலைவர், நடிகர்திலகத்தைப் பாராட்டி அவருக்கு ஒரு தங்கப்பதக்கம் பரிசளித்தார். அந்தப்பதக்கத்தையும் நடிகர்திலகம் மேடையிலேயே ஏலம் விட, உள்ளூர் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் அதை பத்தாயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். (அப்போது ஒரு சவரன் விலை 700 ரூபாய்). ஏலத்தில் கிடைத்த பத்தாயிரம் ரூபாயையும்கூட கக்கனிடமே அளித்தார் நடிகர்திலகம்.
நன்றி தெரிவித்துப்பேசிய கக்கன் அவர்கள், "பதக்கம் மட்டும் தங்கம் அல்ல, சிவாஜியின் மனமும் சொக்கத்தங்கம்" என்று மனம் நெகிழ்ந்து சொன்னார்.
(ராகவேந்தர் அண்ணா, நேற்று இன்னொரு கொடுமை கவனித்தீர்களா?. பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் பெயரைக்கூட யாரும் அவ்வளவாக நினைவுகூறவில்லை. ஆனால் திருநாவுக்கரசர், மறக்காமல் தனை உருவாக்கிய எம்.ஜி.ஆர். புகழ் பாடினார்).
-
2nd August 2010, 02:41 AM
#1396
Senior Member
Veteran Hubber
சென்னை சாந்தி தியேட்டர் நிகழ்வுகள் - 5
[புதிய பறவை : 25.7.2010 : ஞாயிறு மாலைக் காட்சி]
எல்லா மண்டலங்களையும் மயக்கும் BGMமை மெல்லிசை மன்னர்கள் வழங்க, கோபாலின் கார், கார்கள் புடைசூழ உதகமண்டலத்தை அடைகிறது. சொகுசான கார்கள் ஷோக்காக வலம் வந்து அவரது பங்களாவை அடைய, அரண்மனை வாயிலில் இறங்கும் கோபால் மெல்ல தோட்டத்தில் நடக்கிறார். இங்கே விசில் பறக்கிறது. "தலைவன் நடைய பார், வேறு எவனுக்கும் இந்த நட வராது", "பாக்கெட்டுக்குள்ள கைய விட்டுக்கிட்டு நடக்கிற ஸ்டைலப்பார்" என்கின்ற ஏகவசன கோஷங்கள் ஏகமூச்சில் கேட்கின்றன. பல ஆண்டுகளுக்குப் பின் தனது அரண்மனையின் வெளித்தோற்றத்தை அதிசயித்தபடியே பார்த்து நடந்து வரும் கோபால், அவரது அகத்தினுள் நுழைகிறார். அது மட்டுமா? நடையழகால் அனைவரது அகத்தினுள்ளும் நுழைகிறார்.
அரண்மனை ஊழியர்களுக்கு பதில் வணக்கம் தெரிவித்து விட்டு, "தம்பி!" என்கின்ற தழுதழுத்த குரல் வரும் பக்கம் திரும்பி, ஒரு விசுவாச முதிய ஊழியரை நோக்கி நெருங்குகிறார். முதியவர் முந்தைய நினைவுகளை ஆசையோடு அசை போட, கோபால் அவரை "ராஜு தாத்தா" என வாஞ்சையோடு அழைத்து, அவரது நரைத்த மீசையை மென்மையாக முறுக்குகிறார். "நல்லா இருக்கீங்களா தாத்தா?!" நடிகர் திலகம் கொடுக்கும் வாய்ஸ் மாடுலேஷனில் கரையாத மனமும் கரையும். சீமைக்கு செல்லும் போது தாய்-தந்தையுடன் சென்ற திலகம் தனிமரமாக திரும்பி வந்திருப்பதைக் கண்டு மனம் குமுறுகிறார் முதியவர். அதற்கு நடிகர் திலகம் கொடுக்கும் ரியாக்ஷன் இருக்கிறதே, அப்பப்பா! கண்களில் நீர்த்துளிகளை தேக்கி, காண்பவர் கண்களை நீர்நிலைகளாக்குகிறார். அருகே ராகவேந்திரன் சார் எமோஷனலாகி இருந்தார்.
நாகேஷ்-மனோரமா காட்சி நகைச்சுவையுடன் நகர, தனது எஸ்டேட்டை ஸ்டிக், சிகரெட், ஹேட் சகிதம் கிங்-ஸைசில் வலம் வருகிறார் கோபால். அவர் நடந்து வரும் போதும், நிற்கும் போதும், குப்புறப் படுத்துக் கொண்டு குஷியாக புத்தகம் படிக்கும் போதும் விசில்கள் விண்ணை வீழ்த்துகின்றன. பிஜிஎம் பிரமாதம்!
ஊட்டி ரேஸ்கோர்ஸ். லதா-ராமதுரை இருவரையும் எதேச்சையாக சந்திக்கும் கோபால் அவர்களை தனது இல்லத்திற்கு அழைக்கிறார். அவரது அரண்மனைக்கு அவருடன் வரும் இருவரும் அதன் அழகில் அசறுகின்றனர். ஊழியர்களைத் தவிர்த்து, தான் ஒருவன் தான் அங்கே வசிப்பதாகக் கூறும் கோபால் அவர்களுக்கு உபசரணை செய்கிறார். பின், ஹோட்டலில் தங்கியிருக்கும் அவர்களை தனது ஹோமில் தங்குமாறு வேண்டுகிறார். அவர்கள் முதலில் மறுக்க பின்னர் ஏற்கின்றனர். அருகே கிரஹாம் பெல் கண்டுபிடித்த டெலிபோனின் பெல் அடிக்க கோபால் நடந்து சென்று எடுக்கிறார். அதர் ஸைடில் ரங்கன்(நடிகவேள்) வாழ்த்துக்கள் கூறி ராங் ஸைடில் பேச கோபால் "நான்சென்ஸ்" என்கிறார். போன் கட் ஆகிறது. ஆனால் சூடம் காண்பிப்பது கட் ஆகவில்லை. சகோதரி சாரதா சுட்டிக்காட்டியது போல் " மாற்ற முடியுமா எங்களை" என சுவரொட்டி அடித்தவர்கள் ஆயிற்றே! இக்காட்சிக்கு தங்களது கைகளில் கற்பூரங்களை கொளுத்தி பகவானுக்கு பக்தியுடன் காட்டினர்.
நாகேஷ்-மனோரமா காட்சி நகர, அடுத்த காட்சியில் ஒயிட் பேண்ட், ரெட் ஜெர்கின்ஸ், ஷூஸ், கையில் ஹேட் சகிதம் மாடியிலிருந்து இறங்கி வருவதாகட்டும், குட் மார்னிங் சொல்வதிலாகட்டும் அவரது பிஹேவியர், பாடிலேங்குவேஜ், ஆஹா! நடிகர் திலகம் ஹேண்ட்சம் திலகம். விகேஆர் தனது நேரந்தவறாமை பற்றிக் கூற, தானும் அவ்வாறே என்கிறார் நடிகர் திலகம். "பங்க்சுவாலிட்டின்னா தலைவர் தான்" - வீரமுழக்கம் விசில் பறக்க வெடிக்கிறது. லதா இறங்கி வரும் போது கோபாலுக்கு குட்மார்னிங் கூறி விட்டு தனது தந்தையை நோக்கி "இவரும் நம்மோடு வருகிறாரா?" என வினவ, "நாம தான் அவருடன் போகிறோம்" எனத் தந்தை விடை கூற மூவரும் எஸ்டேட்டை சுற்றிப் பார்ப்பதற்காக தற்காலிகமாக அரண்மனையை விட்டு விடை பெறுகிறார்கள். பின்சீட்டிலிருந்து பின்னி எடுக்கிறார் ஒருவர். "உன் கூட என் தெய்வம் வராது. நீதான் தெய்வத்தோட போணும்".
(தொடரும்...)
பக்தியுடன்,
பம்மலார்.
-
2nd August 2010, 03:00 AM
#1397
Senior Member
Veteran Hubber
டியர் செந்தில் சார், குமரேசன் பிரபு சார்,
கலையுலகின் குலதெய்வத்திற்கு, நமது இதயதெய்வத்திற்கு பிரம்மாண்ட மலர் மாலையை அணிவித்ததோடு மட்டுமல்லாமல், பிரம்மாண்ட கலக்கல்கள் புரிந்து, சென்னை மாநகரையே குலுக்கி உலுக்கிய பெங்களூர் பக்தர்களுக்கு பல கோடி நன்றிகள்!
பாசத்துடன்,
பம்மலார்.
-
2nd August 2010, 03:00 AM
#1398
I cannot type in Tamil today.
First my hearty congrats to our beloved respected Pammalar.
Dear Murali Sir
If I had been in Chennai, I would NOT have missed being at Shanthi Theatre last sunday FOR ANYTHING!
Im sure I will meet you and our friends when I come home for holidays - October first half!
My pleasure on reading about PP and the enthused widespread response is boundless...
My love and respect and admiration for NT now is flowing to surrogate symbols - Pammalar, Murali Sir, Sradha madam, raghavendra sir, nov sir and all NT fans..
I m one happy and proud man - Im an ever NT fan!
நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்
-
2nd August 2010, 03:09 AM
#1399
Dear Raghavendra Sir
Your analysis of Gopal is outsatanding!
I watched a song from Chitra pournami - NT and JJ duet.
I saw NT's smile in that song - He can smile - like a light switched on - and the brightness will shine from his very soul!
The facial muscles of NT were chiselled by God of Art - finer than Greek statues!
Thats why he could do a duet in Vasantha maligai - soon after his mother's demise. He can command his facial and hand and body muscles at a split second and render most viewable postures and expressions. His gift has not been bestowed to any other artist in the whole world so far..
Im searching all the faces on the screens worldwide -- in vain..
No wonder Im ever ( going to be ) a NT fan .
And Im a very happy and proud man!
நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்
-
2nd August 2010, 08:08 AM
#1400
Senior Member
Seasoned Hubber
டியர் பம்மலார்,
தங்களுடைய நேரடி மொழிபரப்பு, நம் அனைவரையும் சாந்தி திரையரங்கினுள் அமர்த்தியிருக்கிறது. தங்களருகில் நாங்கள் அனைவரும் அமர்ந்துள்ளோம். ஒவ்வொரு காட்சியையும் துல்லியமாக ரசிக்கிறோம். ஒரே ஒரு வித்தியாசம், இங்கு அனுமதி இலவசம்.
அன்பு மிக்க காவிரி கண்ணன் அவர்களுக்கு,
யூனிகோட் முறையினை பயன் படுத்தி தாங்கள் தமிழில் சொல்ல விரும்புவதை ஆங்கிலத்திலேயே அந்தந்த வார்த்தைகளைத் தட்டச்சு செய்தால் அவை அப்படியே தமிழில் இடப்படும். முயன்று பாருங்கள்.
தாங்கள் குறிப்பிட்ட பாடல் செந்தூர நெற்றிப் பொட்டின் திலகம் பாடல் என்று நினைக்கிறேன். வெள்ளை உடையில் பன்னாட்டு நிறவன உரிமையாளரைப் போல் தோரணையுடனும் ஸ்டைலுடனும் கலக்குவார்.
தங்களுடைய பாராட்டுக்களுக்கு என் உளமார்ந்த நன்றி. அனைத்தும் நடிகர் திலகத்திற்கே.
பெங்களூரு ரசிகர்களுக்கு நமது அனவரின் சார்பிலும் நன்றியும் பாராட்டுக்களும்.
தங்களனைவரையும் மீண்டும் சந்திக்க ஆவலாயுள்ளோம்.
அன்புடன்
ராகவேந்திரன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks